13/5/12

ஜெயிக்க போவது யாரு?


ஜெயிக்க போவது யாரு?

ஒரு வழியாக  வேட்பாளார் யார் எனபது நிச்சியமாகிவிட்டது. வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் 2 வது முறையாக அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து போட்டியிடும்  குடியரசு கட்சி  வேட்பாளார் ரோம்னி எனபது இப்போது நிச்சியமாகிவிட்டது. அமெரிக்க அரசியலில் உட்கட்சி ஜனநாயகம் மிக வலுவானது.  வேட்பாளாரை உயர் மட்ட குழு தேர்ந்தெடுப்பது, கட்சிதலமைக்கு வழங்கபடும் அதிகாரத்தால் நியமிக்கபடுவது போன்ற சமாசாரங்கள எல்லாம் கிடையாது.  வேட்பாளாராக தகுதி பெற்ற  போட்டியிட விரும்பவர்கள்  ஒவ்வொரு மாநிலங்களில்  நடைபெறும் கட்சி மாநாடுகளில் மற்றவர்களை விட  அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்க  வேண்டும். அவர்தான் கட்சியின் வேட்பாளாராக முடியும். கடந்த முறை ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இறுதி வரை கடுமையான போட்டி இருந்தது நினைவிருக்கிறதாஇம்முறை குடியரசு கட்சியின் உள்கட்சி தேர்தல்களில் துவக்கத்திலிருந்தே ரோம்னி பல மாநிலங்களில் முன்னிலையிலிருந்தார். போட்டியிட்டவ்ர்கள் தங்கள் பலம் அறிந்து ஒவ்வொருவராக போட்டியிலிருந்து விலகிவிட கட்சி வாக்கெடுப்பில் இப்போது அவர் மட்டுமே இருப்பதால் அவர் தான் ஒபாமாவை எதிர்க்கபோகும் வேட்பாளார் எனபது உறுதியாகிவிட்டதுவிரைவில் கட்சி அதிகாரபூர்வமாக  இதை அறிவிக்கும்.
65 வயது ரோம்னி நீண்ட அரசியல் பாரமபரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவர். மாஸாசுஸட்ஸ் மாநில கவர்னராகயிருந்தவர். அவரது தந்தையும் மாநில கவர்னாராகயிருந்தவர். 2008 அதிபர் தேர்தல் வேட்பாளாரவதற்கு உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஒதுங்கியவர். ஹார்வர்ட் பல்கல்லைகழகத்தின் எம்பிஏ. படிப்பிற்கு பின் நிதிநிறுவன பிஸினஸ் துவங்கி மிக பெரிய வெற்றிகளை அடைந்தவர். 5 குழந்தைகளும், 15 பேரகுழந்தைகளும் உள்ள  இவர் இன்று அமெரிகாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். சொத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்கள். ஆண்டு வருமானம் 45 மில்லியன் டாலர்கள்
உள்கட்சி தேர்தலில் இவரின் செல்வாக்கு ஒங்குவதை கவனித்தவந்த  ஒபாமா மற்றவர்களை கண்டுகொள்ளாமல் இவரது வாதங்களுக்கு மட்டுமே பதிலளித்து கொண்டிருந்தார். கட்சி தேர்தல்கள் முடிந்து வேட்பாளார் நிலையை அடைந்ததும் அனல் பறக்கும் பிராசரத்தை  தொடங்கிவிட்டார்  ரோம்னி.  “ஒபாமா எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டார் அவரது அரசு செயலிழந்து கிடக்கிறது என ஆரம்பித்து. வரிவிதிக்கும்முறைகளில் மாற்றம் என்ற பெயரில் சாதரண அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிகளை கூட்ட முயற்சிக்கிறார், பொருளாதார சுதந்திரத்தை முடக்கும் வகையில் தனியார் துறைகளில் அரசின் தலையீடு, கட்டுபாடு இல்லாத பெட்ரோல் விலையேற்றம்.“  என ஒபாமா மீது அடுக்கடுக்கான  குற்றசாட்டுகளை வைக்கிறார். முக்கியமான விஷயம் ஒபாமா அறிவித்து செயல் படுத்த முடியாமல் தவிக்கும் புதிய மருத்தவ பாதுகாப்பு திட்டம். இது கிட்டதட்ட கலஞர் காப்பீட்டுதிட்டம் மாதிரி. அமெரிக்காவில் அரசாங்க மருத்துவமனை என எதுவும் தனியாக கிடையாது.  தனிநபர் மருத்தவ சேவைக்கு  மிக அதிக கட்டணம்.  இதை நோயாளிகளின் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மருத்துவமனை பெற்றுகொள்ளும். இதை மாற்றி வயதானவர்களுக்கும், வறியோர்களுக்கும் ஆகும் மருத்தவ செலவை அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணத்தில் மருத்துவமனைகள் பெற ஒபாமா ஒரு திட்டத்தை அறிவித்தார். இது இப்போது அரசியலாகியிருக்கிறது. இருக்கும் நல்லசிஸ்டைத்தைவிட்டு விட்டு மக்கள வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டம் இது எனபது ரோம்னியின் வாதம்.  அடுத்தது கடந்த தேர்தலின் போது  ஆப்கானிஸ்தனிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன் என சொல்லி அதை இன்னும் முடிக்காமல் இப்போது ஈரானுக்கு  அதிக அமெரிக்க படைகள் அனுப்பபடுகிறது.  அவர் சொன்னது எல்லாம்  “தேர்தல் நேர சத்தியங்கள்” “  மட்டுமே என பாய்கிறார்.

அதிகார பூர்வமாக தேர்தல் பிரச்சாரங்கள் துவக்கப்படாவிட்டாலும்அதிபர் ஒபாமாவின் சமீப பேச்சுகளில் அரசியல் தொனிக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய சம்பாதிக்கும் அமெரிக்க கோடிஸ்வரர்கள்- ரோம்னி போன்றவர்கள் குறைவாக  15 % வரி மட்டுமே செலுத்துகிறார்கள் இது நியாமில்லை. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் 30% வ்ரி செலுத்த வேண்டும் இது அரசங்கத்தின் பல நல திட்டங்களுக்கு உதவும் என அறிவித்திருக்கிறார். ரோம்னி அளவு பணக்காரர் இல்லையென்றாலும் ஒபாமாவும் ஒன்றும் சாமனியன் இல்லை  சாதாரண அமெரிக்கர்களை விட பணக்காரர். அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து மட்டும்  ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர்கள்  சம்பாதித்து கொண்டிருக்கிறார்.
உலக  முதல் பணக்காரகள் பட்டியலில் ஆண்டு தோறும் தவறாமல் இடம்பெறும் திரு வாரன் பஃபெட் ஒமாவின் வரிஉயர்வு திட்டத்தை வரவேற்று இது சமூக கடமை என அறிவித்திருக்கிறார்.  வரியை உயர்த்தபோகிறோம் என்று சொல்லி ஓட்டு கேட்கபோகும் முதல் அரசியல் வாதி ஒபாமாவாகத்தனிருப்பார்..
.  “நியமான வரிவீதம் எனபதைவிட அடிப்படையாக சரி செய்ய வேண்டிய  பொருளாதார நடவைடிக்கை என்ன என்று இரண்டு பேரும்  சொல்லபோவது தான் வெற்றியை தீர்மானிக்க போகும் விஷயம்”“ என்கிறார்..  திரு. மாட் பெனட். இவர் பில்கிளிண்டன் அதிபராக இருந்தபோது அவரது உதவியாளாரக வெள்ளை மாளிகையில் பணியாற்றியவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை கணிக்கும் எக்ஸ்பர்ட்.
 “மாறுதல்கள் வரும் என சொல்லி கடந்த  தேர்தலில்  வென்ற  ஒபாமா அவருக்கு முன்பிருந்த குடியரசு கட்சி அதிபர் புஷ் செய்த அத்தனை மோசமான காரியங்களையும்  எந்த மாறுதலுமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்.  எகிப்து, லிபியாவில் புரட்சிகளை உருவாக்கியது, ஈரானுக்கு படைகளை அனுப்பியது, ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவதளம், ராணுவ ஜெயில்களில் மனித உரிமை மீறல்அக்கிரங்கள், வீக்கி லீக் போன்ற பிரச்சனைகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திகொள்ள பார்க்கிறார். அமெரிக்கா வலிமையாக இருந்தால் தான் உலகம் பத்திரமாகயிருக்கும் என நம்புவர்தான் அமெரிக்க ஜனாதிபதி. இதை விரும்பும் அமெரிக்க மக்கள்  தேர்தல் நேரத்தில்  இதை யார் செய்வார்கள் என நம்புகிறார்களோ அவர் தான் ஜெயிப்பார். என்கிறார் இந்திரஜித் பார்மர். இவர் மான்செஸ்டர் பல்கலைகழக் பேராசிரியர். அமெரிக்க அரசியல், அதிபர்கள் பற்றி பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
மக்கள என்ன நினைக்கிறார்கள்கடந்த மாதமே கருத்துகணிப்புகள் துவங்கிவிட்டன முதல் கருத்து கணிப்பில் சிறிய வித்தியாசத்தில் ரோம்னி முந்தினார். இப்போது கால்ப் டெய்லி என்ற மீடியா சார்பில் பலவேறு மாநிலங்களில் நடத்த பட்ட கணிப்பில் ஒபாமாவிற்கு 50% வீத ஆதரவும் ரோம்னிக்கு 44%வீதமும் பதிவாகயிருக்கிறது. இடைவெளி 6% எனபது அதிகம் மட்டுமின்றி ஆட்சியில் உள்ள அதிபர் 50% மக்கள் ஆதரவை பெற்றிருப்பது. ஆச்சரியமான ஒரு திருப்பம்.. நீண்ட நாள் தேடலுக்குபின் அதிரடி ஆப்ரேஷனில் பின்லெடனை கொன்றது, பலநூற்றுகணக்கான பாங்குகள் திவாலானதால் ஏற்பட்ட சிக்கலை சரி செய்ததுசிட்டிபாங்க போர்ட் போன்ற நிறுவனங்களை அரசு பணத்தில் காப்பற்றி வேலைவாய்ப்பை பெறுக்கியதினால்  அமெரிக்க மக்கள் கிளிண்டன், புஷ்,க்கு தந்தது போல ஒபாமாவிற்கு இரண்டாவது வாய்ப்பை தருவார்களா அல்லது  அவர் தந்த ஒரே மாற்றம் ஏமாற்றம் தான் என்று ரோம்னி சொல்வதை ஏற்று அவருக்கு வாய்ப்பு கொடுக்கபோகிறார்களா? தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. இன்னும் பல கருத்துகணிப்புகள் நடக்க இருக்கும் நிலையில், உலகின் எல்லா ஜனநாயக  நாட்டின் தேர்தல்களைப்போல  இதிலும் எது வேண்டுமானலும் நடக்கலாம்,  
 ரமணன்.
CLAYMONT . USA  25/4/12





29/4/12

ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஆள்



உலகிலேயே மிக மிக குறைந்த ஜனத்தொகையை கொண்ட  நகரம் அமெரிக்காவிலிருக்கிறது. வியோமிங் என்ற மலைப்பகுதி  மாநிலத்திலிருக்கும் பியூஃபோர்ட்(BUFORD)  என்ற குட்டி நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு தெரியமாஓன்று.  ஆம் ஒரே ஒருவர் வாழும் இந்த சின்ன மலை நகரத்தின் ஜனத்தொகையாக  கடந்த ஆண்டு சென்ன்ஸில் பதிவு செய்ய்பட்ட எண் இது. நகர் நுழை வாயிலில் ஊரின் பெயரோடு இதையும் சொல்லும் பெயர்பலகையும்  இருக்கிறது. ஒரு பெட்ரோல் பங்க், பள்ளிக்கூடகட்டிடமும்  செல்போன் டவரும் இருக்கும் இந்த நகருக்கு.   தனி ஜிப் கோட்  (அமெரிக்காவின் பின் கோட்) எண்.  இந்த நகரம் தான் இபோதுஅமெரிக்க  மீடியாவின் ஹிலைட். காரணம் அந்த ஒரு நபரும் நகரத்தை விட்டு  விரைவில் காலி செய்யப்போகிறார்.
நியூயார்க்கிலிருந்து சான்பிரான்ஸ்கோ செல்லும் தேசிய நெடுஞ்சால 80ல் லாஸ் ஏஞ்சல் நகரின் அருகிலிருக்கும் ஒரு மலைப்பகுதியில் 8000 அடி உயரத்திலிருக்கும் இந்த நகரத்தில் ஆண்டில் 6 மாதத்திற்கு மேல் பனியும் குளிரும் பயங்கரமாகயிருக்கும் இந்த நகரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 2000 பேர் வசித்திருக்கின்றனர். 1980ல் இருந்த ஒரே ரயில் வசதியும் நிறுத்தபட்டத்தால் மக்கள்  மெல்ல வேறு  நகரங்களுக்கு சென்ன்றுவிட்டார்கள். தங்கள்  ஊரைவிட்டு போக விரும்பாத டான் சாம்ன்ஸ் (DON SAMMONS)  தம்பதியினர் இங்கேயே தங்கிவிட்டனர். 15 ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மறைந்தபின், மகனும் வேறு ஊருக்கு பிழைக்கப் போனபின்  இவர் தனியாளாக வசிக்க ஆரம்பித்தார். இப்படி ஒரு ஆச்சரியமான மனிதரையும், அந்த ஊரையும் பார்க்க டூரிஸ்ட்கள் கோடைவிடுமுறைகளில் வரத்துவங்கினர். அவர்களுக்காக நினைவுசின்னங்கள் விற்க துவங்கபட்ட ஒரு சிறிய கடையையும், பெட்ரோல் பங்க்கையும் நிர்வகிக்கும் லான் சாம்ன்ஸ் (DON SAMMONS)  தான் ஊரிலிருக்கும் பள்ளிக்கூடம் மற்றும் ஒரு கட்டிடத்திற்கு சொந்தகாரர்.அந்த கட்டிடம் அவர்து 3 அறை வீடு.  பியூஃபோர்ட்(BUFORD)  நகரின் மேயராக  தன்னை அறிவித்துகொண்டிருக்கிறார். கடந்தமாதம்   தன் ஊரை  ஏலத்தில் விற்க விரும்புவதாக இண்டெர்நெட்டில் விளம்பரம் செய்தார்,  25 பேர் பங்குகொண்ட இந்த ஆன்லயன் ஏலம்  ஒரு லட்சம் டாலரில் துவங்கி  90000 லடசம் டாலரில் முடிந்த்திருக்கிறது. வாங்கியவர்கள் ஹோசிமின் சிட்டியிலிருக்கும் இரண்டு வியட்நாமியர்கள். எதிர்பாரத இந்த விலைகிடைத்தில் லான் சாம்ன்ஸ்க்கே ஆச்சரியம்.
தான் மட்டும் ராஜாவாக வாழும் இந்த 61 வயது காரர்  ஏன் தன் ஒரே சொத்தான் ஊரையே விற்கிறார்?  தனிமையான வாழ்க்கை போரடித்துவிட்டதாம்.  எனவே  மக்கள் சற்று குறைவாக இருக்கும் ஒரு கடற்கரை பகுதியில் தன் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர  விரும்புகிறாரம்.
யாருமே இல்லாத இந்த ஊரை வாங்கியவர்கள் என்ன செய்யலாம் எனபதற்கான யோசனையை தெரிவிக்க நேயர்களுக்கு போட்டி அறிவித்திருக்கிறது ஒர் டிவி சேனல்.






15/4/12

மச்ச அவதாரம்




ஜேம்ஸ் கேம்ரோனின்  “ மச்ச அவதாரம்

உலக சினிமா  வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருக்கும் படம் டைடானிக். இன்றும் உலகின்  எந்த பகுதியில் திரையிடப்பட்டாலும் வசூலை அள்ளிக்குவிக்கும் இந்த படத்தின் டைரக்டடர் ஜேம்ஸ் கேம்ரோன்.  தொடர்ந்து தன் படங்களுக்கு ஆஸ்கார், அக்கடமி விருதுகளை வாங்கிக்கொண்டிருக்கும் இந்த டைரக்டர் இந்த ஆண்டு பெறப்போகும்  ஒரு விருது அவரது சினிமாவிற்காக இல்லை. அறிவியலில்கடல்பற்றிய ஆராய்ச்சியில் அவரது பங்களிப்புககாக..
ஆழ்கடலின் அடிப்பகுதியை முதலில் பார்த்து அதில் பயணம் செய்த முதல் மனிதன் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார் கேம்ரோன். சினிமாதிரைக்கதையாசிரியர், கேமிராமேன், டைரக்டர் எனபல முகங்கள் கொண்ட இவருக்கு பிடித்த மற்றும் ஒரு விஷயம் ஆழ்கடல் ஆராய்ச்சி. ஸ்கூபா டைவராக உலகின் கடல் பகுதிகளை பார்த்திருக்கும் இவரது ஆசை கடலின் அடி மண்ணை பார்க்கவேண்டும் என்பது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு டிரக் டிரைவராகி, ஸ்டார்வார் பாத்த ஆர்வத்தால் நூலகங்களில் சினிமா, கேமிரா பற்றி படித்தறிந்து போராடி சினிமா உலகில் சரித்திரம் படைத்திருக்கும் கேம்ரோன்  “இது என் 7 ஆண்டு கனவு”“ என்று சொல்லுகிறார். இவர் அவதார் படத்திற்கு பின் இதில் தீவிரமாக ஈடுபட்டு அதற்காக தன்னை தயாரித்துகொள்ள ஆரம்பித்தார். உலகியே அதிக ஆழமான கடல் பகுதியாக அறியபட்டிருக்கும்  “சாலெஜ்ர் டீப்” “ என்ற  கடல் பகுதியில் செல்வதற்காகவே பல மில்லியன் டாலர் செலவில்  24 அடி நீளத்தில் ஒரு குட்டி சப்மெரீன் ” “டீப் ஸீ சாலெஜ்ர்“ தயாரிக்கபட்டது. அவருக்கு பிடித்த பச்சை வண்ணத்தில், இயந்திர கைகள், சக்திவாய்ந்தவிளக்குகள், 3டி கேமிராக்கள் என விசேஷமாக தயாரிக்கபட்ட இதில் ஒருமுறை பரிசோதனை பயணமும் செய்தபார்ததிருக்கிறார்.   ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான மேரினா தீவு பகுதிதான் உலகிலேயே ஆழமான கடற்பரப்பை கொண்டது. அந்த கடல் பகுதியில்தான் இந்த சாதனையைச் செய்திருக்கிறார்.  “நாங்கள் திட்டமிட்டதைவிட மிக வேகமாக ஒரு டார்பிடோ போல பாய்ந்த  டீப் ஸீ-சாலென்ஜர் கடலடியை  2 மணி நேரத்தில்  அடைந்தது.  கடலின் அடிப்பகுதியில் 4மணி நேரம் சற்று தூரம் அந்த கப்பலை ஒட்டிச்சென்று  பார்த்தேன். அடர்ந்த இருட்டில் 35 000 அடி ஆழத்தில் கப்பலின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்த அற்புதமான காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  வேறு ஒரு கிரகத்திலிருப்பதை போல உணர்ந்தேன். கப்பலின் ஹைடிராலிக் பிரேக் சரியாக இயங்காதலால் சீக்கிரமே திரும்பிவிட்டேன். “ என்று சொல்லும் கேம்ரானின் இந்த பணியில் நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டியின் ஆராய்ச்சியாளார்களுக்காக சாம்பிள் சேகரித்ததோடு 3 டி படங்களும் எடுத்திருக்கிறார். உட்காருமிடம் நாலு அடிக்கும் குறைவாக ஒரு விண்வெளிப்யணியின் சீட்போல வடிவைக்கபட்டிருந்த  இந்த சப்மெரீன் ஒரு ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலிருந்து இறக்கபட்டதலிருந்து பயணத்தை ஒவொரு நிமிடமும்   “ஆக்டோபஸ்”””“ என்ற  தனது உல்லாச  படகிலிருந்து கண்காணித்து அவருடன் வர்லெஸ் தொடர்பிலிருந்தவர் கேம்ரானின் அருமை நண்பர்  பால்ஆலன். இவர் மைக்ரோ சாப்ட் நிறுவனர்களில் ஒருவர். கேம்ரான் தரும் தகவல்களை  அங்கிருந்து டீவிட் செய்து கொண்டிருந்தார். டிவி சானல்கள் அதை அறிவித்து கொண்டிருந்தது.  கேம்ரோனின் சப்மெரின் கடல்மட்டத்திற்கு  வெளி வரும் பகுதியில் ஹெலிகாப்டர் கண்காணிப்பும் இருந்தது. கடலடியிலிருந்து   அவர் அனுப்பிய முதல் செய்தி  “எல்லாம் சரியாக இயங்குகிறது.””” “
சினிமா சாதனையாளார்களில் அவர்கள் துறையைத்தவிர மற்ற துறைகளில் பெரிய சாதனையை நிகழ்த்திய சினிமாகாரர்கள் மிகச்சிலரே. கேம்ரோன் கடலாராய்ச்சி துறையில் படைத்த வரலாற்று சாதனை காலம் முழுவதும் பேசப்படும்.
ஆழ்கடலிலிருந்து எழுந்த நீர்பிரளயதிலிருந்து உலகை காப்பாற்ற பகவான் மச்ச அவதாரம் எடுத்தாக சொல்கிறது நம் புராணம்.  ஆழ்கடலின் நிலத்தடியை  நிஜமாகவே பார்த்துவந்த இவரின் அடுத்த படம் அதுவாகவே இருக்குமோ ?



8/4/12

கோபுரங்களும் சாய்வதுண்டு.


உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே  பார்த்தது.. 10 ஆண்டுகள் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும்  அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லைநியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே   துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள்  இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள்ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவ்பத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர்,  மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும்  இப்போது ஒரு நினவு சின்னம்  அங்கே எழுப்பபட்டிருக்கிறது.. 10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ  என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்க்பட்டிருக்கிறது இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில்  அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்




மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த  அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே  சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும்  கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில்  உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது.  அதில் சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது.


இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில்  உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது.  பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
 மியூசியம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின்  மாதிரிகளுடன்  ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருகிறார்கள். மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த  பரிசு பொருட்கள் இப்படி பல. இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.
கடந்த ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே  விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய  ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி  பார்பபவர்களின்  மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும்  நீண்ட தூரத்திலிருந்து வந்து  மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும்நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே  அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும்  பூங்கொத்துக்ளையும்  பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும்  அதன்  உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை  உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.


துயரங்களின் சக்ரவர்த்தி




வாழ்நாளில்  வெற்றி கண்ட சாதனையாளார்களின், வரலாற்றில் இடம் பிடித்த நாயகர்களின், அரசியலில் தங்கள் அடையாளங்களை ஆழமாக பதித்த தலைவர்களின் வாழ்க்கையை பேசும்  வாழ்க்கை வரலாறு நூல்கள் இலக்கிய உலகில்  என்றும் தனியிடம் பெறுவதில் ஆச்சரியமில்லை.  ஆனால் ஒரு நோயின் வரலாற்றை, அதுவும் இன்றளவும் விடை கண்டிபிடிக்கமுடியாத வினாக்களை  இன்னமும் எழுப்பிகொண்டிருக்கும் ஒரு கொடிய நோயின் தோற்றதையும்,  அதனிடம் ஆராய்ச்சியாளார்களும், மருத்தவர்களும் போராடித் தோற்றதையும் விறுவிறுப்பான நடையில், தனது நோயாளிகளின் வாழ்க்கை கதைகளுடன் ஒரு சுவையான வாழ்க்கை வரலறாக எழுதப்படிருக்கும் இந்த புத்தகம் உலகம் முழுவதிலும் வரவேற்பை பெற்றிருப்பது தான் ஆச்சரியம்
2011ஆம் ஆண்டின்  புலிட்சர் விருது,  அமெரிக்கபுத்தக விமரிசகர் வட்டவிருது,. டைம் பத்திரிகைதேர்ந்த்டுத்த சிறந்த புத்தகம், இங்கிலாந்தின்
கார்டியன் பத்திரிகையின்  முதல்புத்தக” “ விருது என  தொடர்ந்து பல விருதுகளை பெற்றிருக்கும் இந்த துயரங்களின்  சக்கரவர்த்தியான புற்று நோயின் வாழ்க்கைவரலாறு”“  என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒரு டாக்டர். சித்தார்த்தா முகர்ஜி எனற அமெரிக்க வாழ் இந்தியர்.. இது அவரது முதல் புத்தகம். ஓரே ஆண்டில் இதுவரை எந்த புத்தகமும் இத்தனை சிறப்பான அகில உலக விருதுகளைப்பெற்றதில்லை டாகடர் சித்தார்த்தா  நியூயார்க் நகரின் கொலாம்பியா யூனிவர்சிட்டியில் ம்ருத்த்வபேராசிரியராகவும், அதன் மருத்துவமனையில் சர்ஜனாகவும பணியாற்றும் ஆராய்ச்சியாளார்.  
துவக்கதத்லிருந்து முடியும்வரை ஒரு விறுவிறுப்பான நாவலைபோல  மிக சுவாரஸ்யமாக எழுதபட்டிருக்கும் இந்த புத்தகத்தில் மருத்துவ சொற்கள்  சில இடங்களில் இடம்பெற்றிருந்தாலும் அவை எளிதில் புரியும்  நடையில்   அமைக்கபட்டிருக்கிறது. திறமையான ஒரு சர்ஜனின் விரல்கள் சிறப்பான நாவலையும் படைக்கமுடியும்  என புரியவைக்கிறது.  
டில்லியில் வாழ்ந்த ஒரு மத்தியதரகுடும்பம் சித்தார்த்தாவினுடையது. கண்டிப்புக்கு பெயர் பெற்ற ஒரு கத்தோலிக்க பள்ளியில் படித்தவர். ஆங்கில பொயட்டிரியை சரியாக் ஒப்பிக்காதாதால் தண்டிக்கபட்டது கூட நினவிலிருக்கிறது என்று சொல்லும் இவர்  கல்லூரியில் எல்லாபாடங்களிலும் சிறப்பிடம் பெற்றமுதல் மாணவர். தொடர்ந்து அமெரிக்க ஸ்ட்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் உயிரியலில் முதுகலைப் பட்டபடிப்பின்போது சித்தார்த்தா விற்கு  மிக மதிப்பு வாய்ந்த ரோடோ ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ரோடோ அறகட்டளை உலகின் சிறந்த மாணவர்களை தேர்வுசெய்து அவர்கள் விரும்புவதை விரும்பும் வரை படிக்க உதவும் நிதி. இந்த ஸ்காலர்ஷிப்க்கு உரியவர்கள் கடும் தேர்வுகளுக்கு பின் தேர்ந்தெடுக்கபடுவதால் உலகின் எந்த கல்லூரியின் கதவும் இவர்களுக்கு முதலில் திறக்கும். சித்தார்த்தாவிற்கு மருத்துவதுறையில் சிறப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ரோடோ ஸ்காலர்ஷிப் அந்த லட்சியத்தை அடைய உதவிசெய்தது.   இதன் உதவியால் சித்தார்த்தா ஆக்ஸ்போர்ட் பல்கலகழகத்தில் நோய்தடுப்பில் டாக்டர் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில்  விரும்பி படித்த நோய்தடுப்பு ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக தினசரி வார்டுகளுக்கு சென்று நோயாளிகளின் நிலைகுறித்து குறிப்புகள் எழுதிவந்தபோதும் அது சம்பந்தமாகவும் படிக்க நேர்ந்தபோது டாக்டர் சித்தார்த்தாவுக்கு இந்த கொடிய நோயின்  தோற்றமும் தொடர்ந்து மருத்தவ உலகத்தினர்  அதை ஒழிக்க செய்து வரும் போராட்டங்களையும் தியாகங்களையும் அறிந்து  ஆச்சரியமைடைந்தார்.  ஜுனியர் மாணவர்களுக்கு பாடம் நடத்த குறிப்புகள் எடுத்த போது  இந்த செய்திகளை  மருத்துவ அதுவும் இதுபற்றி படிக்கும் மாணவர்கள் மட்டுமே அறிய முடிகிறது. இது மக்களுக்கு சொல்லபடவேண்டிய முக்கிய விஷயம் என எண்ணிக்கொண்டிருந்தார்.  பரிசோதிக்கும் நோயாளிகளிடமிருந்து இவர்  தவறாமல் சந்திக்கும் கேள்வியான ஏன் எனக்கு இது வந்தது?  தீர்வேகிடியாதா?“ என்ற கேள்வி இவரை இந்த புத்தகம் எழுத வைத்திருக்கிறது.
கி.மு 500ல் ஒரு பெர்ஷய அரசிக்கு வந்த மார்புகட்டி ரக்சியமாக ஒரு கிரேக்க அடிமையால் கொடுரமான முறையில் வெட்டபட்ட முதல் சர்ஜரியிலிருந்து இன்று கையாளாபடும் கம்பூட்டர்மயமாக்கபட்ட நவீன சோதனைகருவிகள் வரை இந்த நோயுடன் மருத்துவ உலகம்  நிறுத்தாமல் தொடர்ந்து  போராடுவதையும் அதற்காக செய்யபட்ட ஆனால்   பலர் அறியாத தியாகங்களையும் மனம்தொடும் வாழ்க்கை போராட்டங்களையும் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கும் இந்த டாகடர் இந்த நோயைபற்றிய சமூக பார்வையும் அதன் அரசியல் முகத்தையும் துணிவுடன் பதிவு செய்திருக்கிறார். சிகரெட் பெட்டிகளில் ” “புகைபிடிப்பதில் புற்று நோய் அபாயமிருக்கிறது”“ என்ற வாசகத்தை அச்சிடுவதை சட்டமாக்க அமெரிக்க அதிபர் கென்னடி கூட தயங்கியதையும், அதற்கு காரணம்  அவரது கட்சிக்கு பெரும்  தேர்தல் நிதி தந்தவர்கள் சிகரெட் தயாரிப்பளார்களாகயிருந்தது தான். என்பதையும், நிக்கஸன் அதிபராகயிருந்த்போது வியட்நாம் போரில் இறந்தவர்களைவிட புற்று நோயால் இறந்த அமெரிக்கர்கள் அதிகம். அமெரிக்கா  புற்று நோயை ஒழிக்க ஒரு போரை துவங்க வேண்டும் போராடிய டாகடர்களின் அமைப்புபற்றியும் விவரித்திருகிறார். இதன் மூலம்  புற்று நோய் சம்பந்தபட்ட பல்வேறு விஷயங்களை வரும் தலைமுறையனருக்கு சொல்ல விரும்பும் இவரது சமூக பொறுப்பு புரிகிறது.
2009லிருந்து  நியூயார்க்கின் கொலம்பியா மருத்துவ மனையில் ஒரு விசேஷ ஆராய்ச்சிபிரிவை துவக்கி அதன் மூலம் புற்று நோயில் ஒரு வகையான லூக்கெமியா (ரத்த புற்று நோய்) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு மிக முக்கிய திருப்பத்தை சந்திருப்பதாகவும்  இறுதி பரிசோதனைகள் முடியாத நிலையில்  அதுபற்றி  எதுவும் பேசுவது ஆராய்சி மரபுகளுக்கு புறம்பானது என சொல்லுகிறார்.
20 ஆண்டுகளாக தொடர்ந்த அமெரிக்க வாழ்க்கை சித்தாரத்தா முகர்ஜியை மற்றிவிடவில்லை. மரபுகளை மதிக்கும் இந்திய வாழ்க்கைமுறையை நேசிக்க்கும் இவரது மனைவி  சாரா ஒரு அமெரிக்கர். சாரா  ஒவியகலையை முறையயாக பயின்று அதில் முதுகலைபட்டம் பெற்றிருப்பவர்.  இவர்  அமெரிக்கா அறிந்த ஒரு புகழ்பெற்ற விருதினைப் பெற்ற சிற்பகலைஞர். சிற்பம், ஒவியம்  சம்பந்தமான அரசு, மற்றும் அரசு சாராத பல அமைப்புகளில் இடம்பெற்றிருக்கும் இவர் நியூயார்க் பல்கலைகழக ஆசிரியர். தங்கள்  பெண் குழந்தைகள். லீலா, மற்றும் ஆர்யாவுடன் நியூயார்க் நகரின் புறநகர்பகுதியில் வசிக்கின்றன்ர்  இந்த தம்பதியினர். தன் குடும்பத்தைப் போலவே ஆராய்ச்சியையும் அழமாக நேசிக்கும் இந்த டாக்டர் நம்பிக்கையுடன் சொல்வது இன்று சிகிச்யைகள் மூலம்  பல கட்டங்களில் 65% குணமாக்கபடும் இந்த நோய் ஒரு நாள் நிச்சியம் ஒழிக்கபட்டுவிடும் எனபது தான்.
நல்ல டாகடர்கள் தருவது சிகிச்சைமட்டுமில்லை நம்பிக்கையும்தான்.