28/3/13

புதிய போப்பின் முன்னே நிற்கும் ”பழைய” பாவங்கள்


காதலின் வெற்றிக்காக மகுடம் துறந்த மன்னர்களை சரித்திரம் நமக்கு சொல்லியிருக்கிறது. காதலில் தோற்றதால் மன்னராகும் வாய்ப்பு பெற்றவர் இப்போது தேர்ந்தெடுக்கபட்டபட்டிருக்கும் புதிய போப்.. உலகின் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான இவர் உலக நாடுகளால் வாடிகன் நாட்டின்  மன்னராக மதிக்கபடுபவர்.  போப் என்பவர் உலகம் எல்லாம் பரவிக் கிடக்கும் கத்தோலிக்கத் திருச்சபைகள், அதன் சொத்துக்கள், அதிகாரங்கள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒரே குடைக்குள் வைத்திருக்கும் மாபெரும் பதவியிலிருப்பவர். இந்த பதவியிலிருந்த போ பெனிடிக்ட் XVI தன் உடல் நிலையை காரணம் காட்டி பதவி விலகபோவதாக அறிவித்தார். உலகின் மிகப் பெரிய மதப் பிரிவான கத்தோலிக்கர்களின் சக்தி வாய்ந்த தலைமைப் பதவியிலிருந்து. கடந்த 600 ஆண்டுகளில் இவ்வாறு எவரும் பதவி விலகியதில்லை.  அந்த பதவிக்கு திருச்சபை மரபுப்படி, உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த, 115 கார்டினல்கள் பங்கேற்ற கூட்டத்தில் தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவை சேர்ந்த, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ, (வயது76,) புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் 16 வயதில் பக்கத்துவீட்டு பெண்னை காதலித்தார், உன்னை மணக்க ஆசைப்படுகிறேன். நீ சரி என்றால் மணப்பேன். இல்லையெனில், பாதிரியாராகி, மத சேவையில் ஈடுபடுவேன் எனகடிதம் எழுதியிருந்தார். காதலை அந்த பெண் ஏற்ககாதால் சொன்னபடியே பாதிரியார் ஆகி நாட்டின் தலமை ஆர்ச் பிஷப் வரை வளர்ந்து கார்டினலாக உயர்ந்து இன்று போப்பாகியிருக்கிறார்.

போப் பெனிடிக்டின் பதவி விலகலுக்கு  காரணம் அவரது உடல் நிலையில்லை வேறு பல காரணங்கள்  இருக்கிறது என்கிறது இப்போது கசியும் வாட்டிகன் அரண்மனை ரகசியங்கள்.

வத்திகான் லீக்சின் எதிரொலி:  போப் பதினாறாம் பெனிடிக்ட் தமது பதவியை ராஜினாமா செய்யபோவதாக செய்த அறிவிப்பு இதகத்தோலிக்க மதகுருமார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உலகின் பல  கத்தோலிக்கத் திருச்சபைகளில் இலை மறை காயாக நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் பலவும் அண்மையக் காலமாக வெளி வரத் தொடங்கி விட்டன. அத்துடன் வத்திகானின் சொத்துக்களைக் கைப்பற்றுவதில், அதிகாரங்களைத் தக்க வைப்பதில் வத்திகானுக்குள் நிகழும் அதிகாரப் போட்டிகள், அரசியல் விளையாட்டுக்கள் போன்றவற்றை  தொகுத்து ''வத்திகான் லீக்ஸ்'' என்ற தொகுப்பு கடந்த ஆண்டு வெளி வந்ததுதொடர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு பணங்களையும் ரகசியமாகப் பல மதக்குருமார்கள் தமது ரகசிய வங்கி கணக்கில் மாற்றிக் கொண்டனர் எனவும், பல இளம் வயதினர் மீது பாலியல் துன்புறுத்தல்களை பல மதக்குருக்கள் செய்கிறார்கள்  பல வத்திகான் மதக்குருமார்கள் ஓரின சேர்க்கை பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் பாதிக்க பட்டவர்கள்,சொல்லகூடாது என  மிரட்டபடுகிறார்கள் என்று  செய்தியை பத்திரிக்கையாளர் கார்லோ அப்பாதே  வெளியிட்டபோது உலகம் திடுக்கிட்டது. இதைத்தொடர்ந்து போப் வாட்டிகனின் தலமை ஆட்சி குழுவான கீயூரியா(curia)  என்ற சபையில் விஷயம் பல நாட்கள் விவாதிக்கபட்டிருக்கிறது. இதன் உறுப்பினர்கள் 80 வயதை கடந்த சீனியர் கார்டினல்கள். போப்பையே ஆட்டிவைக்கு வலிமை வாய்ந்தவர்கள்  இந்த கூட்ட முடிவுகள் ரகசியமானவை. குறிப்புகள் பலவும் போப்பினால் எழுதப்பட்டவை, திருச்சபையின் முக்கிய அங்கத்தனர்களால் பரிமாறிகொள்ளப்பட்டவை. இவைகளை போப்பின் முதன்மை பணியாளராக இருந்த பாலோ காப்பிரியல் என்பவர் திருடி வெளியிட்டு விட்டார் என்று  கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 18 மாதம் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.  இந்த கைதும் தண்டனையும்  வெளீயான செய்திகளில் உண்மையில்லாமல் இல்லை என்பதை உணர்த்தியது. இத் தகவல்கள் வெளியாவதின் பின்னணியில் பல முக்கியக் கத்தோலிக்க மதக் குருக்களும் இருக்கிறார்கள் என்பது பரவலான நம்பிக்கை.


. தொடர்ந்து எழுந்த அலை வாத்திகன் பாங்க் சம்பந்தபட்டது. வாத்திகனுள்ளே மட்டும் இயங்கும்  இந்த வங்கியின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருந்ததில்லை.  ஐரோப்பிய யூனியனின் கூட்டமைப்பின்  தலமை வங்கி இந்த வங்கி மூலம் நடைபெற்று கொண்டிருக்கும் சர்வ தேச பரிமாற்றஙகளின் விபரத்தை கேட்டபோது  தர மறுத்து விட்டது.  இப்போது விபரங்கள் சொல்லபடாவிட்டால் ஐரோப்பாவின்  வங்கிகள்  அனைத்தும் உங்களுடன் உறவுகள் வைத்துகொள்ள கூடாது என ஆணையிடுவோம் என்று காலகெடு தந்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.
 இண்டிபெண்டெண்ட் என்ற பிரபல தினசரி  வாத்திகன் பற்றிய தொடர் கட்டுரையை வெளியிட துவங்கியிருக்கிறது. முதல் பகுதியில் வந்த செய்தி அதிர்ச்சியானது. ஐரோப்பவின் மிக பெரிய ஆடம்பரமான ஓரினசேர்க்கை விரும்பிகளின் கிளப் இருக்கும்  வளாகத்தில் வாத்திகன் 23 மில்லியன் டாலர்களுக்கு பங்குகள் வாங்கியிருக்கிறது.  வாத்திகனால் நியமிக்கபட்ட மத பிராசகர்கள்  கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர்  கார்டினல் இவான் டைஸ்.  இவர் மும்பாயின் முன்னாள் ஆர்ச் பிஷப். இவருக்கு சர்ச்களின் இளவரசர் என்ற பட்டமும் உண்டு.  இவருக்கு 12 அறைகள் கொண்ட ஒரு ஆடம்பர பிளாட் அந்த கட்டிடத்தில் இருக்கிறது இவர் வீட்டிலிருந்து கிளப்பிற்கு வழியும் இருக்கிறது. இவர் மட்டுமில்லை இவர் போல் 18 பாதிரியார்களுக்கு அந்த கட்டிடத்தில் பிளாட்கள் இருக்கின்றன. என்கிறது அந்த கட்டுரை.  டைஸ் “ நான் அவர்களை போதனைகள் மூலம் மனம் மாற்றி திருத்த முயற்சிக்கிறேன்” என்று சொல்லுவதை யாரும் காதில் போட்டுகொள்ள வில்லை.
இந்த சூழ்நிலயில் முன்னாள் போப்  பெனடிக் 80 வயதுக்கு மேற்பட்ட 3 கார்டினல்கள் கொண்ட  ஒரு கமிட்டியை அமைத்தார். அவர்கள் தந்த ரிப்போர்ட் ”சொல்லபடுவதில் பல உண்மையானவை தகுந்த நடவடிக்கை எடுத்து திருச்சபைக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்க வேண்டும்..”ஆனால் எந்த நடவடிக்கையும் கூடாது என அழுத்தம் தந்தது வலிமை வாய்ந்த கீயூரியா. பொறுத்து பார்த்து வெறுத்துபோய் ராஜினிமா செய்ய முடிவெடுத்தார். இதற்கு முக்கிய காரணம் அவ்ரது ராஜினாமாவால்  கீயூரியா உறுப்பினர்களும் ;பதவியிழப்பார்கள். புதிய போப்   கீயூரியா சபையின் உறுப்பினர்கள் புதிதாக நியமிப்பார்.  கீயூரியா உறுப்பினர்களை தன் ராஜினாமாவால் இப்படி தண்டித்த அவர்  சிறைக்கு நேரில் சென்று  தண்டனை அனுபவித்து கொண்டிருந்த  தன் உதவியாளர் பாலோ காப்பிரியல் லை  மன்னித்து ஆசிகூறி விடுதலை செய்துவிட்டார்.

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறார் .இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்  மிகவும் எளிமையானவர் என்று 
அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில் ஏறிதான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்றும்
ஆர்ச்பிஷப்பாக இருக்கும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் சொல்லபடுகிறது. போப்பாக தேர்ந்த்டுக்கபட்டவுடன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பில்கொடுத்துவிட்டு பஸ்ஸில் மற்ற கார்டினல்களுடன் போப்பின் அரண்மனைக்கு போயிருக்கிறார்.
புதிய போப்பாண்டவர் தனது பெயராக பிரான்சிஸ் என்பதைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால் ஒரு எண் இருக்கும். அதாவது 2ம் போப் ஜான் பால், 16ம் பெனடிக்ட் என்று. ஆனால் தற்போது தேர்வாகியுள்ள ஜார்ஜ் தேர்வு செய்துள்ள பெயர் பிரான்சிஸ்.
இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி எண் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும். பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்த்டுத்தற்கு இவர்  சொன்ன காரணம். யேசுவின் சீடரான பிரான்சிஸ் ஒரு ஏழை, எளிமையாக வாழ்ந்து ஏழைகளுக்கு உதவியவர்.  நமது சர்ச்கள்  அதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது.
தவறை உணர்ந்து வருந்தி கேட்பவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் அதிகாரம் திருச்சபைகளுக்கு உண்டு. இந்த போப் அதைசெய்யபோகிறாரா? அல்லது தனக்கு முந்தியவர் முடிக்காமல் போன நிர்வாக பணியான தவ று செய்தவர்களுக்கு தண்டனைகளை அளிக்கபோகிறார? உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.



  • *
  •      

18/3/13

ராஜம்மாவின் குதிரை


கனவுகள் காணும் மனிதர்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடங்களில் குதிரைபந்தய மைதானமும் ஒன்று. தான் தேர்ந்தெடுத்த குதிரை ஜெயிக்க, பணம்கட்டியவர்கள், தங்கள் கணிப்புகள் சரியாக இருக்கவேண்டுமென்று புக்கிகள், தன் திறமையை பதிவுசெய்ய துடிக்கும் ஜாக்கிகள், தங்கள் குதிரை முதலில் வரும் கெளரவத்தை பெற குதிரைகளின் உரிமையாளர்கள் என பலரும் தங்கள் ஆசைகளை கனவாக கண்டுகொண்டிருக்கும் இடம் குதிரை பந்தைய மைதானம்.  இவைகளிலிருந்து மாறுபட்டு அங்கே ஒரு பெண  மாறுதலான ஒரு கனவை கண்டுகொண்டிருந்தார். ஒரு ரேஸ் குதிரைக்கு உரிமையளாரக வேண்டும் என்பதே அது.
 10 ஆண்டுகளுக்கு முன்னால் பங்களூரு ரேஸ்கிளப்பில் குதிரை பந்தைய  ”பெட்” டிக்கெட்கள் விற்கும் கவுண்ட்டரில் டிக்கெட் விற்கும் பணியில் சேர்ந்தவர் ராஜம்மா. நிரந்திரமில்லாத அந்த பணியில் வேலை செய்த நாட்களில் நாளனொன்ருக்கு 50 ரூபாய் சம்பளம்.. அதே ரேஸ்கிளப்பில் கால்நடை மருத்துவ பிரிவில் பணியாற்றிய வெங்கடேஷுடன் திருமணம் இரண்டு குழந்தைகள் என வாழ்க்கையுடன் தொடர்ந்து கொண்டிருந்தது இவரது கனவு. குதிரை ரேஸ்களில் சிலர் பெரும்பணம் சம்பாதிப்பதும் பலர் பணம் இழப்பதையும் தினசரி கண்டுவந்த ராஜம்மா கவனித்தஒரு விஷயம். எல்லா ரேஸ்களிலும் எதாவது ஒரு அளவில் பணம் சம்பாதிப்பது குதிரைகளின் சொந்த காரர்கள்மட்டுமே என்பது. இது அவருக்கு ஒரு குதிரையை சொந்தமாக வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது ரேஸ்குதிரைகள் என்பது மிக விலையுயர்ந்தது, வாங்குவது அவ்வளவு எளிதல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் துணிவுடன் அதைப்பற்றி கனவுகள்  காண ஆரம்பித்தார். ஆசையை கேட்ட பலர்  -குடும்பத்தினர் உள்பட  சொன்னது “பைத்தியகாரி” லட்சாதிபதிகள் கூட யோசிக்க தயங்கும் விஷயம் இது. உனக்கு கனவில் மட்டுமே சாத்தியம் என சொன்னவர்கள் தான் அதிகம். ராஜம்மா மனம் தளரவில்லை தன் லட்சிய கனவை நனவாக்கும் திட்டங்களில் இறங்கினார். குதிரை வாங்க தேவையான பணத்தை சேர்க்க இந்த டிக்கெட் கவுண்ட்டர் வேலை உதவாது எனபதால் ஒரு சொந்த தொழில் செய்ய திட்டமிட்டு தன்னை தயாரித்து கொண்டார்.கிராமபெண்ணான நானும் உழைப்பினால் ஒரு பேஷனான நகர பெண்ணாகி சாதிக்க முடியம் என நம்பினேன். என்று சொல்லும் இவர்  இருந்த சொற்ப சேமிப்பில் ஒராண்டு பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து பட்டயம் வாங்கிய பின்னர் கடன் வாங்கி ஒரு பார்லரை துவக்கி சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். கைகள் கஸ்டமரை அழகுபடுத்திகொண்டிருந்தாலும் கண்களில் தன் சொந்த குதிரை ரேஸில் ஒடும் கனவுகாட்சிகள் தான் ஒடிக்கொண்டிருந்தது. ஆறு ஆண்டில் இவர் சேமித்த பணம் 3 லட்சம். ”மிக கட்டுமையான சாவலாக இருந்த விஷயம் இது. பார்லரில் ஒரே மாதரியான நிரந்த வருமானமில்லை சிலமாதங்களில் கடன் தவனையை கட்ட கூட தவறியிருக்கிறேன் ஆனால் லாபமாக கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் குதிரை வாங்க சேமித்தேன்” என்று சொல்லும் இவர் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் சதீஷ் என்ற  குதிரை பயிற்சியாளார் தன் குதிரையின் மதிப்பில் கால் பங்கை விற்க போகும் தகவல்  கிடைத்தது. ரேஸ்குதிரைகள் மிக விலையுள்ளதாக இருப்பதால் அவற்றின் உரிமையை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் பங்கை மட்டும் மற்றவர்களுக்கு விற்கலாம். தனி உரிமையாளர்களும் ஒரு பகுதி பங்கை விற்று  பணமாக்கி கொள்ளாலாம். இது ரேஸ்கிளப்பின் விதி முறைகளுக்கு உட்பட்டது அந்த பயிற்சியாளாரை அறிமுகமில்லாதால் தனக்கு தெரிந்த ஒரு குதிரையின் சொந்த காரரின் உதவியுடன் சதீஷிடம் தனக்கு அந்த பங்கை தனக்கு தரும்படி கேட்டார் ராஜம்மா. யாராவது மற்றொரு ரேஸ்கிளப் மெம்பர் பங்கை விலைக்கு கேட்பதை எதிர்பாத்துகொண்டிருந்த சதிஷ் இந்த சதாரண பெண்ணின் வேண்டுகோளினால் திகைத்துபோனார். முடியாது என மறுத்தும் விட்டார். காரணம் சமூக அந்தஸ்த்து இல்லை. கஷட்டபட்டு சேமித்த தன் முழுசேமிப்பையும்  இந்த பெண் இதில் மூதலீடு செய்து விட்ட பின் குதிரை அதை சம்பாதித்து கொடுக்க முடியாவிட்டால் தன் அத்தனை சேமிப்பை இழக்கும் ஆபத்தான நிலைக்கு தள்ளபட்டுவிடுவார் என்பதால். ஆனால் சொந்த குதிரை கனவால் துரத்தபட்டு கொண்டிருந்த ராஜம்மா நம்பிக்கையுடன் தினசரி சதீஷின் குதிரை லாயத்திற்கு வந்து காத்திருந்து அவரை சந்தித்து கேட்டுகொண்டே இருந்தார். தளராத தன்னமிக்கை மிக்க இந்த பெண்ணின் வேண்டுகோள் அவர் மனதை மாற்றியது. குதிரையின் மதிப்பில் கால்பங்கை செலுத்தி  பணக்காரர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் பங்களூர் ரேஸ் கிளப்பின் குதிரைகள் சொந்தகார்கள் பட்டியைலில் இடம் பெற்றறார் ராஜம்மா.  

             
அதிவேக புயல் (super storm) என்ற அந்த அழகான செம்பழுப்பு வண்ண குதிரை ராஜம்மாவின் ராசியினாலோ என்னவோ பங்கொண்ட முதல் பந்தையத்திலேயே பட்டையை கிளப்பிற்று. மிக ஸ்டைலாக முதலில் வந்து நின்றது. தொடர்ந்து குதிரைரேஸ்களின்மிககெளரமாக கருதப்படும் கவர்னர் கப் ரேஸில் முதலில் வந்துஜெயித்தது. தொடர்ந்து பங்களூர், மைசூர் டெர்பிகளிலும் இரண்டாவது இடத்தில் வென்றது. கடந்த மாதம் மும்பாயில் இந்தியாவில் மிகச்சிறந்த குதிரைகள் மட்டுமே பங்கேற்ற இந்தியா டெர்பி பந்தயத்தில் முதலிடம் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது. அந்த ரேசினால் கிடைத்த பரிசுப்பணம் 1.8 கோடிரூபாய்கள். பல குதிரைகள் வைத்திருக்கும் விஜய் மல்லையா இந்தியா டெர்பியில் பரிசு பெற 5 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.  பலகுதிரை உரிமையாளாருக்கு இது இன்னும் கைகெட்டாத கனவு. ராஜம்மாவின் முதல் குதிரை இதை சாதித்திருக்கிறது.
ஒவ்வோரு ரேசுக்குபின்னரும் தன் குதிரைக்கு திருஷ்டி கழித்து பூஜை செய்யும் ராஜம்மா ”வெற்றி என் தலைக்குள் போய்விடகூடாது என்பதில் கவனமாகயிருக்கிறேன் ரேஸ்வெறியினால் அழிந்த குடுபங்களையும் எனக்கு தெரியும் சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் முடிந்தால் இன்னும் ஒரு குதிரையில் முதலீடு செய்வேன். என் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு தேவையான தை சம்மாதித்த பின் விலகிவிடுவேன்” என்கிறார்.
கனவு காண்பவர்களின் ஆசைகள் குதிரைகளானால் எந்த உயரத்திலும் பறக்கலாம் எனபது ஆங்கிலத்தில் பகற்கனவு காண்பவர்களை பற்றி கிண்டலாக சொல்லபடும் வாசகம். ஆனால் இதை உண்மையாகவும் செய்ய முடியம் என்று காட்டியிருப்பவர் ராஜம்மா.







                                                          

14/3/13

”மாத்தி யோசித்த” ஒரு மருத்துவர்


தெளிவான தொலைநோக்கும், அந்த இலக்கை அடைய செம்மையான திட்டமிடலும் வெற்றிவாயிலுக்கு அழைத்துசெல்லும் பாதைகள் என்பது பெரிய நிறுவனங்களின் சாதனையாளார்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும்பாடம். ஆனால் இந்திய மருத்துவதுறையில் புதிய பாதைகளை அறிமுகபடுத்தி அந்த துறையின் முகத்தையையே மாற்றி அமைத்திருப்பவர்  டாக்டர் பிரதாப் ரெட்டி.  ஒரு மருத்துவ மனை எல்லா பிரிவுகளுடனும் வசதிகளுடன் இயங்குவது என்பது அரசுத்துறை மருத்துவ மனைகள்  அல்லது மதசார்புதொண்டு நிருவனங்கள் மட்டுமே  என்று நீண்ட நாட்கள் நிலவி வந்த  வந்த நிலையை மாற்றி தனியார் கார்பெர்ட் மருத்துவமனைகள் என்ற புதிய பாதையை இந்த தேசத்திற்கு அறிமுகபடுத்தியவர்  தமிழ்நாட்டை சேர்ந்த இந்த டாக்டர்.
30 ஆண்டுகளுக்கு  முன் சென்னையில்  பலவிசேஷ சிகிச்சை பிரிவுகளுடன் துவங்கிய ஒரு அப்பலோ மருத்துவமனை இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 22 நகரங்களில் 54 மருத்துவமனைகள்,1600 பார்மசிகள்,60 கிளினிக்கள் 11 நர்சிங் கல்லூரிகள், 1000கோடி பிஸினஸ், 65000 பணியாளார்கள் என மிகபிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.  “இன்றைக்கு  கார்பரேட் மருத்துவமனைகள்  என்பது ஆச்சரியபடக்கூடிய  ஒரு விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தமாதிரி ஒரு யோசனையை நான் சொன்னபோது எச்சரித்தவர்களும், ஏளனம் செய்தவர்களும் தான் அதிகம்.” என்று சொல்லுகிறார் தான் கடந்துவந்த பாதையில் பல சவால்களையும்,திருப்புமுனைகளையும் சந்திருக்கும்  டாக்டர் பிராதாப் ரெட்டி..
அனைத்து மக்களுக்கும் நல்ல மருத்துவவசதிகள் என்பது அரசின் கடமை. அதை தனியார் வசம் தந்தது தவறு என வாதிடுவர்களும் கூட தயங்காமல் ஒப்புகொள்ளும் ஒருவிஷயம் அப்போலோ பிராதப் ரெட்டி அடிகோலிய பாதையில் தான் இன்று நாட்டில் பல கார்பரேட் மருத்துவமனைகள் தோன்றி  நடுத்தர மக்களின்  மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்திருப்பதையும்  வெளி நாடுகளிலிருந்து கூட சிகிச்சை பெற இந்தியா வரும் அளவிற்கு தனியார் மருத்துவ மனைகளில் சிகைச்சைகளின் தரம் உயர்ந்திருக்கிறது என்பது. 
அரசாங்க மருத்துவமனைபோல எல்லா வசதிகளுடன்  ஒரு தனியார் மருத்துவமனை என்பதை நினைத்துகூட பார்க்கமுடியாத சுழலில், 30 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையும்,பிரச்ச்னைகளும் பெருகிவரும்  கட்டத்தில் ,அரசாங்காத்தினால் மட்டுமே மக்களின் மருத்துவ தேவைகளை  முழுமையாக பூர்த்தி செய்துவிட முடியாது என்பதால் கொள்கை மாற்றத்தின் அவசியத்தை புரிய வைக்க அரசுடன், இதற்கு வழங்கும் கடன்கள் பாதுகாப்பானாது என்று கடன்உதவி செய்யவைக்க  வங்கிகளுடன்,  வெளிநாட்டில் கிடைக்கும் அளவிற்கு நல்ல சிகிச்சை கிடைக்குமா என்று சந்தேகபட்ட  நோயாளிகளுடன் என பல முனைகளில் பல விதமாக போராட வேண்டியிருந்தது  என சொல்லும்  டாக்டர் பிரதாப் ரெட்டி, தங்கள் மருத்துவ குழும வளர்ச்சியினால்  வெளிநாட்டில் பணிசெய்துகொண்டிருந்த பல திறமையான டாக்டர்கள் இந்தியா திரும்பியிருக்கின்றனர். என்பதை சுட்டிகாடுகிறார். சாதனைகளை செய்ய துவங்க வயது தடையில்லை என்பதையும் நிருபித்தவர் இவர். 70களின் துவக்கத்திலேயே  அமெரிக்கா சென்று பெரிய மருத்துவமனைகளில் பணி புரிந்து ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையின் தலமை பொறுப்பில் இருந்து பல ஆயிரம் டாலர்கள் சமபளம் பெற்றுகொண்டிருந்த இதய நோய்சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் பிராதாப்ரெட்டி  1982ல் தமிழ் நாட்டுக்கு திரும்பி  சென்னையில் அப்பலோவை துவக்கியபோது வயது 50. வசதியான ஒய்வுகால வாழ்க்கையை திட்டமிட்டிருக்க வேண்டிய இவர்  இந்திய மருத்துவதுறையில் புரட்சிகரமான மாறுதல்கள் பற்றி சிந்தித்திருக்கிறார். சீரிய முறையில் திட்டமிட்டு கடுமையாக உழைத்திருக்கிறார். 1983ல் சென்னையில் முதல் மருத்துமனையை திறந்து வைக்க அன்றைய குடியரசு தலைவர் ஒதுக்கியிருந்த நேரம் 20 நிமிடங்கள். ஆனால் நிறுவபட்டிருந்த வசதிகளை  நான் விளக்கி மருத்துவமனைமுழுவதையும் சுற்றிகாட்டிய போது இரண்டுமணிநேரம் இருந்து பலகேள்விகள் கேட்தை இப்போதும் நினைகூறும் இந்த 80 வயது இளைஞரின் சுறுசுறுப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. 1000கோடிகளுக்குமேல் பிசினஸ் செய்யும் குழுமத்தின் தலவராக இருந்தாலும்  சென்னையில் இருக்கும் நாட்களில் காலை 9 மணிக்கு மருத்தமனையிலிருக்கிறார். அவசியமான போது ஆப்ரேஷன்களிலும் பங்கேற்கிறார்.
இந்திய மருத்துவ துறையில் தனியார்பங்களிப்பு  பெருமளவில் வளரவும் அதற்கான நடைமுறைகள் சீராக அமையவும் இவர் ஆற்றிய பணிகளுக்காக 2010ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றவர்.  இவரது 4 மகள் களும் அப்போலா  மருத்துவ குழுமத்தின் சிலபிரிவுகளை நிர்வகிக்கிறார்கள். 20 ஆண்டுகளாக பணிசெய்துகொண்டிருக்கிறேன் ஆனாலும் சில சமயங்களில் தந்தையுடைய வேகத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடு கொடுக்க முடிவதில்லை என்கிறார் திருமதி பீரித்தி ரெட்டி. இவர் அப்போலா குழுமத்தின் நிர்வாக இயக்குனர்.  குடும்பத்தின் 3வது தலைமுறையும் இப்போது குழுமத்தின் பணிகளில் பங்கேற்கத்வங்கியிருக்கிறது.. . ஒருநாள் 5 நிமிடம் லேட்டானல் கூட  தாத்தாவின் நேரந்தவறாமை நினைவில் வந்து  குற்ற உணர்வு மேலிடுகிறது என்கிறார் பிராதப்ரெட்டியின் பேத்தி உபஸானா. 
குழுமத்தின் ஹைதிராபாத் பிரிவில் பணியாற்றும் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜாவை (நடிகர் சீரஞ்ஜிவி யின் மகன்)  திருமணம் செய்துகொண்டிருப்பவர். கார்ப்ரேட் மருத்துவமனைகளின் கட்டணங்கள் நடுத்தரமக்கள் சமாளிக்க முடியாத  அளவில் அதிகமாகவே யிருக்கிறதே ஏன்? என்ற நம் கேள்விக்கு அடைப்படை கட்டுமான செலவீனங்கள, சர்வதேச தரம்,தொடர்ந்து உயரும் மருந்துகளின், உபகரணங்களின் விலைகள் போன்றவைகள் தான் காரணம். ஆனல் இன்னும் சில ஆண்டுகளில் இம்மாதிரி கார்பேரேட் மருத்துவமனைகள் அதிக அளவில் பெருகும்போதும் இன்ஷ்யூரன்ஸ் வசதிகள் அதிகரிக்கும்போதும் மருத்துவ செலவுகள் குறையும் வாய்ப்புகள் அதிகம் எனகிறார். இந்திய மருத்துவ துறையை புதிய பாதையில் பயணிக்க வைத்திருக்கும்  இந்த டாக்டர்.

kalaki 17/03/13