5/3/14

கடைசிக்கோடு பற்றி....



சென்ற வார ஒரு முற்பகலில் ஒரு போன்.  "நான் மிஸஸ் மாலதி  பார்த்தசாரதி" என்ற  றிமுகத்துடன் பேசியவர்  என்னுடைய  கடைசிக்கோடு புத்தகத்தை பற்றி ஒரு நண்பர் மூலம் அறிந்து படித்ததாகவும், மிக  நல்ல புத்தகம், மிக நன்றாக, சுவையாக விஷயம் சொல்லபட்டிருக்கிறது என்று
 மிகவும் பராட்டினார். அவர் மட்டுமின்றி, விஞ்ஞானியாகயிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் பேராசியராக பணியாற்றும் அவரது கணவரும், அவரது மற்ற குடும்பத்தினரும்  வாசிப்பதை நேசிப்பவர்கள் என்றும் தொடர்ந்து புத்தகங்கள் படித்துகொண்டிருப்பவர்கள் எனவும் சொன்னார். வெளியிட்டிருக்கும் கவிதா பதிப்பகத்தை தொடர்பு கொண்டுஎன் நம்பரை வாங்கி பேசிய இவர்  சொன்ன விஷயம் சிந்திக்க வைக்கிறது., தானும் தன் வெளிநாட்டிலிருந்தாலும் தங்கள் வாரிசுகளூம் தமிழ் படிப்பைதைப் போல, தன் பேரக்குழந்தைகள்  தமிழே தெரியாத காரணத்தால் இதுபோன்றவைகளை படிக்க முடியவில்லை.  நீங்கள் ஏன் இதைபோன்றவைகளை  அவர்கள் நலனுக்காக ஆங்கிலத்திலும் எழுதக்கூடாது ?
எதையும் எளிய தமிழில் சொல்ல முடியும் என்ற நம்பும் எனக்கு  நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதை தமிழில் மட்டும்  சொன்னால் போய்ச்சேராதோ? என்ற என்ணத்தை இது எழுப்பியிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் படிக்க முடியாத கல்விசூழல் ஏற்பட்டதற்கு யார் காரணம் என்று இப்போது  ஆராய்வதில் பயன் இல்லை. எளிதாக ஆங்கிலம் மூலம் தமிழை  விஞ்ஞான முறைப்படி சொல்லிக்கொடுக்கும் வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம்.  இதை எப்படி,செய்யலாம்? என்பதற்கான ஆலோசனைகளை பட்டியலிட்டுகொண்டிருக்கிறேன். உங்கள் யோசனைகளையும் எழுதுங்களேன்.
மூத்த எழுத்தாளார் சுப்ர. பாலன்  கடைசிக்கோடு புத்தகத்திற்கு கல்கியில் எழுதிய விமர்சனம் இது


பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம்!



                              சுப்ர. பாலன்



       நில அளவைத்துறை  என்கிறார்கள் இன்றைக்கு. சங்கிலி பிடித்து நூறு நூறு அடியாக இந்த தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வேத்துறையில் பிள்ளையார்சுழியிட்ட இரண்டு வௌ;ளைக்கார அதிகாரிகள். 1802 ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரீனாக் கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் பணியை, டேராடூனில் கடைசிக்கோட்டை வரைந்து முடித்துவைத்தவர் மூன்றாவது சர்வேயர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்னல் ஜார்ஜ் எவரெஸ்ட்.  இடைப்பட்ட காலம் அறுபது ஆண்டுகள்!

        இந்தப் பணியின்போதுதான் அதுவரை பெயர் சொல்லிக் குறிப்பிடாமலிருந்த இமாலயத்தின் மணிமுடியான ஒரு மலைச்சிகரத்தையும் கண்டு அதன் உயரத்தை 29002 அடி என்று கணக்கிட்டார்கள். ஜார்ஜ் எவரெஸ்ட் காலமானபிறகு இந்தப் பணியில் அடியெடுத்துக் கொடுத்த அந்த உயர் அதிகாரியின் பெயரையே அந்தச் சிகரத்துக்துச் சூட்டித் தங்கள் நன்றியைப் பதிவுசெய்திருக்கிறார்கள். நல்ல காலம்! முன்பே கண்டுபிடித்துஎவரெஸ்ட்என்று அதற்குப் பொருத்தமாக நாமகரணம் செய்துவிட்டார்கள்.

        முதலில் அளந்த தொலைவு மெரீனா கடற்கih அருகே இருந்த சிறு குன்றில் தொடங்கி  பறங்கிமலை வரையிலான ஏழரை மைல் (12 கி.மீ). இந்தத் தொலைவை அளந்து பதிவுசெய்ய 57 நாட்களாகியிருக்கின்றன. நரற்பது சிறிய இரும்புச்சங்கிலிகள் கொண்ட 100 அடி நீள அளவுசங்கிலியை 400 முறைகள் பயன்படுத்தவேண்டியிருந்ததாம்.


        புகழ்பெற்ற தஞ்சை பிரகதீசுவரர் கோயில் கோபுரத்தின் வட்டக்கல்லில் ஏறி நின்று பல டன் எடைகொண்ட கருவியை வைத்து அளவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது லாம்ப்டனுக்கு. வழக்கம்போல் ஆலய சம்பிரதாயத்தடைகள். எப்படியோ சமாளித்து வேலையைத் தொடங்கியபோது அறுபது அடி உயரத்திலிருந்து அந்தக் கருவி கீழே விழுந்து உடைந்தது. அப்போது அந்தப் பொறுப்புள்ள அதிகாரி கர்னல் லாம்ப்டன்                                                   …2…

தம்முடைய மேலதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கை பொதுப்பணியில்  இன்றைக்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயலும் பலருக்கும் பாடமாக அமையவேண்டிய ஒன்று.

      ‘…நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.  அதன் விலையான 650 பவுண்டை என் செலவாக ஏற்கிறேன்..எனது சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளுங்கள்..’ இந்த விலை மதிக்கமுடியாத கர்னலின் குறிப்பு இன்றைக்கு டேராடூனிலுள்ள அருங்காட்சியகத்தில், அந்த உடைந்து பழுதான தியோடலைட் கருவியோடு வைத்துப் பாதுகாக்கப்படுகிறதாம்.

      பல்சக்கரங்கள் உடைந்து பழுதான அந்தக் கருவியின் பாகங்களை உள்ளுர் ஆட்களை வைத்தே புதிதாக உருவாக்குகிறார். திருச்சி அருகே உள்ள தங்கம்பட்டி கிராமத்தின் தொழிலாளர்களை வைத்து அந்த வேலையைச் செய்துமுடித்தாராம். அந்த கிராமம்தான் பின்நாளில்கோல்டன் ராக்என்று பெயர் மாறியது. இடிந்துவிழுந்த கோபுரப்பகுதியை எடுத்துக்கட்டியபோது அதில் அந்த வௌ;ளைக்காரர் உருவத்தையும் வடித்து வைத்திருக்கிறார்கள். தஞ்சை கோபுரத்தில் இடம்பிடித்துள்ள வௌ;ளைக்காரர் உருவம் இந்த கர்னல் லாம்ப்டனுடையதுதான் என்றுகூட ஒரு குறிப்பு உள்ளது என்கிறார் இந்த அருமையான நூலை எழுதியுள்ள ரமணன்.

      இந்த நூலை எழுதுவதற்குச் செலவிட்ட உழைப்பில் ஒரு நாவல் எழுதிவிடலாம். அது பெயரையும் பொருளையும்கூடக் கொண்டுவந்துகொடுக்கும். ஆனால் புதுமையை விரும்புகிற ரமணனின் மனம் அதைச் செய்யாது  என்று மாலன் முன்னுரையில் பாராட்டுகிறார். சத்தியமான வார்த்தைகள். இப்படி ஓர் அருமையான பாடுபொருளை எடுத்துக்கொண்டு அருமையான பயனுள்ள நூலைத் தமிழில் தருவதற்கு ரமணன்தானே முன்வந்திருக்கிறார்!



கடைசிக்கோடு..இந்தியாவின் வரைபடம் பிறந்த கதைரமணன்-

கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு,சென்னை 600 017 தொ.பே. 044 - 2436 4243… ரூ.80-



                       ..        - சுப்ர. பாலன்





1/3/14

கங்கை கரை ரகசியங்கள் 8





எப்போதும் ஏதோவொரு சப்தம்,  எங்கும் மக்கள், மக்கள்,  குறுகியசந்துகள்,  அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்படாத பழைய கட்டிடங்கள், குப்பைகள் அப்புறப்படுத்தாத தெருக்கள்  போன்ற நகரின் அழகற்ற முகங்கள்,  வழி கேட்டால் பதில்சொல்லாத உள்ளுர்மனிதர்கள்,   சுத்தமில்லாத சூழலை சகித்து கொண்டு நடக்கும் வெளிநாட்டினர்,.     நமக்கே அன்னியமாகதோன்றும் இந்தியர்கள், செல்வந்தர்கள், சன்னியாசிகள், வாழ்வின் லட்சியத்தை அடைந்தவிட்ட மகிழ்வில் தளர் நடையில் முதியவர்கள், மண்குடுவையில்
தேனீர், பளபளக்கும் பித்தளைடம்பளரில் லஸ்ஸி,  மிகப்பெரிய இரும்பு  வாணலியில் எப்போதும் கொதித்துகொண்டிருக்கும்  பால், என  கதம்பக் கலவையாக யிருக்கும் இந்த காசி நகரம் ஏதோ ஒரு இனம் தெரியாத வகையில் வந்தவர்களையெல்லாம் வசீகரிக்கிறது.  பலருக்கு வாழ்நாள் கனவாகயிருக்கும் விஷயம் நமக்கு இன்று கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தையும்,,பல ஜென்மங்களுக்கு முன் இந்த நகரத்தில் நாமும்  வாழ்திருப்போமோ என்ற பந்தத்தை ஏற்படுத்தும்  சக்தி இங்கு இருக்கிறது. அதானால்தான் என்னவோ மார்க் டைவன் என்ற  புகழ் பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் இந்த நகரை ”நமது சரித்திரங்களைவிட, நாம்  அறிந்த  பாரம்பரியங்களைவிட நமக்கு தெரிந்த இதிகாசங்களைவிட இரண்டு மடங்கு பழையது” என்கிறார். கடவுளுக்கும் முக்திதந்த,பலருக்கு ஞானக்கண் திறந்த, உலகின் எந்த இடத்திலும் இல்லாத சக்தி அதிர்வுகள் நிறைந்த இந்த காசிநகரம் ஒரு விஷயத்தை மெனமாக அழுத்திச்சொல்லுகிறது. ”எனக்கு  என்றும் அழிவில்லை”.என்பது தான் அது. அத்தகைய ஒரு பெருமைமிக்க நகருக்கு நாமும் வர ஒரு வாய்ப்பு கிடைத்தற்கு  இறைவனுக்கும் அதை கிடைக்கசெய்த
ஈஷா குழுவினருக்கும்   நன்றி சொல்லி இந்த அதிகாலைப் பொழுதில் புத்ததேசமான புத்தகயாவிற்கு பயணத்தை துவக்கியிருக்கிறோம்.புத்த கயா என்பது காசியிலிருந்து 250கீமி  தூரத்திலிருக்கிறது. இதற்கும் காசி என்ற வார்த்தையுடன் எப்போதும் சொல்லப்படும் கயாவிற்கும் சம்பந்தமில்லை. அது கங்கைநதிக்கரையில் இன்னும் தொலைவிலுள்ள மற்றொரு கிராமம்.. புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் இருக்குமிடம், புத்த கயா என்று அழைக்கப்படுகிறது.  வாரணாசியிலிருந்து கிளம்பி சாரநாத்தில் தன்  கடுந்தவத்தை துவக்கிய சித்தார்த்தன் இங்கு வந்து போதிமரத்தடியில் அமர்ந்து தவமிருந்தபோதுதான் ஞானோதயம் அடைந்து புத்தராகியிருக்கிறார்.
 வெளிப்புறம் பூசப்படாத சுவர்களுடன் வீடுகள். களிமண் குடிசைகள்  என்ற காட்சிகளை காட்டிய குறுகியசாலைகள் நாம் பீஹார் மாநிலத்திற்கு வந்திருக்கிறோம் என்பதைச்சொல்லுகிறது.பிஹார் வரண்டபிரதேசம் என்று சொல்லப்படுவது தவறு எனபதைபோல தலையாட்டி கொண்டிருக்கும்  பசும் பச்சை நெற்பயிர்களுடன் வயல் வெளிகள்.  நம் ஏஸி பஸ் குலுக்கிப் போடுவது நமக்கு கஷ்டமாகயிருக்கிறது.  ஒரிடத்தில் கங்கையை கடக்கும் பாலத்தை.   தாண்டியபின்  ஒரு சின்ன கிராமம் கூட கண்ணில்படவில்லை. ஏதோ ஒரு காட்டை அழித்து உருவாயிருக்கும் குறுக்குப்பாதை அது, பஸ் மெல்ல போவதால், தூரத்தை அதிகமாக உணர்வதால் களைப்பாக  தோன்றுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்  சித்தார்த்தன்   இந்தவழியாகதானே நடந்திருப்பார். கங்கையை எப்படி கடந்திருப்பார்?. எவ்வளவு நாள் பயணம் செய்திருப்பார்? என்ற எண்ணங்கள் எழுகின்றன. அதை விட ஏன் சாரநாத்திலிருந்து  புத்த கயாவிற்கு போனார்?  என்பது இந்த புனிதரின் வாழ்க்கையில் புரியாத கேள்விகளில் ஒன்று.
தலைப்பைச் சேருங்கள்
உடலை வருத்தி ஞானத்தை தேடி அலைவது பயனற்றது. அடைந்த ஞானத்தை அடுத்துவருக்கு போதிக்க நல்ல ஆன்மாவுடன் உடலும் தேவை எனபதை உணர்ந்த சித்தார்த்தன் சாராநாத்தில் கடும் தவத்திலிருந்தபோது உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக மயக்க முற்ற நிலையில் சுஜாதா என்ற ஆயர்குல சிறுமி  பாலில் சமைக்கப்பட்ட சாதத்தை அளிக்கிறார். இப்போது பயன்பாட்டில் இல்லாத அந்த அரிசி காலா நமக் என்ற கருப்பு வகை.அரிசி. இதன் மாதிரியை ஊளுந்தூர் பேட்டை சாராத ஆஸ்ரமத்தில் பாதுகாக்கிறார்கள்.
பட்டினிகிடப்பவன்  மெய்ஞானத்தை அடையமுடியாது என்பதை சித்தார்த்தன் உணர்ந்த தருணம் அது. அவர் அந்த சாதத்தை சாப்பிட்டதைப் பார்த்ததும்  அவருடன் தவத்திலிருந்தவர்கள் அவரை வெறுத்து  விலகி செல்லுகின்றனர். தனித்துவிடப்பட்ட  சித்தார்த்தன் மீண்டும் நடக்க துவங்குகிறார்.  தீவிரமான தேடியது தான்அடைய வேண்டியதற்கான முயற்சிக்காக ஒரு சரியான இடம்..  அடர்ந்த வனத்தையும் நதிகளையும் தாண்டி அவர் கண்ட இடம் தான் புத்தகயா. அன்று அதன்பெயர்  உருவெல்லா என்ற வனப்பகுதி. அதில் அவர்  தவம் செய்ய தேர்ந்தெடுத்தது ஒரு அரசமரத்தினடி. அந்த மரத்தடியை தேர்ந்தெடுத்தது தற்செயலா? அல்லது அவர் குறிப்பாக தேடிக்கண்டுபிடித்ததா? என்பது இன்றும் விவாதிக்க பட்டுகொண்டிருக்கும் ஒரு விஷயம். அந்த மரத்தையும் அதன் அருகில் எழுப்ப பட்டிருக்கும் மஹாபோதி கோவிலையும்  தரிசிக்க தான் இந்த பயணம்.
 மாலைநேரத்தில் பஸ்ஸுக்கு வெளியே  மாறும் காட்சிகள்  புத்தகயாவிற்குள்  நாம் நுழைந்து விட்டதை உணர்த்துகிறது. மிகச் சிறிய நகரம். பல புத்த விஹார்கள்,  வீடுகளைவிட ஹோட்டல்கள் அதிகம் என தோன்றிற்று. கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டோரண்ட்கள் எல்லாவற்றிருக்கும்  சுஜாதா, சித்தார்த், அசோகா  ராகுல் என புத்தமத சமபந்த பட்ட பெயர்கள்.தான். தங்கிய ஹோட்டலிலும் ரிசப்ஷனில் கண்ணாடியில் செதுக்க பட்ட பெரிய புத்தர் படம்.   அன்று மாலையில் லாவோஸ் நாட்டின் பிரதமர் சார்பில்  மஹாபோதியில் பிராத்தனைகள் இருப்பதால்  அதிகாரிகள், லவோஸ்மக்கள் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தது.  அதனால் மறுநாள் மஹாபோதி புத்தரை பார்க்கலாம்  என முடிவு செய்து நகருக்குள் நடக்கிறோம்.. இருப்பது பாங்காங் அல்லது சீனாவின் ஒரு பகுதியோ என்று தோன்றும் அளவிற்கு புத்தகோவில்கள்.



எங்கு காணினும் புத்தனடா என சொல்லவைக்கிறது. அத்தனை கோவில்கள். அவ்வளவும் அழகாக இருக்கிறது அருமையாகப் பராமரிக்க படுகிறது.  பூட்டான், சீனா,மியாமர்,நேப்பாள், இலங்கை தைவான்,தாய்லாந்து திபேத்,வியட்நாம்.பங்களாதேஷ் என பல நாட்டினர் இங்கு புத்தகோவில்கள் அவரவர் நாட்டின் பாணியில் பகோடா, பாகன் பாணிகளில் அமைத்திருக்கிறார்கள். கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் அந்தந்த தேசங்களின் கலைநுணுக்கங்களைக்  காட்டும் கோவில்கள். ஒவ்வொன்றிலும் புத்தர். பூடான்கோவிலில் வண்ணமயமான் பின்னணியில் தங்க புத்தர்.  
எல்லாகோவிலின் புத்தசபாக்கள் ( மடங்கள் என்று சொல்லக்கூடாதாம்) சில கோவில்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது. தாய்லாந்து கோவிலின் அருகில்  பிரமாண்டமான  புத்தர் சிலை 80 அடிக்குமேல் உயரம். ஒரு அழகான தோட்டத்தின் நடுவே இருக்கிறது,  இது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.  சிலையின் கம்பீரமும்,புத்தரின் முகத்தில் தெரியும் சாந்தமும் எவரையும் மயக்கும்

 இந்தியாவின் மிக குட்டி காரான நானோவில் இந்தியாவை சுற்றும் ஒரு தம்பதியனர் தங்கள் காரை இந்த பிரமாண்டத்தின்  முன்னே காரை நிறுத்திபடமெடுத்துகொண்டிருந்தார்கள்.  ஏன் இவ்வளவு  புத்தர் கோவில்கள்? இந்த இடம் புத்தமத்தினருக்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு புத்த மத்தினரும் தங்கள் வாழ்க்கையில் நான்கு முக்கிய இடங்களில் வழிபட வேண்டும். அவை நேப்பாளத்தில் இருக்கும் புத்தர் பிறந்த இடம் லூம்பினி,  அவர் ஞானம்பெற்ற புத்தகயா, புத்தர் தன் போதனைகளை துவக்கிய முதல் இடமான சாரநாத்,  அவர் உயிர்நீத்த இடமான குஷி நகர். அதனால் தான்  உலகெங்குமிருக்கும் புத்தமதத்தினர் இங்கு வந்துகொண்டேயிருக்கின்றனர். தங்கள் நாட்டு அரசின் உதவியோடு இங்கு ஒரு கோவிலையும் நிறுவி இங்கு வரும்போது வழிபடவும் வரும் துறவிகள் தங்க சபாக்களையும் நிறுவியிருக்கிறார்கள்.  சில மிக பழமையானவை. இலங்கை கோலில் 18ஆம் நூற்றாண்டிலேயே  நிறுவப்படிருக்கிறது. எந்த புத்தர் சன்னதியிலும் தனியாக ஆராதனை எதுவும் கிடையாது.  நள்ளிரவு வரை திறந்திருக்கும்  நாம் போய் அமர்ந்து பிராத்திக்கொள்ளாலாம்.  கட்டணம் எதுவும் கிடையாது. ஒரே ஒரு கோவிலில் மட்டும்  கோவிலை போட்டோ எடுத்தால் உண்டியலில் 20 ரூபாய் போடுங்கள் என்ற அறிவிப்பு.  மெல்லக்கவியும் இருள், இதமான நிலையிலிருந்து தாக்கும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கும் குளிர், லேசாக வலிக்க  துவங்கியிருக்கும் கால்கள் ஹோட்டலுக்கு திரும்பச் சொல்லுகின்றன.  தொலைவில் ஒளிவெள்ளத்தில் மஹாபோதி கோவில்
. நாளைகாலை நம்மை அருள் பாலிக்க காத்திருக்கும்  புத்தரை தரிசிக்கபோகிறோம்.


சத்குருவின் பதில்கள்
வழிபாடுகளுக்காக ஏற்படுத்த பட்டவை கோவில்கள். எல்லா மதங்களிலும்  இவற்றில் சில பிரமாண்டமாக அல்லது ஆடம்பரமாக இருக்கிறதே ஏன்?
 கோவில்கள் என்பது ஏற்படுத்தபட்டதின் நோக்கம்  மனிதனுக்கு  எளிதில் உதவதற்காக. அவைகள் ஒரு சக்தி வளையமாக உருவாக்கப்பட்டு,பேணபட்டுவந்தது.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆன்மீக சக்தி இயற்கையாகவே அமைந்திருக்கிறது.  இந்த சக்தி வளையங்கள் அவைகளை தூண்ட, அவனுள் மனிதம் மலர, நல்ல மனிதாக வளர உதவி செய்ய வேண்டி  உருவாக்கபட்டன.  அதனால்தான்  நாம் கோவிலில் சில நேரமாவது உட்காரவேண்டும் என சொல்லுகிறோம். யோகா, கிரிகைகள், பல வேறு சதானாக்கள் இதற்காக இருக்கின்றன. ஆனால் அவை எல்லா மனிதர்களாலும் செய்ய முடியாது என்பதினால்  அவர்களுக்கு எளிதாக இந்த சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கோவில்கள் உருவாயின. சுருக்கமாக சொல்ல வேண்டுமானானால்  கோவில்கள் பப்ளிக் சார்ஜிங் செண்ட்டர் மாதிரி. அங்கு தினசரி வருபவர்கள் மிக எளிதாக தங்கள் சக்தியை புதுபித்துகொண்டு தினப்பணிகளில் ஈடுபடமுடியும்.  அந்த சக்தியை வழங்க நிறுவபட்ட கோவில்களுக்கு  அந்த சக்தி எப்படி வந்தது? அந்த சூட்சமம் தெரிந்தவர்கள் உருவாக்கிய கருவிதான் கோவில். அதில் அத்தகைய சக்தியை பிரதிஷ்ட்டை என்கிறோம். இதை எல்லோராலும் செய்யமுடியாது. இதைசெய்தவர்கள் மிக அற்புதமாக அதைச் செய்திருக்கிறார்கள். அதனால் தான் பல ஆயிரம் வருடங்களாக அவை தொடர்ந்து சக்தி வளையமாக இருந்து வருகிறது.  அந்த சக்தியை பெற மனிதன்  தன் ஆணவங்களை, அகங்காரங்களை மறந்து சமநிலையான மனத்துடன் கோவில்களுக்கு வர வேண்டும்..ஆனால் காலப்போக்கில் இது பிராத்தனைக்கூடமாகி எனக்கு வேண்டியைதையெல்லாம்  நான் கேட்டால் ஆண்டவன் கொடுப்பான். அவனுக்கு நான் இதைக்கொடுத்தால் அவன் எனக்கு அதை கொடுப்பான் என்றாகி விட்டது. அதைபோல கோவிலை சமூகத்துக்காக உருவாக்கி உதவுபவர்கள் தங்கள் செழிப்பையும் அந்தஸ்த்தையும் காட்ட ஆரம்பித்தார்கள். இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது. ஒருகோவில் எவ்வளவு பெரிது, எவ்வளவு செல்வ முள்ளது என்பதைவிட  அதன் சக்தி வளையம் எவ்வளவு சக்தி வாய்ந்தது  என்பது தான் முக்கியம். 
கல்கி 8/3/14


15/2/14

கங்கைக் கரை ரகசியங்கள் ....6



இந்த கங்கைக்கரை  இந்துகளுக்கு மட்டும் புனிதமானதல்லசமணர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மூஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் மிக முக்கியமான தலம். மஹாபாரத காலம் முதல் இன்றுவரை போற்றபடும் இந்த கங்கைக்கரையின் மஹோன்னதம் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள்பெர்ஷியாவிலிருந்து கஜினி படையெடுத்து வந்து இந்த நகரத்தை அழித்தபோது அவருடன் வந்த அமைச்சர்களில் ஒருவரான அல்-பைரனி என்பவர்அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இந்த நகரிலேயே தங்கி விட்டார். காரணம்  இந்த சக்தி வாய்ந்த நகரில் ஒரு மசூதி எழுப்பி மூஸ்லீம் இனத்தவர் வழிபட வழிசெய்ய விரும்பினார். இதை  1019ம் ஆண்டு தனதுகுறிப்பில் எழுதியிருக்கிறார்இப்படி காலங்காலமாக எந்த மதத்தவரையும்  தன்னை நோக்கி பயணிக்க செய்த கங்கைக்கரைதான்  சித்தார்த்தன்  புத்தராகும் முன் வந்த தங்கிய  முதல் இடம்மன்னன் சித்தார்த்தன்  துயரங்களைப் பார்த்து கலங்கி ஞானம்  அடையும் வழியை தேடினாரோஅல்லது சமீபத்திய ஆய்வுகள் சொல்லுவது போல அவருடைய நாட்டில் எழுந்த  நதி நீர்பிரச்ச்னையை  தீர்க்க எழவிருந்த போரை விரும்பாமல் துறவறம் பூண புறபட்டாரோ - வந்த இடம்  இந்த கங்கையின் கரைநேப்பாளத்திலிருந்து இங்கு வரை நடந்திருக்கிறார்உடன் வந்தவர் அவரது பணியாளர் சன்னாகடலென விரிந்திருக்கும் கங்கையின் கரையில் வழிபாட்டுக்கு பின்  அமர்ந்து தன் உதவியாளரிடம் இந்த கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என நினைக்கிறாயா? என கேட்கிறார். சில நொடிகளுக்கு பின் அவரே  அது உண்மையானால் இந்த நதியிலிருக்கும் மீன்களும் இறால்களும், சிப்பிகளும்  முக்தி அடைந்து அந்த இனம் இல்லாமலே போயிருக்குமே என சொல்லிக்கொண்டு எழுந்துஞானத்தை தேடி அலைந்த அந்த இளைஞன்  உடலை வருத்தி கடும் தவம் செய்யும் வழியை நாடி  நடக்க ஆரம்பிக்கிறார்மான்கள்  துள்ளி ஓடும் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு தன் தவத்தை துவக்குகிறார். அது தான்  இன்று சாரநாத்அழைக்கப்படும் ரிஷிபட்டினம்பல ஆண்டுகள் பலரிஷிகள் கடும் தவமிருந்து தங்கள் உடலை துறந்து முக்கி அடைந்த இடம் அது.   காசி நகரிலிருந்து  10 கீ மீ தூரத்திலிருக்கும்  சாரநாத்திற்கு  இப்போது வந்திருக்கிறோம்இந்தியாவிற்கும் புத்தமதத்திற்கும்  இருக்கும் தொடர்புகளை உலகுச்சொல்ல உதவிய இடம் இதுதான்.



 பரந்த ஒரு பசும் புல்வெளிகளின் நடுவே  , அகழ்வாய்வு ஆராய்ச்சியின் அடையாளங்களான கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள், சிறிய ஸ்தூபிகளின் அடிப்பகுதிகள்,பெரியபிராகாரங்களின் அடையாளங்கள்  என நிறைந்திருக்கும் பகுதியின் நீண்ட பாதையை கடந்து வந்த பின் நாம் பார்ப்பது சாரநாத் ஸ்தூபி. இபோது இந்த ஸ்தூபி தூண் வடிவில் இல்லை. வட்டவடிவில் . ஒரு உடைந்த செங்கல் கட்டித்தின் வட்ட அடிப்பகுதியைபோல  50 அடி உயர்ந்திருக்கிறதுகற்களாலான அடிப்பகுதியில் சில சிற்பங்களும் புத்தர் உருவங்களும் இருக்கிறது
கிமு 600 லியே சாரநாத் சமணர்களுக்கு  ஞானம் அருளுமிடமாகயிருந்திருக்கிறது. சமண தீர்த்தங்கர்களில் மூவர் வாழ்ந்து உயிர் துறந்த இடம் இது. இதற்கு 300 ஆண்டுகளுக்கு பின்னர் தான் சித்தார்த்தன் இந்த இடத்திற்குதான் காசியிலிருந்து  கடும் தவம் செய்து ஞானம் அடையும் வழியை தேடி வந்திருக்கிறார்பின்னர் சமணர்களுடன் சேர்ந்து உடலை வருத்தி கடும்தவம் செய்வதினால் உடல் மட்டுமேநலிந்துபோகிறது ஞானம் எதுவும் அடைய முடியாது என்பதை உணர்ந்து தனியாக தவம் செய்ய  கயாவிற்கு பயணம் செய்துபோதியின் அடியில் தவம் செய்து ஞானம் பெற்று புத்தராகி இதே சாரநாத்துக்கு திரும்பி தன்னுடன் தவத்திலிருந்த  5 சமணர்களுக்கு தான் உணர்ந்ததை போதித்து மனம் மாற்றுகிறார். இந்த மனமாற்றத்தில் பிறந்ததுதான் பெளத்தம். அதனால் இந்த இடம் தான் புத்தமார்க்கத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.
பின் நாளில்  புத்தர் தன் முதல் 5 சீடர்களை பெற்ற இடம், தான் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி முதல் உறையாற்றிய இடம் என்பதை கெளரவிக்க  மன்னர் அசோகர் எழுப்பிய சின்னம் இது. இந்த இடம் புத்த மத்த்தினருக்கும் மிகமுக்கியமான புனிதஸ்தலம், வாழ்நாளில் ஒருமுறையாவது வர விரும்பும் இடம். அணி அணியாக ஜப்பானியர், சீனர், ஸ்ரீலங்கர் வந்து அமைதியாக வளாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து பிரார்த்திக்கிறார்கள், சிறிது மண் எடுத்து பத்திரப்படுத்திகொள்கிறார்கள். புத்தர் வாழ்ந்த காலத்தில் இது அவர்கள் மார்க்கத்தின் தலமைப்பீடமாகவும், சீடர்களுக்கு போதிக்கும் கல்விக்கூடமாகவும் இருந்திருக்கிறதுஆனால் சுல்தான்களில் படையெடுப்பால் கால் வெள்ளத்தில் கரைந்து காணமல்போன புத்தமதத்தினால் இந்த இடமும் மறக்க பட்டு சாரநாத்  மடிந்து கொண்டிருந்தது. இதை நமக்கு கண்டுபிடித்து புத்தரின் சரித்திரத்தை அறிய உதவியவர் ஒர் ஆங்கிலேலே அதிகாரிஅலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற அந்த ஆய்வாளருக்கு  நாம் என்றென்றும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். இந்த மனிதனின் முயற்சியில்லை என்றால் இன்று சாரநாத் இருக்கிறத்தில் தொழிற்சாலைகளோ அடுக்குமாடி கட்டிடங்களோ எழுந்திருக்கும். இவர் இந்த ஸ்தூபியை பற்றி அறிந்தது ஒரு எதிர்பாராத ஆச்சரியம். 1794ல் காசியில் மன்னர் ஆட்சி இருந்தாலும் மற்ற பல ஸமஸ்தான்ங்களைப்போல ஆங்கிலேயரின் ஆதிக்கமும் நுழைந்துகொண்டிருந்த காலம் அது.   காசி நகரில் ஏதேனும் கட்டிடம் கட்டவேண்டுமானால் இந்த இடிபாடுகளுக்கிடயே இருக்கும் தரமான செங்கற்களை எடுத்து செல்வார்கள்காசி அரசவை அமைச்சர் தன் வீட்டு கட்டிடத்திற்காக  இந்த இடிபாடுகளின் மேல்பகுதியை உடைத்து தரமான நன்கு சூடப்பட்ட முழு செங்கற்களை எடுத்துவரச்சொன்னர். அதை செய்து கொண்டிருந்தவர்கள் கண்டது ஒரு பெட்டியையும் அதனுள் ஒரு மரகத புத்தர் சிலை மற்றும் சில ஆபரணங்களையும்அதிர்ந்து போன அமைச்சர். மன்னரிடம் சொல்ல அவர் ஆங்கிலேயர்களிடம் கூற உடனே யாரும் இடிக்கூடாது என்ற ஆணையுடன் ஆராய்ச்சி துவங்குகிறது. போதிய பணம் ஒதுக்காத பிரிட்டிஷ் அரசுடன் போராடி இங்கிலாந்திலிருந்து நிபுணர்களை வரவழைத்து அகழ்வாரய்ச்சியை தொடர்ந்து நமது சரித்திரத்தை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கிலேயர்.
இந்த சரித்திர சான்றுகள்  கிடைத்த இடத்திலியே ஒரு அருங்காட்சியகம் நிறுவியிருக்கிறார்கள். இம்மாதிரி சான்றுகள் இருக்குமிடத்திலியே காட்சியகம் இருப்பது சில இடங்களில் மட்டுமே. மிக அழகாக நிர்வகிக்கபடும் இந்த காட்சியகத்தில்தான்  முதல்முதலாக கண்டெடுக்கபட்ட புத்தரின் சிலை இருக்கிறது. அதுவரை  அனைவரும் பார்த்த  புத்தர் உருவம்  ஓவியர்களின்  கற்பனையில் பிறந்தவை அசோகர் நிறுவிய இந்த ஸ்தூபியின் முன்னால் நின்று கொண்டிருந்த  வெற்றித்தூண் இன்று 6 பகுதிகளாக உடைந்த நிலையில் இருக்கிறது. அதன் தலையில் இருந்த நான்கு சிங்களும் சக்கரமும் உள்ள சிலைதான் நம் தேசிய சின்னமாக அறிவிக்கபட்டிருக்கிறதுநான்கு திக்குகளுக்கும் புதிய மார்க்கத்தை பரப்ப புத்தர் இந்த இடத்திலிருந்துதான்  சீடர்களை  அனுப்பினார் என்பதை உணர்த்த  எழுந்த சின்னம் இது  அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடனே நம்மை அசத்தி  நிற்க வைப்பது
தலைப்பைச் சேருங்கள்
இந்த கம்பீரமான சின்னம்தான்
, ராஜஸ்தான் பகுதியில் காணப்படும் ஸாண்ட் ஸ்டோன் என்ற வகை சலவைக்கல்லில் பழுப்பு நிறத்தில் தொட்டு பார்க்க அழைக்கும் வழவழப்புடன் பளீசென்றிருக்கிறது. கவிழ்த்த தமாரை மலர் பீடத்தில் மான், சக்கரம், யானை சிற்பங்களுடன் இருக்கிறது. சக்கரத்தில் காணப்படும்  36 ஆரக்கால்கள் , நமது தேசிய சின்னத்தில் 24 தானே? என்ற கேள்வியை எழுப்பிற்று. அந்த சிலையின் வடிவமைப்பும் கம்பீரமும் இது தேசிய சின்னமானது சரிதான் என்ற எண்ணவைக்கிறதுநல்ல வேளை இது ஒரு மதம் சார்ந்தது, அஹிம்சையை போதித்த தேசத்திற்கு ஏன் சிங்கங்கள்? என யாரும் அப்போது போராடவில்லைகாட்சியகத்திற்குள் இருக்கும் புத்தர் சிலைகள் அற்புதமானவை. மெல்லிய ஆடை, விரல்நகங்கள் கூட நுட்பமாக வடிக்கபட்டிருக்கின்றன.
அருகில் புத்தருக்கு  ஒரு கோவில். உள்ளே தங்கத்திலான புத்தர். வளாகம் முழுவதும் ஜப்பனிய, சீன  பாலி மொழிகளில் வாசகங்கள் பெரிய பெரிய கல்வெட்டுகளாக படிக்க வசதியாக சாய்வாக நிறுத்தபட்டிருக்கிறது. நாம் பார்க்க மட்டுமே செய்கிறோம். கம்பீரமான ஒரு மணி. புத்த பூர்ணிமா அன்று மட்டும் தான் ஒலிப்பார்களாம்முதல் 5 சீடர்களுக்கு உபதேசம் செய்த காட்சி சிலையாக்கப்பட்டிருக்கிறது.
அதில்  முற்றும் துறந்த புத்தருக்கும் அவர் சீடர்களுக்கும் பளபளக்கும் பட்டாடை. கோவிலின் பின்னே ஒரு ஆலமரம். புத்தகயாவிலிருந்து கொண்டுவந்த கிளை மரமாக வளர்க்கபட்டிருக்கிறது. தொட அனுமதியில்லை.
உருவ வழிபாடு அவசியமில்லை என்று சொன்னவர் புத்தர். அவரையே கடவுளாக்கி வழிபடும் முறை  எப்படி தோன்றியிருக்கும்? என சிந்தித்துக் கொண்டே காசி நகர் திரும்புகிறோம். மாலையில் பனாராஸ் புடவைகள் வாங்குவதைப்பற்றி  பஸ்சில் பலர் பேசிகொண்டிருக்கிறார்கள். நாம் காசியில் வேறு என்ன பார்க்கலாம் என யோசித்து கொண்டிருக்கிறோம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------


புத்தர் தன் மனைவி மற்றும்  குழந்தையை விட்டுவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இரவோடு இரவாக  அரண்மனையை விட்டு வெளியேறினார்.   ஒரு கணவனாக, மன்னனாக தனது பொறுப்புகளை சரிவர செய்யாமல் இப்படி செய்தது சரியா?
  புத்தரின் அந்த செய்கையை ஒரு சதாரண மனிதனின் செயலாக நீங்கள் பார்க்கீறீர்கள். அதனால் இப்படி கேட்கிறீர்கள். சித்தார்த்னாக அவதரிக்கும் முன்னரே கருவிலிருக்கும்போதே  பிறக்கும் குழந்தை துறவியாவான் என்பது அவருடைய தாய்க்கு ஒரு கனவின் மூலம் தெரிந்தது. குழந்தை பிறந்த 7 நாளில் தாய் இறந்துபோனதால் இது பலருக்கு தெரியாதுஅவர் புத்தர் ஆகும் முன்னரே மிகசிறிய வயதிலேயே  உயர்ந்த சிந்தனைகளும்  பல நடைமுறைகளை தவறு என்று சொல்லும் துணிவுடனும் இருந்தார்அந்த காலகட்டத்தில்  சரி என்று நம்பப்பட்ட விஷயங்களை மறுத்தவர் அவர். உதராணமாக மனிதஉயிர்களை கொல்லுவது  தவறு என்று சொன்னார். இப்படிபட்டவன் எப்படி அரசனாக கடமை ஆற்றி போர் செய்ய முடியும்?. ஒரு வேடனின் அம்பினால் தாக்கப்பட்ட பறவை இவர் காலடியில் விழுந்த போது அதை காப்பற்றினார்வேட்டையாடியது வேடனுக்கு சொந்தம் என்பதை மறுத்து காப்பாற்றியவனுக்குதான் சொந்தம் என விதியை மாற்றினார்இப்படி பட்ட ஒரு மனிதன் எப்படி எல்லோருரையும் போல சாதாரண மனிதாக இருக்கமுடியும்.? பெரிய சக்தியாக உருவாகப்போகும்  மேன்மையான மனிதர்கள் இப்படி குடும்பத்தை பிரிந்ததை நீங்கள் பல மஹானின்  வாழ்க்கையில் பார்த்திருப்பீர்களே? புத்தன் செய்தது சரியா என்று யோசிப்பதை விட  இப்படி யோசியுங்களேன்.  2000 வருடங்களுக்கு பின்னரும் அவர் செய்த விஷயங்களைப் பற்றி அவர் உருவாக்கிய கோட்பாடுகள் எல்லாம் பற்றி  நாம் பேசுவது அவர் புத்தர் ஆனதினால் தானே?. எல்லா மன்னர்களையும் போல அவரும் நாடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்திருந்தால் இன்று நாம் அந்த சித்தார்த்தனைப் பற்றி பேசுவோமா?.