21/5/18

ஒரு இணைய தள வியாபார நிறுவனத்துக்கு இத்தனை கோடிகளா?





இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களுரில் ஒரு இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் துவக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம்1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) விலையில் விற்கபட்டிருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உலகளவில் வர்த்தகத்திலிடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இந்தச் செய்தியைக் கேட்டு ஆச்சரியத்தில் அதிர்ந்தன.
விற்கபட்ட நிறுவனம் இந்திய இணைய தளமார்க்கெட்டிங் கம்பெனி பிளிப் கார்ட். வாங்கியிருப்பது உலகில் விற்பனையின் அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் பெரிய அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைசெய்கிறது. இவர்கள் எந்தப்பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மிகக்குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கி அதைத் தங்கள் இணையதளத்தின் மூலம், வெளி மார்க்கெட்டில் விற்பதைவிட குறைந்தை விலைக்கு விற்பனை செய்யும் ஒரு நிறுவனம். இந்தியாவில் இவர்கள் காலடிவைத்ததும் துவக்கபட்ட பங்களுரு அலுவலகத்தில் பணிக்குச்சேர்ந்தவர்கள் சச்சின் பன்சால், பின்னி. என்ற இரண்டு 22 வயது இளைஞர்கள். இருவரும் டெல்லி ஐ ஐ டியில் படித்தவர்கள். நல்ல சம்பளம் என்பதால் அமேசானில் வேலைக்குச்சேர்ந்தார்கள்.
ஓராண்டு பணிக்குப் பின்னர் இவர்களுக்கு எழுந்த எண்ணம் இந்தக்கம்பெனி செய்வதை நாம் ஏன் தனியாக ஒரு கம்பெனியை உருவாக்கிச் செய்யக் கூடாது? என்பது தான். உடனே வேலையை ராஜினாமாச் செய்து விட்டுச் செயலில்இறங்கினார்கள். ஒரு சிறிய இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் 4 கம்யூட்டர்களுடன் துவங்கப்பட்டது பிளிப் கார்ட். .  புத்தக் விற்பனையில் துவங்கி அமேசான் செய்யும் அத்தனையும் செய்வது என்ற முடிவோடு களமிறங்கிய இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை உலகில் எந்த நிறுவனமும் இதுவரை கண்டதில்லை

.2007ல் துவக்கபட்ட இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 20.8 கோடி டாலர்கள் (இது டாடா ஸ்டில் நிறுவனத்தின் மதிப்பைவிட இருமடங்கு). என உலகின் முன்னணி மதிப்பிட்டு நிருவனம் மதிப்பிட்டிருக்கிறது. துவக்க நிலை (Startup) வெற்றிபெற்ற நிறுவனங்களில் உலகின் 15 வது இடத்திலிருக்கிறது பிளிப் கார்ட்
.
இந்தப் பிளிப் கார்ட்டின் 77% பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன் மூலம் இதில் மூதலீடு செய்தவர்கள், நிறுவன ஷேர்களை பரிசாகப் பெற்ற ஊழியர்கள் பெரும் லாபம் அடைவார்கள். மொத்த 10ஆயிரம் ஊழியர்களில் 3000 பேர் ஒரே இரவில் டாலர்களில் லட்சாதிபதிகளாகிவிட்டார்கள் இந்தக் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் அவரது 6% பங்குகளுகாக 6700 கோடிகள் பெற்றுகொண்டு வெளியேறுகிறார். மற்றொரு நிறுவனர் புதிய நிறுவனத்தில் தொடர்கிறார்.

இந்த நிலையை எப்படி இந்த நிறுவனம் அடைந்தது?.

உலக இணைய சந்தை ஆய்வு நிறுவனமான ஃபாரஸ்டர் கடந்த ஆண்டு இந்தியாவில் இணையதள விற்பனையின் மதிப்பு சுமார் 2,100 கோடி அமெரிக்க டாலராக (சுமார் 1,41,250 கோடி இந்திய ரூபாய்) இருந்தது. என்கிறது. இது சராசரியாகக் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 முதல் 15 % வரை உயர்ந்து வந்ததின் விளைவு. இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இதைல் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருப்பதை அமேசானில் வேலை செய்யும் போதே கணித்து களத்தில் இறங்கியவர்கள் இந்த இளைஞர்கள்.
இவர்கள் இந்த இணைய தள வியாபாரத்தில் இந்தியர்களின் உளவியலைப்புரிந்து கொண்டு தங்கள் பிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தினார்கள். ஆன்லைன் வர்த்தகத்தின் முக்கிய தேவை கிரிடிட், அல்லது டெபிட்கார்ட். அது அதிகம் பிரபலமாகத காலகட்டத்தில் இவர்கள் உங்கள் வீட்டுக்குப் பொருள் கொண்டுவந்து தருபவரிடமே பணம் தரலாம் என்ற புதிய முறையை உருவாக்கினார்கள். அதைத்தொடர்ந்து ஆர்டர் செய்த பொருளைச் சரிபார்த்த பின்னர் டெலிவரி செய்பவரிடமே பணம்தரலாம் சரியில்லை என்றால் பொருளைத் திருப்பிக்கொடுக்கலாம். என்ற அதரடி அறிவிப்புகளினால் நிறுவனத்தின் நன்மதிப்பும் விற்பனையும் பெருகியது.
10 கோடி வாடிக்கையாளார்களுக்கு கடந்த ஆண்டுமட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை ஆன் லைலனில் விற்றிருக்கிறார்கள்

தொடர்ந்த விரிவாக்கத்துக்கு அதிக மூதலீடுகள் வேண்டுமே அதை எப்படி சமாளித்தார்கள்.?

புதிதாகத் துவக்கபட்டு கடின உழைப்பாலும் சமயோசிதமான திட்டமிடலாலும் வளர்ந்து கொண்டுவரும் ஸ்டார்ட்அப் கம்பெனிகளைக் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன சில பன்னாட்டு வென்ச்ச்ர் கேப்பிட்டலிஸ்ட்  என்றா முதலீட்டு நிறுவனங்கள். இவர்கள் இம்மாதிரி கம்பெனிகளைப் பற்றி அறிந்து தங்கள் செலவில் அதன் எதிர்காலத்தை ஆராய்ந்து கணித்து முதலீடு செய்வார்கள். வாய்ப்புகள் வரும்போது தங்கள் முதலீட்டைபோலப் பல மடங்கை லாபமாகப் பெறுவார்கள். இவர்கள் தொழிலே இப்படி முதலீடு செய்வது மட்டும் தான். நஷ்டம் வந்தாலும் அவர்களுக்குத்தான். இப்படி பட்ட சில கம்பெனிகள் இந்தப் பிளப் கார்ட்டை கவனித்து தொடர்ந்து தங்கள் முதலீட்டைச் செய்து வந்தார்கள். இன்று இப்படி முதலீடு செய்த நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்தை வால்மார்ட் வாங்குவதால் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதில் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிருவனங்களில் ஒன்று ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க். இன்று அவர்களின் பங்குகளுக்கு 4 பில்லியன் டாலர் பெறுகிறார்கள் அதாவது ஒரே ஆண்டில்  75% லாபம்.

வால் மார்ட் ஏன் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குகிறது?

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் போட்டியைத்தவிர்க்க அமேசான் நிறுவனமே பிளிப் கார்ட்டை வாங்கப்போவதாக மார்க்கெட்டில் பேசப்பட்டுவந்தது. ஆனால் உறுதியானதகவல்கள் இல்லை
.
வால் மார்ட். அமெரிக்காவில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம். பல நாடுகளிலும் பரந்துள்ளது சில்லறை வணிகத்தில் புதிய சாதனைகளையும் சரித்தரங்களை படைத்தவர்கள்.
மோடி அரசின் புதிய வணிகக்கொள்கைகளின் படி இந்தியாவிலும் பெரிய திட்டங்களுடன் சில்லறை வணிகத்தில் காலடி வைத்தவர்கள், சங்கலித்தொடராக 21 கடைகளைத் திறந்தார்கள். ஆனால் சந்தித்த எதிர்ப்புகளினாலும் அரசியலினாலும் சற்று மெதுவான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பிளிப்கார்ட்டை வாங்கி இந்திய சில்லறை வர்த்தகத்தில் குறுக்கு வழியில் புகுந்துவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தின் விளைவே இந்த இந்திய மூதலீடு
.
இன்று வெற்றிகரமான் டீலினால் உலகத்தையே தங்களைப்பார்க்க வைத்த சச்சின் பன்ஸாலும், பின்னியும், துணிவுடனும் புதிய சிந்தனைகளுடன் ஸ்டார்ட் அப்களுடன் களமிறங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்

8/5/18

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கட்டிய கோவில்


சீனாவின் தென் கிழக்கில் இருக்கும் ஒரு தொழில் நகரம் குவான்ஷூ(QUANZHOU) இதன் அருகிலில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஒன்று சேடியன்.(CHEDIAN) கல்பாவிய.சிறிய சந்துகளும் முன் முற்றங்களுடன் கூடிய வீடுகளும், அது பல ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்தது என்பதைச்சொல்லும் சாட்சிகள். அங்குள்ள கல்யூன் என்ற புத்தர் கோவில் மிகப்பழமையானது.சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் புத்தமத்தினர் தினசரி ஆயிரகணக்கில் வந்து வழிபடும் ஒரு கோவில்.
அந்தப் பழமையான புத்தர் கோவிலில் இருக்கும் ஒரு பெ


ண் தெய்வத்தை உள்ளுர் மக்கள் தினமும் தவறாமல் அதன் முன்னேயிருக்கும் வாயகன்ற வெண்கலப் பாத்திரத்தில் நிரம்பியிருக்கும் மணலில் ஏற்றிய ஊதுவத்திகளைச் சொருகி பிராத்தனைகளைச்சொல்லி வழிபடுகிறார்கள்
.
அந்தப் பெண் தெய்வம் சீனாவின் பல இடங்களிலிருக்கும் “கியூனியன் தேவி”(GUANYIN)- போதிசத்துவரின் பெண் வடிவம் என்று உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். நான்கு கைகளுடனும் அவற்றில் உடுக்கு, ஆயுதம் ஏந்தி கால்கள் சப்பணமிட்ட நிலையில் இருக்கும் அந்தத் தேவியின் காலடியில் வேலால் தாக்கபட்ட நிலையில் ஒரு அரக்கனின் உருவமும் அருகில் இரு காவலர்களூம் நிற்கிறார்கள். அந்த தேவியின் வடிவம் சீனாவின் மற்ற இடங்களில் வழிபடப்படும் கியூனியன் தேவியின் உருவத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும் உள்ளுர் மக்கள் இது தேவியின் மற்றொரு வடிவாக இருக்கும் என நம்பி புத்தபிரானை வழிபடும் முன் இந்தச் சன்னதியையும் வணங்கிச் செல்கிறார்கள்.
இது சீனர்கள் வழிபடும் தெய்வமில்லை. இந்த இடத்திலிருந்த ஒரு பழமையான இந்துக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர்க:ள் நிறுவி வழிபட்டு வந்த கோவில். அது கால போக்கில் புத்தர் கோவிலாகிவிட்டது. இது தெரியாமல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரு இந்து கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் லீ சான் லாங் என்ற ஆய்வாளார். புத்தர் கோவிலின் நுழை வாயிலில் இருக்கும் மேடையின் பக்க வாட்டில் வரிசையாகப் பல நிலைகளைலிருக்கும் நரசிம்மரின் உருவங்களையும் இந்தக் கோவிலின் சன்னதிக்கு முன்னிருக்கும் தூண்களில் இந்துபுராணக்கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் இருப்பதையும் சொல்லுகிறார்.
சேடியன் கிராமம் பல நூறாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. சீனாவின் கடல் வாணிகத்தில் முக்கிய இடம்பெற்றிருந்த இந்த துறைமுகத்திற்கும் தமிழக கடல் நகரங்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கப்பலில் வந்த வணிகர்கள் இந்த நகரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நகரத்தில் இந்தக் கோவில் மட்டுமில்லை சுற்றுவட்டாரத்தில் பல கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது  இதுகுறித்து ஆய்வுகள் செய்யும் சீனப்பேராசியர்கள் குழு.
சாங் என்ற மன்னர் (கி.பி 960-)பரம்பரையும் தொடர்ந்து வந்த யூவான் (கிபி1279) மன்னர் பரம்பரையினர் சீனாவை ஆண்டுவந்த காலத்தில் இந்தத் துறைமுகத்திற்கு தமிழகத்திலிருந்து கப்பல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. அந்த வணிகத்தைக் கவனிக்க தமிழர்கள் பெருமளவில் குழுக்களாக இங்கு வந்து வசித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தச் சுற்று வட்டாரத்தில் இரண்டு பெரிய கோவில்களையும் பல சிறிய கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது வியூ வின்லாங் என்ற ஆராய்ச்சியாளரின் குறிப்பு. உள்ளூர்காரான இவர்தான் முதன் முதலில் இங்கு கண்டுபிடிக்கபட்ட ஒரு நரசிம்மரின் சிலையின் மூலம் அது தமிழ் நாட்டு கடவுள். என்றும் தமிழ்நாட்டுக்கும் இந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பைக் கணடுபிடித்து 1930களிலேயே சொன்னவர். தொடர்ந்த ஆராய அவர் கேட்ட நிதி கொடுக்கபடாததாலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களாலும் ஆய்வு தொடரப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரம்பரியப் பெருமை மிக்க சீன நகரங்களில் பெரிய அளவில் பல நகரங்களில் கருவூலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. அதில் ஒன்று கடல் வாணிகத்தில் முன்னோடியாக இருந்த சேடியன் நகரம். பண்டைய சீனர்களில் கப்பல்கட்டும் முறை கடல் வாணிகத்தில் அவர்கள் சென்ற கலங்களின்  மாதிரிகளுடன் விளக்க பெரும் பொருட்செலவில் ஒரு நவீன அருங்காட்சியகம் எழுந்தது. அதன் இரண்டாம் மாடியில் நகரத்தின் அருகில் கிடைத்த சிலைகள் சிற்பங்களை வைக்கவும் முடிவானது.
 அந்த சிலைகளும் சிற்பங்களும் அப்படியே அச்சு அசலாகத் தமிழக, ஆந்திர கோவில்களில் காணப்படும் சிற்பங்களாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சிலைகளின் பின்னணி தொடர்பான ஆய்வுகள் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து எழுந்திருக்கிறது.
எத்தனை கோவில்கள் இருந்து பின்னாளில் அழிந்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை ஆனால் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களிலிருந்து சிலைகள் எடுக்கப்பட்டிருப்பதால் பல கோவில்கள் இருந்திருப்பதாக நம்பப்படுகிறது என்கிறது அருங்காட்சியகத்தின் குறிப்பு அதலிருக்கும் வரைபடம். சிலைகள கண்டுபிடிக்கபட்ட இடங்களாக இந்த நகரைமட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களையும் காட்டுகிறது.
அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நரசிம்மர். யாளி சிவலிங்கம் காளி போன்ற பல சிலைகள். இருக்கின்றன. ஒரு யானை சிவலிங்கத்திற்கு நீர் சொறிந்து அபிஷேகம் செய்கிற காட்சி. கிருஷ்ணன், பின்னணியில் பாம்பு போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்ட தூண்கள் எல்லாமே கடல் கடந்து வந்த தமிழனின் சிற்பகலைக்கு சாட்சியாகயிருக்கிறது. சிலைகளின் கற்கள் உள்நாட்டு வகையாக இருப்பதால் தமிழக சிற்பிகள் வந்திருக்க வேண்டும் அல்லது வரையப்பட்ட படங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளூர்கலைஞர்களின் உதவியுடன் சிலைகள் வடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்களின், பல்கலைகழகங்களின் தொடர்ந்த ஆர்வத்தால் அருங்காட்சியகத்தில் “சீனாவிற்கும் தென் இந்தியாவிற்குமான 1000 ஆண்டுத் தொடர்பு” என்று ஒரு தனிப் பகுதியே நிறுவப்பட்டிருக்கிறது. சிலைகளுக்கும் கல்செட்டுக்களுக்கும் ஆங்கிலத்தில்  விளக்கமும் இருக்கிறது சிவலிங்கமும் யானையும் இருக்கும் சிற்பத்தின் மூலையில் ஒரு சிலந்தியின் உருவமும் இருக்கிறது. சிவனை பாதுகாக்க தினசரி அந்த சிலந்தி கட்டிய வலையை யானை அபிஷனக்தினால் கலைத்து விட்டுக்கொண்டேயிருந்ததால் அந்த சிலந்தி கோபமுற்று யானையின் துதிக்கைக்குள் நுழைந்து அதைக்கொன்று விட்டது என்ற கதையை அருகிலிருக்கிறது
.
அருங்காட்சியகத்திலிருக்கும் கல்வெட்டுக்களில் அன்றைய தமிழ் எழுத்துக்களில் இருப்பதின் ஆங்கிலவடிவம் அருகில் வைக்கபட்டிருக்கிறது. அதில் ஒன்று இது.
ஹரனுக்கு நமஸ்காரம். எங்கும் வளம் நிரம்பியிருக்கட்டும். சித்திரை மாதத்தில் சித்தரை நாளான்று 1203ஆம் வருடம் தவசக்கரவர்த்தி சம்மந்த பெருமாள் ஆசிபெற்று மன்னர் செக்காச்சி கான் எழுத்தில் தந்த அனுமதியுடன் உடைய நாயினாரின் உருவம் மன்னரின் நலத்துக்காகப் பிரதிஷ்டை செய்யபட்டது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் 2000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஒரு தேசத்துக்குத் தமிழையும் தன் கடவுளையும் கொண்டுசென்றுஅங்குஅதை நிறுவியிருக்கிறான் அது இன்ரும் வழிபடப்படுகிறது  என்பதையறியும்போது   வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது




70 வது மணநாளைக்கொண்டாடிய அரசி








உலகின் மிகச்சிறந்த பாராளுமனற நடைமுறைகளை உருவாக்கிப் பாராளுமன்ற ஜனநாயகத்தை கடைப்பிடித்தாலும் இங்கிலாந்து நாட்டின் தலைவர் அதன் அரச பரம்பரையில் வந்திருக்கும் அரசி இரண்டாம் எலிசபெத் தான்.

இம்மாதத்தில் (பிறப்பு ஏப்பரல் 21 1926) இவரது 92 வது பிறந்த நாளைக்கொண்டாட லண்டன் தயாராகிக்கொண்டிருக்கிறது நகரின் பெரிய கட்டிடங்களில் வண்ண விளக்குகளில் வாழ்த்துச்செய்திகள் மின்னுகின்றன.  .அரசி அன்று என்ன வண்னத்தில் உடையணிவார். அவரது கணவர் என்ன பரிசு கொடுக்கபோகிறார்? போன்ற கட்டுரைகளைப் பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மறைவுக்குப் பிறகு 1952ம் ஆண்டு, இரண்டாம் எலிசபெத் மகாராணி ஆனார். இவர். அன்று தொடங்கிய மகாராணி வாழ்க்கை, இன்றும் தொடந்து இங்கிலாந்து வரலாற்றில் நீண்ட காலமாகத் தொடரும் மகாராணி என்னும் பட்டத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் நீண்ட நாள் அரசியாக இருந்தவர் அரசி விக்டோரியா. இந்தியாவை இங்கிலாந்து ஆண்டுகொண்டிருந்த காலங்களில் இந்திய அரசியலில் நிகழ்ந்த பல திருப்பு முனைகளுக்குக்காரணமாகயிருந்தவர் விக்டோரியாஅரசி.  தொடர்ந்து 63 ஆண்டுகள் அரசியாக இருந்தவர். அந்தச் சாதனையை சில ஆண்டுகளுக்கு முன் முறியடித்தவர் இங்கிலாந்தின் இன்றைய அரசி இரண்டாம் எலிசபெத்.   இந்த ஆண்டுடன் அவர் அரசியாகி 65 ஆண்டுகளாகிறது
.
அரசரின் குடும்பத்தில் பிறந்த முதல் பெண்குழந்தையான இவர் இங்கிலாந்தின் அடுத்த வாரிசு என்று அறிவிக்கப் பட்டபோது இவருக்கு வயது. 14.    பிறந்தபோது அவரது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோர்களின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலக்ஸான்ட்ரா மேரி என்ற நீண்ட பெயர் சூட்டப்பட்டது. குடும்பத்தினரால் சூட்டப்பட்ட செல்லப்பெயர் லில்லிபெத். ஆனால் அரசியாகப் பட்டம் சூட்டப்பட்டபோது அறிவிக்கப்பட்ட பெயர். எலிசபெத். ஏற்கனவே அந்தப்பெயரில் ஒர் அரசி இருந்ததால் இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்படுகிறார்.
லண்டனில் 1947ம் ஆண்டு, நவம்பர் 2௦ம் தேதி, இங்கிலாந்து இளவரசி எலிசபெத் கடற்படை அதிகாரி பிலிப்பை திருமணம் செய்துக்கொண்டார். இது காதல் திருமணம். இந்தத் தம்பதியினர் கடந்த ஆண்டு தங்களது 70 வது திருமண ஆண்டுவிழாவை மிக எளிய முறையில் கொண்டாடினர். 70 ஆண்டுகள் கடந்த பிறகும், தற்போது 91 வயது அரசி எலிசபெத்தும் 96 வயது பிலிப்பும் இன்றுவரை சிறந்த தம்பதியினராகவே வாழ்ந்து வருகின்றனர்

இங்கிலாந்தின் ராணி என்று அறியப்பட்டாலும் மேலும் 16 சிறு நாடுகளுக்கு அரசியாகயிருப்பவர் இவர்.  அந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையீடுவதில்லை என்றாலும் இவர் தான் அந்த நாடுகளின் சட்டபூர்வமான அரசி. இதைத்தவிர இந்தியா உள்பட 54 நாடுகள் உருப்பினர் நாடுகளாக இருக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவியும் இவர்தான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகநாடுகளில் நிகழந்த பல அரசியல் மாற்றங்களுக்குச் சாட்சியாக இருக்கும் இந்த அரசி காலத்திற்கேற்ப பக்கிங்ஹாம் அரண்மனையின் நிலைப்பாடுகளைத் துணிந்து மாற்றிஅமைத்தவர். பல வரலாற்று சிறப்பு மிக்கபயணங்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்தியவர். அதில் முக்கியமானது அயர்லாந்து பயணம். நீண்ட நாட்களாக எந்த இங்கிலாந்து அரசரோ அல்லது அரசியோ செய்யாத அந்தப்பயணத்துக்கு பின்னர் இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு மலர்ந்தது. அதேபோல் தனது ஆளுகைக்குட்பட்ட சிறு நாடுகளில் குடியரசுமுறை வளரக் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்த மாற்றங்களை, அதிகார பகிர்வுக்கான மாற்றங்களை வரவவேற்று ஆதரித்தவர், கனடா நாட்டின் அரசியலில் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியல் மாற்றமான கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப்பெறுதல் போன்றவைக்களுக்கு ஆதரவு தந்தவர்
.
வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்களை மிகத்திறமையுடன் இங்கிலாந்து சந்திக்க நேர்ந்ததும் இவரது ஆட்சிகாலத்தில் தான்.
சுருக்கமாகச் சொல்லுவதானால், பரவலான அதிகாரங்கள் கொண்ட மன்னராட்சி முறை உலகில் மெல்ல மறைந்து போகும் என்பதை உணர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் அரசி இவர்.

பிள்ளைகளின் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் போன்ற சந்தோஷமான விஷயங்களை சந்தித்திருக்கும் இந்த அரசி ஒரு குடும்பத்தலைவியாகச் சோகங்களையும் சந்தித்திருக்கிறார்.

எலிசபெத் பிலிப் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். மூன்று மகன்கள் ஒரு பெண். இதில் சிறப்பாக நடைபெற்ற இளவரசர் சார்லஸ் டயானா திருமணம் முறிவில் முடிந்தது. அதேபோல் இளவரசி ஆனின் திருமணமும் முறிவில் முடிந்தது. தொடர்ந்த சில ஆண்டுகளில் மூன்றாவது மகன் ஆண்ட்ரூவின் திருமணமும் மணமுறிவில் முடிந்தது.  பொதுவாக இங்கிலாந்து அரச குடும்பங்களில் மண முறிவுகள் நடப்பதில்லை. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த மரபுகள் தன்காலத்தில் மீறப்பட்டிருப்பதில் அரசியாருக்கு ஆழந்த வருத்தம்
.
இந்த வயதிலும் திட்டமிட்டபடி உடற்பயிற்சி, அரசுப்பணிகள் பாராளுமன்ற கூட்ட துவக்க நாள் நிகழ்ச்சி எனச் சுறுசுறுப்பாக  இயங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
விக்டோரியா அரசியின் நீண்டநாள் அரசி என்ற சாதனையை இவரது ஆட்சி முறியடித்தபோது இங்கிலந்து பாரளுமன்றம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக ஒரு விசேஷ கூட்டத்தைக் கூட்டியது அதில் அன்றைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் தெரிவித்த வாழ்த்து



“ நிலை மாறும் உலகில் நிலையான ஆட்சி செய்யும் மகாராணி”




11/4/18

மாட்டுவண்டியில் வந்த ரயில் என்ஞின்


 மன்னர்மூலம் திருநாள் ராமவர்மா திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு கொண்டிருந்த காலத்தில்(1885-1924) அந்தச் சமஸ்தானம் நிர்வாகத்திலும் அடிப்படை வசதிகளிலும் பல புதிய திருப்பு முனைகளைச் சந்தித்தது. அதில் ஒன்றுதான் கொல்லத்திலிரு;ந்து சென்னைக்கு ரயில் பாதை. அன்று சென்னையிலிருந்து திருனெல்வேலி வரை ரயில் பாதையிருந்தது. ஆனால் அன்றை ரெயில்வே நிர்வாகம் அதைக் கொல்லம் வரை நீடிப்பதில் ஆர்வம் காட்டாதிருந்ததற்கு காரணம் தமிழகத்தையும் திருவாங்கூர் சமஸ்தானத்த பகுதிகளை இணைக்கும் பகுதியிலிருந்த அடர்ந்த ஆரியங்காவு காடு. செலவு அதிகமாக்குமிந்தததிட்டத்தினால் ரயில் கட்டணம் அதிகமாகும் அதனால் ரயிலை மக்கள் பயன்படுத்தமாட்டார்கள். என்பது அவர்கள் கணிப்பு.

ஆனால் மன்னர் அந்தப்பாதை அமைக்கப்டவேண்டுமென்பதில் தீவரமாகயிருந்தார். திட்டச் செலவில் பாதியை சமஸ்தானமேற்கும் எனத் தென்னிந்திய ரயிவே கம்பெனியுடன்1900 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை(அப்போது இது திருவாங்கூர் சமஸ்தானைச்தேர்ந்திருந்த பகுதி) வரையிருந்த பாதையை 45 மைல்களுக்கு கொல்லம் வரை நீட்டிப்பது என்று முடிவாயிற்று.


நாட்டின் முதல் தனியார் – அரசு கூட்மைப்பு இதுதான். பாதை அமைப்பதில் எழுந்த பிரச்சனைகள் பல. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பணிசெய்தவர்கள் மிருகங்களால் தாக்கபட்டனர். திட்டமிட்டபடி சிறிய ம்லைகளை குடைந்து குகைகள் அமைப்பது எளிதாக இல்லை. அந்த மலைக்குகைகளின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து பாதையை மூடிவிடும் அபாயமிருந்தது. 4 மலைக்குகைகள்,5 பெரிய பாலங்கள் 120 சின்ன சின்னப்பாலங்கள் என்று பயணிக்கும் இந்த ரயில் பாதையின் இரு பக்கமும் பரவிக்கிடக்கும் பசுமைக்காடு. பகவதிபுரம்- ஆரியங்காவு என்ற இரண்டு ஸ்டேஷ்ன்களுக்கிடையே ஒரு கீலோமிட்டருக்கு நீண்ட குகைப்பாதை.



ஒரிடத்தில் இரண்டு மலைச்சரிவுகளுக்கு இடையிலிருக்கும் பள்ளத்தாக்கை கடக்க பாலம் அமைக்கவேண்டியிருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கருங்கற்களால் பதிமூன்று தூண்களுடன். 3000 அடி நீளத்தில் ஒரு பாலம் எழுப்பப்பட்டது. இந்தப் பாலத்தின் தூண்களை வெறும் தூண்களாக அமைக்காமல் அழகான ஆர்ச்களுடன் வடிவமைத்தார்கள் அன்றைய கேரள கட்டிடக் கலைஞர்கள். இதை 13 கண் பாலம் என அழைத்தார்கள். இரும்பு கர்டர்களை உபயோகிக்காமல் கட்டபட்ட இந்தப் பாலம் அன்றைக்கிருந்த தொழில்நுட்பங்களில் மிகப்பெரிய சவால்.
பாலம் முடிந்தகையுடன் தண்ட வாளங்களை பதிக்க ஆரம்பித்துவிட்டனர். இரண்டே ஆண்டுகளில் செங்கோட்டை வரை ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது.
1900 ஆம் ஆண்டு 30 லட்சம் என மதிப்பீட்டில் துவங்கபட்ட இந்த இந்தத் திட்டம் 1902ல் முடியும்போது 1.12 கோடியில் போய் நின்றது


பஞ்சாங்கள் பார்த்துப் பண்டிதர்களை ஆலோசித்தபின்னர் மன்னர் 1904 ஆம் ஆண்டு ஜீன் 1ம் தேதி(அன்று மன்னரின் பிறந்த நாள்) கொல்லத்திலிருந்து பூஜைக்களுக்குப் பின்னர் மன்னர் கொடியசைத்து ரயிலைத்துவக்குவாரென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.


அப்போது எதிர்பாரமல் எழுந்தது ஒரு சிக்கல். துவக்க விழா ரயிலைக் கொல்லத்திலிருந்து இழுத்தச்செல்ல வேண்டிய எஞ்ஞின் மறுமுனையிலிருந்த செங்கோட்டையிலிருந்தது. விழா நாளுக்கு முன் அதைக் கொண்டுவரலாம்   எனத் திட்டமிட்டிருந்த நிர்வாகத்திற்கு வந்த செய்தி “ஆரியங்காவு கணவாயில் இடையில் புனலூருக்கு முன்னால் உள்ள ஒரு குகையில் மண் சரிந்து ரயில் பாதையை மூடிவிட்டது” எஞ்சினை கொல்லத்துக்குக்கொண்டுவர முடியாது.


செய்தியைச் சொல்லி மன்னரை வருத்தமடையச் செய்ய விரும்பாத தலமை எஞ்ஞினியர் உடனடியாக அந்த எஞ்சின் பாகங்களைக் கழட்டி செங்கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து படகில் கொல்லத்திற்கு கொண்டுவந்து சேர்த்தனர் படகில் வந்த எஞ்சினின் பகுதிகள் மாட்டுவண்டியில் ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டு பகல் இரண்டு இரவு தொடர்ந்து வேலைசெய்து அந்த எஞ்சினை அமைத்துத் தயாரக இருந்த பெட்டிகளுடன் இணைத்துத் துவக்க விழாவிற்கு அலங்காரங்களுடன் நிறுத்தினர்.

ஒரு சிக்கலான சவாலைச் சமாளிக்கும் சமயோசிதமிக்க அதிகாரிகளும் அவர்களின்  கட்டளைக்கேற்ப ஆர்வத்துடன் செயல் பட்ட தொழிலளார்களுடனும்  இருந்திருக்கிது அன்றைய ரயிவே நிர்வாகம் . 
மாலைகள் அணிந்த அந்த ரயில் எஞ்சின் 6 பெட்டிகளுடன், மேளதாளங்கள், வேதங்கள் முழங்க, 21 பிரங்கி சல்யூட்டுடன் புறப்பட்டுப் புனலூர் வரை சென்று திரும்பியது.

அன்றைய விழாவில் கெளரவிக்கபட்டவர் கொல்லம் ரயில் நிலையத்தின் முதல் ஸ்டேஷன் மாஸ்டர் ராமய்யா. ரயில்களுக்குப் பெயர் வைக்கும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது. இந்த ரயிலின் பெயர் “தூம சகட சூரன்”
சில வாரங்களில் பாதை சீராக்கப்பட்டு 1904 நவம்பர் முதல் தினசரி செங்கோட்டை கொல்லம் வரை ரயில் ஒட ஆரம்பித்தது.


நாடு முழுவதும் அகல ரயில் பாதைமாற்றம் என்ற திட்டத்தில் இந்தப்பாதையும் இணைக்கபட்டது. அதற்காக இந்தப் பாதையில் செல்லும் ரயில்கள் 2010 முதல் நிறுத்தப்பட்டன.
120 ஆண்டுகளுக்குமுன்னால் மன்னராட்சியில் 2 ஆண்டுகளில் முடிக்கபட்ட இந்த 48 கீமி பாதையை அகலப் பாதையாக மாற்ற எடுத்துக்கொண்ட காலம் 8 ஆண்டுகள் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதைத்தாண்டி வேறுபல அரசியல்களும் இருந்தன.
ஒரு வழியாக இந்தப்பாதை அகலப்பாதையாக மாற்றபட்டுவிட்டது. கடந்த மாதம் 31ம் தேதி முதல் ரயில்கள் ஓடத்துவங்கியிருக்கின்றன. இந்தப்பாதை இணைப்பின் மூலம் தமிழகத்தின் மிகப்பழமையான ரயில் பாதையான திருநெல்வேலி, தென்காசி செங்கோட்டை கொல்லம் ரயில் பாதை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பயனம் செய்ய வேண்டிய பாதை இது. அடர்ந்த காடுகளும் இருண்ட குகைகளும், 13 கண் பாலத்தில் ரயில் மெல்ல அழகாகத் திரும்புவதும் மனதில் என்றென்றும் நிற்கும் பசுமை காட்சியாகப் பதியும்.
ஒரு மன்னரின் தொலைநோக்கையும் இந்திய ரயிவேயின் சாதனைச் சரித்திரத்தையும் சொல்லும் இந்த ரயில்பாதை புத்துயிர் பெற்றதை கேரளத்தின் கொல்லம் ரயில் நிலையத்தில் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் விழா எடுத்து வரவேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் வழக்கம்போல் ஒடும் ஒரு ரயிலாகத்தான் இது  புறப்பட்டிருக்கிறது. சொன்ன காரணம். அடுத்த மாதம் நடைபெறப்போகும் அதிகாரபூர்வமான விழாவில் மத்திய அமைச்சர்களுடன் கலந்துகொள்வோம்





19/3/18

சூரியனைச் சுற்றி வரப்போகிறது இந்தக் கார்.



காரில் ஏறிச் சூரியனைச் சுற்றி வர முடியாது, ஆனால் ஒரு காரை ஏவுகணையின் முன்னால் வைத்து விண்வெளிக்கு அனுப்பினால் அது சூரியமண்டலத்தை சுற்றி வருமா?வரும் என்பதை நிரூபித்திருக்கிறார் எலான் மஸ்க் என்ற அமெரிக்கர். இவர் வான்வெளி விஞ்ஞானி இல்லை. ஆனால் விண்வெளி ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்ட கோடிஸ்ரவர். தன் சொந்த செலவில் கடந்த பல ஆண்டுகளாகப் பல ஏவுகணைச் சதனைகளைச் செய்துகொண்டிருப்பவர்.
எலான் மஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் படித்தஅவருக்கு விண்வெளியில் சாதனை புரிய வேண்டும் என்று இளம் வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம்.. அதற்கான பணத்தை திரட்டப் பல நிறுவனங்களைத் துவக்கினார். இன்று இண்டர்நெட்டில் பணம் செலுத்தும் முறைகளுக்கு முன்னோடியாக இருக்கும் “பேபால் (PayPaul) இவருடையதுதான்
பணம் சம்பாதித்ததும் 2002 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவனத்தைத்தொடங்கினார். அமெரிக்காவில் பல்கலை கழகங்கள் போலத் தனியாரும் ஆய்வுகளுக்காகச் சொந்த ராக்கெட் தளங்களை அனுமதியுடன் அமைத்துகொள்ளலாம் அப்படி இவர் அமைத்த ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனம்மூலம் ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் உருவாக்கி உயரே செலுத்துவது அவரது நோக்கம்.  பல எஞ்சினியர்க்ளையும் மற்றும் விண்வெளி நிபுணர்களையும் அவர் பணியில் அமர்த்திக் கொண்டு. தங்கள் நிறுவனத்துக்கென ஒரு ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டார்.
ஆரம்பத்தில்அவர் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அவைகளுக்கு பால்கன் 1, 2 எனப்பெயரிட்டிருந்தார். ஆனால் ராகெட் தயாரிப்பில் நாசா செய்யும் முறைகளிலிருந்து ”மாற்றி யோசிக்க” ஆரம்பித்தார்
.
பொதுவாக செயற்கைக்கோள்களைச் செலுத்துகின்ற ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றன் மீது ஒன்றாகப்பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளாகயிருக்கும்’.உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் அதன் பணிமுடிந்த பின்னர் தனியே கழன்று நடுவானிலேயே தீப்பிடித்து அழிந்து விடும். இந்த முறைதான் ராக்கெட்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை பின்பற்றப்படும் முறை. இதை மாற்றதான் எலான் மஸ்க் முயற்சித்தார்.
2013ல் இவர் உருவாக்கிய பால்கன் ராகெட்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது. காரணம் இவரது பால்கன் ராக்கெட் எரிந்து விழாமல் பணி முடிந்ததும் மெல்ல கிழே இறங்கி குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தது.
இந்த முறையில் செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டில் எரிபொருளுக்கு ஆகும் செலவுஅதிகமில்லை உருளை வடிவ ராக்கெட்டை உருவாக்குவதற்கு ஆகும் அதே செலவுதான். எனவே குறைந்த செலவில் ராக்கெட்களை செலுத்தும் முறையை எலான் மஸ்க் செய்து காட்டியதும் அதுவரை பணத்தை விணாக்கிக் கொண்டிருந்த ஒரு கோடிஸ்வரர் என அவரை அலட்சியபடுத்திக்கொண்டிருந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உலகம் அவரைக் கவனிக்கத்துவங்கியது
.
“தொடர்ந்து புதிய சாதனைகள்” என்ற வெறியிலிருந்த எலான் மஸ்க் அண்மையில் ஒரு புதிய சாதனையைச் செய்தார். 3 பால்கன் 9 வகை ராகெட்களை பக்கவாட்டில் ஒன்றாக இணைத்து ஒரு வலிமையான ராக்கெட்டை உருவாக்கினார். உலகில் இந்த அளவிற்கு சக்தி மிக்க ராக்கெட் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை
.இந்த ராக்கெட் 64 டன்னுக்கும் மேல் எடையைச் சுமந்து செல்லக்கூடிய அளவிற்கு வடிமைக்கப்பட்டது.  இதற்குப் பால்கன் ஹெவி என்று பெயரிடப்பட்டது.
இந்த ராக்கெட் செல்ல வேண்டிய இடம் என இலக்கு எதுவும் நிர்ணயக்கபடவில்லை. ராக்கெட்டின் முகப்பில் விண்வெளிக்கலம் அல்லது செயற்கைகோள் எதுவும் வைக்கபடவில்லை. காரணம் இந்த ஏவுகணையின் பலத்தை சோதிப்பதுதான் இதை விண்வெளியில் செலுத்தும் நோக்கம். மேலும் ராகெட் அழிந்தால் அந்தக் கலமும் அழிந்துவிடும் அது தேவையற்ற செலவு எனக்கருதினார் எலான் மஸ்க்.  பொதுவாக இம்மாதிரி சோதனைகளில் ராக்கெட் முனையில் பெரிய கான்கீர்ட் அல்லது இரும்பு பாளங்களை சோதனைக்காக இணைப்பார்கள்.
இங்கு எலான் மஸ்க் ஒரு புதுமையைச் செய்ய விரும்பினார். இரும்பு பாளாத்துக்குப்பதிலாகத் தனது விலையுர்ந்த டோயோட்டா டெஸ்லா  காரையே பொருத்தினார் . எலான் ராகெட் மட்டும் தயாரிப்பதில்லை. அவரது கம்பெனிகளில் ஒன்று பேட்டரிகளில் இயங்கும் கார்களையும் தயாரிக்கிறது.  அவரது டெஸ்லா ரோட்ஸ்டர் எலக்டிரிக் காரை ட்டோயொட்டோ நிறுவனம் தயாரிக்க 50 மில்ல்யன் டாலர் மூதலீடு செய்திருக்கிறது.
மஸ்க் தனது ராக்கெட்டின் முகப்பில் தனது தயாரிப்பான டெஸ்லா காரை வைத்தது மட்டுமில்லாமல். அந்தக் காரில் டிரைவர் சீட்டில் ஸ்டியரிங்கைப் பிடித்த மாதிரி விண்வெளிவீர்ருக்கு உரிய உடை அணிந்த முழு உருவ மனிதப் பொம்மையையும் வைத்து அனுப்பத்திட்டமிட்டார். பின்னணியில் ஒரு பாடலும் இசைத்துக்கொண்டிருக்கும்படி அமைத்தார் இந்த இசைரசனையுமுள்ள விண்வெளி ஆர்வலர்.
.
ராக்கெட்டின் முன்னால் காரா? என்று பலர் ஏளனப் புன்கையுடனும் இவ்வளவு கனமான,ராக்கெட் சரியாகச்செல்லுமா? என்று விண்வெளி விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.மிகுந்தஎதிர்பார்ப்புக்குஇடையே பால்கன் ஹெவி ராக்கெட் கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 6 ந் தேதி உயரே செலுத்தப்பட்டது, இப்படி தனியார் ராக்கெட்களை நாசாவின் தளத்திலிருந்து செலுத்த மிகப்பரிய அளவில் கட்டணமும் இன்ஷ்யூரன்ஸ்கட்டணமும் செலுத்த வேண்டும்


உயரேச் சீறிப்பாய்ந்தபால்கன் ஹெவி ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதை வரை (5 கோடி கிலோ மீட்டர் தூரம்) செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் அது அதற்கு மேலேயே  சிறப்பாகச் செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதையையும் தாண்டிச் சுமார் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று ரோட்ஸ்டர் காரை விண்ணில் செலுத்தியது. எலான் மஸ்கின் கனவு பலித்துவிட்டது அவரது கார் இபோது சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது அப்படிச் சுற்றும்போது 2091ஆம் ஆண்டு  பூமிக்கு அருகில் வந்து பூமியைக் கடந்து செல்லும்.பிறகு மறுபடியும் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச்செல்லும்,
இப்படி எவ்வளவு நாள்.அது சுற்றும்? பல ஆயிரம் ஆண்டுகள் இவ்விதம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்?. இப்படிச் சுற்றி வர அதில் எஞ்சினோ எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிகளுக்குஉட்பட்டு பூமி எவ்விதம் சூரியனை சுற்றுகிறதோ அதே மாதிரியில் அந்தக் காரும் சுற்றிக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் வெடித்து சிதறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படி நடந்தால் அதன் துகள்கள் கூடப் பூமிக்கு வராது. என்கிறார்கள் விண்வெளி விஞ்ஞானிகள்.
இது விண்வெளி விஞ்ஞானத்தில் மிகப்பெரிய சாதனை. விண்னில் செலுத்தப்பட்டவுடன் உலகின் அத்தனை சானல்களிலும் பிரேக்கிங் நீயூஸாகவும், அடுத்தநாள் அத்தனை செய்தித்தாட்களில் தலைப்புச்செய்தியாகவும் ஆன இதைச் சாதித்த எலான் மஸ்க்கு வயது 46.தான்“உங்கள் கார் எங்கே? என்ற கேள்விக்கு “சூரிய மண்டலம்வரை போயிருக்கிறது” என்று எலான் பதில் சொல்வது போல ஒரு கார்ட்டுனை வெளியிட்டிருக்கிறது ஒர் அமெரிக்கப்பத்திரிகை.
செவ்வாயில் மனிதர்கள் வசிக்கும் காலனியை ஏற்படுத்துவது அவரது நீண்டகால கனவுத் திட்டமாகும். ஆனால் அதற்கு முன் எலான்மஸ்கின் உடனடி அடுத்த திட்டம் சந்திரனுக்கு பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரு விண்வெளி வீர்ர்களை அனுப்புவதாகும். இரு விண்வெளி வீர்ர்கள் அமர்ந்து செல்ல இவரது ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனம் ஏற்கெனவே “குரூ டிராகன்” என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது ஆனால் இதற்கு அந்த வீர்ர்களிடம் கட்டணம் வசூலிக்கப் போகிறாராம்
மனிதருக்கு இருக்கும் ஆர்வத்துக்கும் பண வசதிக்கும் சாதித்துகாட்டு வார் என்றே தோன்றுகிறது.