29/8/12

காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்


காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்

கல்கி02/09/12
கம்போடியா நாட்டின்  ஆங்க்கோர்(Angkor)  பகுதி உலகின்  முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று.  800 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடகலைகளுக்கு சான்றாக நிற்கும் கற்கோவில்களையும் அரண்மனையும்  பார்க்க ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் மேல்.   இதைத்தவிர அந்த பகுதியின் அருகில் இருக்கும் அடர்ந்த்த காட்டு பகுதியில் இன்னும்  பல கற்கட்டிடங்களின் பகுதிகள்  சிதைந்து சிதறிகிடக்கின்றன.  1992ல் யூனெஸ்கோ இந்த பகுதிகளின் கோவில்கட்டிடங்களை  உலக பராம்பரிய சின்னங்களாக அறிவித்திருக்கிறது. பல சரித்திர ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் அந்த பகுதியில் 4000 அடி நீள 1000 அடி அகல பரப்பில் ஒரு மிகப்பெரிய வளாகமும் அதில் 39 வாயில்களுடன் பெரிய ஆடல் அரங்கம் அமைக்கப்பட்டிருந்த விபரமும் தெரிவிக்க பட்டிருந்த்தது. அதை அப்படியே மீண்டும் நிர்மாணிக்க முடியமா என யூனஸ்கோவின் உதவியுடன்  முயற்சிக்க விரும்பியது கம்போடிய அரசு. உலகமெங்கிருக்கும் முக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  வந்து ஆய்ந்த தந்த அறிக்கை: சவாலான இந்த பணியை சரியான குழு தலமையேற்றால்தான் செய்ய முடியும் என்று சொன்னது. பணியை ஏற்றது  செய்திருப்பது யார் தெரியுமா? இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறை. 2004ம் ஆண்டு 5பேர் கொண்ட ஒரு குழு ஆராய்ந்து செய்யவேண்டிய பணிகளைசரியாக திட்டமிட்டு செய்ய துவங்கி இப்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார்கள். இப்போது டூரிஸ்ட்கள் அனுமதிக்க படுவதால் காலை 9 மணிக்கே கியூவில் காத்திருந்து பார்த்து வியப்பது இந்த பாரம்பரிய சின்னத்தை மட்டுமில்லை, நிர்மாணித்த இந்திய வல்லுனர்களின் திறமையையும் தான்.
7 ஆம் ஜெயவர்மன் எனற மன்னன் தன் தாயின் நினைவாக கட்டிய இந்த ராஜவிஹார் பிரம்மதேவனுனக்காக கட்டபட்டகோவிலாக துவங்கியிருக்கிறது. தொடர்ந்து வந்த 8ம் ஜெய வர்மன் புத்தமதத்திற்கு மாறிவிட்டதால்  கட்டிட வேலைகள் முடியும்போது  அது பெளத்த விஹாராக மாறிப்போயிருகிறது. இது ஒரு பெளத்த கோவில் வளாகம் என கருதிக்கொண்டிருந்த கம்போடியர்களுக்கு இந்த தகவலைச் சொன்னது இந்திய குழுதான்.   எந்த வரை படமும், குறிப்புகளும்  இல்லாமல்முழுவதுமாக இடிபாடுகளாகி போயிருந்த இந்த வளாகத்தை புனர்நிர்மாணம் செய்தது மிகபெரிய சவால். அத்தனை கற்களையும் தூண்களையும் பிரித்து எடுத்து  அதன் அளவுகள், எடை போன்ற விபரங்களைப் பட்டியிலிட்டு  ஒவ்வொன்றுக்கும்  எண்கள் இட்டு படத்துடன்  கேட்லாக் செய்த பின்னர். தாங்கள் தயாரித்த மாதிரி  வரை படத்தைப்போலவே அவைகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். இதில் மிக சவாலான விஷயம் இந்த கல்கட்டிடம்  கட்டபட்டபோது கற்களை இணைக்க  சுண்ணாம்பு, மண்சாந்து போன்ற எதுவுமே பயன்படுத்தபடவில்லை. ஒவ்வொரு கல்லின்வெட்டபட்ட பகுதி  மற்றொருகல்லின் வெட்டுப்பகுதியுடன் நெருக்கமான   இணைக்கபட்டு உருவாக்கபட்டது. அதை மீண்டும் அப்படியே செய்ய 200 கம்போடிய தொழிலாளிகள் 7 ஆண்டுகள் இந்திய அணியின் தலமையில் உழைத்திருக்கிறார்கள்.   “ஒரு ஜிக்-ஜாக் பஸிலை (ZIG-ZAG PUZEL) பல முறை முயன்று இறுதியில் வென்ற மாதிரி என்று தங்கள் பணியை சொல்லுகிறார் இந்த திட்டத்தின் தலைவர்  சூட் (DR. Sood) . முனைகள் உடைந்து, சிதைந்து போயிருக்கும் சிலகற்களினால் இணைக்கமுடியாமல் போன பகுதிகளை, அவற்றின் உள்ளே துளையிட்டு ஸ்டீல் கம்பிகளை சொருகி இணைத்திருக்கிறார்கள். இப்போது 39 வாசல்களுடனும் அழகிய தெய்வச்சிலைக்ளுடனும் நிற்கும் கலைக்கூடமும்,  கோபுரங்களுடன் கூடிய நடனகூடமும்  இனி விழாமல் நிலையாக நிற்கும்  என சோதித்து சொல்லியிருப்பவர்கள் சென்னை ஐஐடியின் வல்லுனர்கள். கேட்பாரற்று இடிந்து விழுந்து கிடந்த இந்த காட்டுகோவிலின்  மிஞ்சி நின்ற சுவர்களின் வெடிப்புகளில் வளரத்துவங்கிய மரங்கள் காலப்போக்கில் மெகா சைஸ் மரங்களாகியிருந்தன. அவற்றை அகற்றினால் அதோடு இணைந்திருக்கும் பகுதிகள் வீணாகும். அழியாத கற்களுடன் மரங்களும்  இணைந்து வளர்ந்து வாழ்ந்திருக்கின்றன  எனபதையும்  மக்கள் பார்க்கட்டும்.  என்று யூனஸ்கோ சொன்னதால். நமது வல்லுனர்கள் மர்ங்களை காக்கவும்  திட்டம் தீட்டினர்.
 டேரானிலிருக்கும் வன ஆராயச்சி கழகத்தின் வல்லுனர்கள் வரவழைக்கபட்டு  வருங்காலத்தில் மரத்தின் வேர்கள் இந்த கட்டிடங்களை சாய்த்துவிடுமா என  ஆராய்ந்து ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய வல்லுனர்களின் திறமைகளையும் செயலாற்றும் திறனையும் கண்டு வியந்த யூனஸ்கோ உலகின் வேறு சில பராம்பரிய சின்னங்களை மீட்டெடுக்க துறையின் உதவியை நாடியிருப்பது  எனபது நமக்கு பெருமையான விஷயம்
-

24/8/12


Singh, Gurkirpal (3443) 
21 Aug (3 days ago)
to me
Dear Ramanan:

Thank you for your acknowledgement, and diligence in putting the substance on paper. You can't imagine the satisfaction I received by noting the appeal the magazine has among the youth. I hope that the news of this achievement would inspire someone somewhere just as it inspired me several years go when I was a youth of impressionable age. This has been my aim all along when I first decided to respond to your request. I very sincerely appreciate your efforts in doing the necessary legwork to probe the connection further . As you might surmise, I know not a word of Tamil, but I would be sure to have my Tamil friends here help me digest the attachments you were kind enough to send. Thanks again.

Regards,
Gurkirpal 

19/8/12


அந்த 7 நிமிடங்கள்..

23/08/12 புதிய தலைமுறை இதழில் எழுதியது


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஏஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவாய் கிரக ஆராய்ச்சி நிலையம். பூமியிலிருந்து பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிவதற்கான மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது இது. 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த கூடத்தில் பல இந்தியர்கள் பணியிலிருக்கின்றனர்.. கடந்த 7 ஆண்டுகள் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவந்தன, முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது “கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   மேற்கூறையில்லாத காரைப்போல் ஒருடன் எடையில் அமைக்கபட்டிருக்கும் இது அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு குட்டி  நடமாடும் லாபரட்டிரி. செய்வாயின் நில பரப்பில் கிடைக்கும் சாம்பிள்களை அதன் உள்ளேயே சோதனையிட்டு முடிவுகளை பூமியிலுள்ள மிஷின் கண்ட்ரோலுக்கு  உடனுக்கு உடன் அனுப்பும் வசதிகளை கொண்டது. 13 கேமிராக்களுடன் 6 சக்கரங்களுடன் இருக்கும் இது தரையிலிருக்கும் கட்டுபாட்டில் இயங்கும்.  8000 விஞ்ஞானிகள், பொறியாளார்களின் 7 ஆண்டு கடின உழைப்பில் உருவான இதற்கான செலவு 13000கோடி ரூபாய்கள். 2009ம் ஆண்டு இதில் ஒரு சின்ன சிப்பில் (சிம்கார்டுபோன்றது)  விரும்புகிறவர்கள் பெயர்களை அனுப்பினால் பதிவு செய்து அனுப்ப போகிறோம் என்ற இவர்களது அறிவிப்புக்கு வந்தகுவிந்த பெயர்கள் ஒரு கோடிக்கும் மேல்.   செவ்வாய்கிரகம்  சந்திரனைவிட மிக தொலைவிலிருப்பதால் அந்த நீண்ட பயணத்தை தாங்கதேவையான பல வசதிகளுடன் அமைக்கபட்டிருந்த இது கடந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தபட்டது. அதன் 8 மாத பயணத்தை மிக கவனமாக தினசரி கண்காணித்துவந்தனர் கண்ட்ரோல் ரூமிலிருந்த ஸ்பெஷலிஸ்ட்கள். மிக கடுமையாக உழைக்கும் இவர்கள் மீடியாவை கவனமாக தவிர்ப்பவர்கள். பயணம் திட்டமிட்டபடி போய்கொண்டிருப்பதில் சந்தோஷமாகயிருந்தாலும்  அதன்  கடைசி கிளைமாக்ஸான   ஆகஸ்ட் 5 தேதிக்காக காத்திருந்தார்கள். அன்று செவ்வாய் கிரகத்தில் இறங்கி விடும் என்பது கணிக்கபட்டிருந்தாலும், காலையிலிருந்தே அனைவருக்கும் பரபரப்பு.. ஆகஸ்ட் 5 என அச்சிடபட்டிருந்த நீலவண்ண டி ஷர்ட் அணிந்தவர்கள் நிரம்பியிருந்த அந்த அறை   டென்ஷனலில் உறைந்திருந்தது. கியூரியாஸிட்டி செவாய்கிரகத்தை மெல்ல நெருங்கியதை ஸ்கிரினில் பார்த்த்தும்  கைதட்டியவர்களை மிஷின் டைரக்டர் கையை உயர்த்தி அமைதிபடுத்தினார்.   அடுத்து சில நிமிடங்களில்  41 அடி விட்ட பெரிய பாரச்சூட் மெல்ல விரிய அதிலிருக்கும் கியூராஸிட்டி  மிதந்து செவ்வாயின் மண்ணை  தொட்டதும். அந்த அறை சந்தோஷத்தின் உச்சத்தில் அதிர்ந்தது. வாழ்த்துக்கள்  அணைப்புகள் முத்தங்கள் என ஒரே ஆரவாரம். இந்த  இறுதிதரையிரங்கல்தான் திட்டத்தின் முக்கிய கட்டம். ஈர்ப்பு சகதி இல்லாத நிலையில் அது கடினமான ஒரு பாறையில் மோதி நொறுங்கிவிட்டால் இத்தனைபேருடைய கடின உழைப்பும் வினாடியில் விணாகிவிடும் தரையில் உட்கார வைத்திருக்கிறார்கள்.   திட்டமிட்டபடி வெற்றிகரமாக  கலம் தரையிறங்கியதை திரையில் பார்த்ததும் நீர் நிறைந்த கண்களுடன்   “  ” “இப்போது நிம்மதியாகயிருக்கிறது. அந்த கடைசி 7 நிமிடங்கள் பயங்கரமானது’’”  வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. “  என்று சொன்னவர் இந்த தரையிறங்கலை மிக கவனமாக  திட்டமிட்டு தந்த வல்லுனர் குர்கிர்பால்சிங்.(Dr.Gurkirpal Singh)   இவர் ஒரு இந்தியர், என்பதை அறிந்து  நாசாவின் உதவியுடன்  உடனடியாக புதிய தலைமுறைக்காக போனில்  தொடர்பு கொண்ட   பேசிய போது...


.  

இந்த வரலாற்று சாதனை வெற்றியில் உஙகள் பணியும் முக்கியமானது என்று அறிகிறோம். மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.  உங்களது பூர்வீகம்,  இளமைக்கால  இந்திய வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.
 லூதியானவில் பிறந்தவன் நான். 1976லில் நான் பள்ளி இறுதியாண்டிலிருந்தபோது முதன் முதலில் நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சி  பணிகளை துவக்கியிருந்தது.வைகிங் என்ற குட்டி விண்கலம் ஏவப்பட்டிருந்தது. அந்த செய்திகளால் பிரமித்துபோயிருந்தேன். தொடர்ந்து படித்த, சேகரித்த தவல்களால் ஆர்வம் அதிகரித்து ஏரோநாட்டிகல் என்ஞ்னியராகி எதிர்காலத்தில் நாசாவில் வேலைக்கு சேர்ந்து செவ்வாய்க்கு போக ஒரு விண்வெளிகலம் டிஸைன் செய்ய வேண்டும் என கனவு காண ஆரம்பித்துவிட்டேன். விரும்பியபடி  சண்டிகர் என்ஞ்னியரிங்கல்லூர்யில் ஏரோநாட்டிக்கில் சீட் கிடைத்தது என் அதிர்ஷ்டம். தொடர்ந்து அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைகழகத்தில் 1984லில் எம்.எஸும், 1988ல் பிஹெச்டியும் முடித்தேன். என் வாழ்க்கைகனவான நாசாவில் 1989ல் பணிசெய்யும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கே பணியிலிருக்கிறேன்.
எந்த மாதிரியானது உங்கள் பணி.?
கலிபோர்னிய மாநிலத்தில் பஸாடினா எனற இடத்தில் செவ்வாய் கிரக் ஆராய்ச்சிகளுக்கென்றே  நாசாவால் துவக்கபட்டது மார்ஸ் சைன்ஸ் லேபரட்டரி (NASA’s Mars Science Laboratory MSL)  அதன் ஒரு அங்கம் நான் பணி செய்யும் ஜெட் ப்ரொப்புல்ஷன் லேபரட்டரி   (Jet Propulsion Laboratory ) ஒரு விண்கலத்தை செலுத்தி அதை அதன் பாதையில் போக செய்ய  கம்ப்யூட்டர்களுகு கட்டளைகளைத் தயாரித்து டிசைன் செய்வது தான் எங்கள் அணியின்முக்கியபணிகலீலியோ,மார்ஸ் பாத்பைண்டர்  காஸினி போன்ற பல பிராஜகெட்களில்  தொடர்ந்து பணியாற்றி இப்போது நாசா நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவராக இருக்கிறேன். என் மாணவ பருவ கனவை நனவாக்கும் வாய்ப்பு  இந்த கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்  கிடைத்திருப்பதால்  இதில் பணியாற்றிகொண்டிருப்பதை எனக்கு கிடைத்தை மிகப்பெரிய  அதிர்ஷ்ட்மாகவே கருதுகிறேன்.
கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்   உங்கள் பஙக்ளிப்பு என்ன எனபதை சுருக்கமாக சொல்ல முடியமா?
ஆகஸ்ட் 5 அது செவாய்யில் தரையிறங்கியதை உலகமே பார்த்தது. மிக சவாலான அந்த விஷ்யத்தை மட்டும்  6 ஆண்டு உழைப்பில் டிசைன் செய்தோம்.  E D L (ENTRY – DESENT- LANDING )  என்று அழைக்கபட்ட இந்த முறையில் தான் கலம் செவ்வாயில் இறங்கியது. இதுவரை முயற்சிக்காத புதிய முறையில் ஒரு பாராசூட்டை பயன்படுத்தி  மிக வேகமாக இறங்கும் கியூரியாஸிட்டி கலத்தின் வேகத்தை கட்டுபடுத்தி அதன் கடைசிகட்டதில் பாராசூட்டிலிருக்கும் ஒரு கிரேன் மூலம்  கலத்தை இறக்கும் முயற்சி அது. இதில் முக முக்கிய சவால்  செவ்வாய் கிரகத்தின் மேல்  ஒரு மைல் உயரத்தில் மணிக்கு 180 மையில் வேகத்தில் இறங்கிகொண்டிருக்கும் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1.7 கீமி வேகத்திற்கு குறைக்க வேண்டும். அதற்கு பாரசூட்டிலிருக்கும் ஒரு குட்டி ராக்கெட்டின் வேகத்தை எதிர்ப்பு விசையில் கட்டுபடுத்தபட வேண்டும். இவை அனைத்தும்  7 நிமிடங்களுக்குள் நடைபெறவேண்டும்.(இதுதான் அந்த 7 நிமிடம்)   எங்களது ஜெ‌பி‌எல் லேப்  தயாரித்து  பல முறை பரிசோதித்துபார்த்த  டிசைனைதான் நாசாவின் மார்ஸ் ஸைன்ஸ் லேபரட்டரி பயன்  இறுதிகட்டத்தில் பயன் படுத்தியிருக்கிறது.
இந்திய விண்வெளிபயண திட்டங்களில் செவாய்க்கு கலம் அனுப்பும் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அதில் நீங்கள்  பணியாற்றும் வாய்ப்பு உண்டா?
இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் வேர்கள் இந்தியாவிலிருப்பதை மறக்க முடியாது. என் நெருங்கிய சொந்த்தங்கள் டெல்லியிலும் சண்டிகரிலும் வாழ்கிறார்கள். வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியா வருகிறேன். இந்திய விண்வெளி திட்டம் நாசாவுடன் இணைந்த திட்டமாகயிருந்தால் ஒரு வாய்ப்பு கிட்டலாம். கிடைத்தால் மிகுந்த மகிழச்சியுடன் செய்வேன்.
ரமணன்

15/8/12


அழுகையில் அசாம்

(புதிய தலைமுறை19/8/12 கவர் ஸ்டோரிக்காக எழுதியது)

 

 

ஒரே இரவில் 400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள். இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன. என்ன நடக்கிறது அசாமில்?
ஒரே இரவில்-400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள்.
இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன.
கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தார்கள்.
இதையடுத்து அசாம் மாநிலத்தின் எல்லாப் பகுதியிலும் ரயில்களும் பஸ்களும்  ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஊர் திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டவர்கள் 25 ஆயிரம் பேருக்குமேல்.
ஊரடங்கு சட்டத்தின்கீழ் பல நகரங்கள்
போர்க்களத்திற்குப் போவதுபோல ராணுவம்  நகரங்களில் வந்திறங்கியது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இத்தனை பெரிய அளவில் ஓர் இனக்கலவரம் நிகழ்ந்ததில்லை. வடகிழக்கு இந்திய மலைப்பகுதிகளில் ஏதோ ஒரு நாள் சிறு நடை நடந்தவர்கள் கூட அவற்றின் சலசலக்கும் நதிகள், மேலே வந்து விழும் சிறு தூறல், மெல்லக் கவியும் மஞ்சு, கம்பீரமான அந்த மலைகள் இவற்றில் தன்னை இழக்காமல் இருக்க முடியாது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள் கூட அந்தப் பகுதியின் வரலாற்றை வாசிக்க நேர்ந்தால் மனதில் ஓர் எழுச்சி பிறக்கும். அந்தப் பகுதியின் முக்கிய மாநிலமான அசாமில் இன்று இனப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
என்ன பிரச்சினை?
ஜூலை 20ம் தேதி கோக்ரஜாஹர் என்ற ஊரிலுள்ள பி.கே. சாலை என்ற நெடுஞ்சாலையில் போரோலாந்து விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேரை, இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். போரோலாந்து விடுதலைப்புலிகளுடன் பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

யார் இந்த விடுதலைப்புலிகள்?

அதைப் புரிந்துகொள்ள அசாமை சற்று ஆழ்ந்து ஊடுருவிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 350 இனக்குழுக்களைச் சேர்ந்த மூன்றரைக் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தப் பகுதியோ, மியான்மர், சீனா, பூடான், வங்கதேசம் என்ற நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியின் எல்லைகளில் 98 சதவிகிதம் இந்த அண்டை நாடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது. 2 சதவிகிதம்தான் இந்தியப் பகுதிகளோடு இருக்கிறது. இந்த எல்லா நாடுகளும் நிலத்தால் பிணைக்கப்பட்டவை. அசாம் மக்கள் அவ்வப்போது சொல்வதுபோல அவர்களுக்கு, ‘இந்தியாவிற்குப் போவதைவிட வங்கதேசத்திற்குப் போவது எளிது’.
350 இனக்குழுக்கள் என்கிற விஷயம் மானுடவியல் ஆராச்சியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால், நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு அது பெரும் தலைவலி. ஏதேனும் ஒரு குழுவை திருப்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்ற ஐந்து குழுக்களின் கோபத்தை சம்பாதித்துவிடும்.

அசாமில் உள்ள இந்த இனக்குழுக்களில் முக்கியமானது போரோ (ஆங்கிலத்தில் Bodo என எழுதப்படும் இந்தக் குழுவின் சரியான உச்சரிப்பு இதுதான்). இனக்குழுவினர் என்றால் ஏதோ தோலாடையும், இறகுத் தொப்பியும் அணிந்த காட்டுவாசிகள் என நினைத்து விடக் கூடாது. இவர்கள் சமவெளியில் வாழ்கிற பழங்குடி மக்கள். தங்களுக்கென தனி மொழி, கலாசாரம்,வழிபாட்டு முறைகள் கொண்ட இனக் குழுவினர் இவர்கள். வங்க மொழி, பர்மீய மொழி இவற்றின் வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதி வந்த இவர்கள், அண்மைக்காலமாக தேவநாகரி வரிவடிவங்களைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். நெல், தேயிலை இவற்றைப் பயிரிடும் முறைகள், பன்றி, கோழி வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு இவற்றை அசாமில் அறிமுகப்படுத்தியவர்களும் இவர்கள்தான்.
அசாம் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் அளவிற்கு உள்ள இந்தக் குழுவினர் பிரம்மபுத்ராவின் வடகரையில், பூட்டான் மலைச்சாரலில் அமைந்துள்ள பகுதிகளில் கணிசமாக வசிக்கிறார்கள். தாங்கள் வசிக்கும் பகுதியை போரோலாந்து என்று அழைக்கிறார்கள். கோக்ரஜாஹர் என்ற நகரம்தான் இந்த போரோலாந்தின் தலைநகர்.
இந்தப் பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தது. உயர்கல்வி நிலையங்கள், வெகு தொலைவிலுள்ள குவாஹாத்தி, ஷில்லாங், திப்ரூகர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன. அவ்வளவு தொலைவு சென்று படித்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. எஸ்.டி. பிரிவின்கீழ் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது என்றாலும் பல பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் அந்த இட ஒதுக்கீட்டினால் அவர்களுக்குப் பலன் கிடைக்கவில்லை. அசாம் மொழி பேசும் மக்களே வேலைகளை ஆக்ரமித்துக் கொள்வதாக இவர்கள் நினைத்தார்கள். அதனால், மாணவர்கள் கொதிப்போடு இருந்தார்கள்.
அவர்களுக்கு முந்திய தலைமுறையினர், 1960களில் தங்களது மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களை, ‘உதயச்சல்என்ற யூனியன் பிரதேசமாகப் பிரிக்கக் கோரி அரசியல் கட்சி அமைத்துப் போராடினர். ஆனால், மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம், இதேபோன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய வேறு ஒரு பழங்குடி மக்களுக்காக அசாமிலிருந்து பிரித்து மேகாலயா என்ற மாநிலத்தை உருவாக்கியது.
ஆத்திரமடைந்த போரோ மக்கள், 1987ம் ஆண்டு, ‘அசாமை இரு சமபாதிகளாகப் பிரிஎன்ற முழக்கத்துடன் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர். உபேந்திரநாத் பிரம்மா என்பவரின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள். போரோ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு 1993ம் ஆண்டு போரோ மக்கள் வாழும் பகுதிகளின் நிர்வாகத்தை, அசாம் மாநிலத்திற்குள்ளேயே தன்னாட்சி உரிமைகள் கொண்ட போரோ டெரிட்டோரியல் கவுன்சில் (BTC) வசம் ஒப்படைத்தது மத்திய அரசு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது பட்டியலின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில் சட்டமன்ற, நிர்வாக, நீதித்துறை அதிகாரங்கள் கொண்டது. மாநில அரசின் சட்டங்களோ, மத்திய அரசின் சட்டங்களோ, இந்த கவுன்சிலின் அனுமதி இல்லாமல் இந்தப் பகுதியில் செல்லாது. மலைவாழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவின்கீழ் முதன் முதலில் இடம் பெற்ற சமவெளிப் பழங்குடியினர் போரோக்கள்தான்.

முரண்பாடுகளால் மோதல்

முரண்-1

நாளடைவில் அகதிகளாக இங்கு வந்து குடியேறிய இஸ்லாமியர்களின் ஜனத்தொகை மெல்ல மெல்லக் கூட ஆரம்பித்து இன்று மாநில ஜனத்தொகையில் அவர்கள் 50 சதவிகிதத்துக்கும் மேல். இவர்களில் பலர் சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள். போரோ மக்கள் அதிகம் வாழும் பகுதியிலும் இவர்களது எண்ணிக்கை போரோ மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது.
இப்போது அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் மூன்றிலொரு பகுதியினர்தான் போரோ மக்கள். மற்றவர்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல். ஆனால் ஆட்சி அதிகாரம், போரோ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிடிசியிடம் இருக்கிறது. இதனால் போரோ இனத்தைச் சேராத மக்களிடம் ஒருவித அச்சமும் சங்கடமும் நிலவுகிறது. அதனால், அவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களை பிடிசியின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதே சமயம் போரோக்கள் தங்களது அதிகாரம் பறி போய்விடுமோ எனப் பதட்டமடைகிறார்கள் .

முரண்-2

இந்தப் பகுதியிலுள்ள நிலங்கள் போரோ இனத்தவருக்கு என  ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் மற்றவர்கள் நிலம் வாங்கத் தடையில்லை. சிறுபான்மை சமூகத்தினர் மெல்ல மெல்ல போரோக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை வாங்க ஆரம்பித்து சில கிராமங்களை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். எந்தக் காரணத்திற்காக பிடிசி உருவாக்கப்பட்டதோ அந்த மூல நோக்கத்தையே இது அர்த்தமற்றதாக்கிவிட்டது என போரோக்கள் குமுறுகிறார்கள்.
நிலம் வாங்குவது தடை செய்யப்படாததால், அண்டை மாவட்டத்திலிருந்து இந்த மாவட்டத்திற்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுக்க அண்டை மாவட்டத்தின் எல்லை மூடி, சீல் வைக்கப்பட வேண்டும் என போரோக்கள் கோருகிறார்கள்.
இந்த மாவட்டங்களில்தான் இப்போது வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அந்தியர் தூண்டுதலா?

இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்களாதேசத்திலிருந்து ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் உதவுகிறார்கள் என்று போரோக்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், அரசு அதை மறுத்து வருகிறது.
இந்தப் பகுதியில் இத்தனை கடுமையான இனக் கலவரம் மூண்டிருப்பது எங்கோ வெகு தொலைவில் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் வேண்டுமானால் பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது பதற்றம் நிறைந்த ஒரு சென்சிட்டிவான பகுதி, அதுவும் அண்டைநாடுகளால் சூழப்பட்டுள்ள பகுதி என்பது அரசுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியும் அது அலட்சியமாக இருந்து விட்டது. காரணம்? வாக்கு வங்கி அரசியல். யார் மீதாவது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அந்த வகுப்பினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோமோ என்ற அச்சம் சார்ந்த அரசியல் நோக்கு. இப்படியே போனால்-
அரசியல்வாதிகள் வாக்குகளைக் காப்பாற்றிக்கொள்ள நாம் தேசத்தையே இழந்து விடும் நாள் அதிக தொலைவில் இல்லை.
 ரமணன்


13/8/12

ஹாத்தி மேரா ஸாத்தி

கல்கி 19/8/12

 

லாரன்ஸ்அந்தோனி ஆப்பரிக்க வனவிலங்குகளின் வாழ்க்கை முறைகளை ஆராயும் ஒரு வனவியல் ஆராயச்சியாளார். வன்விலங்குகளைப்பற்ரி புத்த்கங்கள் எழுதியிருப்பவர்.  20 வருடங்களுக்குமேல் ஆராய்ச்சிபணிகளிலிருப்பதால் ஆப்ரிக்க காடுகளின் பகுதிகளைப்பற்றிய, அதில் வாழும் மிருகங்களைப்பற்றிய அத்தனை தகவல்களும் அத்துபடி.   தனியார் வசமுள்ள தென் ஆப்பிரிக்க  காட்டுபகுதிகளில் ஒன்றான துலா-துலா என்ற இடத்திலிருக்கும் காட்டுபூங்காவின் தலமை வார்டனாக பணி புரிந்து கொண்டு தன் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன் காட்டு யானைகளின் நலனைப் பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து   வந்த ஒரு போனினால் பதறிப்போனார். 500 மைல் தொலைவில் ஒரு தனியார் காட்டுப் பகுதியில் ரவுடித்தனம் செய்யும் ஒரு யானை கூட்டத்தை சுட்டு கொல்ல போகிறார்கள் எனபது தான் அந்த செய்தி.  அவற்றை இடம் மாற்றுங்கள் நான் திருத்த முயற்சிக்கிறேன். சுடவேண்டாம் என இவர் கேட்டு கொண்டததால் 20 ரவுடி யானைகளை இவர் தலையில் கட்டினார்கள். அந்த யானைக்கூட்டதின் தலவி சரியான ரவுடி ராணி. பாதுகாப்பிலிருந்து தப்பிப்பதில் எகஸ்பர்ட்.  தப்பித்து வெளியே வந்தால் மற்ற யானைகளை கெடுத்துவிடும் என்பதால் அந்த யானைகூட்டம் வாழும் பகுதிக்கு மின்வேலியிட்டிருந்தார்கள்.  மின்சார மெயினும் ஜெனரேட்டரும்  இருந்த ரூமை தகர்த்தெரிந்து மின்சாரத்தைத் துண்டித்து  விட்டு தப்பிக்க முயற்சி செய்த முரட்டு புத்திசாலி தலவி. அந்த யானைகூட்டத்துடனே 18 மாதம் வாழ்ந்து அவைகளுடன் பேசி, பேசி

 ஆயுதங்களை கையாளாமல் ஒழுங்காக இல்லாவிட்டால் நாம் சாக வேண்டியதுதான் எனபதை அவைகளுக்கு புரிய வைத்து திருத்தி அவைகளின் ஒரிஜன்ல் இருப்பிடத்தில் கொண்டு விட்டார் லாரன்ஸ்.  இந்த முயற்சியில் தனது  போராட்டங்களைக்கு பின்  அந்த  பெண்யானை தன்னை புரிந்து கொண்டு கட்டுபட்டது பற்றியும் பின் படிப்படியாக சாதுவாகிபோனதைப்பற்றியும்  லாரன்ஸ்  எழுதிய 

 “யானை சொல்லும் ரகசியங்கள்”“ என்ற புத்தகம்  கடந்த இரண்டு ஆண்டுகளின் பெஸ்ட் செல்லர். 6 மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு உலகமெங்கும் இப்போது  விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.  காட்டுவாழ்க்கையைப்பற்றியும் நீர்யானைகள் பற்றியும் இவர்  எழுதிய முந்தைய இரண்டு புத்தகங்களும் பிரபலமானவை. இவர் கடந்தமாதம் எதிர்பாராதவிதமாக இறந்து போனார். உலகமறிந்த வனவியல் ஆராயச்சியாளாரான லாரன்ஸ் மறைவுச்செய்தியை கேட்டு அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின ஒரு யானை கூட்டம   600 மைல் தொலைவில
 தாங்கள் வாழும் காட்டுபகுதியிலிருந்து பனிரெண்டு மணி நேரம் தொடர்ந்து ஒரே வரிசையில் அணிவகுத்து நடந்து  (கூட்டமாக வந்தால் தாக்க வரும் யானை கூட்டம் எனகருதி தாங்கள் விரட்டபட்டுவிடுவோம்  என்பதால் கட்டளையின் கீழ் இயங்கும் யானை வரிசையைப்போல வந்திருக்கின்றன) லாரன்ஸின் வீட்டிற்கு வந்தன அவரால் திருத்தபட்ட  முன்னாள் ரவுடியானைகளின்  கூட்டம். வெகு தொலைவிலிருக்கும் (600மைல்) அவைகளுக்கு இவரது மரணம் எப்படி தெரிந்தது என்பதும் எபபடி அவ்வளவு தூரம் நடுவில் வழி தவறாமல், ஓய்வெடுக்காமல்  சரியாக இவரது வீட்டிற்கு வந்தது எனபதும் மிகப் பெரிய ஆச்சரியம்.. ஆச்சரியத்திற்கு மேலும் ஒரு காரணம் லாரன்ஸ் தற்போது வசிக்கும் இடத்தை இந்த யானைகள் பார்த்தில்லை.  வந்த இடத்தில் லாரன்ஸின் வீட்டில் இரண்டு  நாட்கள் இருந்த பின் தாமாகவே தங்கள்  இருப்பிடத்திற்கு அணிவகுத்து திரும்பிய இந்த யானை கூட்டத்தை டிவி செய்தியாளார்கள் துரத்தி சென்ற போது லாரன்ஸின் மகன் “ நாட்டின் பெரிய தினசரிகள் அஞ்சலி செய்திகளை வெளியிட்டதைவிட பெரிய கெளரமாக இந்த யானை கூட்டம் வந்ததை கருதுகி
றோம். தயவு செய்து எங்கள் விருந்தினர்  கோபபடும்படி எதுவும் செய்யாதீர்கள்  என வேண்டுகோள் விடுத்து  நிறுத்தியிருக்கிறார்.
விலங்குகளில் யானை மிக புத்திசாலி எனபது ஆராய்ச்சிகளால் நிரூபிக்க பட்ட விஷயம். அவைகளுக்கு டெலிபதியும் உண்டோ என்பது இப்போது ஆராயப்படவேண்டிய ஒரு விஷயம்  
-ரமணன்