19/9/12


ரகசிய புனிதபயணம்

இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 10கீமீ தொலைவிலிருக்கிறது  “கெள்ண்ய விஹாரய” என்ற புத்த மடலாயம். இந்த கோவிலில்   கடந்த மாதத்தில் காட்சிக்கு வைக்கபட்டிருந்தை  சுட்டெரிக்கும் வெய்யிலை பொருட்படுத்தாது பல மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பக்தியுடன் தரிசித்தார்கள். இங்கு மட்டுமில்லை அனுராதபுரம் உள்பட 7 நகரகங்களிலும் இதேபோல்  மக்கள் வெள்ளம்.காத்திருந்து  அதை தரிசித்தது.

15/9/12


உலகை கவர்ந்த  “வசந்தமே வருக

கல்கி 23/09/12 
70களில்  அனேகமாக தமிழகத்தின் எல்ல திரையரங்கங்களிலும் படம் துவங்குமுன் திரை விலகும் போது ஒலித்த இசையான  “கம்செப்டர்” டூயூன் இன்றும் பலரின் நினைவில் நிற்கும் இசை.. இந்த ஆண்டு செப்டம்பரில் பொன்விழா காணும் இந்த திரைஇசையை கெளரவிக்க அந்த ஒரிஜினல் டிராக்கை இப்போது டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.

11/9/12


 இன்று செப்டம்பர் 11 

கோபுரங்களும் சாய்வதுண்டு.

உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே  பார்த்தது.. 10 ஆண்டுகள் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும்  அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லைநியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே   துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள்  இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள்ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவ்பத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர்,  மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும்  இப்போது ஒரு நினவு சின்னம்  அங்கே எழுப்பபட்டிருக்கிறது.. 10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ  என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது


இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில்  அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த  அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே  சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும்  கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில்  உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது.

அதில் சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது. இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில்  உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது.  பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
 மியூசியம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின்  மாதிரிகளுடன்  ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருகிறார்கள். மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த  பரிசு பொருட்கள் இப்படி பல. இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.
கடந்த ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே  விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய  ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி  பார்பபவர்களின்  மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும்  நீண்ட தூரத்திலிருந்து வந்து  மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும்நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே  அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும்  பூங்கொத்துக்ளையும்  பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும்  அதன்  உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை  உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.

9/9/12


அந்தமானின் ஆழ்கடலிருந்து எவரஸ்ட் வரை


கல்கி16/09/12
நினைவிருக்கிறதா?  ஆனந்தபுரம் வீடு படத்தில் பார்த்த சுருட்டை தலைமுடியும் பேசும் பெரிய கண்களும் கொண்ட சிறுவன் ஆர்யாவை? சினிமாவை தொடர்ந்து மாடலாக பல விளம்பரங்களில் தோன்றிய இந்த குட்டிபையனுக்கு இப்போது 7 வயதாகிறது. பெற்றோருடன் அந்தமான் தீவில் வசிக்கும் ஆர்யன் இந்த ஆண்டு  பிரமிக்க வைக்கும் சாதனைகளைச்செய்திருக்கிறார்.  இமயமலையில் 17300அடி உயரத்திலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ்கேம்ப்  வரை மலை ஏறியிருக்கிறார். உலகிலேயே இந்த இளம் வயதில் இப்படிஒரு சாதனையை செய்த சிறுவன் இவர்தான்,  நேப்பாள நாட்டின் பகுதியிலிருந்து எவரஸ்ட்க்கு போகும் வழியில் இருக்கும் 17900 அடி உயரத்தில் இருக்கும் கல்பத்தர் என்ற சிகரத்தையும்

3/9/12

ஒவியனின் தோழர்கள்


ஒவியனின் தோழர்கள்

கல்கி090912 இதழ் 

உலகின் எல்லா கலைகளுக்கு முகமும், கலஞர்களுக்கு முகவரியும் தந்து கொண்டிருப்பது புகைப்படங்கள். 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல புதிய தொழில் நுட்பஙகளின் துணையோடு வளர்ந்து கொண்டுவரும் புகைப்பட கலை இன்று மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. புகைப்படம் “தயாரிக்கும்” முறையை கண்டுபிடித்து  உலகுக்கு முதலில் அறிவித்த இரண்டு பிரஞ்ச் கார்களின் கண்டுப்பிடிப்பை  பரிசோதித்து ஏற்று கொண்ட பிரஞ்ச் அகடமி ஆப் சயின்ஸ் அதை அனைவரும் எளிதில் பயன்படுத்த அதை உலகுக்கே பரிசாக வழங்க அரசுக்கு சிபார்சு செய்ததை ஏற்று பிரான்ஸ் அரசு அதைஅறிவித்த  நாள்-1839 ஆகஸ்ட் 19.அதன் நினைவாக ஆண்டுதோறும் அந்த நாள் உலக புகைப்பட தினமாக கொண்டாப் படுகிறது, 12 அடி நீளம்,3அடி அகலத்தில் அறை முழுவதும் அடைத்துகொண்டு நிற்கும் ஆதிகால கேமிரா முதல் 11 கிராம் எடையில்  3 அங்குலத்தில் விரல்களின் இடுக்கில் வைத்துக்கொள்ளக் கூடிய உலகின் சின்னஞ்சிறு கேமிராவரை
  நிறைந்த ஒரு கண்காட்சியை உலக புகைப்பட தினத்திற்காக   சென்னை கஸ்தூரி ரங்கா தெருவிலிருக்கும்  ஆர்ட் ஹவுஸ் காட்சிகூடமஅமைத்திருந்தது
 புகைப்பட கலைஞர் பி.ஸ்ரீ ஸ்ரீராம் துவக்கிவைத்த இந்த கண்காட்சியில் கேமிராவை கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மென் அவர்களுக்கு எழுதிய கடிதமாக
காலத்தால் அழிக்க முடியாத கண்டுபிடிப்பை தந்தவனே !
உன்னால் பயன் பெறும் கோடானு கோடி கலைஞர்கள்
சார்பில்……நன்றியுடன்
என்ற வரிகளுடன் முடியும், கவிதை முகப்பில் வரவேற்கிறது. அந்த கலைக்கூடத்திலிருக்கும் 1000க்கும் மேற்பட்ட  அத்தனைவிதமான கேமிராக்களும் தனிப்பட்ட ஒருவரின் சேகரிப்பு என்ற செய்தியை விட ஆச்சரியமானது,  சேகரித்திருப்பவர்  ஒரு புகைப்படகாரர் இல்லைஎன்பதும் அவர் இவைகளில் படமெடுப்பதில்லை  என்பதும்  தான்.
 சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு கொண்ட ஸ்ரீதர் இன்றைய இந்திய முன்னணி ஒவியர்களில் ஒருவர். 50க்கும் மேற்பட்ட ஒவிய கண்காட்சிகளை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தியிருக்கும் இவரின் பொழுதுபோக்குகளில் ஒன்று மாறுபட்ட பழைய பொருட்களை சேர்ப்பது. மும்பையில் ஒரு ஓவிய கண்காட்சி நடத்தி திரும்பும் முன் ஒரு பழைய பொருள் கடையில் பார்த்த பிரமாண்ட (ஒரு ரூம் சைஸ்) கேமிரா தான் துவக்கம். கடந்த 8 ஆண்டுகளில் 1000 க்குக் மேலாக வளர்ந்துகொண்டிருக்கிறது. பாக்கெட் கடிகாரத்தில், , கைக்கெடிகாரத்தில் மறைத்துவைக்கபட்டிருக்கும் துப்பறியும் கமிராக்கள் ஜேம்ஸ் பாண்ட் காலம் வருவதற்கு முன்பே வந்து மார்கெட்டில் விற்கபட்டிருக்கிறது என்று சொல்லி  அவைகளை காண்பிக்கிறார். உலகின் முதல் நீருக்குள் மூழ்கி படமெடுக்கும் காமிரா, 3டி கேமிரா என அபூர்வங்களை மட்டுமில்லாமல் 72 பிராண்ட்களின் பல மாடல்கேமிராக்களை வைத்திருக்கிறார். 1885லிருந்து 2000வரை வெளிவந்த எல்லா கேமிராகளையும் சேர்ப்பது திட்டம். உலகின் முதல் பெரிய கேமிராவை வைத்திருப்பதால் எது மிக சிறியது?  என்று கேட்பவர்களுக்காக  மினி HD 720 என்ற கேமிராவை இண்டெர்னெட்டில் தேடி அலசி ஆர்டர் செய்திருந்தேன். சரியாக கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாக வந்தது. என்று அதை காட்டுகிறார்.  கேமிராக்களின் அணிவகுப்பின் பின்னணிதிரையில் கேமிராக்களின் முன்நின்றே பழகிய சினிமா நட்சதிரங்கள், மூப்பனார் போன்ற அரசியல் பிரபலங்கள் மாறுதலாக கையில் கேமிராவுடன் வேறுஒருவரைப் படெமெடுக்கும் காட்சியில் ஒவியமாக நிற்கிறார்கள். கண்காட்சியின்  பேக்டிராப்களிலும் , ஆங்காங்கே நிற்கும் அழகான மியூரல்களிலும் (பதுமை ஒவியங்கள்) ஓவியர் ஸ்ரீதரின் மென்மையான கலை வண்ணம் புரிகிறது. வெளிநாட்டில் நடத்தும் ஓவியகண்காட்சிகளில் கிடைக்கும் பணத்தில் இவைகளை வாங்கி சேகரிக்கிறேன்.  என்று சொல்லும் ஸ்ரீதருக்கு  இப்போது நிறைய நண்பர்கள். இவரது ஆஸ்திரிலிய நண்பர் கிரிஸ்ஸிடம் வாங்கிய 9 கேமிராக்களை பொக்கிஷமாக கருதுகிறார்.(அவரிடம் பல ஆயிரகணக்கில் இருக்கிறதாம்)
இன்று ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் கேமிராக்களினால் குழந்தைகள் கூட படமெடுக்குமளவிற்கு எளிதாகிவிட்ட போட்டோகிராபிக்கு பின்னே ஒரு நீண்ட சரித்திரமிருப்பதையும், கேமிராக்களின் பரிமாண வளர்ச்சி எப்படி அந்த துறையையே  இன்று மாற்றிவிட்டது பற்றியும் பள்ளிக்குழந்தைகளுக்கு சொல்ல, ஓர்க்‌ஷாப்கள் நடத்த ”ஸ்மைல் பிளிஸ்” என்ற அமைப்பை துவக்கியிருக்கியிருக்கும் ஸ்ரீதர், இப்போது 8mm 16mm சினி கேமிராக்களை சேகரித்து கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஊட்டியில் நிரந்தர கேமிரா மியூசியம்  அமைக்க போவதாகவும்  அந்த இந்தியாவின் முதல் கேமிரா மியூசியம் உலக தரத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும்வகையில் இருக்கும் என்கிறார்.

.