அமெரிக்காவில்
மெரிலாண்ட் மாநிலம் தலைநகர் வாஷிங்டன் அருகில் இருக்கும் ஒரு சின்ன செல்வாக்குள்ள பணக்கார
மாநிலம் அந்த மாநிலத்தில் ”செகரிட்டரி ஆப் ஸ்டேட்” என்ற அரசின் உயர்ந்த
பதவிவகிக்கும் நடராஜன் ஒரு இந்தியர். தமிழர்.
நம் மாநில காபினெட் அமைச்சருக்கு நிகரான இந்த பதவியில் ஒரு அமெரிக்க மாநிலத்தின் கவர்னரால் நியமிக்கபட்டிருக்கும் முதல் இந்தியரும் இவரே. .
அமெரிக்காவில் மாநிலங்கள்
நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கேற்ப
தங்கள் மாநில வெளியுறவுதுறையை அமைத்துகொள்ளும். மெரிலாண்டில் அயல் நாடுகளுடன்
நல்லுறவை வளர்ப்பது, தொழில் வளர்ச்சிக்கு அவர்கள்
மூலம் உதவுவது, தொழில் நுட்ப பறிமாற்றம், அன்னிய முதலீடுகள செய்வது, , பெறுவது போன்ற
விஷயஙகளை கவனிக்கும் துறையை கவனிப்பவர் இவர். இந்தியா உள்பட 10 நாடுகளை கவனிக்கும்
இவர் மாநில கவர்னர் இந்த நாடுகளுக்கு பயணம்
செய்யும் முன்னதாக சென்று முன் ஆயுத்த பணிகளையும்
செய்பவர்.
பல
புலம்பெயர்ந்த இந்தியர்களைபோல சவாலாக துவங்கி உழைப்பை மட்டுமே நம்பி உயர்ந்தவர் இவர். சென்னை பல்கலைகழகத்தில் பயோ டெக்கில் பிஹெச்டி
முடித்த பின் 1989ல் அமெரிக்கா வந்து. மிக்சிக்கன் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 10 ஆண்டுகளுக்கும்
மேலாக விஞ்ஞானியாக பணியாற்றிய பின் இளம் வயது கனவான பிஸினஸ் செய்ய தன்னை தயார்செய்துகொள்ள
ஏம்பிஏ படித்தவர். . துவக்கிய தொழிலில் கிடைத்தது தோல்விகள் உட்பட பல அனுபவங்கள். பின்னர்,
பல பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்த இவருக்கு நிறைய தொழில் அதிபர்களின் அறிமுகங்களும்.
ஆசிய பசிபிக் நாடுகளின் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராகும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
இதிலும் இந்தியா ரவுண்ட்டேபிள், மேரிலாண்ட்
சேம்பர்ஸ் போன்றவைகளிலும் நிறைய ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்த நேரத்தில் அந்த மாநில
கவர்னர் தேர்தல் வந்தது. அதற்கு போட்டியிட்ட
மார்ட்டின் ஒமேலாவுக்காக(Martin o’malley) ஆதரவு திரட்டியிருக்கிறார். ஏற்கனவே ஒபாமாவின்
மாநில தேர்தல் குழுவில் பணியாற்றிய இவரது அனுபவம் கவர்னர் ஒமேலாவின் வெற்றிக்கும் உதவியிருக்கிறது.
அமெரிக்க அரசியலில் . மக்களால் தேர்ந்தெடுக்க
படும் அமெரிக்க அதிபரும்,மாநில கவர்னர்களும்
நிர்வாகத்தை செம்மையாக நடத்த தகுதியுள்ள ஒழுக்கமான, மக்களுடன் அதிகம் தொடர்புள்ள
திறமையானவர்களை தேர்ந்தெடுத்து தங்களுக்கு உதவ அமைச்சர்களாக நியமித்துகொள்வார்கள்.
தேர்ந்தெடுக்கபட்ட கவர்னர் கடந்த ஆண்டு ராஜனை
வெளியுறவு துறைக்கு இணைச்செயலாளாராக நியமித்திருக்கிறார்.
மெரிலாண்டிலுள்
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்
தொடங்க ஆலோசனைகள் வழங்கி அதுகுறித்து இந்திய தொழில் முனைவோரிடமும் நம் மாநில அரசுகளுடனும்
தொடர்ந்து தொடர்பிலிருக்கும் இவர் மெரிலாண்ண்டில் பல விதமான தொழில்களுக்கு வாய்ப்பிருப்பதாகவும்
,விரும்புவோருக்கு உதவ காத்திருப்பதாகவும் சொல்லுகிறார்.
இவர்
தன் சமீப பயணத்தில் சந்தித்தது ரஜினிகாந்த்தை..
மாநிலமக்கள் சார்பில் கவர்னர் அளித்த வாழ்த்து மடலையும் தங்கள் மாநிலத்திற்கு வருகை
தர அழைப்பும். அளித்த ராஜனிடம் ரஜினி சொன்னது” ஒரு தமிழன் அமெரிக்காவில் மந்திரியாகயிருப்பது
தமிழ் நாட்டுக்கு பெருமையான விஷயம்”
புதுகோட்டை மாவட்டத்திலுள்ள முத்துகாடு என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் மின்சார வசதி இல்லாத காலத்தில் கஷ்டங்களுடன் படித்து வளர்ந்த
ராஜன் தான் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி, இந்தியா வரும்போது தவறாமல் தன் கிராமத்திற்கு வரும் ராஜன் தான் படித்த
பள்ளியில் தேசத் தலைவர்கள் படங்களுக்கிடையே
முன்னாள் மாணவர் என்று என் படமும் மாட்டபட்டிருப்பது அமெரிக்க அரசில் அமைச்சராக இருப்பதை விட பெருமையான
விஷயமாக நினைக்கிறேன்.” என்கிறார்.