10/8/14

ஒரு கொடி பிறக்கிறது


உன்னதமான தியாகங்களுக்கும்,ஆயுதமேந்தாத  புரட்சிக்கும் பின்னர் கிடைத்த நமது சுதந்திரத்தின் முதல் அடையாள சின்னம் நமது தேசீயக்கொடி.இந்த கொடியின் பாரமபரியத்தை கெளரவத்தையும் பாதுகாக்க  தனி சட்டமும். கையாள விதிமுறைகளும் உள்ளன. தேசீயகொடி அரசு அலுவலகங்களில் தினமும், குடியரசு, சுதந்திர தினங்களில் மட்டுமே தனியார் இல்லங்களில்  பறக்கவிடப்டலாம் என்ப்து விதி.  தனியாரும் தங்கள் இல்லத்தில் தினமும் ஏற்றும் வகையில் இதை மாற்றி அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் 2002ல் ஜிண்டால் என்பவர் போட்ட பொதுநல வழக்கில் வழங்கபட்ட தீர்ப்பின் படி இப்போது வீடுகளிலும் தேசியகொடி எற்றலாம். ஆனால் ஏற்றும்முறை, நேரம், ஏற்றி இறக்கும் நேரத்தில் கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகளின் விதிமுறைகளில் மாற்றமில்லை. .
 தேசியகொடி கதர் துணியில் அல்லது கதர் பட்டுதுணியில் மட்டுமே தயாரிக்கபடவேண்டும். பேப்பர், பிளாஸ்டிக், நைலான்களில் தயாரிக்கப்ட்டிருந்தால் அது சட்டபடி தவறு. மூன்றாண்டு சிறையும் அபராதமும் தண்டனை. தேசீயக்கொடி நிர்ணயக்கப்பட்ட அளவுகளில் அனுமதி பெற்றவர்கள் மட்டும்  தான தயாரிக்கலாம். மற்றவர்கள் தயாரித்தால் அது குற்றம்.  அனுமதிக்கபட்ட 9 அளவுகளில்தான் கொடி தயாரிக்கபட வேண்டும். சட்டைபையில் குத்தி கொள்வதிலிருந்து, பாராளுமன்றத்தில் பறக்கும் மிகப்பெரிய கொடி வரை அளவுகள் நிர்ணயக்கபட்டிருக்கிறது. அரசு மரியாதையாக அஞ்சலிக்காக  மரணத்திற்கு பின் சவப்பெபட்டியின் மீது போற்றபடும் கொடியின் அளவுகள் கூட சட்டத்தில்சொல்லபட்டிருக்கிறது. இந்த வகைகொடிகள் கம்பங்களில் ஏற்றமுடியாதபடி வடிவமைக்கப்ட்டிருக்கும், கொடியின் அளவுகள் மட்டுமில்லை  பயன்படுத்த வேண்டிய கதர் துணியின் தரமும்  ஒரு சதுர அங்குலத்தில் எவ்வளவு நூல்இழைகள் என்பதும் கூட நிர்ணயக்கபட்டிருக்கிறது. அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் தேர்ந்தெடுத்த கதர் துணியை பிரோ ஆப் இந்தியன் ஸ்டாண்ட்ஸ் அமைப்புக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் கிடைத்தபின் அதில் வண்ணம் ஏற்றி கொடியாக தைத்த பின்னர் மீண்டும் ஓப்புதலுக்கு அனுப்பவேண்டும். தையலின் வகைகள் கூட நிர்ணயக்கபட்டிருகிறது.  கொடியின் அளவு என்பது ஏற்றுவதற்கு வசதியாக கயிறு நுழைக்க உருவாக்கபட்டிருக்கும் பகுதியை சேர்க்காமல் கணக்கிடப்படும். கயிறு கோர்க்கும் பகுதிக்கு கொடியின் வண்ணங்களிலியே சற்று கனமான வேறு வகை கதர் துணி பயன்படுத்தபடவேண்டும். கதர்,மற்றும் கிராம வாரிய கமிஷனின் கர்நாடக மாநில பிரிவு தான் மத்திய அரசால் கொடி தயாரிக்க அனுமதிக்கபட்டிருக்கும் ஒரே நிறுவனம். தர கட்டுபாடுகளினாலும் ஆண்டு முழுவதும்  விற்பனையில்லாதாலும் கொடிகளின் விலை அதிகமாகியிருக்கிறது. குறைந்த பட்ச விலை 100ருபாய். கடந்த ஆண்டு தேசியக்கொடிகளின் விற்பனை இரண்டு மடங்காக பெருகியிருந்தது உண்மையென்றாலும் சந்தோஷபடமுடியவில்லை. காரணம் விற்றது கதர் கொடிகள் இல்லை சீனாவிலிருந்து திருட்டு தனமாக  சந்தைக்கு வந்த பளபளபான “பட்டு” “கொடிகள்.தான்.  ஏன்?  விலை 30 ரூபாய் தான்.!
சொந்த தேசத்தின் கொடியையே திருட்டு மார்கெட்டில் அன்னிய நாட்டு பொருளாக வாங்குவர்களை நினைத்து வருந்துவதா? அல்லது இவ்வளவு சட்டதிட்டங்கள் இருந்தும் கண்காணிக்காத அதிகாரிகளை நினைத்து வருந்துவதாஎன்று புரியவில்லை.


9/8/14

மாலனின் பேஸ்புக்கிலிருந்து




மல்லிகை மாலை சூட்டி, மங்கல வாத்தியம் முழங்க, மாப்பிள்ளையை மணவறைக்கு அழைத்து வருவது போல் மேடைக்குக் கூட்டிவந்து, சிறந்த எழுத்தாளருக்கான விருதைக் கம்பன் கழகம் நேற்றுமாலை எனக்கு அளித்தது. மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி லட்சுமணன் விருதை அளித்தார்.
எனக்குக் கம்பனை அறிமுகப்படுத்தியவர் பாரதி. உரைநடை எழுதப்பயின்ற காலத்தில் அதற்கான உதவிக் குறிப்புக்களைப் பட்டியலிடும் பாரதியார், ‘கம்பன் கவிதைக்குச் சொல்லியதைப் போலவே” எனக் குறிப்பிட்டு (கம்பன் வரிகளைச் சொல்லாமல்) உரைநடைக்கான நான்கு அம்சங்களை தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் எனப் பட்டியலிடுவார். இதில் ஒழுக்கமாவது தட்டுத் தடையின்றிச் செல்லும் நடை என்றும் விளக்குவார். என் அறிவுக்கு எட்டியவரையில் இன்றளவும் பாரதிக்குக் கம்பன் சொல்லிய இந்த ஃபார்முலாவை என் உரைநடையில் பின்பற்றி வருகிறேன். எனவே இது எனக்கு என் குருவின் குரு -பேராசிரியர்- அளித்த பிரசாதம்
இந்த விருதை நான் எழுதத் துவங்கிய நாளிலிருந்து என்னைச் சிகரங்களை நோக்கி உந்தி வரும் என் அண்ணன் ரமணனுக்கு சமர்ப்பிக்கிறேன்

5/8/14

இந்திய ”ஸ்வாமி”யிடம் ஜோசியம் கேட்ட இங்கிலாந்தின் எதிர்கட்சி தலைவர்’


 நேற்று வெளிவந்த நட்டுவார் சிங் எழுதிய  அவரது வாழ்க்கை வரலாறு பற்றி நிறைய பேசப்படுகிறது. நட்டுவார் சிங் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பவர். அவரது புலிகளுடன் ஒரு வாக்கிங்- (Walking with lions- tales of a diplomatic past )  என்ற புத்தகத்திலிருந்து  இது. கடந்த ஆண்டு மார்க்ரெட் தாச்சர் மரணமடைந்த போது கல்கியில் எழுதியது,.

1975ஆம் ஆண்டு நான் லண்டனில் துணைஹைகமிஷனராக இருந்த போது ஒரு நாள் அப்போது இங்கிலாந்து வந்திருந்த சந்திராஸ்வாமியிடமிருந்து போன் வந்தது. அவரை வந்து சந்திக்க வேண்டினார். “நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் தூதரகத்திற்கு வரலாம் என்று சொல்லிவிட்டேன். காவி உடை, கழுத்தில் பெரிய உத்திராட்ச மாலை நீண்ட தண்டம் சகிதம் மறுநாள் என்னை ஆபிஸில் சந்தித்த அவர்  உரையாடலின்போது பல இந்திய அரசியல் பிரபலங்களின் பெயர்களை உதிர்த்தார். கிளம்பும் முன் அவர் இங்கிலாந்தின் இரண்டு முக்கிய பெயர்களை குறிப்பிட்டு சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டினார். இவரை என்னை சந்திக்க சொன்னவரின் மேல் நான் கொண்டிருந்த நன் மதிப்பால் நேரிடையாக பதில் சொல்லாமல் சமாளித்தேன். (டிப்ளமேட் இல்லையா?) சில நாட்களில் அன்றைய அயலுறவு அமைச்சர் ஒய்,பி, சவாண் அமெரிக்க போகும் வழியில் லண்டன் வந்தார். அவரிடம் சந்திரா ஸ்வாமி பற்றி சொல்லி அவர்  மெளண்ட் பேட்டனையும், எதிர்கட்சி தலைவர் மார்கரெட் தாட்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்லுகிறாரே, செய்யலாமா என்றேன். செய்யுங்களேன், அவர் சந்திப்பினால் பிரச்னை ஒன்றும் இல்லையே என்ற அவரது பதில் எனக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் அளித்தது. நல்ல வேளையாக மெளண்ட்பேட்டன் விடுமுறைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாதால் சந்திப்பு இயலாது என்று சொல்லிவிட்டார். தாச்சர் எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சருக்கு நிகரானவர் என்பதால் நேரில் சந்தித்து  பேசினேன்.. மறுவாரம் 10 நிமிடம் சந்திக்க சம்மதித்தார். இந்த ஆள் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டால் எனக்குதான் பிரச்சனை என பயந்துகொண்டே இருந்தேன். பாரளமன்ற வளாகத்தில் நுழைந்த்திலிருந்தே மற்றவர்கள் கவனத்தை கவர ஏதாவது செய்துகொண்டு என்னை சங்கடபடுத்திக்கொண்டே வந்தார் ஸ்வாமி ”என்னை எதற்காக பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற தாட்சரின் கேள்விக்கு “சீக்கிரமே உங்களுக்கு தெரியும்” என்று ஹிந்தியில் சொன்னதை நான் மொழிபெயர்த்தேன், (ஆசாமிக்கு ஆங்கிலத்தில் ஒரு அட்சரம் தெரியாது) ஒரு பெரிய வெள்ளை பேப்பர் கேட்டார் அதை 5 நீள துண்டுகளாக கிழித்தார். மார்கரெட் தாட்சரிடம் கொடுத்து அதில் 5 கேள்விகள் எழுத சொன்னார். சற்றே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் அவர்  எழுதினார். அவைகளை கசக்கி சின்ன பந்துகள் போல் செய்து தாச்சரிடம் கொடுத்து ஏதாவது ஒன்றை திறந்து பார்க்க சொன்னார் சந்திராஸ்வாமி. அவர் பார்த்துகொண்டிருக்கும்  கேள்வியை என்னிடம் இந்தியில் சொன்னார், நான் மொழிபெயர்த்தேன். சரி என்பது தாட்சரின் கண்ணிலேயே தெரிந்தது.அடுத்தடுத்த கேள்விகளும் சரியாகவே சொன்னார். தயக்கத்திலிருந்து ஆச்சரியமாக மாறியிருந்த தாட்சர் இவர் தெய்வீகசக்தி வாய்ந்தவர் என எண்ண ஆரம்பித்தது  எனக்கு புரிந்தது, சோபாவின் நுனிக்கே வந்து விட்ட தாட்சர் மேலும் சில கேள்விகளை கேட்க பதில்கள் சொன்ன பின்னர்  சட்டென்று எழுந்து சூரியன் அஸ்தமித்துவிட்டான். நான் இனி இன்று பதில் சொல்ல முடியாது என்றார்.  நான் உங்களை எப்போது மீண்டும் சந்திக்கலாம்? என கேட்ட தாச்சருக்கு ”வரும் செவ்வாய்கிழமை 2.30க்கு நட்வார்சிங் வீட்டில்” என்றார். ஆடிபோனேன். என்வீட்டிலா? நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒரு தூதுவர் வீட்டிற்கு வருவதில் பல சம்பிராதயபிரச்னைகள் என்பதால் நான் இதை மொழிபெயர்த்து சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். ”சொல்லிய பின் பாருங்கள்” என்று அவர் சொல்லிகொண்டிருந்த போதே மார்கரெட் என்னவென்று விசாரித்தார்.. நான் சொன்னவுடன், ”மிஸ்டர் ஹைகமிஷனர் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?” எனகேட்டாரே பார்க்கலாம். விடைபெற எழுந்தபோது சடென்று ஒரு தயாத்தை வரவழைத்து  வரும்போது இதை கையில் கட்டிகொண்டு சிவப்பு ஆடை அணிந்து வாருங்கள் என்றார். ஒருபெண் அணீய வேண்டிய ஆடையைபற்றி யெல்லாம் சொல்லுவது இங்கிலாந்தில் அநாகரிகம். எனபதால் சொல்ல மறுத்தேன். மீண்டும் தாட்சர் என்ன என்று கேட்டதனால் தலைகுனிந்துகொண்டே சொன்னேன். தாயத்தை வாங்கிகொண்டார்.
சொன்னபடி செவ்வாய் மதியம் மார்ரெட் தாட்சர் சிவப்பு உடையில் கையில் கட்டிய தயாத்துடன் வந்தார். நிறைய கேள்விகள் கேட்டார், அதில் முக்கியமானது, நான்  நாட்டின் பிரதமர் ஆவேனா? எப்போது? ”நிச்சியம் இன்னும் 4 ஆண்டுகளில் என்ற ஸ்வாமி 9. 11.அல்லது 13 வருடங்கள் பிரதமாக இருப்பீர்கள்” என்றார். ஒரு நாள் பிரதமராவோம் என நம்பிய மார்கெட் தாட்சர் நீண்ட வருடங்களை நம்பவில்லை.
சந்திரா ஸ்வாமி சொன்னது பலித்தது. மார்கரெட் தாட்சர் 1979லிருந்து 1990 வரை  11 வருடம் பிரதமாரகயிருந்தார்.



30/7/14

BRICS அடிதளத்திற்கான முதல் செங்கல்

புதிய தலைமுறை 31/07/14 இதழலில் எழுதியது.




 
 உலக பொருளாதாரத்தில் பிரிக்ச் நாடுகளின் பங்களிப்பு 20 %. இந்த நாடுகளின்  மொத்த அன்னிய் செலாவணியின் கையிருப்பு 16000 டிரில்லியன் அமெரிக்க டாலார்கள். (ஒரு டிரில்லியன் =10,000கோடி)


 “சீனா தூங்கிக்கொண்டே இருக்கட்டும். அது கண்விழித்து விட்டால் உலகையே உலுக்கிவிடும்” என்று மாவீரன் நெப்போலியன் ஒரு முறை சொன்னார்.
ஆனால் சீனா கண்விழித்து விட்டது. நெப்போலியன் சொன்னது போலவே அதன் பொருளாதார வளர்ச்சியை பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்து வருகிறது. இந்த  அசுரத்தனமான  வளர்ச்சிக்கான பல்வேறு காரணங்களை உலகெங்கும் நிபுணர்கள் அலசி ஆராயந்துகொண்டிருக்கின்றனர். அந்த முடிவுகளை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனா ஆச்சரியங்களை தொடர்ந்து அளித்துகொண்டே இருக்கிறது.  கடந்த வாரம் பிரேசிலில் நடந்து முடிந்த பிரிக் நாடுகளின் மாநாட்டில் அறிவிக்க பட்ட முக்கிய முடிவான ”பிரிக் நாடுகளின் கூட்டமைப்பு  உலக வங்கிக்கு நிகராக ஒரு வங்கியை நிறுவப்போகிறது” என்பது அதில் ஒன்று.
2001ல் நியூயார்க் நகரை சேர்ந்த ’கோல்டுமேன் சாக்ஸ்’ என்ற சர்வ தேச பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கை உலகின் பொருளாதார கண்ணோட்த்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில்தான் முதன் முதலில் பிரிக் (BRIC) என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. பயன்படுத்தியவர் அறிக்கையை தயாரித்த ஜிம் ஓ நில்.பிரேசில்.ரஷ்யா,இந்தியா சீனா போன்ற நாடுகளை பொருளாரீதியாக  வகைப்படுத்தி அதன் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துகளை ஒன்று சேர்த்து பிர்க் நாடுகள் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில்.  இந்த நாடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிக வளர்ச்சி அடையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடி ஜப்பான் ஜெர்மனியை முந்திக்கொண்டு இந்தியா 3வது இடத்தை அடையும் எனகுறிப்பிட்டிருந்தார். இந்த நாடுகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி அமெரிக்காவின்  வளர்ச்சியைவிடவும் அதிகமாகிவிடும் என்றும் அந்த அறிக்கை சொல்லியது.
ஒரு முக்கியமான அறிக்கையாக மட்டும் பேசபட்டுகொண்டிருந்த இதற்கு செயல் வடிவம் கொடுக்க (BRIC) என்ற அமைப்பை உருவாக்க்கும் முயற்சியை முதலில் எடுத்தவர் அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன்சிங். 2006ல் நியூயார்க்கில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில்  நாலு நாடுகளுடையே துவங்கிய பேச்சுக்கள்  இரண்டாண்டுகளில் 4 முறைகள்  தொடர்ந்து 2008ல் ரஷ்யாவில் நடந்த  முதல் மாநாட்டில் அமைப்பு  ரீதியாக BRIC உருவானது..2010ல் தென் ஆப்பிரிக்கா இணைந்த்து,. அதனால் BRIC  என்பது BRICS  னதைத் தொடர்ந்து உறுப்பினர் நாடுகளில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடந்த பின்னர்  இம்முறை 6 வது மாநாடு பிரேசிலில்  சமீபத்தில் நடந்தது. அதில் எடுக்க பட்ட ஒரு  முக்கிய முடிவு உலக பொருளாதாரத்தில் ஒரு திருப்பத்தை  ஏற்படுத்தும் என்பது வல்லுனார்களின் கணிப்பு.
 அதுதான் ”பிரிக்கின் வளர்ச்சி வங்கி”.  மொத்த மூதலீடு 100 பில்லியன் டாலர்கள். அவசர நிலை நேர்ந்தால் பயன்படுத்திகொள்ள ஒரு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரிசர்வ் நிதியாக  ஒதுக்க பட்டிருக்கிறது.   முதலீட்டை உறுப்பு நாடுகள் சம அளவில் ஆண்டு தவணைகளாக கொண்டுவரும். கடன் வசதிகள் 2016ல் துவங்கும். தலமை அலுவலகம் சீனாவின் ஷ்யாங்க் நகரில் இயங்கும் வங்கியின்  முதல் தலைவர் இந்தியராக இருப்பார் என்று மாநாட்டில் முடிவு செய்யபட்டது.
 கூட்டாக சில நாடுகள் ஒரு வளர்ச்சி வங்கியை ஏற்படுத்திகொள்வது  அவ்வளவு பெரிய விஷயமா என கேட்கிறீர்களா? ஆம். இது  நாடுகளுக்கிடையே  பரஸ்பரம் கடனுதவிக்காக  உருவாக்கபட்டிருக்கும் ஒரு சதாரண நிதி ஆணையம் மட்டுமில்லை. அதைவிட வலிமையாக இயங்கபோகும் இன்னொரு உலக வங்கி.
 உலகளவில் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த உறுப்பினர் நாடுகளுக்கு கடன் வழங்கும் நிதி ஆணையம் ஐஎம்எஃ(IMF) ஆனால்  உறுப்பு நாடுகளுக்கு கடன் உரிமை பெறும் இருந்தாலும் அது பல விதிமுறைகளுக்கு உட்பட்டது. மேலும் கடன் வசதி அந்த நாடு செலுத்தியிருக்கும்  முதலில் செலுத்தியிருக்கும் மூலதனத்தின் அடிப்படையில் தான் இருக்கும்.  கூடுதல் நிதி பெற வங்கியின் நிபந்தனைகளை ஏற்கவேண்டும் இந்த நிபந்தனைகள் உறுப்பு நாட்டின் பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் கட்டளையாகவே இடப்படும். அதிக மூலதனமிட்டிருப்பதால் இந்த உலக வங்கியில் அமெரிக்க நாட்டின் விருப்பு/வெறுப்புகளே அதன் கட்டளைகளில் பிரதிபலித்து கொண்டிருந்தது. இது கடன் பெறும்  நாடுகளின் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும், அன்னிய செலாவணி இருப்பையும் பாதிக்கும் விஷயமாக இருந்தது. மேலும் அமெரிக்கர்கள் தங்கள்  டாலரை வலுவாக்க இந்த வங்கியை மறைமுகமாக பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்  சுருக்கமாக சொல்லவதானால் அமெரிக்க அண்ணனின் நாட்டமை  அதிகமாக இருந்தது. உலகின் பல நாடுகள் இந்த நிலைக்கு ஒரு மாற்று ஏற்படுத்துவது பற்றி கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து கொண்டிருந்தன. வசதியாக வந்து சேர்ந்த்து பிரிக் நாடுகளுக்கு எழுந்த அதே எண்ணம்.
.  உலக பொருளாதாரத்தில் மெல்ல  பிரிக்நாடுகள் ஒரு வலிமையான இடத்தை  அடைந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு (பெட்டியில் செய்தி படங்கள்)  பிரிக் அமைப்பு மூலம் இந்த  வங்கியை ஏற்படுத்துவதில்  இந்தியா தீவீரமாக இருந்து இன்று வெற்றிபெற்றிருக்கிறது.

IMF வழங்கும் கடன் வசதியை பிரிக் அமைப்பில் சேரும்  எல்லா நாடுகளும் இந்த வங்கியிலிருந்து பெறமுடியும். உறுப்பினாரக வரிசையில் காத்திருப்பது இந்தோனிஷியா,துருக்கி, அர்ஜெண்டைனா ஈரான், நைஜிரியா போன்ற நாடுகள். பிரிக் வங்கி கடனுதவியையும் தாண்டி உறுப்பு நாடுகளிடையே நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனைகளை கணக்கிட்டு இறுதியில் நிகரமாக வரும் தொகையை அந்தந்த நாட்டுக்கு  பட்டுவாடா அல்லது வசூல்  செய்யும் ஒருமுறையையும் கொண்டுவரப்போகிறார்கள். இது முறையாக செயல்பட்டு நிலைத்து நிற்குமானால்  உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறையும். வளரும் நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதார விழ்ச்சிகளினால் பாதிக்காது.
  சீனாவின் வளர்ச்சி வேகத்தை பார்க்கும் போது 2050க்குள் அமெரிக்காவை பின் தள்ளி பொருளாதார உலகின் முதல் நாடாகவிடும் என ஒரு கணிப்பு கூறுகிறது. பிரிக் வளர்ச்சி வங்கி அதன் முதல் படியோ?

28/7/14

கடைசிக்கோடு பேசபட்டிருக்கிறது.

இன்று மதியம் ஒரு போன்என் பெயர் நடராஜன் பள்ளித்தலமையாசிரியர். ஊட்டியிலிருந்து பேசுகிறேன்உங்கள் கடைசிகோடு புத்தகம் படித்து கடந்த இரண்டு நாட்களாக அதன் தாக்கத்தில் இருக்கிறேன். அருமையான  புத்தகம், நேற்று வகுப்பில்  மாணவர்களுக்கு இந்திய மேப்பை காட்டி  அது பற்றி பேசினேன்”  என்றார்எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம்    இருக்க முடியும்?

சந்தோஷமான அதிர்ச்சி. கடந்த வாரம் சன் டிவியில்வாங்க பேசலாம்நிகழ்ச்சியில் ராஜாவும் பாரதிபாஸ்கரும் கடைசிக்கோடு புத்தகத்தை விமர்சித்திருக்கிறார்கள்.  அதைப்பார்த்த உடனே திரு நாடராஜன், ராஜாவை தொடர்பு கொண்டு கவிதாவெளீயிடு என்பதை அறிந்து  பிரசுரத்தினை தொடர்பு கொண்டு புத்தகம் வாங்கி படித்து பின் எனக்கு போன் செய்திருக்கிறார்.  அந்த நிகழ்ச்சிபற்றி எனக்கு தெரியாதால் நான்  அன்று பார்க்கவில்லை. இன்றுதான்  யூ டுபில் பார்த்தேன்
.
  அந்த விமர்சனத்தை    இங்கே கிளிக் செய்து யூ டூயூபில்  பார்க்கலாம்