10/2/14

கங்கை கரை ரகசியங்கள் ...5


புதிதாக பிறக்கும்ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியும் சக்தியும்  தரும் எம். எஸ் அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் சுப்ர பாதத்தில் வரும்  ”வாரணாஸீ குலபதே மம சுப்ரபாதம் “ என்ற  வார்த்தைகள் நினைவிருக்கிறதா?   இந்த வாரணாஸீ  என்பது தான் பிறை வடிவில் கங்கை
வளைந்து ஒடும் , இப்போது படித்துறைகளால் நிரம்பிக்கிடக்கும் கங்கையின் கரைப்பகுதி  ஏன்  இங்கு மட்டும் இவ்வளவு படித்துறைகள்?  என்ற நமது கேள்விக்கு  இதற்கு காசி நகரின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று பதில் சொல்லபட்டிருந்தது.
பல கோவில்களை உள்ளடக்கிய வட்டவடிவமாக ஒரு சக்தி இயந்திரமாக உருவாக்கபட்டிருப்பது காசி நகரம்.  மூன்று முக்கிய சிவன்கோவில்கள் ஒரு நேர்கோட்டிலும் சக்தி வளையமாக நிறுவபட்ட மற்ற கோவில்ககளை இணைக்கும் ஆரமாக சிறிய கல்பாவிய நடைபாதைகள். அமைக்க பட்டிருந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் இந்த வாளாகத்திலிருந்த 468 கோவில்களிலும் ஒரே நேரத்தில் சப்தரிஷி பூஜைகள் நடந்திருக்கின்றன. கங்கைநதி  காசிநகருக்கு வெளியே   ஒரு வட்டத்தின் பரிதியைப்போல சற்றே வளைந்து ஒடுகிறது   கங்கையில்  நீராடியபின் எளிதாக பக்தர்கள் விரும்பும் கோவில்களுக்கு நேரடியாக போய் வழிபடும் வகையில் இந்த படித்துறைகள். அமைக்கபட்டிருக்கின. இன்றும்  எந்த படித்துறையிலிருந்து நேராக நடந்தாலும் ஒரு கோவிலுக்கு போகும் பாதை வருகிறது.  இன்று சிறு சந்துகளாகிவிட்ட அந்த பாதைகள் தான் சக்தி வளையத்தின் ஆரங்கள்..   கோவில்களில் பூஜிப்பவர்களை தவிர மற்றவர்கள் வசிக்க அனுமதியில்லாத.  அந்தபுனிதமான பாதைகள் தான் காலசக்கர சுழற்சியில் பலரின் வாழ்விடமாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கான வியாபாரஸ்தல்மாகவும் நிறைந்து ”கல்லி” களாகியிருக்கின்றன.  இந்த செய்தியை அறிந்ததும் காசியின் குறுகிய சந்துகளின்  புனிதமான அகலமும்  அதை  நாசமாக்கிய நம்மவர்களின் குறுகிய மனமும் புரிந்தது.   


பயண குழுவிலிருந்த ஒரு நண்பர் தான் கங்கையில் குளிக்க ஒரு நல்ல இடத்தை கண்டுபிடித்திருப்பதாகவும் விரும்புகிறவர்களை அழைத்து போவதாகவும் சொன்னார்.   200 பேர் கொண்ட ஈஷாவின்  இந்த பயணத்தில் இரண்டாம் நாளே புதிய நட்பு வட்டங்கள் சிறு குழுக்களாக உருவாகியிருந்தது.வெளிநாட்டவர்கள்,பிறமாநிலத்தவர் என்று பலரை இந்த பயணம் இணைக்கிறது அதனால் எங்குபோனாலும் ஒரு சின்ன டீம்தான்.  காலை உணவு முடிந்ததும் கங்கைக்கு போகும் ஒரு குழுவுடன் போகிறோம். காசியில்  இயங்கும் சைக்கிள் ரிக்‌ஷா  சிஸ்டம் மிக பிரமாதமாக இருக்கிறது.. பஸ்களில் வரும் பெரிய பயணகுழுக்களுக்கு  தேவையான அதிக ரிக்‌ஷாகளை ஏற்பாடு செய்ய ஒரு குருப் லீடர். நிர்ணயக்கபட்ட கட்டணத்தை அவரிடம் மொத்தமாக செலுத்த வேண்டும். அவர் விசில் கொடுத்தால் தெருவில் போகும் காலி ரிக்‌ஷாக்கள் அணிவகுத்து வந்து நிற்கிறது. ஒரே எண் எழுதிய இரண்டு சீட்டு நம்மிடம் தருகிறார்கள். இறங்கும் இடத்தில் அதில் ஒன்றை கொடுத்தால் போதும்.  பேரம் பணம் எதுமில்லை.. திரும்பும் பயணத்திற்கு நம்மிடமுள்ள அடுத்த சீட்டை பயன்படுத்திகொள்ள வேண்டும். எந்த ரிக்‌ஷாவிலும் பயணிக்கலாம்.
அந்த ரிக்‌ஷாகாரர் இதுபோல் சேரும் சீட்டுகளை மாலையில் கொடுத்து பணம் வாங்கிகொள்கிறார் இந்த பீரிபெய்ட் முறையினால்  மொழிப்பிரச்னை, கட்டணபேரம், சரியான இடத்துக்குதான் போகிறோமா என்ற பயம் என்பதெல்லாம் இல்லை 
கங்கையின் நடுவில் சில இடங்களில் மண்மேடிட்டு திட்டுகள் உருவாகியிருக்கிறது.  காலை 10-11 மணிக்கு அங்கு நீரின் மட்டம் சற்று குறைந்திருக்கிறது, படகுகாரர் அப்படி ஒரிடத்திற்கு நம்மை அழைத்து செல்லுகிறார். தெளிவான கங்கை, அதிக ஆழாமில்லாமல் காலடியில் மணல்.ஆனந்தமான குளியல்.நதிக்குளியல் சுகமான இதமான அனுபவம், எத்தனையோ நதிகளில் குளித்திருந்தாலும் கங்கை குளியல் சர்வ நிச்சியமாக சிலிர்ப்பை கொடுக்கும் விஷயம். கங்கைத்தாய் அனபுடன் தன் மெல்லிய அலைகளால் தொடர்ந்து நிராடச்சொல்லி அழைத்தாலும் படகுக்காரின் அழைப்பு முக்கியமாக பட்டது. நடுகங்கையில் நம்மை விட்டுவிட்டு அவர் போய்விட்டால் நம் கதி என்ன ஆவது?  மெல்ல படகில் கரை திரும்பும் போது கண்ணில் பட்ட  சிவப்பு வெள்ளை  வண்ணகளில் பட்டையிட்ட கோவில் சுவர்களுடனும் தமிழகபாணி கோபுர முகப்புகளுடன் ஒரு படித்துறை. அது கேதார் படித்துறை என்றும் உள்ளே ஜோதிர் லிங்கமான ராமேஸ்வரத்தின் ராமநாதஸ்வாமி   என்றும் அதற்கு போனால் ராமேஸ்வரம் போக வேண்டாம் என்றும் படகுகாரர் சொன்னார். அதன் அருகில் படகை நிறுத்த சொல்லி இறங்குகிறோம்.

நிறைய படிகளுடன் மிக உயரத்தில் இருக்கும் அதன் முன்னே ஒரு சின்ன குளம் கட்டியிருக்கிறார்கள். கண்ணெதிரே, கால் அடியில் கங்கை இருக்க எதற்கு குளம்? ராமேஸ்வரம் இல்லையா தீர்த்த குண்டம் அமைத்திருக்கிறார்கள். கோவில் வெளிப்புற சுவர் முழுவதும் சலவைகற்களில் தமிழ் பாடல்கள் யார் எழுதியது என்றவிபரம் இல்லை. சிலபுரியவும் இல்லை. பழுப்பேறி, மங்கிய அதன் வண்ணம்  வயதை சொல்லியது. உள்ளே கோவில் முகப்புக்கு துளியும் சம்பந்தமிலாமல் வடநாட்டு கோவிலின் சாயலில் பளபளப்பான தரை. மற்ற கோவில்களைபோல கூட்டம் இல்லாதால் அர்ச்சகரும் இல்லை. தரிசித்தபின்னர் படித்துறையிலிருந்து காசிநகர வீதிக்கு வருகிறோம்  மூன்று நாட்களில் நகர வீதிகள் பழகிபோயிருந்தன.  ஷாப்பிங், மற்ற கோவில்களைப் பார்க்க என குழு பிரிகிறது. ”நல்ல தமிழ் நாட்டு சாப்பாடு சாப்பிட வருகிரீர்களா? என ஒரு நண்பர் கேட்டவுடன் நதியில் குளித்திருந்தனால் வாயை திறப்பதற்கு முன்னதாகவே வயிறு ”ஓ யெஸ்” என்று  பதில் சொல்லியது. சிலர் உலகின் எந்த முலையிலும் நம் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்பதை கண்டு பிடித்துவிடுவார்கள்  சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறியதும் ”நாட்கோட் சட்டர்” என்றார். ஏதோ குஜராத்தி ரெஸ்டோரண்ட் என நினைத்த நமக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நண்பர் அழைத்து சென்றது  காசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு.  காசியின் எல்லா பிரதான இடங்களைபோல்  நடந்து மட்டுமே போகக்கூடிய ஒரு சிறிய சந்தில்
செட்டிநாட்டு பாணி வீட்டின் முகப்புடன் இருக்கும் இந்த சத்திரம் காசிக்கு வரும் பயணிகளுக்கு உதவுவதற்காகவே 1863ல் உருவாக்க பட்ட  ஒரு அறக்கட்டளை. என்பதை  அன்றைய தமிழிலில் தெரிவிக்கும் கல்வெட்டு. வரவேற்கிறது. மிக அழகாக நிர்வகிக்கிறார்கள். சுத்தமான அறைகள் 100க்கு மேல் இருக்கிறது, கட்டணம் நம்ம முடியாத ஒர் அதிசயம். நிறைய பணியாட்கள். சாப்பாடும் அதை போடுவர்களின் அன்பான சேவையும் அன் லிமிட்டெட்,  விலை? நம்ம ஊரில் ஹோடல்களின் இரண்டு காபியை விட குறைவு!  காலையில் 8 மணிக்குள் கூப்பன் வாங்கிவிட வேண்டும்.  அங்கு தங்கியிருப்பவர் நமக்காக வாங்கிவைத்திருந்தார்.
சுத்தமான அறைகள். நவீன கிச்சன், லிப்ட் என சுற்றி காட்டிய  மனேஜர் குழுவாக வருபவர்கள் மண்டபத்தில் தங்கினால் இலவசம் படுக்க ஜமுக்காளம் தலயணை தருகிறோம். என்று சொல்லி ஆச்சரியத்தில் ஆழத்தினார். எவரும் வரலாம். சிபார்சு கடிதம் எல்லாம் வேண்டாம் முன்பதிவு செய்தால் எமாற்றத்தை  தவிர்க்கலாம். இதைப்போல வசதி கயா, அலகாபாத் அயோத்தியா, நாஸிக்  நகரங்களிலும் இருக்கிறதாம். கல்கியில் எழுதுங்கள் என்றார். எழுதிவிட்டோம்.  
மகா கவி பாரதியார் காசியில் சில காலம் வாழந்திருக்கிறார். அவர் வாழ்ந்த இடத்தில்   ஒரு சிலை இருப்பதை பற்றி படித்திருப்பதால் அது எங்கே இருக்கிறது? என்று கடந்த இரண்டுநாட்களாக விசாரித்துகொண்டிருந்த நாம் அதை இவர்களிடமும் கேட்க, சந்துகளின் வழியே எளிதாக  அங்கே போக ஒரு டெக்னிக்கைச்சொன்னார்கள்.. சந்துகளில் தரையில் பாவியிருக்கும் கற்கள் ஒரேமாதிரி டிசையினில் இருக்கிறதா? எனறு கவனித்து கொள்ளுங்கள். திருப்பங்கள் இருந்தாலும் டிசைன் ஒரே மாதிரியா இருந்தால் நீங்கள் திசை மாறாமல் போகிறீர்கள் என்று அர்த்தம். வழியை தவறவிட வாய்ப்பில்லை. என்றார். சூப்பர் டெக்னிக், இதையும் காசியின் பெருமையாக அரசின் டூரிஸம் விளம்பரபடுத்தலாம்.  அதிகம் பேர் அறியாத அந்த சிலை இருக்கும் இடத்தை அடைந்த நமக்கு அதிர்ச்சி.
ஒரு தெருவின் துவக்கத்தில் நன்கொடையாக பெறபட்ட மனையில் சிலையை நிறுவி அதற்கு காம்பெண்ட் சுவரும் கதவும் இட்டிருக்கிறார்கள். ஆனால் அதன் எதிரே பகலில் லஸ்ஸியும் இரவில் பாலும் விற்கும் ஒரு நடைபாதை கடைகாரர் தன் பாத்திரங்களை கழுவி கவுத்தும் இடமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.  அசலான ஆக்ரமிப்பு.  ”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”  என்று புலம்பவதை தவிர வேறு வழியில்லை நமக்கு. 
காசிநகரின் வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த நகரில் தான் எத்தனை விதமான சக்திகளின் வெளிப்பாடு?  உலகிற்கு பூஜ்யத்தின் மகிமையை சொன்ன ஆர்யபட்டாவிலிருந்து  எல்லாம் இந்த நகரில் பிறந்தவை. ஆயுர்வேதம் காசியில் எழுதப்பட்டிருக்கிறது. யோக அறிவியலின் தந்தையான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை இங்கிருந்தான் படைத்திருக்கிறார். துளசிதாசரின் ராம சரிதம் மானஸம் உருவானதும் இங்கே தான். நம் தலமுறையில் அறிந்த இசை மேதைகளான சித்தார் பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசை மேதை உஸ்ஸாத் பிஸ்மிலாகான் ஆகியோர்களை தந்ததும் இந்த புண்ணிய நகர் தான். இப்படி இசை, கலை, அறிவியல் போன்ற பல விஷயங்களை தந்த இந்த நகரில் நாம் இன்று நாமும் நடந்துகொண்டிருக்கிறோம்  என்ற எண்ணமே நம்மை பெருமை கொள்ளசெய்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல எந்த ஒரு இந்தியனும் தனியே நடப்பதில்லை. ஐந்தாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும் கலாசாரமும் விழுமியமும் இந்தியாவின் பொக்கிஷமாக அவ்னோடு கூட நடக்கின்றன.
தெருக்களின் சந்திப்பில் ஒரு லஸ்ஸி கடை என்பது பார்த்ததும் தெரிகிறது. போர்டு வித்தியாசமான மொழியில் இருப்பதை பார்த்து கேட்டபோது அது கொரியன் மொழி.  எனக்குஅந்த மொழி தெரியாது. வந்த சாப்பிட்ட ஒரு கொரியாகாரர் எழுதி கொடுத்தது. அதனால் நிறைய கொரியர்கள் அங்கே வருகிறார்கள் என்று அவர்களுக்காக தயாரிக்க பட்ட மெனுகார்டையே காட்டுகிறார். இங்கு கொரியர்கள்மட்டுமில்லை,  சீனர்கள் ஜப்பானியர், தாய்லாந்தினர், மியாமரினர் எல்லோரையும் காசியில் பார்க்கலாம். புத்த மதத்தினருக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதல்லவா? ரம்மியமான இந்த கங்கைக்கரை சொல்லும் பல ரகசியங்களில்  சித்தார்த்தனை புத்தனாக்க வழிகாட்டியதும் ஒன்று. அவன் தன் போதனைகளைத் துவக்கி, வாழ்ந்த அருகிலிருக்கும் புத்த தேசத்திற்கு நாளை போகப்போகிறோம்



சத்குரு எல்லா நதிகளும்  நாம் வழிபடவேண்டிய புனிதமானவைகள்தானே? அப்படியானால் கங்கை மட்டும் எந்தவகையில் உயர்ந்தது?

இப்போ நீங்க ஒரு கிளாஸ்லே தண்ணீர் எடுத்து  என் கையில் தந்தால் ஒரு நிமிஷத்தில் அதனுடைய அதிர்வை மாத்தி கொடுத்திடுவேன், நீங்க அதை ஆன்மிக பலம் அப்படின்னு சொல்லிடுவிங்க.  ஆனா இதையெல்லாம் இப்போ  விஞ்ஞான பூர்வமாக நீருபித்திருக்கிறார்கள். நீரில் பாசிட்டிவ், நெகட்டிவ் எனஜர்ஜிக்களை பாய்ச்சலாம்., சதா தண்ணீரை ஹெவி வாட்டராக மாற்றமுடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம்ம ஆட்கள் நமக்கு இதை சொல்லிட்டு போயிருக்காங்க. உங்கள் பாட்டி, அம்மா சொல்லியிருப்பாங்களே. தாமிரப் பாத்திரத்தில் வைத்த தண்ணியை  மறுநாள் குடித்தால் சக்தி என்று. சாதாரண தண்ணிரை  தீர்த்தமாக மாற்றும் ஆன்மீக ரசாயனம் இயற்கையாகவே அமைந்த ஒன்று. இந்த கங்கை ஹிமாலய பர்வதத்திலிருந்து ஒடிவருது. வரும்போது  அதன் வழியில் சேர்த்துகொள்ளும் சக்தி அதிர்வு எல்லாம் இந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது. அந்த உணர்வு நமக்கு அதில் குளிக்கும்போது முக்தியை நோக்கி தள்ளுதுன்னு முன்னாடி சொன்னாங்க. இப்போ விஞ்ஞான பூர்வ்மாக ஒரு இம்பாக்ட் இருக்குன்னு சொல்லுறாங்க. முக்தியோ இல்லையோ நிச்சியமாக நமக்கு நன்மை செய்யும் ஒரு சக்தி.   ஒரு நதியில் இயற்கையின்  சக்தி அதிர்வுகள் இணைந்தால் தான் அது தீர்த்தம். இப்போது ஒரு குளத்தை கட்டி அதை தீர்த்தம் என்கிறார்கள் அதுவியபாரம்.

காசி கங்கை கரையில் வசதியாக நிம்மதியாக குளிக்க ஈஷா எதாவது செய்ய முடியாதா?
நாம் எல்லோரும் சுத்தமாக இருக்கவேண்டும் என விருபுகிறோம். ஆனால் அதை யாராவது செய்துவைக்க வேண்டும் என நினைக்கிறோம் அதுதான் பிரச்னையே. மாசற்ற சுழலை உருவாக்க ஈஷாவின் முயற்சிகளை அறிந்திருப்பீர்கள். அதன் ஒரு பகுதியாக காசியிலும் ஒரு தீர்த்தகட்டத்தை தேர்ந்தெத்து ”நிர்மல் கங்காவாக” பராமரிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு  உள்ளூர் நிர்வாகம், அரசாங்கம், அங்குள்ள கடைக்கார்கள் அரசியல்வாதிகள் என பலரின்  ஆதரவு அதிகம் தேவையாக இருக்கிறது. முயற்சிகளை துவக்கியிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் நீங்கள் வந்து நீராடலாம். 




8/2/14

தாயகம் கடந்த தமிழ்க் காதல்”




தமிழ்  இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் கங்காரு தன் குட்டியை தூக்கிசெல்வது போல தங்கள் மொழியை கொண்டுசென்றார்கள். அதற்கு காரணம் அவர்கள்  மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் போற்றியதுதான். . அதனால் தான் எங்கு சென்றாலும் அங்கு  . தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறார்கள்.  இன்று கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை அதிவேகமாக மாறிவரும் இன்றைய உலகின் தேவைக்கேற்ப படைப்பிலக்கியங்களையும் தாண்டி ஊடகம், தொழில்நுட்பம்,  கல்வி போன்றவைகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் அரும் பணியை  உலகெங்கும் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி, பரவி நிற்கிற அவர்களில் முன்னணியில் இருப்பவர்களை அழைத்து “ தாயகம் கடந்த தமிழ்” என்ற உலக தமிழ் எழுத்தாளார்கள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது கோவையிலுள்ள தமிழ் பண்பாட்டு மையம்.
 தமிழ்மொழி, தமிழர்பண்பாடு,கலைகள்வளர்ச்சி மேம்பாட்டுக்கென்று இந்த மையத்தைஉருவாக்கியிருப்பவர். டாக்டர் நல்ல பழனிசாமி. கோவை மெடிகல் சென்டர் என்ற பல்துறை மருத்துவ மனையின் தலைவர். இவர் என்.ஜி பி என்ற கல்விகுழுமத்தின் தலைவரும் கூட.(படம்-அவசியம்)  தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர்.  கருத்தரங்கில் பங்கேற்றவர்களை வரவேற்பதிலிருந்து வழியனுப்புவது வரை  கொங்குநாட்டுக்கே உரிய  பாங்குடன் ஒரு பெரும் தொண்டர் படையுடன் முன்நின்று செய்தவர்
. கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மாலன். இம்மாதிரி மாநாடுகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் புத்தக்கமாக வெளிவர சிலகாலம் ஆகும். ஆனால் இங்கு பதிவு செய்து பங்கேற்க வந்தவர்களுக்கு கருத்தரங்கு துவங்கும் முன்னரே  அந்த புத்தகம்  இலவசமாக வழங்கபட்டது. அந்த அளவிற்கு எல்லா ஏற்பாடுகளும் கச்சிதம். 

 சிறப்பாக நடைபெற்ற துவக்க விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பரமணியம்  துவக்கி வைத்த இந்த கருத்தரங்கம் இரண்டு நாள்  7 அமர்வுகளாக  7 வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளார்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில்  கலந்துகொண்ட பார்வையாளார்கள் 500க்கும் மேல். கே எம் சி யின் ஹைடெக் அரங்கம் நிறைந்து வழிந்ததால் மற்றொரு அரங்கத்தில் வீடியோகாட்சியாக ஒளிபரப்பினார்கள்.   பேசபட்ட விஷயங்களும், பேச்சாளர்களின் ஆற்றலும்  நேரகட்டுபாட்டை  நிர்வகித்த அமர்வுகளின் தலைவர்களின் கண்டிப்பும் பார்வையாளர்களை கட்டிபோட்ட விஷயங்கள்.  கருத்தரங்குக்கு வந்திருந்தவர்களில் சிலரின் அறிமுகமும், அவர்களின் பேச்சுகளிலிருந்து சில துளிகளும். 
சீனா ரேடியோ இண்டெர்நேஷனல் (CRI) என்பது சீன அரசு வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் இந்த நிலையம் இப்போது 60  நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளில் நிகழச்சிகளை வழங்குகிறது. இந்திய மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கும். இதன் தமிழ் ஒலிபரப்பு மிகவும் பிரபலம். 25000 க்கும்மேல் பதிவு செய்து கொண்ட நேயர்கள் இருக்கிறார்கள். 150 நேயர் மன்றங்களும் செயல்பட்டுவருகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம்  தமிழ் நேயர் கடிதங்கள் வருகின்றன. இது சீன வானொலிக்கு வரும் கடித எண்ணிக்கையில் முதலிடம். இந்த நிலையத்தின் தலைவர்  செல்வி சாவ்சியாங்.(ZHAO JIANG) சீனத் தகவல் தொடர்பு பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர். இரண்டு தமிழ் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
கலைமகள் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கும் இவர் “தமிழ் கூறும் ஊடக உலகம்” அமர்வில் கட்டுரை வாசித்தார்.  உச்சரிப்பு பிழையின்றி அழகான தமிழில் பேசும் இவரைப்போலவே இவருடன் வந்திருந்த உதவியாளர்கள் செல்வி ஈஸ்வரி. செல்வி இலக்கியா வும் பேசுகின்றனர்.  தனது உரையில் ”எங்களது பல தமிழ் நிகழ்ச்சிகளுடன் சீனாவில் வாழும் தமிழர்கள் என்ற பகுதியில் சீனாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள்,  எங்கள் நாட்டிற்கு வருகைதரும் தமிழ் பிரமுகர்களையும் அறிமுகப்படுத்துகிறோம்   இந்த சிறப்பு நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  இதன் மூலம் தமிழர் பார்வையில் பிற தமிழர்களுக்கு சீனாவை அறிமுகபடுத்துகிறோம்.
நிலையத்தின் தமிழ் பகுதியில் பணிசெய்யும் 18 பேரும் தமிழ் அறிந்த சீனர்கள். இப்போது மொபைல் போனில் தமிழில் எங்கள் நிகழ்ச்சி குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது  தேன் மதுர தமிழோசை உலகெங்கும் பரவ எங்கள் வானொலியும் உதவுகிறது என்றார்.. உண்மைதான். கருத்தரங்கு நிகழ்ச்சிகளை அவ்வப்போது  பார்வையாளர்களின் பேட்டிகளுடன் இவரது உதவியாளர்கள்  சீன நிலையத்துக்கு அனுப்பிகொண்டிருந்தார்கள்.   அவர்கள் நல்ல தமிழில்  கேள்விகள் கேட்க நம்மவர்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இன்று உலகெங்கும்  உள்ள தமிழர்கள் கணனியில்  தமிழ் எழுத பயன் படுத்தும் முரசு அஞ்சல் செயலியை உருவாக்கியவர் திரு முத்து நெடுமாறன்.(படம்)  கணனி தொழில் நுட்பத்தில் 25 ஆண்டு அனுபவம் உள்ள இவர் மலேசியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலமை நிர்வாக அதிகாரி.  இவருடைய படைப்புகள் சீங்கப்பூர் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சுகளினால் ஆதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன.  அண்மையில் ஆப்பிளின் மெக்கிண்டாஷ் கணனியிலும் ஐபோனிலும் பயன்படுத்தபடும் இந்திய, இந்தோ சீன மொழிகளுக்கான எழுத்துகளையும் உருவாக்கியவர் இவர்.  தொழில் நுட்பம் தரும் வாய்ப்புகள் என்ற அமர்வில் ”கைபேசியில் தமிழ்”  பற்றி உரையாற்றினார்.




இந்தியாவில் ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இருந்தாலும், கணனி வாங்கக்கூடிய வசதி உள்ளவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததாலும் இந்திய மொழிகளை கணனியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எந்த கணனி நிறுவனத்திற்கும் ஏற்பட்டதில்லை. மேலும் சீனா, ஜப்பான் போல இந்திய மொழிகளின் தேவையை கட்டாயப்படுத்தும் சட்டங்களும் இல்லை. இதனால் ஜெர்மன். பிரஞ்சு, இத்தாலி,கொரியா, அரபு மொழிகள் போல இந்திய மொழிகள் கணனியில் முதலில் சேர்க்க படவில்லை. மிகத் தமாதமாக 2000 ஆண்டிலேயே இது முடிந்தது.  இந்த நிலை இப்போது வெகுவேகமாக பரவும் கையடக்க கருவிகளான செல்போன், ஐபேட், டேப் போன்றவைகளிலும் நேர்ந்துவிடக்கூடாது என பாடுபடுகிறோம் நாங்கள்.   இந்த முயற்சிகளினால் தான் இன்று ஆப்பிள் நிருவன தயாரிப்புகளிலும், பல ஸ்மார்ட் போன்களிலும் தமிழை உள்ளிடமுடிகிறது. செல்லினம் என்ற செயலி ஐபோனில் தமிழ் எழுதுவதை எளிமைப்படுத்தியது.  இது தமிழ் உலகிற்கு மலேசியா தந்த கொடை. பயணிகள் இருந்தால் தான் பயணம் தொடரும். அதுபோல தொழில்நுட்ப உலகில் பயனர் இருந்தால் தான் புதியன பிறக்கும்.  தமிழ் மொழியை தொழில்நுட்ப உலகில்மேலோங்கி நிற்க செய்வதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. தமிழை ஆங்கிலத்தை போல இயல்பாக இந்த கருவிகளில்  அதிகமாக பயன்படுத்த பழக வேண்டும்.
      

 அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு முறையாக தமிழ் கற்பிக்க கலிபோனியா தமிழ்க்கழகம் என்ற அமைப்பை நிறுவி 1998ல் துவங்கியவர் திருமதி வெற்றிச் செல்வி.(படம்) 13 குழந்தைகளுடன்  துவங்கிய இது இன்று   லண்டன், துபாய் போன்ற உலகின் பிற பகுதிகளுக்கும் பரவி இன்று 4000 மாணவர்களுடனும் 840 ஆசிரியர்களுடனும்   ”அனைத்துலக தமிழ் கழகமாக” மாறி  வேருன்யிருக்கிறது.   நேரிடையாகவும்,  அங்கீகரிக்க பட்ட பள்ளிகளின் மூலம்  தமிழ் மொழி பேச, எழுத கற்பிக்கிறது. புலம்பெயர்ந்து வாழம் குழந்தைகளுக்கு ஏற்ப பாடதிட்டத்தை  வகுத்து இந்த  அமைப்பு தமிழ் கற்பிக்கிறது. அமெரிக்க நகரங்களிலுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் வார இறுதியில் வகுப்புகளை நடத்தும் இவர்கள் ஆசிரியர்களாக பணீயாற்றுவர்களையும் தன்னார்வ தொண்டர்களையும்  தேர்ந்தெடுத்து பயிற்சியும் கொடுக்கிறார்கள்  சீங்கப்பூர் பள்ளிகளின் பாடபுத்தகங்களை, தமிழ் இணையபல்கலைகழக ஆலோசனைகலையின் படி பயன் படுத்துகிறார்கள்.  இப்போது வெளிநாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்தகங்களை தயாரிக்க துவங்கியிருக்கிறார்கள்.  ”தமிழகத்திற்கு அப்பால் தமிழ் கல்வி” என்ற அமர்வில் இவர்   ஒரு பேச்சாளர்.
”பாலர் வகுப்புகளில் ஆர்வமாக வரும் குழந்தைகள் பெரிய வகுப்புகளுக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை கவர்வதற்காக இங்குள்ள கல்வி முறைப்படி  5 ஆண்டுகள் மற்ற மொழி கற்றால்  ஆண்டுக்கு 10 பாயிண்ட் கிரீடிட் கிடைக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  எங்கள் பாட திட்டத்திற்கு  அனுமதிபெற்றோம். இது மிகப்பெரிய விஷயம். பல்கலைகழக தர கட்டுப்பாடும் வகுப்பு நடத்தும் விதிகளும் கடினமானவை.  ஆனாலும் எங்கள் முன் இருக்கும் சவால் ”இங்கு வாழப்போகும் நான் தமிழ் படித்து என்ன செய்யபோகிறேன்? என்று  மாணவர்கள் எழுப்பும் கேள்விதான்,  இந்த கருத்தரங்கு சரியான பதிலை நாங்கள் அவர்களுக்கு சொல்ல உதவ வேண்டும்.   கற்பிக்கும் பணியில் தமிழகத்திலிருந்து கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள். ஆனாலும் கடினமான இலக்கணம், சூழ்நலைக்கு ஏற்ப இல்லாத தன்மையில் பாடங்கள்  மாணவர்களை சோர்வடையச் செய்கிறது.  தமிழை  ஒரு பாடமாககூட படிக்காத தலைமுறை இப்போது  தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்காகவிற்கு வந்துகொண்டிருக்கிறது. பெற்றோர்களுக்கு மொழியின் அருமையும் அவசியமும் தெரிந்தால் தானே அவர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதை பற்றி யோசிப்பார்கள்?  என்று தான் சந்திக்கும் சவால்களை சொல்லும் இவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன் முயற்சியை தொடர்கிறார். வெளிநாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குழந்தைகளை கவரும் வகையில் பாடபுத்தகங்களை, கற்பிக்கும் கருவிகளை. யுக்திகளை தமிழ் நாட்டு கல்வியாளார்களிடம் இருந்து வரவேற்கிறார். 

கடல் கடந்து வாழந்தாலும் தமிழின் மீது இவர்கள் வைத்திருக்கும் அபரிமதமான அன்பைப்பார்க்கும் போது மாநாட்டின் தலைப்பை இப்படி மாற்ரிவைதிருக்கலாம் என்று தோன்றியது
 “ தாயகம் கடந்த தமிழ்க் காதல்”

 - ஆதித்தியா

கல்கி 16/02/14 

26/1/14

கங்கைக் கரை ரகசியங்கள் .... 3




உலகில் சில நதிகள்மட்டுமே  பல ஆயிரமாண்டுகளாக வற்றாமல் மிக நீண்ட தூரம் ஒடிக்கொண்டிருக்கின்றன. தேசங்களும்,கலாசாரங்களும் பிறந்த தொட்டில்கள் என வர்ணிக்கப்டும் இந்த நதிகளில் ஒன்று, இந்திய துணைக்கண்டத்தில் ஒடும்  கங்கை.  ஆனால்  இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்கும் இந்த கங்கை மட்டுமே, பயணிக்கும் வழியெங்கும்  தெய்வமாக வழிபடப்படுகிறது.  இதன் கரைகளில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது.  இதிகாசங்களுக்கும் புராணங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் ரிக்வேத்தில் காசி நகரமும், கங்கைக்கரையும் பேசப்பட்டிருக்கிறது.  அந்த கங்கையில் படகில்  இன்று பயணம் செய்யலாமா?




ஈஷா அமைப்பினர் அழைத்துசென்ற காசி புனிதபயணத்தில் இம்முறை பங்களுருவிலிருந்து காசி செல்லும் சங்கமித்திரா எக்ஸ்பிரஸில்  சென்னை, விஜய்வாடா, நாக்பூர் என அங்கங்கே இணைந்துகொண்டவர்களும் நேரடியாக வாரனாசிக்கு வந்தவர்களுமாக  பங்கேற்றவர்கள் 200க்கும்மேல். பல்கலைகழக பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள்
நிறைந்த பெரிய குழு அது  இந்த பயணத்தை வழி நடத்த சத்குருவினால் நியமிக்கபட்ட தலைவர்கள் ஸ்வாமி பிரோபதா.(படம்) ”மா” கம்பீரி.(படம்) ஈஷா வில் பெண் துறவிகள் ’மா” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவ 8 பேர் கொண்ட ஒரு தொண்டர்படை அதில் இளம்துறவிகளும் அடக்கம்

 தலைவர்கள் சாமியார்களாக இருந்தாலும் சகலுமும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தேர்ந்த டிராவல் ஏஜெண்ட்கள் போல மிக அழகாக திட்டமிட்டு   செயலாற்றுகின்றனர்.
அன்றைய பகல்பொழுதை குழுவினர் விருப்பம்போல் காசி நகரில்  செலவிடலாம் என்று அறிவிக்கபட்டிருந்தது. தன் கரையெங்கும் கோவில்களாலும் சக்தியாலும்  நிரப்பியிருக்கும்  கங்கையில் படகில்  சில மணிநேரங்கள் பயணம் செய்ய நம்மைப்போல விரும்பிய ஒரு சிறு குழுவோடு நாமும் இணைந்து கொள்கிறோம். நம்விருப்பத்தை சொன்னதும் உடன் வந்து உதவினர் குழுதலைவர்கள் .அமைதியாக காணபட்டாலும் 60 அடிக்குமேல் ஆழமிருக்கும் அந்த நதியில் படகில் செல்லும்போது நாம் செய்யகூடாதை பட்டியிலிடுகிறார். மா.கம்பீரி. ஏதாவது நேர்ந்தால் உங்களுக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற வார்த்தைகள் நம்மை படகில் அசையாமல் உட்காரசெய்கிறது.

கரையிலிருந்து நதிக்குள் செல்வதற்குள் முட்டிகொண்டிருக்கும் காலிப்படகுகளின் நெரிசல். மிக லாகவமாக கைகளால் தள்ளி, படகால் இடித்து  கங்கைக்குள் பிரவேசிக்கிறார் நம் படகுக்காரார்.   இளம்வெய்யிலில் இதமான காற்றில்  தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கையின் குளுமை, மெல்லிய அலைகளாக நம்மை அழைக்கிறது.  ஆயிராமாயிரமாக ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் ஒரு புனித நதியில்,பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக காலம் காலமாக  கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளை மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையில்  இன்று நாமும் பயணிக்க பாக்கியம் செய்திருக்கிறோம் என்ற  எண்ணம்  மனதில் நிறைந்திருக்க  மெல்ல நம் கங்கைபயணம் தொடர்கிறது.

கங்கைகரையின் ஒருபக்கம் முழுவதும்  நெருக்கமாக பல படித்துறைகள். ”காட்” என்று சொல்லுகிறார்கள்.  இவைகள் இந்த புனித அன்னையில் நீராடும் ஸ்நானகட்டங்கள். மிக நெருக்கமாக ஒன்றையொன்று தொட்டுகொண்டிருக்கின்றன. 100 இருந்தனவாம் இன்று 80 இருப்பதாகவும் அதில் 64 பயன்பாட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள். எல்லா படித்துறைகளுமே நிறையபடிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. கங்கயில் வெள்ளம் அதிகரித்தாலும் நகரை தாக்காமலிருக்க செய்யபட்டிருக்கும் பாதுகாப்பு. கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததேயில்லையாம். முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகரகோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும்  சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது.  மன்னர் அளெரங்சீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க  எழுத்துபூர்வமாக இட்ட கட்டளை இன்றும் பனாரஸ் பல்கலை கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது. ஆனால் காசிநகரம் ஒருமுறை கூட கங்கையின் வெள்ளத்தால் தாக்கபட்டதாக வரலாறு இல்லை. கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட  வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது.  சக்தி நிறைந்த காசியை காக்கும் காவல் தெய்வம் அதைவிட சக்தி வாய்ந்த இந்த கங்கை.  
படகிலிருந்து பார்க்கும்பொது இந்த தீர்த்தகட்டங்களும் அதன்பின்னே உள்ளே கட்டிடங்களும் பல வண்ணங்களில் வடிவங்களில் கம்பீரமாக இருக்கின்றன. இந்தியா பல ஸ்மஸ்தானங்களாக இருந்த காலகட்டத்தில்  மன்னர் குடும்பத்தினரின் வசதிக்காக பனாரஸ் அரசரின் அனுமதியோடு எழுப்பப்பட்டிருக்கும் இந்த கட்டிடங்கள் அந்தந்த பகுதிகளின் கட்டிடகலைகளின் பிரதிபலிப்பாக அழகான சிற்பவேலைப்படுகளுடன், பெரிய தூண்கள், உப்பரிகைகள் என அழகாக  எழுப்ப பட்டிருக்கிறது. சிலவற்றின் அருகில் சென்று கட்டிடத்தின் உள்ளேயேயும்சென்று பார்க்கமுடிகிறது.  பனாரஸ் மன்னரின் படித்துறை அவர்கள் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக கட்டபட்டிருக்கும் ஒரு ஸ்நான அரண்மனை. உள்ளே குளிக்கும் அறைக்குள் கங்கை வருகிறது. சில  கட்டங்களை   குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநில அரசுகளே  பராமரிக்கின்றன.  சில பராமரிப்பின்றி பழாடைந்தும்  இருக்கின்றன. இன்னும் சில ஹோட்டல், புடவைக்கடைகளினால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுமிருப்பதை அதன் போர்டுகள் சொல்லுகின்றன.                         
நகரில் வர்ணா மற்றும் அஸி என்ற இரு சிறு நதிகள், -கங்கையை பார்த்தபின் இவைகளை நதி என்று சொல்லகூடாது.- சிற்றோடைகள் கங்கையுடன் இணைகிறது, இவைகளுக்கு இடையில் நகரம் இருப்பதால் இது வராணாசி என்றும் அழைக்கபடுகிறது.  

அஸி நதி கங்கையில் கலக்கும் பகுதியில்
அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது.  இந்த நுழைவு வாயிலிருந்து தான் நம் படகு பயணத்தை துவக்கி  ஒவ்வொரு திர்த்தகட்டமாக பார்த்துகொண்டிருக்கிறோம்.  இங்கிருக்கும் 64 படித்துறைகளிலும் தவறாமல் நீராடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால் பலர்  ”பஞ்ச தீர்த்த யாத்திரை” என்று  அஸ், தசாஸ்வமேத, வரண, பஞ்சகங்கா, மனிகர்ணா ஆகிய முக்கிய ஐந்து கட்டங்களில்  நீராடி வழிபடுகிறார்கள்

 ஏன் இவ்வளவு படித்துறைகள்?   இதற்கு காசி நகரின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் பல கோவில்களை உள்ளடக்கிய வட்டவடிவமாக ஒரு சக்தி இயந்திரமாக உருவாக்கபட்டிருப்பது காசி நகரம்.



 மூன்று முக்கிய சிவன்கோவில்கள் ஒரு நேர்கோட்டிலும் சக்தி வளையமாக நிறுவபட்ட மற்ற கோவில்ககளை இணைக்கும் ஆரமாக சிறிய கல்பாவிய நடைபாதைகள். அமைக்க பட்டிருந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் இந்த வாளாகத்திலிருந்த 468 கோவில்களிலும் ஒரே நேரத்தில் சப்தரிஷி பூஜைகள் நடந்திருக்கின்றன. கங்கைநதி  காசிநகருக்கு வெளியே   ஒரு வட்டத்தின் பரிதியைப்போல சற்றே வளைந்து ஒடுகிறது  
 கங்கையில்  நீராடியபின் எளிதாக பக்தர்கள் விரும்பும் கோவில்களுக்கு நேரடியாக போய் வழிபடும் வகையில் இந்த படித்துறைகள். அமைக்கபட்டிருக்கின. இன்றும்  எந்த படித்துறையில்ருந்து நேராக நடந்தால் ஒரு கோவிலுக்கு போகும் பாதை வருகிறது.  இன்று சிறு சந்துகளாகிவிட்ட அந்த பாதைகள் தான் சக்தி வளையத்தின் ஆரங்கள்..   கோவில்களில் பூஜிப்பவர்களை தவிர மற்றவர்கள் வசிக்க அனுமதியில்லாத.  அந்தபுனிதமான பாதைகள் தான் காலசக்கர சுழற்சியில் பலரின் வாழ்விடமாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கான வியாபாரஸ்தல்மாகவும் நிறைந்து ”கல்லி” களாகியிருக்கின்றன.  இந்த செய்தியை அறிந்ததும் காசியின் குறுகிய சந்துகளின்  புனிதமான அகலமும்  அதை  நாசமாக்கிய நம்மவர்களின் குறுகிய மனமும் புரிந்தது.   
ஒவ்வொரு ”காட்”லும் ஒரு கோவில் மூன்று வேளைபூஜை. அதனால் எந்த படித்துறையில்  நீங்கள் குளித்தாலும் முதலில் அங்குள்ள தெய்வத்தை வழிபட்டபின்னரே நகருக்குள் செல்ல வேண்டும்.  , குழந்தை பிறப்பு, கல்வியின் துவக்கம், திருமணம், உடல்நலம், குடும்பத்தினர் நலம் மணவாழ்வுநலம், இறுதியாக மரணம் என்று மனித வாழ்வு சம்பந்தபட்ட ஓவ்வொருவிஷயத்திற்கும் இந்த  கங்கைக்கரையில் ஒரு தெய்வ சன்னதியிருப்பது பார்க்கும்போது எப்படி இந்த கங்கைக்கரை வாழ்வோடு  இணைந்த ஒரு விஷயமாகியிருக்கிறது என்று புரிகிறது. 
 படகில் நம்முடன் வரும் போட்டோகிராபர் படமெடுத்து, உடனே அதை படகிலேயே இருக்கும் பேட்ரியில் இயங்கும் பிரிண்ட்டரில் படமாக்கி தந்துகொண்டிருக்கிறார். டிஜிட்டல் டெக்னாலாஜி உபயம். படகு மனீகர்ணா தீர்த்த கட்டத்தை நெருங்குகிறது.   தொலைவிலிருந்து பார்த்த புகையிம் நெருப்பும் இப்போது பளீரென தெரிகிறது. மிதக்கும் படகிலிருந்து கரையில் நிகழும் மனித மரணத்தின் கடைசிகாட்சிகளை பார்க்கும்போது மனம் கனமாகி  இனம்தெரியாத உனர்வுகள் நம்மை தாக்குகிறது. எரிவது எவரோ என்றாலும் ஐயோ என்ற எண்னம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்துகொண்டு இருக்கும்போதே  பத்து நிமிடத்தில் வந்த இரண்டு உடலற்ற உடல்கள்,  அவைகளுக்கு இடமில்லாதால் எரிந்துகொண்டிருப்பவைகளை தகனமேடையிலிருந்து கிழே தள்ளப்பட்டது, உடல்களை எரியூட்ட படகுகளில் வந்துகொண்டிருந்த விறகுகள், எல்லாம்  அவர்களுக்கு இது  தினசரி வாடிக்கை என்பதை புரியவைத்தது. ஆனால் நமக்கு மறக்கவிரும்பும் மனதை பிசைந்த காட்சிகள் அவை. சராசரி ஒரு நாளைக்கு 50 உடல்கள் வரும்,  இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறுஆண்டுகளாக அணைப்பதே இல்லை என்று என படகோட்டி சொன்னபோது இந்த உலகில் நிரந்தரமாக நடக்கும் விஷயங்களில் மரணமும் ஒன்று, நமக்கும் ஒரு நாள்  நிகழும் அது வரை அது பார்க்கும்போது  வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும் என்று உரைத்தது. .  உயிரற்ற உடல்கள் உருக்குலைந்த்ததை அத்துணை அருகில் பார்த்ததினால் நம் மனம் கனமாக இருப்பதைப்போல நம்படகும் கனமாகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு படகும் மெல்ல செல்கிறது. நீரின் வேக  ஓட்டம் போதுமானதாக இருப்பதால் துடுப்பு போடவில்லை என்ற படகோட்டி சொல்லுகிறார். 
படகு கரையை அடைந்தாலும் காட்சியின் தாக்கம் கரையவில்லை. சாலையில் நடக்கும்போது காசிநகரின் எல்லாபகுதிகளிலும் கேட்கும் டிரிங், டிரிங் சைக்கிள் ரிக்‌ஷாகளின் மணியோசையும்,பலமொழிகளின் ஓசையும் மெல்ல நம்மை இந்த உலகிற்கு இழுத்துவருகிறது.
நாளைகாலை காலபைரவரை தரிசிக்க 3.30மணிக்கு கிளம்ப வேண்டும். தயாராக இருங்கள் என்ற அறிவித்திருக்கிறார்கள்.  தூங்கிகொண்டிருந்த  நம்மை ஹோட்டல்கார்கள் தவறுதலாக 2.30 மணிக்கு பதிலாக  1.30மணிக்கே வேக்-அப் கால் கொடுத்து எழுப்பியதால் தூக்கம் கலைந்தது. காலபைரவர் நம்மை ஏன் சீக்கிரமாக அழைக்கிறார் என எண்ணி   உட்கார்ந்திருக்கிறோம். இன்னும் பஸ் வரவில்லை
------------------------------------------------------------------------------------------------------------



சத்குருவின் பதில்கள்
காசியில் எங்களை மணிகர்ணிகாவை பார்க்கச்சொன்னீர்கள். அப்போது நாங்கள் என்ன விதமான சாதானா செய்ய வேண்டும் ? காசியில் மரணம் நிகழ்ந்தால் முக்தி கிடைக்கிறது என்பது உண்மையா?
குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் உங்களைப்போன்றவர்கள்  தியானம் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் சும்மா பார்த்துவந்தால் போதும். உடல்கள் எரிக்கப்படும் இடம் ஒரு பலிபீடம் போன்றது. அங்கிருந்து ஒரு உயிர்பிரியும் போது அபாரமான சக்தி வெளிப்படும் அதை சாதானாவிற்கு பயனபடுத்திக்கொள்ளலாம் என்பது உண்மையானாலும்  நீங்கள் செய்ய கூடாஅது. அது பயிற்சிகள் நிறைய செய்திருக்கும் பிரம்பச்சார்கள் மட்டுமே செய்ய வேண்டியது.  மரணம் என்ற மகா உண்மைய நேருக்கு நேர் நீங்கள் பார்க்க வேண்டும்.  மனத்தளவில்அதற்கான சக்தியை பெறவேண்டும் என்பதற்காக தான் பார்க்க சொன்னேன். காசியில் முக்தி பற்றி கேட்டீர்கள்.  காசியின் மகா மயானத்தில் உயிர் பிரியும்போதும், உடலை எரிக்கும்போதும் காலபைரவர் ‘‘பைரவி யாத்தனா’’ என்னும் செயலை நடத்தி வைப்பதாக கூறப்படுகிறது. யாத்தனா என்றால், ‘தீவிரமான வலி’ என்று பொருள். மரணத்தின் தருவாயில், ஒரு மனிதனின் பற்பல பிறவிகளின் கர்மவினைகளையும் ஒரே ஷணத்தில் வெளிக்கொண்டு வந்து பைரவர் கலைகிறார். எந்தமாதிரியான கர்மவினைகளை ஒரு மனிதன் பல பிறவிகளில் வாழ்ந்து தீர்க்கவேண்டுமோ, அவை எல்லாம் ஒரே ஷணத்திற்குள் தீர்கின்றன. இது யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத அளவிற்கு தீவிரத்துடனும், வலியுடனும் நடக்கிறது. ஆனால், ஒரு ஷணத்திற்குள் முடிந்துவிடுகிறது. ‘‘பைரவி யாத்தனா’’ என்ற இந்த தீவிர செயலை செய்வதற்காகவே சிவன் காலபைரவர் என்ற உக்கிரமான உருவுடன் காசி மகா மயானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நரகத்தை மிஞ்சிய வலியை இது ஏற்படுத்தினாலும், அதன் பின்னர் அந்த உயிரின் பழைய கர்மத்தினில் எதுவும் மிஞ்சாமல் ஒரு சுதந்திர முக்தி நிலை நிலவுகிறது


23/1/14

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, கடந்த 3 நாட்களாக கோவையில் நடந்த  மாலன் முன்னின்று நடத்திய கருத்தரங்கு மிகப்பெரிய சக்ஸஸ்..”தாயகம் கடந்த தமிழ்” என்ற இந்த கருத்தரங்கம் பற்றிய விபரங்களை முன்னரே பதிவிட்டிருந்தேன், துவக்க விழாவை எல்லா பேப்பர்களும் (மலையாள பேப்பர்கள் கூட)  டிவிக்களும் பெரிய அளவில் கவர் செய்திருந்தன. அதில் மாலனின் பேச்சு மிக அருமை. தி ஹிந்து தமிழ் அதை அப்படியே வெளியிட்டிருக்கிறது. சீனவானொலி, லண்டன் தீபம் டிவி களிலும் செய்தியாக வாசிக்கபட்டிருக்கிறது.


தொடர்ந்த இரண்டு நாட்களிலும் வெவ்வேறு தலப்புகளில் கட்டுரை வாசித்த  25 பேர்களும் மாலனுக்கு நன்றி சொன்னார்கள்.  உலகின் பல மூலைகளிலிருந்து- கனடாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை  இருக்கும் நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் அவர்கள்.  கோவை KMC மருத்துவமனையில் மிக ஹை டெக் காக ஒரு ஆடிட்டோரியம். 500 சீட்டுகள் அனைத்து நிரம்பிவிட்டதால்  பக்கத்து ஹாலில் வீடியோவில்  காட்டினார்கள். மக்கள் நகராமலிருந்தற்கு காரணம் பேசபட்ட விஷயங்களும் பேச்சாளர்களும்.
ஒரு சர்வ தேச கருத்தரங்கத்தை நடத்துவதற்கு பல  பேச்சாளர்களை  குறுகிய காலத்தில் அழைப்பது என்பது  மிக கடினமான ஒன்று.  அனைவரும் மாலன் அழைத்ததால் மட்டுமே ஏற்று  குறுகிய காலத்திற்குள் வந்தவர்கள்.  தனியாளாக மாலன் இதற்காக கடந்த 2 மாதம் உழைத்திருக்கிறார். 
கோவையின் KMC  தலைவர் நல்ல.பழனிசாமி அவர்கள் தான் தமிழ் பண்பாட்டு மைத்தின் தலைவர். வெளிநாட்டிலிருந்த வந்த பேச்சாளர்களின் மானபயண,தங்கும் செலவுகளை தமிழ் பண்பாட்டு மையம் ஏற்றிருக்கிறது. தங்குமிடத்திலிருந்து  எல்லாமே  தி பெஸ்ட் என்ற வகையிலிருந்தது. பல கல்வி நிறுவனங்களையும்  நடத்தும்  இந்த மனிதரின் மனமும் அவரின் நிறுவனங்களைப்போல மிகப்பெரியது.
மாலனின் சாதனைகளை கண்டு சந்தோஷ பட்டிருக்கும் . மாலனின் பெற்றோர்கள்   இதனையும்  சொர்க்கதிலிருந்து பார்த்து சந்தோஷபட்டிருப்பார்கள்
கல்கி இதுபற்றி நான் எழுதிய கட்டுரைக்கு ”தமிழுக்கு இன்னும் ஒரு மகுடம்” என தலைப்பிட்டிருந்தது.  உண்மையில் இது மாலனுக்கும் தான்.

தி ஹிந்து தமிழின் பக்கம்


தமிழ் அழிவது, நலிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தமில்லை: உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் மாலன் பேச்சு

2

சேவகனாக, அடிமையாக, எழுத்துக்கூலிகளாக, அகதியாக தமிழன் எங்கெல்லாம் சென்றா லும், அவன் கங்காரு தன் குட்டியை வயிற்றில் சுமப்பது போல், தாய்ப்பூனை தன் குட்டியை வாயில் தூக்கிச் செல்வது போல் தமிழை சுமந்து சென்றுள்ளான். அங்கிருந்து படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டிருக்கிறான்.
எனவே, தமிழ்நாட்டில் தமிழ் இப்படிச் சென்று கொண்டி ருக்கிறதே, தமிழ் அழிந்து விடுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ் அயலகத் தமிழர்களால் கடல் கடந்து கொண்டாடப்பட்டு, வளமையுடன் வாழ்ந்து வருகிறது’ என்றார் எழுத்தாளரும், பத்திரிகை யாளருமான மாலன்.
3 நாள் மாநாடு:
தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பிலான உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு குறித்த 3 நாள் மாநாடு கோவை காளப்பட்டி என்.ஜி.எம் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.
டாக்டர் நல்லா பழனிச்சாமி தலைமை வகித்தார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் பேசினார். ரே.கார்த்திகேசு, இந்திரன், சேரன், அழகிய பாண்டியன், எஸ்.பொ, பெருந்தேவி என அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜெர்மனி உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு எழுத்தாளர்களும், படைப்பாளர்களும், புவியரசு, நாஞ்சில்நாடன், சிலம்பொலி செல்லப்பன், திருப்பூர் கிருஷ்ணன், சி.ஆர்.ரவீந்திரன், சுப்பரபாரதிமணியன் என நூற்றுக்கணக்கான உள்ளூர் எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.
அர்த்தமற்ற பிதற்றல்:
மாநாட்டில் மாலன் பேசியது: ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி நிற்கிற, பரவி நிற்கிற தமிழ் எழுத்தின் எழுச்சிப் பிரதிநிதிகள் இங்கே கூடியிருக்கின்றனர்.
குமரி முதல் வேங்கடம் வரை விரவி நின்ற தமிழ்கூறும் நல்லுலகு உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஆனால் இலங்கை, கனடா, ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் சென்ற தமிழர்கள் தமிழுக்கு கொடை தந்து தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் என்பது உலகம் தழுவிய மொழி. தமிழ் நலிவது, தமிழே அழிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தம் இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது தாயகம் கடந்த தமிழ்.
விரவிக்கிடக்கும் தமிழ்:
ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியம் எப்படி லண்டன் ஆங்கில இலக்கியம், அமெரிக்க ஆங்கில இலக்கியம், மூன்றாம் நாடுகளின் ஆங்கில இலக்கியம், இந்திய ஆங்கில இலக்கியம் என்று வெவ்வேறு கூறுகளுடன் நிற்கிறதோ, அதேபோல் தமிழ் இலக்கியமும் நாடு கடந்து நிற்கிறது. இலங்கை தமிழ் இலக் கியம், மலேசியா தமிழ் இலக்கியம், சீனா தமிழ் இலக்கியம், ஜெர்மன் தமிழ் இலக்கியம், அமெரிக்க, லண்டன் தமிழ் இலக்கியம் என்று விரவிக் கிடக்கிறது.
தமிழை தாங்கும் 4 தூண்கள்:
ராஜராஜன் சோழன் காலத்தில் தமிழன் கடல் கடந்து வாணிபம் செய்யப்போனான்; சேவகனாகப் போனான். ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைகளாக கடல்கடந்து போனான். சுதந்திரத்திற்குப் பிறகு கடல்கடந்து எழுத்துக்கூலிகளாகப் போனான். இடைப்பட்ட காலத்தில் அகதிகளாகக்கூட போனான். அப்போதெல்லாம் அவன் கங்காரு தன் குட்டியை சுமப்பது போல், தாய்ப் பூனை தன் வாயில் குட்டியை கவ்விச் செல்வதுபோல் தமிழை மட்டும் அன்னையின் லாவகத்தோடு கொண்டு சென்றான்.
தமிழன் எங்கு சென்றாலும் தன் மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கிறான். தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறான்.
கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை ஊடகம், தொழில்நுட்பம், இலக்கியம், கல்வி ஆகிய 4 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதுவே இக் கருத்தரங்கின் மூன்று நாட்களிலும் விவாதப் பொருளாக இருக்கும் என்றார் மாலன்.







19/1/14

கங்கைக் கரை ரகசியங்கள் 2


காசி நகரம் இந்த பிரபஞ்சத்துக்கே ஒரு பக்தியை,,பக்தி அதிர்வுகளை உருவாக்கிற, மனிதர்களில் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு புனித ஸ்தலம். சிவபெருமானே தான் வாழ வடிவமைத்துகொண்ட நகரம். இங்கு ஆம்கார் ஈஸ்வர், விஸ்வநாதர், கேதர் ஈஸ்வர் மிக முக்கியமான கோவில்கள்.. இதனுடன் ஐம்பத்தாறு விநாயகர் கோவில்கள், எட்டு திசைகளில் ஏழு அடுக்குகளில் அமைந்துள்ளன. இவை மட்டுமின்றி, அறுபத்துநான்கு யோகினி கோவில்கள், நவதுர்கா கோயில்கள், பத்து சண்டி கோவில்கள் மற்றும் பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சேர்ந்து நானூற்றி அறுபத்தெட்டு கோவில்கள் இங்கு உள்ளன. இந்த பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சூரியன் தக்ஷிணாயத்திலிருந்து உத்தராயணத்திற்கு பயணமாகும் பாதையை ஒத்து அமைந்துள்ளது.  இதைத் தவிர் 12 ஜோதிலிங்கங்களும் ஒருசேர அமைந்த ராமேஸ்வரம் கோவில்.  இந்தியாவில் மட்டுமில்லை, உலகின் எந்த நகரத்திலும் இவ்வுளவு கோவில்களோ வழிபாட்டுதலுங்களோ கிடையாது.  எல்லா கோவில்களிலும் சரியான நேரங்களில் தரிசனம் செய்ய வேண்டுமானால் நாம் காசியில் குறைந்தது ஒரு மாதம் தங்க வேண்டும். அப்படி செய்பவர்களும் சிலர் இருக்கிறார்கள்.  ஆனால் நமது குறுகிய கால பயணத்தில் முக்கியமாக நாம் பார்த்து தரிசிக்க வேண்டிய கோவில்களை சத்குருவின் வழிகாட்டுதலின் படி குழு தலவர்கள் அழைத்து செல்லுகிறார்கள்





காசிகோவில்களின் நகரமாக இருந்தாலும், முக்திக்கான நுழைவாயிலாக மதிக்கபட்டாலும். கோவில்களுக்கு செல்ல நல்ல பாதைகள் கிடையாது. எல்லாகோவில்களுமே  எதாவது ஒரு குறுகிய சந்தில் தான் அமைந்திருக்கிறது. அதிகபட்சம் 5 அல்லது 6 அடி அகலமுள்ள அந்த கல்பாவிய குறுகிய தெருக்களில் சதாரணமாகவே எளிதாக நடக்க முடியாது. பசுமாடு, சைக்கிள், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், என்று எதாவது ஒன்று உங்களை முன்புறமோ அல்லது பின்புறமோ இடித்துகொண்டே இருக்கிறது. சிரமபட்டு அவைகளை தவிர்த்தாலும் கூட அந்த குறுகியதெருவின்  இருபுறமும் இருக்கும் கடைகளில் பிஸியாக வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்களை இடித்துகொண்டுதான்  நாம் நகர முடியும். பகல் நேரத்தில் இருக்கும் இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக மட்டுமில்லாமல். காலையில்  3 மணிக்கு  துவங்கும் மங்கள் ஆர்த்தி மிக விசேஷமானது என்பதால் அதை தரிசிக்க திட்டமிட்டு  அந்த அதிகாலை நேரத்தில் நம் குழுவினருடன் சென்றுகொண்டிருக்கிறாம். அந்த குறுகிய சந்துகளில் இப்போது பிரச்னை மாடுகள் இல்லை. அவைவிட்டுபோன எச்சங்களும்  இருட்டும். அந்த வீதிகளில் தெருவிளக்குகள் கிடையாது. கடைகளின் விளக்குகள் மட்டும் தான் தெருவிற்கு வெளிச்சம். அவைகள் மூடபட்டிருப்பதால் ஒரே இருட்டு. . மிக கவனமாக அந்த இருட்டில் அசுத்தங்களை மிதிக்காமல் வழுக்கிவிழாமல் நடக்க பழகி ஒரு வழியாக கோவிலின் முகப்பை அடைகிறோம்.  செருப்புகளை வைக்ககூட வசதி இல்லையே தவிர செக்கியூரிட்டி கெடிபிடிகள்  உண்டு. கதவை திறந்தவுடன் உள்ளே நுழையும்போது நாம்தான் முதலாவாதாக இருப்போம் என நினைத்து ஏமாறுகிறோம்.  அனுமதி நேரத்திற்கு முன்னரே நுழைந்திருந்த விஐபிகள் நூறு பேர். அங்கிருந்தார்கள்.
வெண்சலவைக்கல் விரிந்திருக்கும் ஓரு பறந்த முற்றத்தின் நடுவே  நான்கு புறமும் வாயில்கள் கொண்டஒரு மண்டபம்.அதுதான் சன்னதி. நடுவே தரையின் ஒருபுறத்தில் தரையிலேயே மூர்த்தீ. சுற்றி நான்குபுறமும் பூஜைசெய்யும் அர்ச்சர்கள்.அவர்கள்தங்கள் உடலாலும்,பூஜைப்பொருட்களாலும் நுழைவாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு  சன்னதி ஸ்வாமி எதுவும் தெரியவில்லை. அனேகமாக இந்தியாவின் எல்லா மாநில முகங்களை பார்க்கமுடிந்த அந்த கூட்டத்தில் அதில் தெரிந்த எமாற்றத்தையும் உணரமுடிந்தது. நன்றாக பார்ப்பதற்கு எதாவது  எற்பாடு செய்யதிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டு அவரவர் மொழிகளில் முணு முணுப்பது புரிகிறது, ஆனால் மந்திரங்களுடனும் வேதகோஷத்துடனும் காட்டப்படும் ஆரத்தியின் உச்சகட்டத்தில் எழும் கோஷத்தில்  எல்லாம் கரைந்துபோகிறது அபிஷேகம் ஆர்த்திமுடிந்தபின் சந்நதியின் ஒரு வாயில் வழியே நம்மை  அனுமதிக்கிறார்கள். அருகில் சென்று பார்க்கிறோம். வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர்.  சில நிமிடங்களில் மலர் அலங்காரங்கள் களையப்படுகிறது ,  நாம் பூஜிக்க அனுமதிக்கபடுகிறோம்
. தரையோடு தரையாக இருக்கும்  அந்த மூலவரை மண்டியிட்டு வணங்கி  பேப்பர் டம்பளரில் அவ்வளவு நேரம் பத்திரமாக வைத்திருந்த பாலை ஊற்றி அபிஷகம் செய்கிறோம். அந்த மூர்த்தியை தொட அனுமதிக்கிறார்கள்.  அந்த ஒரு வினாடி ஸ்பரிசம் மனதில் தீயாக பரவுகிறது. நமக்கு மெய்சிலிர்க்கிறது. தரிசனத்திற்குபின்னர் வெளியே வந்த நாம்   ஒரு மகத்தான காரியம் செய்து விட்டதைபோல உணர்கிறோம் இம்மாதிரி தான் பெற்ற அனுபவத்தை எழுதியிருக்கும் மரபின் முத்தையா வின் கவிதை நினைவில் வந்து போயிற்று.
வினாடி நேரம் விரல் பிடித்த விஸ்வநாதம்
என் வினைகளெல்லாம் அவன் மடியில் விழுந்த நேரம்
கனாவில் அவன் முகம் குழாவுவும் தினம் தினம்
வினா மலர்ந்த நேரம் அவன் விடைகள் சாஸ்வதம்
 அந்த பிரம்ம மூஹூர்த்த நேரத்தில்  சன்னதிக்கு வெளியே மண்டபத்தில் அமர்ந்து குழுவினர் தியானிக்கின்றனர். இந்த கோவிலின் வளாகத்தில் தேவிக்கு சன்னதி இல்லை. சற்று அருகில் உலகிற்கே உணவிடும் அன்னபூர்ணியின் தனிக் கோவில் இருக்கிறது. இங்கு தினசரி  தேவிக்கு நைவேத்தியம் முடிந்த பின் 100 ஏழைக்களுக்கு உணவு வழங்கும் அறகட்டளை நிறுவி கடந்த 100 ஆண்டுகளாக நடத்திகொண்டிருப்பவர்கள் தமிழ் நாட்டு நகரத்தார் சமூகத்தினர். நுழைவாயிலில் இந்த விவரத்தை தமிழ் எழுத்துகளில் சொல்லும்  கல்வெட்டு நம்மை சந்தோஷபடுத்துகிறது.
கோவிலை விட்டு வெளியே வந்து மெல்ல விழிக்க துவங்கியிருக்கும் காசிநகர வீதியில் சூடான  சுவையான டீ சிறிய மண் கப்புகளில்
தருகிறார்கள். ஆஹா! பிளாஸ்டிக், பேப்பர் குப்பையில்லை என நினைத்துகொண்டிருக்குபோதே டி குடித்தவர்கள் அந்த கப்பை தரையில் எறிந்து உடைத்துபோட்டிருக்கும் குட்டி மலை கண்னை உறுத்துகிறது.   நடந்து பஸ்களுக்கு செல்லுகிறோம், குழுக்கள் பிரிந்து போகாதிருக்க ஒவ்வொரு பஸ் குழுவிற்கு ஒரு வண்ண கொடி. அந்த குழுவின் தலைவர் கொடியோடு முன்னே நடக்க நாம்  பின் தொடர வேண்டும்.
ஆரஞ்சு. சிவப்பு பச்சை நீல, என பல வண்ணங்களில் கொடிகள் ஏந்தி காலை நேரத்தில் அனிவகுக்கும் இவர்கள்  எந்த கூட்டணி? தேர்தல் இன்னும் வரவில்லையே   என்று பார்ப்பவர்கள் நினைத்திருக்கலாம். அந்த அளவிற்கு அழகான ஊர்வலம்.  இன்று காலை உணவிற்கு பின் மாலை வரை நீங்கள் காசிநகரில் விரும்புவதை பார்க்கலாம் என்று அறிவித்திருப்பதால் எதைப்போய்  பார்க்கலாம் என யோசித்து கொண்டே பஸ்ஸில்  ஏறுகிறோம்.




மிகவும் சக்தி வாய்ந்த்தாக சொல்லுப்படும் காசி விஸ்வநாதர் ஒரு லிங்கத்தின் வடிவத்தில் இருப்பதாக தெரியவில்லையே.? மிகசிறியதாக தோன்றுகிறதே?
ஒரு அழகான கம்பீரமான லிங்க வடிவத்தை மனதில் நினைத்து வந்ததினால் ஏமாற்றம் ஏன்? அதிர்ச்சி கூட அடைந்திருப்பீர்கள். உருவம் பெறாத சக்தி ஒரு உருவத்தைப்பெறும்போது அதன் முதல் வடிவம் லிங்க வடிவமாக இருக்கிறது. லிங்கம் என்ற சொல்லுக்கு வடிவம் எனறு பொருள். இந்த இடத்தை விட்டு செல்லவே மாட்டேன் என்று சிவன் வாக்களித்து உருவாக்கிய இடம் காசி. நகரத்தின் வடிவமைப்பே நம்மை பிரபஞ்சத்துடன் இணைக்க ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில அமைக்கபட்டிருக்கிறது.  நம் உடலில் இருக்கும் 108 சக்கரங்களுக்கு ஏற்றார்போல் 54 சிவன் கோயிலும் 54 சக்தி கோயிலும் இருக்கிறது காசியின் வடிவமைப்பை கவனித்தீர்களேயானால்  அதன் மையத்தில்  இருப்பது காசி விஷ்வநாதர் கோயில், அந்த வடிவமைப்பு பிரகாரம் காசி விசாலாக்ஷி கோயில் அன்னப்பூரணி கோவில் என்று காசி நகரத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் விஞ்ஞான முறைப்படி அமைக்கப் பட்டிருந்தது.
மேலும், “காசியில் மொத்தம் 26,000 கோயில்கள், ஆனால் அதில் இப்போது 3000 கோயில்கள் மட்டுமே உள்ளன. மற்றவை முகலாயர்களின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுவிட்டது. இந்த சக்தி வட்டத்தின் மையத்தில் காசி விஷ்வநாதர்.காசி விஷ்வநாதர் தான் இந்த அமைப்பின் உச்சபட்ச சக்திநிலையை கொண்டுள்ளார். (Kashi Viswanathar temple is the core of this geometry). இதை எடுத்துவிட்டால் காசி அழிந்துவிடும் என்று எண்ணி முகலாய படையெடுப்பின்போது காசி விஷ்வநாதரை மட்டும் அங்கிருக்கும் இடத்திலிருந்து அகற்றி கிணற்றிற்குள் தூக்கி எறிந்து விட்டனர். பின்பு பல வருடங்களுக்கு பிறகு அந்த கிணற்றிலிருந்து லிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்கே பொருத்தப்பட்டு விட்டது.  அந்த கிணற்றை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்அப்போது முழு வடிவம் கிடைக்காதால் கிடைத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அதனால் தான் ”காசிக்க கங்கர் சிவசங்கர்” என்று சொல்லுகிறார்கள். அப்படின்னா இங்க இருக்கிற ஒரு கல்லு கூட சிவன் தான் என்று அர்த்தம்.  எப்போ இந்த நகரத்தையே ஒரு சக்திஸ்தலமாக படைத்துவிட்டானோ இங்கே இருக்கிற ஒவ்வொரு கல்லுக்கும் அந்த தன்மை வந்துவிடுகிறது.  நீங்கள் இருப்பது அப்படி ஒரு சக்தியான சூழ்நிலை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்
காசி விஷ்வநாதர் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது உண்மையாகவும் இருக்கலாம். உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் காசியின் சக்திநிலை பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை. நீங்கள் காண்பது அதன் மிச்சம்தான். அதனால் அந்த கோவில் இருக்கும் இடத்தின் சக்தியை அது அங்கு நிறுவபட்டிருப்பதை நீங்கள் உனர வேண்டும். லிங்க உருவம் ஒரு அடையாளம் தான். பூஜைகள் முடிந்ததும் நீங்கள் அங்கு சில நிமிடங்கள் உட்கார்ந்து பாருங்கள் புரியம்.