3/2/17

ஒரு எழுத்தாளின் படைப்பு நேசிக்கப் படுகிறது



ஒரு எழுத்தாளின் படைப்பு நேசிக்கப் படுகிறது

"அவள் விகடனுக்காக' தினமும் ஒரு புத்தகம் விமர்சனம் 
 செய்யும் சவாலை ஏற்றிருக்கிறார் சுமிதா ரமேஷ்.

 முதல் புத்தகம் என்னுடைய "கங்கைக் கரை ரகசியங்கள்." மிக விரிவான, தெளிவான விமர்சனம். ஒரு முன்னுரையைப் போல. அதை அவருடைய முகநூலிலும் வெளியிட்டிருக்கிறார்.   விமர்சனத்தின்  வீச்சு அவருடைய பதிவுக்கு வந்தபின்னூட்டாங்களில் தெரிகிறது. ஒரே இரவில் 100பேர் லைக் செய்து 26 பேர் கருத்துகளைப்பதிவு செய்திருக்கிறார்கள்.  சந்தோஷமாக இருக்கிறது ஒரு எழுத்தாளனின் படைப்புநேசிக்கபடும்போது எழும் சந்தோஷம் 

Sumitha Ramesh 



Image may contain: one or more people, beard, text and outdoor

 !
கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.

Sumitha Ramesh added 3 new photos — with Ramanan Vsv.
இலக்கியம் என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த இந்தப்புத்தகம் தான் எழுத, படிக்க ஈர்த்தது !
கதை, சிறுகதை, நாவல், கவிதைத்தொகுப்புகள் என்றிருக்க..சமூகம் சார்ந்த , எதோ ஒரு ஈர்ப்பை..இன்னமும், இனி வரும் காலங்களிலும் புனிதத்தை தன்பெயரில் கொண்டுள்ள கங்கையைப்பற்றிய புத்தகம் என்றதும் கைகள் தானாக தழுவியது இதனை !
யார் எழுதியது..என்ன மாதிரியான புத்தகம் இது ?
பயணக்கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல் ! பயணக்கட்டுரைகளில் சில ,
நேராக உள்ளதை உள்ளபடி சொல்லும் கட்டுரைகள், சில பயணத்தின் போதே பார்த்தது , எண்ணக்கிடங்கில் விளைந்தது என நம் மனதிலும் விதைக்கும் கட்டுரைகள் ! இரண்டாவது ரகம் இந்தப்புத்தகம்.மொத்தமே 112 பக்கங்கள்.
ஆனால் ஒவ்வொரு வரிகளும் பலமுறை படிக்க வைப்பவை. அப்படியென்ன ஸ்பெஷல்..?
மேலே படிங்களேன் !
இந்த கங்கைக்கரை ரகசியங்கள் அப்படித்தான் நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, எழும் எண்ணக்கேள்விகளுக்கு விடைகளையும் அளிக்கின்றன.
காலைப்பொழுது , கடலாக விரிந்திருக்கும் அறுபது அடி ஆழம் கொண்ட நதி, படித்துறைகளில் நாக்குகளாய் நாவாய்கள்
இப்படித்தான் இழுத்துப்போடுகிறது இழைந்தோடும் வர்ணனை. மெல்ல எழுத்தாளரின் கைப்பிடித்து சிறுப்பிள்ளையாய்
அவர் கால்களுடனே..பயணிக்க நாமும் ஆரம்பிக்க , பிரமிப்பை தன் தோள்களில் ஏற்றிக்காட்ட , கைப்பிடித்து தோழமையுடன் எண்ண அலைகளோடு அழைத்துச்செல்கிறார்.
கங்கைக்கரை என்றதுமே நினைவில் வருவது காசி நகரம் தான் !
கிரேக்க், எகிப்திய, பாரசீக நாகரீகங்கள் அழிந்து உருமாறியப்போதும் மாறாத இந்திய நாகரீகத்தின் அந்த தொன்மையினைப் பாதுகாப்பது சக்தியை, ஆற்றலை பிரதிஷ்டை எனும் கருவியாகக்கொண்டு எழுப்பப்பட்ட ஆலயங்கள், அதனால் உருவான நகரங்கள் தான் என்கிறார் ஆசிரியர்.
காசி..சிவனே வாழ்ந்த ஊர், அவரது சூலாயுதத்தின் நேர்க்கோட்டில் அமைந்த ஊர்.. 25,000 கோயில்களைக்கொண்ட ஊர் தற்போது 648 கோயில்களாகவும் மையப்புள்ளிகளாக மூன்று கோயில் கள், வடக்கே ஆம்கார் ஈஸ்வர், மையத்தில் விஸ்வ நாதர் , தெற்கில் கேதார் ஈஸ்வர் என அனைத்துக்கோயில்களுமே ஐந்தடுக்குப்பாதையில் அமைந்திருப்பதாக விளக்குகிறார் ஆசிரியர் அதற்கான மேற்கோள்களுடன் !
ஈஷா யோகமையம் ஏற்பாடு செய்யும் யாத்திரை யில் பங்கேற்பவர், அதன் சிறப்பான செயல்பாடுகளையும், நடு நடுவே தனக்கான சந்தேகங்களை நம் மன மொழியைப்போலவே எதிரொலிக்கும் விதமாக சத்குரு ஜக்கி குரு வாசுதேவ் அவர்களிடன் கேட்டு நமக்குமான பதில்களைப்பெற்றுத்தருகிறார்.
காசி நகரம் கங்கையின் கரையில் உள்ளதையும் , கங்கையின் அழகையும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஆசிரியரதுப்பார்வையில் அவர் மயங்கியதை நமக்கும் கடத்தி மயங்கச்செய்கிற்து அவர் நடை!
எல்லாக்கோவில்களுக்கும் செல்லும் குறுகலான பாதை, அதிகாலையில் செல்லும்போது ஏற்படும் அசௌகர்யங்கள், அங்கே நகரத்தார் கட்டிவைத்த நாட்டார் கோட் சத்தர் , அவர்கள் செய்யும் பால் வழங்கும் திருப்பணி, கட்டிவைத்த கோயில்கள் என முதல் நாள் பார்த்ததில் பகிர்கிறார்.
3 நாட்கள்..இதில் விஸ்வ நாதர் ஆலயம் பற்றிய பகிர்வில் அவரது சிலிர்ப்பையும், அங்கு ஏற்படும் அதிர்வையும் நாமும் உணரமுடிகிறது ! சைக்கிள் ரிக்‌ஷா , படகுக்காரர்களின் தன்மை, அணுகும் விதம் என அணைத்து செல்லும் நடையில் பல காட்கள் எனப்படும் படித்துறைகளிலும் அவருடன் ஏறி நாம் இறங்குகிறோம் !
குளித்து எழுகிறோம் !
காசி , வாரணாசி என்ற அழைக்கப்படுவதில்..பனாரஸ் என்பது தனி நகரம் என்றும் அங்கு பட்டுத்தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்வில் வண்ணங்கள் இல்லை எனவும் பதிகிறார்!
அச்சச்சோ என நாமும் இரக்கம் கொள்ள உடனே படகுப்பயணம் , அங்கிருந்து..மணிகர்ணிகா காட் என தாவும் எழுத்துக்களால்..மாறினாலும் கனத்துப்போகிறோம் !
ஒரு நாளைக்கு குறைந்தது 50 இறந்த உடல்கள் (இப்படித்தான் குறிப்பிடுகிறார்..பிணங்கள் என்றில்லை) வர..பாதி எரிந்த உடல்கள் அடியே தள்ளப்பட, இதனை 6 உதவியாளர்களுடன் நிர்வகிக்கும் சத்திய நாராயண சௌத்ரி என்பவரது நிலையையும் குறிப்பிட.. ஆவென திறந்த வாய் மூட மறுக்கின்றன.
பனாரஸ் மன்னர்களுக்கான குளியல் கட்டம் அதில் கங்கை உள் நுழைவதென அனைத்துப்படித்துறைகள் , அதன் கரையில் அமைந்துள்ளக்கோயில்கள் என விவரிக்கப்பட்டு அங்கு ஆங்கிலேயர், முகலாயர் , புத்த மத ஈடுபாட்டினையும் சொல்லி..புத்தருக்கும் காசிக்குமான தொடர்பு, அவர் ஞானம் பெற எப்படி வந்தார் என்ற தகவல்களுடன்
மெதுவாக அவருடன் நாமும் சார நாத் பயணிக்கிறோம்.
அங்குள்ள காட்சியகம் அதிலுள்ள உண்மைகள் , அதைச்சார்ந்த தகவல்கள், புகைப்படங்கள் என ஆசம் ஆசம் என்ச்சொல்லி நம்மை நகர வைக்கின்றன பக்கங்கள் .
சார நாத் அடுத்து புத்த கயா..!
சார நாத்ல் புத்தர் சமணர்களுடன் இணைந்து தவமிருந்து, வெறும் உடல் மட்டும் மெலிந்து ஞானத்திற்காக போதி மரம் தேடி கயா க்கு செல்கிறார். அதை விளக்கும் காரணங்கள்,
செல்லும் வழியில் தம்மை பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் ரசிக்கும் விதத்தில் அள்ளித் தருகிறார்.
புத்தகயா அமைந்துள்ளது காசியிலிருந்து 250கிமீ தள்ளியுள்ளது எனவும் அங்கு அமைந்துள்ள புத்த விஹார்கள், புத்த சபாக்கள், அங்கு ஒவ்வொரு விஹார்கள் , வழிபடும் முறை..ஏன் புனிதத்தன்மைப்பெறுகிறது அங்கெல்லாம் புத்தர் என்ன போதித்தார் என தகவல்களைப்படிக்க முடிகிறது!
நாளந்தா.. கிமுவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வானியல், மருத்துவம், மொழி, ஆன்மீகம் சார்ந்த படிப்புகள்..மாணக்கர்களைக்கொண்டிருந்ததை வரிகளால் விளக்கி , படங்களுடன் நம் மனதில் பதியமாகிறது!
கில்ஜி படையினரால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் படிக்கும் போதே கண்ணீர்துளிக்க, நாகரீகமே தெரியாத உலகில்..சிகரமாக வாழ்ந்திருக்கிறோமே என்ற உணர்வை எழுப்புகிறது!
கில்ஜி யின் அழிப்பினால்..தொடர்ந்து பாதிக்கப்பட்ட காசி நகரம், நம் மன்னர்கள் கோட்டைகள், கயா, நாளந்தா என மனம் புரண்டு அழுகிறது படிக்கும் போது !
சமணர்கள் தவம் செய்த, புத்தரின் புனித இடமாகவும் அவர் சீடர்களுக்கு போதித்த இடமும் ஆன ஏழு மலைகளுக்கிடைப்பட்ட ராஜ் கீர் என்ற இடமும் முன்னர் மகத நாட்டின் தலை நகர் அதற்கான விவரிப்புகள் அங்கு செல்லும் வழி என நகைச்சுவை இழையோட நமக்கும் தெரிவிக்கிறார்.
மீண்டும் பாட்னா வருகை, அங்குள்ள தானியம் சேமிக்கும் கோடவுன், படகு சவாரி, கங்கைக்குளியல் என நாமும் களிக்கிறோம்!
கடைசியாக எதோ மிஸ்ஸிங் போலவே என நாம் நினைக்கும் போதே..கங்கையின் ஆர்த்தியும் கண்களில் காமிக்கப்பட்டு..புத்தகம் நிறைவுறுகிறது !
வழுவழுப்பான கவிதா பப்ளிகேஷனில் வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் கல்கியில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
மிக அழகான படங்களுக்கும், வர்ணனைகளுக்கும், வரிகளுக்கும், சிந்தனைகளுக்கும் சொந்தக்காரரன அந்த ஆசிரியர், எழுத்தாளர் திரு. ரமணன் அவர்கள்.
Ramanan Vsv அவர்கள்.
இவர் வங்கியில் உயர்பதவி வகித்தவர், சமூகம்,அரசியல், வரலாறு என பல ஜான்ர்களில் விரிவாக தன் படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்.
அவரது முன்னுரை, பதிப்பாளரது பதிப்புரை..நம் ஆவலைத்தூண்டி உள் தள்ளிட..நிறைவான நெகிழ்வான பயண அனுபவத்தைப்பெறுகிறோம் !
ஆனாலும்..நாமும் பார்க்கவேண்டுமே இந்த இடங்களை என்ற ஆர்வமும் அதிகமாகி, இவரைப்போலவே இணைந்தப்பல விஷயங்களைக்கூச்சமின்றி கேட்டு தெளிவுறவேண்டும் என நினைக்கிறது மனம் !
கங்கைக்கரை ரகசியங்கள் , கங்கை காசியை உணர்ந்துக்கொள்ளவேண்டிய பார்க்கவேண்டிய சக்தி அதிர்வுகளின் ஆணி வேராக அறிய வைக்கும் பயணப்படத்தூண்டும் புத்தகம் .
அகோரிகள், கங்கையில் மிதக்கும் பிணங்கள் பற்றி நாம் டாகுமெண்ட் ரி க்களில் பார்த்தவை இதில் இல்லாமல் போனாலும் கங்கையின் வாசத்தை புராதனத்தை , அறிவை நிறைவைத்தருகிறது !
கங்கைக்கரை ரகசியங்கள் பற்றிய ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்த நான் நாளை ..வேறொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன் !
கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.


-----------------
Comments
Devendran Ramanujam Can we get online PDF copy for sale?
Sriram Ram உங்களது பதிவு , இந்த புத்தகத்தை படிக்கத் தூன்டுகிறது......
Ganesh Bala நூலில் ஆழ்ந்து சாரத்தைப் பிழிந்து கையில் பால் குலுக்கல் (மில்க் ஷேக்மா) போல் தந்த ரகளையான விமர்சனம். வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது என்னை.
Ganesh Bala இனி பதிகையில் பதிப்பகம் பெயர், விலை போன்றவற்றை சொன்னால் வாங்க வசதி.
Vedha Gopalan பிரமாதமான நடையில் அழகாகத் தெளிவாக ரகசியத்தைப் போட்டு உடைத்திருக்கிறாய்
சுவாரஸ்யமான சரித்திர சம்பவங்கள் ஆசிரியரின் பலம்.
//நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, // செம
...See More
Vedha Gopalan திரு ரமணனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்
Sivapriya Hari நான் ஏற்கெனவே போய் இருக்கேன் ,ஆனாலும் நீங்க எழுதியதை படித்ததும் மறுபடியும் போகணும் போல இருக்கு சுமி😍👌
Kannan Jayaraman ஒரு புத்தகத்தை வாசித்தல் , வாசித்த பின் அதில் உள்ள , என்னன்ன விஷயங்கள், அதை எவ்வாறு கிரகித்து கொள்ள வேண்டும்...கிரகித்ததை மற்றவர்களுக்கு புரியும்படி ..எவ்வாறு அழகாக விளக்க வேண்டும் ..என்பதை இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது. ..மிக நன்றாக தொகுத்து பதிவிட்டுள்ளீர்கள் ...வாழ்த்துக்கள். ..பதிவை படித்தவுடன் என்னுடைய ரிஷிகேஷ், ஹரித்வார் பயணம் நினைவில் வந்து நின்றது. 
LikeReply1January 31 at 9:26pmEdited
Subbulakshmi Balaji வாரணாசி போக ஏற்கனவே Plan.கூடிய விரைவில் பயணப்பட ஆசை தூண்டியது உங்க எழுத்து, நாளை நூலகத்தில் புத்தக தேடலை துவக்கனும்
Subra Ramesh நானாடி. . . . நீராடினேன்
Sumitha Ramesh இளமதி பத்மா இதற்கு அழைத்தேன்
Geetha Ravi Geetha வெரி வெரி சூப்பர்.இந்த நூலை வேற ஒருவர் எழுதி இருந்தாலும் அதில் முக்கியமான குறிப்புகள் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் .இடையே தங்களின் தனிப்பட்ட குறிப்பு அருமை மா. எதிர்பார்க்க வில்லை.அருமை.கண்டிப்பாக புத்தகம் வாங்கனும்.படிக்கனும்.
Geetha Ravi Geetha மங்கள ஹாரத்தி ஹைலைட்.சூப்பர்.
R Narumpu Nathan துவக்கமே அருமை ! நல்லதொரு திறனாய்வு . படிக்கத்தூண்டும் விறுவிறுப்பான நடை !
இளமதி பத்மா ஆகா...
அழகான நூல் விமர்சனம்!
படிக்கத் தூண்டுகிறாய்!
...See More
Sheik Mohamed நல்ல அறிமுகம்.. கங்கை பற்றியும் காசி பற்றியும் பாலகுமாரனின் புருஷ வதம் நாவலில் மிக விரிவாக காட்சிப்படுத்தியதில் வாசித்து மனதில் காட்சி விரித்து ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். நன்றாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.. உங்கள் தளம் உங்கள் திட்டமிடல் தெளிவான பக்கம் திரும்பியிருக்கிறது. மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
Anusha Satheeshkumar சூப்பர் சுமி !ஆல் தி பெஸ்ட் உன்னால் முடியாதது இல்லை .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
Balaji Sridhar யாருமா நீ எங்கமா இருந்த நீ.

தூள் மா
Tamil Tamil வாழ்த்துகள் சுமிதா. அழகான ஆரம்பம். இனிதே தொடரட்டும்.
Rajesh Kumar Ganesan புனிதத்தின் ரகசியத்தை வெளியிட்டவர் ஐயா ரமணன்
அதை படித்து, ரசிக்கத்தூண்டிய தோழி சுமி, நீ ஓர் துப்பறியும் கண்(ன்)
நடுசாமம் (1:23) முகநூலில் உன் விரிவுரை படித்து நான் தீட்டிய பன்
...See More
Dhanam Sarathi படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது..
உங்கள் எழுத்துக்கள்...
பத்மஸ்ரீ விஜயகுமார் ஆமாம், அருமையான இடம். அதிர்வுகள் நிறம்பிய நகரம் .. பழமையும், நவீனமும் கவலந்த நகரம் ...
Indu Mathy மிக மிக எளிமையான அற்புதமான , அருமையான எழுத்து நடை சுமி ... கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும் , புத்தகத்தை தேடி வாங்கி படிக்க வேண்டும், மிகவும் ரசித்து படித்து அனுபவித்து எழுதி இருக்க சுமி ... வாழ்த்துக்கள்
Chellam Zarina வாழ்த்துக்கள் சுமி
ஏற்கெனவே கல்கி தொடராகப்படித்தது மீண்டும் உன் எழுத்துக்களில் உயிர் பெற்று மனதில் தாண்டவமாடின. 
ஒருபுத்தகத்திற்கு எப்ப சுவை குறையாமல் சுவையாக விமர்சனம் பண்ணனும் கிறதை இதைப்பார்த்து கற்று கொள்ளலாம். 
...See More
LikeReply1February 1 at 12:11pmEdited
Viji Loganaths அருமை ! கங்கை பற்றியும் காசி பற்றியும் நல்லதொரு திறனாய்வு. படிக்கத்தூண்டும் விறுவிறுப்பான நடை !வாழ்த்துக்கள் சுமி.
Mukil Rajan சவாலுக்கு மிகவும்
சரியான நபர்
நரூபணம்
...See More
Mukil Rajan நீருபணம்
இக்கணம்
Subathra Rajaram அருமை
Geetha Geetha Kannan ETHANY ETHANY UYIRATTRA MANITHA UDALGAL MIDHAPPINUM, PUNITHA THANMY MAARAADHA NILY....INDRYA VINGYAANIGALYUM VIYAKKA VYPPADU MAA PERUM RAHASYAMTHAAN..


18/1/17

மேகங்கள் வாழும் சொர்க்கம் 3

அந்தப் பெரிய அறையின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் ராணுவத்தின் மிடுக்கு தெரிகிறது.. கண்ணாடிப்பேழையினுள்ளே கலைப் பொருட்கள், விருது கேடயங்கள் கோப்பைகள் எல்லாம் மின்னுகிறது. பக்கச்சுவர்களில் X குறிகளாக நிற்கும் ஈட்டிகள். அழகான ஆயில் பெயிண்ட்டிங்கள். அந்த ரெஜிமென்ட்டின் உயர் அதிகாரி எனது சகோதரர் (கஸின் பிரதர்) எங்களுக்கு ஒரு இரவு விருந்து அளிக்க அவருடைய மெஸ்ஸுக்கு அழைத்துப் போனார். மெஸ் என்றால் மைலாப்பூர் மாமி மெஸ் மாதிரி சாப்பாடு மட்டும் இல்லை. ராணுவத்தில் அதிகாரிகளின் மெஸ் என்பது பணக்கார கிளப் மாதிரி, பார், ,சாப்பாடு, சினிமாஹால், பில்லியர்ஸ் மேஜை லைப்பரரி எல்லாம் இருக்கும். மிக நேர்த்தியாக பாரமரிக்கபடும் இடம். நுழைவாயிலில் அந்த ரெஜிமென்ட்டின் சின்னமான காண்டாமிருகம் வரவேற்கிறது. இங்கு காண்டாமிருகத்துக்கு நிறைய மரியாதை. அதிகாரிகள் தொப்பி, அவர்களின் ஜீப், கார் வரை எல்லாவற்றிலும் காபி கப்பில் கூட இருக்கிறார். சார் என்று அழைக்காததான குறை.
உடன் உணவருந்த அன்று இரண்டு இளம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். சாப்பிடும் போது அந்த அதிகாரிகள் அளவாகச் சாப்பிட்டது போலவே அளவாகவே பேசினார்கள். நாம் அல்லது அதிகாரி பேசும் போதும் “ஸ்ஸார்” என்கிறார்கள். “எஸ்” என்பதின் ஆர்மி பாஷை அது. டின்னர் முடிந்து சகோதரர் எனக்கு வேலையிருக்கிறது. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் என்று கிளம்பியபின் இந்த இளைஞர்கள் சட்டென்று வேறு சானல் மாற்றிய டிவி மாதிரி இயல்பாகப் பேசினார்கள்.. .அதிகாரிகளுடன் இருக்கும்போது அவர்களின் எல்லா அசைவுகளும் கவனிக்கப்பட்டு அவர்களின் பழகும் திறன் மதிப்பிடப்பட்டுக்கொண்டேயிருக்குமாம். . 
அன்று இந்த அதிகாரிகள் என்னைப் பல விஷயங்களில் ஆச்சரியப்படுத்தினார்கள். முதலில் கேப்டன் நேகா. இந்தப்பெண் இரண்டு முறை நேஷனல் ஜூடோ தேசிய சாம்பினானவர். இப்போது மூன்றாம் முறைக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.ஈ. காம்ப்பெஸ்ஸில் சூப்பர் புத்திசாலிகளை தேர்ந்த்டுக்கும் ஐபிஎம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். ஏன் ராணுவம்? குடும்பத்தில் யாராவது ராணுவ அதிகாரியா:? என்று கேட்டபோது நான் ஜூடோவில் பலமெடல்கள் பெற்றவள். மேஜையில் உட்கார்ந்து வேலை செய்வதில் ஒரு திரில்லும் இல்லை. சம்பளம் ஒரு விஷயமில்லை. அட்வெண்ட்சராக இருக்கும் ஒரு வேலையைத் தேடினேன். ராணுவத்தின் அதிகாரியாகத் தேர்வானேன், என்றார்.
அடுத்த ஆண்டு மீண்டும் சாம்பியனானால் அடுத்த பிரமோஷன் கிடைக்குமா? . அதெல்லாம் சோல்ஜர்களுக்கு மடும்தானாம் அதிகாரிகளுக்கு கிடையாதாம். ஒரு சாதனைச் செய்த சந்தோஷம் தான் என்று சொன்ன அவர் குடும்பத்தைப் பற்றிச் சொன்னபோது அசந்து போனேன். தந்தை கர்நடாகவில் ஒரு பெரிய கட்சியின் மாநிலத் தலைவர். தாய் முன்னாள் அமைச்சர். அரசியல் வாதிகளின் பிள்ளைகளை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர்களாகவோ, பெரிய நிறுவன அதிகாரிகளாகவோ இல்லாவிட்டால் வளரும் அரசியல் வாரிசாகவோ பார்த்திருந்த எனக்கு இந்தத் தகவல் “அரசியல் வாதிகளிலும் சில மாறுபட்டவர்கள் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கும் நல்ல பெற்றோர்களும் இருக்கிறார்கள்- என்பதைச் சொன்னது. 
அடுத்தவர் லெப்டினட் சதிஷ். வசதியான விவசாயக் குடுமப்பபின்னணி. ராணுவப்பணி என் பள்ளிக்கால கனவு. என்றார். சைனிக்பள்யில் படித்து டேராடூனில் பயிற்சிபெற்றவர். பி.ஈ சிவில் முதல் வகுப்பு பட்டதாரி. மாநில அளவிலான கிரிகெட் வீரர். ரஞ்சித் கோப்பைக்காக ஆடியிருக்கிறார். ரயில்வேயில் விளையாட்டுவிரர்களுக்கான கோட்டாவில் வேலைகிடைத்தும் மறுத்துவிட்டு காக்கிக்குள் புகுந்திருக்கிறார். ஆங்கில இலக்கியமும் இசையும் பிடிக்குமாம். ஒரு பாட்டுப்பாடுங்களேன் என்று கேட்டேன். விதிகளின் படி மெஸ்ஸில் பாடக்கூடாதாம். (இன்னும் என்னென்வெல்லாம் விதிகளோ ? ) இவர்களின் போட்டோக்களை சுவடுகளில் போட விதிகள் என்ன சொல்லுகிறது? என தெரியாதால் காண்டாமிருகம், மற்றும் மெஸ்ஸின் டைனிங் ஹால் படங்கள் மட்டும் இணைப்பில் 
நுழைவாயிலின் மேலே Rogues Gallery” என்ற போர்டுக்கு கீழே வரிசையாக பதக்கங்களுடன் அதிகாரிகளின் படங்கள். சரியாகத்தான் படிக்கிறேனா? என்று பார்த்தேன் Rogues தான். கேட்டபோது அது சும்மா ஃபன் சார், உங்கள் பேங்க்கில் திறமையான ஜிஎம்களை கில்லாடிகள் என்று சொல்வதைப் போல என்றார்கள். இது பல விஷயங்களுக்கு தனிப்பார்வை கொண்ட தனி உலகம் போலிருக்கிறது.

இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது இந்திய ராணுவம் புத்திசாலி,இளைஞர்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, மெல்ல அவர்களின் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று தோன்றிற்று. இருந்தாலும் நம் அரசும் சமூகமும் இவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் உரிய கெளரவத்தை முழு அளவில் அளிக்கிறதா? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.

16/1/17

தமிழ்த் தாத்தாவின் தாத்தா காலத்திற்கு முன்னரே சுவடிகளைத் தேடியவர்.



இந்த மாத இதழ் அமுதசுரபியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. இதழாசிரியருக்கு நன்றியுடன்.. இங்கே..
தமிழ்த் தாத்தாவின் தாத்தா காலத்திற்கு முன்னரே சுவடிகளைத் தேடியவர்.
தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழை வைத்தே பிழைத்தவர்கள், தமிழை வியாபாரம் செய்பவர்கள், தமிழால் புகழ் பெற்றவர்கள், தமிழைத் தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள், மனமகிழ்ச்சிக்காகத் தமிழைப் படித்தவர்கள், இலக்கிய சுவைக்காகத் தமிழை நேசித்தவர்கள்.. எனப் பல விதத்தில் தமிழைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கெல்லாம் தெரியும் கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த நூல்களைக் காப்பாற்றி நமக்குக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகிற உ.வே.சுவாமிநாத ஐயர்.என்பது.
ஆனால் தமிழ் தாத்தா பிறந்த 1855 ஆம் ஆண்டுக்கு 72 ஆண்டுகளுக்குமுன்னே(1783) அதாவது தமிழ் தாத்தாவின் தாத்தா காலத்திலேயே ஒரு மனிதன் தமிழக கிராமங்களில் சுவடிகளையும், செப்பு தகடுகளையும் தேடி அலைந்து சேகரித்து தொகுத்திருக்கிறார் என்பது ஓர் ஆச்சரியமான செய்தி. அதைவிட ஆச்சரியம் அந்த மனிதன் தமிழன் அல்ல என்பது மட்டுமில்லை தமிழே தெரியாத ஆங்கிலேயர் என்பது தான்.
அந்த ஆங்கிலேயர் காலின் மெக்கன்சி. தொல்பொருளியல், நாணயவியல், வரைபடவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், மதம், தத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற பல துறைகளில் ஆர்வம் மிகக் கொண்ட ஒரு ஆங்கிலேய அரசு அதிகாரி.. தமிழ்த் தாத்தாவைப்போல ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்தது போல இவரும் கைப்பணத்தைச் செலவழித்து உதவியாளர்கள் மூலம் தொகுத்த சுவடிகளும், சில கல்வெட்டுக்களின் பிரதிகளும் பின்னாளில் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மூல ஆதாரமாக இருந்திருக்கிறது. இவர் தமிழகம் மட்டுமில்லாமல் இலங்கை, ஜாவா தீவுகளுக்கும் சென்று சுவடிகளை சேகரித்திருக்கிறார்..
தமிழகத்தின் பல்வேறு முகங்களை வெளிக்காட்டும், அரியச் செய்திகளைச்சொல்லும் இந்தத் தொகுப்புக்களை தொகுத்துக் குவித்திருப்பவர் மெக்கன்ஸி என்ற ஆங்கிலேயர்.

யாரிந்த மெக்கன்சி? 


 இந்தியாவில் முதன் முதலில் கள ஆய்வினைத்தொடங்கிவைத்தவரான மெக்கன்சி ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அவர் கிழக்கிந்திய கம்பெனியில் 30ஆவது வயதில் இணைந்து சில போர்களிலும் பங்கேற்று இறுதியில் சென்னையில். தலைமை நில அளவை ஆய்வாளராக பொறுப்பேற்று அரை நூற்றாண்டு . காலம் பணியாற்றிய பொழுது ஆர்வம் காரணமாக செய்த காரியம் இந்த சேகரிப்பும் தொகுப்பும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. மெக்கன்சி தன் அலுவலக பணிக்காக சென்ற இடங்களில் எல்லாம் தன் சுவடி சேகரிப்பு, தொகுப்புப் பணிகளை செய்து வந்திருக்கிறார். இப்படி 30 ஆண்டுக்காலம் அவர் தொகுத்த தொல்பொருள் தொகுப்பை அவரே அழகாக வகைப்படுத்தி பட்டியிலிட்டிருக்கிறார். இன்றைக்குத் தமிழக வரலாற்றை ஆராய்பவர்களுக்கு உதவும் அரிய பொக்கிஷம். அவரது மரணத்திற்குப் பின்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்ட அறிக்கை காணாமல் போயிவிட்டது. இன்று இருப்பது சென்னை ஆவணக்காப்பகத்திலிருக்கும் அதன் நகல் மட்டுமே 
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை தான் மெக்ன்சியின் தொகுப்புப் பணியில் முதலிடம் பெற்றிருக்கிறது அதற்குக் காரணம் அவர் அங்கு தங்கியிருந்த போது தமிழ் அறிஞர்களிடம், நண்பர்களிடமும் விவாதித்தபோதுதான் தமிழ் நாட்டின் வரலாறு, வாழ்க்கைமுறை, இலக்கியம் பற்றி நிறையத் தெரிந்துகொண்டிருக்கிறார். அவை பற்றிய செய்திகளின் சேகரிப்பின், தொகுக்கப்படவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்..
இந்த ஆர்வத்தினால், அலுவலக பணிக்காக அடிக்கடி குமரி முதல் கிருஷ்ணா வரையிலும் சென்று வரும்போதெல்லாம் தொகுப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். பலருடன் இயங்கும் ஒரு நிறுவனம் கூட தொகுத்திட முடியாத அளவிலான தொகுப்புகளை தனிப்பட்ட முறையில் தொகுத்திருக்கிறார். 
இப்படி இந்த மனிதர் சேகரித்து தொகுத்திருப்பதின் எண்ணிக்கைகளைப் பாருங்கள். கல்லிலும் செம்பிலும் உள்ள சாசனங்கள்3000, பல்வேறு மொழிகளைச்சேர்ந்த சுவடிகள் 1568, கல்வெட்டுக்கள் 8076, ஓவியங்கள் 2630 வரைபடங்கள் 78 நாணயங்கள் 6218. இவற்றை சேகரிக்கபட்ட்து மட்டுமில்லாமல் மட்டுமில்லை மொழி வாரியாக, நியாயம் , தர்மம், சட்டம், கணிதம் எனப் பல பிரிவுகளில் தொகுக்கவும் பட்டிருக்கிறது. 
தொல்பொருள் தொகுப்பில் மெக்கன்சி காட்டிய ஆர்வம் ஆச்சரியப்படவைக்கிறது. எங்கோ ஸ்காட்;லாந்தில் ஒரு சதாரண குடும்பத்தில் பிறந்து பணி நிமித்தம் இந்த நாட்டிற்கு வந்து செய்த அலுவலகப்பணியோடு இத்தகைய அரியச் சாதனை செய்திருக்கும் இவரது சேவைகளுக்கு நமது வரலாற்றில் உரிய இடம் தரப்படவில்லை,

மலையாளம், தெலுங்கு கன்னட மொழிகளுக்கு உதவ அறிஞர்கள், கிராமங்களுக்குச் சென்று சேகரிக்க பணியாளார்கள், குடும்பங்களின் வரலாறுகளை அந்த குடுபத்தினரையே எழுதிதரச்சொல்வது, மலைவாழ்மக்களை சந்தித்துக் குறிப்பு எழுதிக்கொள்வது, கல்வெட்டுகளைத் தாளில் பதிந்துகொள்வது, புரியாதவற்றை ஓவியமாக்கிக் கொண்டுவந்து பரிசீலிப்பது போன்ற முறைகளைப் பயன் படுத்தி தன் தொகுப்பைச் செம்மைப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் விட நம் கவனத்தை கவர்வது சேகரித்ததில் தெளிவாகப் புரியாத விஷயங்களைப் பற்றி ஒரு வினா பட்டியலை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடைகள் பெற்று தொகுப்பில் சேர்த்திருப்பதுதான்.
தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமான 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சை வரலாற்றை அறிந்து கொள்ள, கல்வெட்டுகளில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ள இவர் தொகுப்பில் இருக்கும் தெலுங்கு, தமிழ் சுவடிகள் தான் உதவியிருக்கின்றன. தவிர . அதே போல இவர் ஜாவா தீவுகளில் பணியாற்றிய போது கண்ட, எகிப்திய பிரமிடுகளைவிடப் பழமையான புத்தர் கோவிலை பற்றி இவர் எழுதிய குறிப்புக்கள் தான் புத்த மதம் ஜாவாவில் பரவியிருந்ததற்கு முதல் சான்று. 
 பணியில் இருந்த காலத்தில் (1818) இந்தியாவின் வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருப்பதாக ஒரு குறிப்பில் சொல்லும் மெக்கன்சி இறுதிவரை அதை எழுதவே இல்லை. தன்னுடைய 38 ஆண்டுக்கால இந்திய பணியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய மெக்கன்சி கல்கத்தாவில் இருக்கும்போது தன் தொகுப்புப் பணிகளை இங்கிலாந்து சென்று தொடரவிரும்பினார், விடுமுறை கிடைப்பதற்குள் இறந்துவிடுகிறார். அவரது தொகுப்புகளை அவரது மனைவியிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி விலைக்குப் பெற்று அதை கம்பெனியின் சொத்தாக அறிவிக்கிறது. மெக்கன்சியின் தொகுப்புகள் பல இங்கிலாந்து அனுப்பபட்டுவிட்டன தென் இந்தியப்பகுதிகளைச் சேர்ந்த சுவடிகள் ஆவணங்கள், கட்டுரைகள், கல்வெட்டு பிரதிகள் போன்றவகைகள் இப்போது சென்னையில் இருக்கிறது. மெக்கசிக்கு பின் இவைகள் தேர்ந்த உதவியாளர்களால் பட்டியலிடப்பட்டிருக்கிறது
. 
ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் சென்னை கோட்டையிலிருக்கும் ஆவணக்காப்பகத்தில் மெக்ஸியின் குறிப்புகளுக்கு என தனிப்பகுதியே இருக்கிறது. அதிலிருக்கும் தமிழ் சுவடிகளை பேராசியர் முனைவர் ராசேந்திரன் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமுதாயப் பொருளியல், பண்பாடு நிலைகள் பற்றி ஆய்ந்து 1793-95, 1796-1810, 1811-1813, என்று முன்று கால கட்டங்களாக பிரித்து காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் என ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்றும் பல வெளிநாட்டு உள்நாட்டு பல்கலைக்கழக மானவர்களின் ஆராய்சிகளுக்கு இந்தக் குறிப்புகள் உதவுகின்றன. 
“ மெக்கன்சியின் பெருமையைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம் அவருடைய தொகுப்பே என்றும் அவர் பெருமையை சொல்லும்” என்று குறிப்பு எழுதியிருக்கிறார் அன்றைய வைஸ்ராய் கர்னல் வெல்லீஸ்லி.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

7/1/17

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் விலை உயர்வுக்கு வழி செய்கிறதா?


500 மற்றும் 1000 ரூபாய்கள் மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டபின் எழுந்த பணத்தட்டுபாடு இன்னும் தொடர்கிறது. செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு சமமான புது நோட்டு புழக்கத்தில் விடப்படும் என்று முன்பு அறிவித்த மத்திய அரசு, டிஜிட்டல் பரிவர்த்தனையை கருத்தில் கொண்டு தனது முடிவை மாற்றிவிட்டது.  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளுக்குச் சமமான அளவில் புது நோட்டுகள் வெளியிடப்படாது என்றும் . இந்த இடைவெளி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நிரப்பப்படும் என்றும் அறிவித்துவிட்டார்.  இது  பொது மக்கள் கார்டுகளின் மூலம் அல்லது மற்ற டிஜிட்டல் முறைகள் மூலம்  தங்கள் பரிவர்த்தனைகளைச் செய்யது கொள்ள  வேண்டிய கட்டாய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது எந்த  அளவு வெற்றிபெறும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இந்தியாவில் 24 கோடிக்கு மேல் கிரிடிட் கார்டுகளும்  6.50 கோடிகளுக்கு மேல் டெபிட் கார்ட்களும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின்  மார்ச் 2016 அறிக்கை  சொல்லுகிறது. இதில் பயன்படுத்தாத கார்டுகள் 39%க்கும் மேலிருக்கிறது.

 நாட்டின்  மொத்த சில்லறை வணிகம் 12 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டிருக்கிறது. இது ஆண்டுக்கு 6 % வளருகிறது என்றும்  உலகிலேயே மிக அதிகளவில் சில்லறை வணிகம் செய்யும் கடைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.  இந்த நிலையில் சில்லறை வணிக   பரிவர்த்தனைகள்  முழுவதுமாக இல்லாவிட்டாலும் கூட பெரிய அளவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும்   கார்ட் களின் மூலம் நடைபெறமுடியாது.
இந்த நிலையை மாற்ற. கார்டு பரிவர்த்தனைகளை  ஊக்குவிக்கும் வகையில், அதற்கான கட்டண குறைப்பு, ஊக்கப் பரிசுகள் போன்றவற்றை அரசு அறிவித்திருக்கிறது.  தற்போது  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனையின்போது  கட்டணம் ரூப்பய் 2,000 வரை 0.75 சதவீதமாகவும், x2,000க்கு மேல் ஒரு சத வீதமாகவும் உள்ளது. கார்டு பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்தக் கட்டணம்  தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதோடு, பிற சேவை கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவை எந்த அளவுக்கு  நுகர்வோருக்கு உதவும்?
 டெபிட்கார்டுகளுக்கான கட்டணங்கள்  ரத்து செய்யப்பட்டதால், நுகர் வோருக்கு எந்தப் பலனும் கிடைக்காது  காரணம் இந்தக் கட்டணம், வணிகர்களுக்கான கட்டணம்.  இது தள்ளுபடி செய்யப் பட்டதால், அவர்கள்  இது நாள் வரை செலுத்திவந்த இந்தக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வங்கிக்குச் செலுத்த வேண்டியதில்லை.  ஆனால் அதற்காகப் பொருட்களின் விலையைக் குறைக்கப்போவதில்லை.
டெபிட் கார்டுகளுக்கான இந்தக் கட்டணம் ஒரு சதவீதத்துக்கு மேல் கூடாது என்றபோதும், கிரெடிட் கார்டுகளுக்கு இந்தக் கட்டண உச்சவரம்பு இல்லை. இது சில வங்கிகளில் 2.5 % வரை இருக்கிறது. . இதனால் தான் இன்று பல இடங்களில் கார்ட்களுக்கான வங்கி கட்டணத்தை நகர்வோர்களிடம் வசூலிக்கிறார்கள். இந்த முறையில் பெரிய மாற்றம் வராதவரை நுகர்வோர் கார்ட் முறைகளுக்கு மாறுவதால்  வாங்கும் பொருட்களுக்கு  அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டணங்களில் பெரிய பகுதி  கார்ட் முறையில் செலுத்த உதவும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் என்ற கருவி வழங்கியிருக்கும் நிறுவனத்துக்கும் வங்கிகளுக்கும் போகிறது. இதனால் அவர்களின் வருமானம் உயரும். நுகர்வோர்  ரொக்கத்துக்கு வாங்குவதை விட அதிக விலையாக இந்த கட்டங்களைக்  கொடுக்க வேண்டியிருக்கும்.
இதைத்தவிர வங்கிகள் காரட்டுகளை வழங்க ஆண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு ரிசர்வ் வங்கியின் விதிகள் எதுவும் இல்லாதால், இந்தக் கட்டணம்  எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் இந்தக் கட்டணங்கள்  கார்டை பயன்படுத்தாவிட்டாலும் செலுத்த வேண்டும். சில வெளிநாட்டு வங்கிகள் கார்டை பயன்படுத்தாற்காகவும்  அதிக கட்டணம் வசூலிக்கிறது.
கார்ட் பரிவர்த்தனைகளுக்கு சந்தை தயாராகயிருக்கிறதா?
இப்போது நாடு முழுவதிலும் 15.1 லட்சம் ஸ்வைப் மிஷின்கள் இருக்கின்றன.  அரசின் திட்டப்படி கார்ட் மூலம் வணிகம் பரவலாக அதிகரிக்க வேண்டுமானால் இன்னும் 20 லட்சம் மிஷின்கள்  உடனடியாக வேண்டும். ஆனால் இதைச் செயல்படுத்த  குறைந்தபட்சம் ஒராண்டு ஆகும் என்கிறார் பாரத ஸ்டேட்வங்கியின்  முதன்மை பொருளாதாரஆலோசகர்  திரு எஸ். கே கோஷ். மேலும்   அதிவேக இன்டர்னெட் இணைப்புகள் இல்லாமல் இது வெற்றிகரமாகச் சாத்தியமில்லை. மின்சாரமே பிரச்னையாக இருக்கும் பல கிராமப் பகுதிகளில் இது மிகப்பெரிய சவாலாக எழும்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி  நோட்டுகளின் மதிப்பழிப்புக்கு  முன் ஒரு டெபிட் கார்டில் மாதத்துக்கு சராசரியாக 1500 ரூபாய் பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது.  அறிவிப்புக்குப் பின்னர் இந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றமில்லை. அதாவது கார்டுகளை ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்தவர்களை விடப் புதிதாக  அதிகமானோர் இதைப் பயன்படுத்தவில்லை.

 

வாலட் முறை எளிதா?

பிரதமர்  ஒரு கூட்டத்தில் பேசும்போது “கார்டுகள் கூட அவசியமில்லை. உங்கள் போன்களை பயன் படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யுங்கள்” எனத் அறிவித்தார். இந்த ‘இ வால்ட்’ முறையிபடி உங்களுக்கு கார்டுகள் வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு, அல்லது அதுபோன்ற ஒரு அமைப்பில்  நீங்கள் வைத்திருக்கும் பணத்திலிருந்து போன் மூலமாகவே விற்பனையாளர்  வங்கிக்கணக்கு பணத்தை நேரிடையாகச்  செலுத்த முடியும்.
இது எந்த அளவுக்குச் சாத்தியம்? இதற்கு ஸ்மார்ட் போன்கள் தேவை  என்பது மட்டுமில்லை அதை வங்கி பரிவர்த்தனைக்கு  எளிதாகக் கையாள  எல்லோருக்கும் தெரிந்திருக்கவும் வேண்டும். இந்தியாவில்  மொபையல் போன் பயன்படுத்துபவர்கள் 100கோடிக்கும் மேல் என்பதும், உலகில்  இந்தியா 2 வது இடத்தில் இருக்கிறது என்பதும்  உண்மை  என்றாலும்  அதில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 3 கோடிகளுக்கும் குறைவு. முக்கிய காரணம் விலை..
 இவர்கள் ஸ்மார்ட் போன் வாங்குது மட்டுமில்லாமல் இணைய வேகத்துக்குஏற்ப டேட்டா கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த டேட்டா கட்டணத்துக்காக  கூடுதலாக மாத பட்ஜெட்டில் ஒரு தொகையை ஒதுக்கினால்தான்  இ வாலட் முறையைப் பயன்படுத்த முடியும்

 இந்தச்சூழலில் அரசு என்ன செய்ய வேண்டும்?


மிகப் பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்கள் பற்றி  தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், குறிப்பாக கிராமமக்களிடம் இதை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்லவேண்டும்.
கட்டணம் வசூலிப்பதால்,  சிறு வணிகர்கள் ஸ்வைப்பிங் மிஷின்களை நிறுவத் தயங்குகிறார்கள், இதைத் தவிரிக்க வங்கிகள் குறைந்த கட்டணத்தில் இதை வழங்கவேண்டும்  அவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களையும் வெகுவாக குறைக்க வேண்டும். டிஜிட்டல் முறை  மூலம் நடந்த பரிவர்த்தனைகளுக்கு 80 c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இதுபோன்ற திட்டங்களை அறிவிக்காமல், லாட்டரி பரிசுகளை மட்டும்  அறிவிப்பதினால் பயன் ஏற்படாது. டிஜிட்டல்  பண பரிமாற்றத்தினால்  மக்கள்  செலுத்த வேண்டிய  மறைமுக கட்டணங்கள், வேகமில்லாத இணைய இணைப்புகள்  போன்று  சந்திக்கும் பல கஷ்டங்களை  நீக்க உடனடியாக ஆவன செய்யாவிட்டால் வர்த்தக முடக்கமும்  பணத்தட்டுபாடும்   அரசின் மீது மக்களின்  வெறுப்பும் தொடர்கதையாகிவிடும்.