புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30/11/15


நேரு மற்றும் அவருடைய ஆட்சிக்காலம் பற்றிய விமரிசனங்கள் பரவலாக எழுந்திருக்கும் நிலையில் Ramanan Vsv எழுதிய ’நேருவின் ஆட்சி : பதியம் போட்ட 18 ஆண்டுகள்’ என்ற புத்தகம் இன்று Sixthsense Publications வழியாக வெளியாகியுள்ளது.
நேருவைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் முன்னர் கட்டாயம் வாசிக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை வாங்க:
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
(தியாகராயநகர் பேருந்துநிலையம் அருகில்)
தியாகராயநகர், சென்னை - 17.
தொடர்புக்கு: 72 000 500 73
http://sixthsensepublications.com/
LikeLike ·  · 

28/5/15

கறுப்புப் பணம்

Ramanan Vsv
May 26 at 10:19am ·
கறுப்புப் பணம்
மதிப்புரை.காம் எனது “ கறுப்பு பணம்” புத்தகத்திருக்கு வெளியிட்டிருக்கும் விமர்சனம் இது

கறுப்புப் பணம், ரமணன், கிழக்கு பதிப்பகம், ரூ 80
கறுப்புப் பணம் புத்தகத்தின் அட்டையில் புத்தகத்தின் பெயரை பெரிய எழுத்தில் சிவப்பில் வடிவமைத்துள்ளனர். கறுப்புப் பணம் என்பது பழைய சொற்றொடர். அதனை மாற்றி சிவப்புப் பணம் என்றே இனி சொல்லலாம்.
இந்தியாவின் கோடிகணக்கான கறுப்புப் பணம் சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நாள்தோறும் செய்திகள் வருகிறன. அதனை மீட்டு வருவோம், ஒவ்வொரு இந்தியனுக்கும் சுமார் இருபது லட்சம் கிடைக்கும் என்று சொல்லியே ஆட்சியைப் பிடித்தார்கள். இன்றும் அதே நிலையில்தான் இந்த நாடு உள்ளது.
கறுப்புப்பணம் என்றால், ப்ளாக் ஜோக்காக சொல்லவேண்டும் என்றால், கறுப்புப்பணம் கடவுளைப்போல.
கடவுளை யாரும் கண்ணால் கண்டதில்லை. அதே போல் கறுப்புப் பணத்தையும் யாரும் கண்ணால் கண்டதில்லை.. எல்லாரும் கடவுளை பற்றியும் பேசுவார்கள். கறுப்பு பணத்தைப் பற்றியும் பேசுவார்கள்.
கறுப்புப் பணத்துக்கு அனைவரும் ஒரு காரணம் என்று இந்த நூலின் ஆசிரியர் ரமணன் ஓர் அதிர்ச்சி அளிக்கிறார். அது எப்படி? வரி கட்டப்படாத எந்த ஒரு பணமும் கறுப்புப் பணமே.
நீங்கள் ஒரு உணவகம் செல்கிறீர்கள்.. அங்கு பணிபுரியும் சர்வருக்கு டிப்ஸ் அளித்தால், அது அவன் கணக்கில் கறுப்புப் பணம். இது போல. கோவில் அர்ச்சகர் தட்டில் சேரும் தட்சணையும், உண்டியல் குலுக்கி சேரும் நிதியும்கூட.
எந்த ஒரு பணத்துக்கும் முறையான கணக்கு இருக்க வேண்டும்.. அதற்கு வரி கட்டப்பட வேண்டும்.. இல்லையேல் அது கறுப்புப் பணம்தான்.
கறுப்புப் பணம் என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது, எப்படி பதுக்கி வைக்கப்படுகிறது, இதில் சுவிஸ் வங்கியின் முக்கியத்துவம் என்ன, சுவிட்ஸர்லாந்து தவிர மற்ற எந்த நாடுகள் கறுப்புப் பணம் பதுக்க வழி செய்கிறது எனப் பல விவரங்களை புட்டு புட்டு வைக்கிறார் நூலாசிரியர்.
ஒரு இரண்டாயிரத்தி நானூறு சதுர அடி உள்ள ஓர் அலுவலகத்திலிருந்து இந்தியாவிற்கு எவ்வளவு அந்நிய முதலீடு வர முடியும்? யோசித்து பாருங்கள். இந்தியாவிற்கு வரும் அந்நிய முதலீட்டில் 7௦% மொரீஷியஸ் நாட்டிலிருந்து வருகிறது. ஒரே முகவரியில் சுமார் 2௦௦ அலுவலகங்கள் பதியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் லெட்டர்பேட் கம்பனிகள்.
எதற்கும் நிஜமான முகம் கிடையாது.. இந்தியாவில் உள்ளது போல KYCஐ (ஒரு வாடிக்கையாளர் பற்றிய முழு விவரங்கள்) இந்த நாட்டு வங்கிகள் வைத்திருப்பதில்லை. அதனால் இந்த கறுப்புப் பணத்தை மீட்க நினைத்தாலும் முடிவதில்லை.
ஆளும் கட்சி எதிர்க் கட்சி என பல தரப்பிலும் குற்றவாளிகள் உள்ளார்கள். வேண்டாதவர்கள் தவிர அனைவரையும் காப்பற்றும் மிக பெரிய பொறுப்பு நிதி அமைச்சருக்கு உள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, நாடாளுமன்றத்தில் சுவிஸ் வங்கி பட்டியலை வெளியிட்டால் அவர்கள் பணத்தை எடுத்து வேறு நாட்டுக்கு கொண்டுசென்று விடுவார்கள், அதனை மீட்கவே முடியாது என்றார். அப்போது பாஜக கட்சியினர் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவரிடம் தகுந்த விளக்கம் கேட்டார்கள். வெளிநடப்பு செய்தார்கள்.
ஆட்சி மாறியது.. ஆனால் காட்சி மாறவில்லை. இப்போது அதையே காங்கிரஸ்காரர்கள் செய்கிறார்கள். கறுப்புப் பணத்தை மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை.
ரமணன் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். ஊழலை ஒழிக்க நினைக்கும் சக இந்தியர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்பித்துள்ளார். அந்த நம்பிக்கை நிஜமாகி விட்டால் இந்தியாவிற்குப் பொற்காலம்தான்.
-முருகதாஸ்
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-8414-907-9.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234
Share this:
Ramanan Vsv's photo.
Like · Comment · Share
Kavingar Nepolian, Srichandar Krishna Rao, குமார் லலித்குமார் and 10 others like this.
2 shares

Valiyur Subramanian I like the review
Like · Reply · May 26 at 1:05pm

Ramakrishnan Narayanan Will it become a BLACK MONEY even if the total of such unaccounted money is less than the exempted limit. If so, the amounts paid to veg vendors, servants, dhobi, ironman and so on will also come under the category. Let us be reasonable.
Like · Reply · May 26 at 3:27pm

Suprajaa Sridaran ரமணின் கருப்பு பணம்
Like · Reply · May 26 at 5:56pm

Anbu Jaya வாழ்த்துகள்
Like · Reply · May 26 at 6:25pm
Ramanan Vsv

Write a comment...

16/3/15

வெற்றி வெளியே இல்லை- கல்கியில் விமர்சனம்



”வெற்றி வெளியே இல்லை” நூலை  மூத்த பத்திரிகையாளார் ‘சுப்ர பாலன்” இந்த வார(22/03/15) கல்கியில் விமர்சித்திருக்கிறார். அதை இந்த சுட்டியில் பார்க்கலாம் 

http://ramananvsv.blogspot.in/

1/2/15

தினமலர் வார மலர்


இன்றைய தினமலர் வாரமலர் மூத்தபத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருப்பது

பார்த்தது,படித்தது, ரசித்தது.
அந்த நெல்லைக் காரரின் புத்தகம் தபாலில் வந்தது!
பிறகு படிக்கலாம் என்று தான் புரட்டினேன்!
ஆனால் அந்த புத்தகம் என்னை அப்படியே உள்ளே இழுத்தது!
151 பக்கம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!
புத்தகத்தின் தலைப்பு: நேருவின் ஆட்சி ! பதியம் போட்ட 18 ஆண்டுகள்!
எழுதியவர் ரமணன்!
இவரை எனக்கு 1980 களுக்கு முன்னாலிருந்தே தெரியும்!
நடுவில் பல ஆண்டுகள் அவருடைய வங்கி அதிகாரி வேலை அவர் அதிகமாக எழுதுவதிலிருந்து தள்ளி வைத்திருந்தது!
இப்போது படுவேகமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்!
எழுதுவதற்காக படிப்பது ஒரு வகை!
படிப்பதை ஒரு ஆர்வமான காதலாக கொண்டவர்கள் இன்னொரு வகை!
ரமணன் இரண்டாவது வகை!
அதனால்தான் இந்திய சுதந்திர ஆரம்ப நாட்களை இத்தனை ஆழமாகவும் அழுத்தமாகவும் இவரால எழுத முடிந்திருக்கிறது!
இது ரசனையுள்ள வாசகனுக்கான புத்தகம் மட்டுமல்ல! அரசு பணியில் சேர விரும்புகிறவர்களுக்காக ஒரு இந்திய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நேரு ஆட்சி குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது!
திடிரென்று புதிய ஆட்சியாளர்கள் மறந்து போன வல்லபாய் படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!
அவரை மதவாதி என்கிறது காங்கிரஸில் ஒரு கூட்டம் !
ஆனால் ஆர்.எஸ்.எஸ்.. இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்று தீவிரமாக இருந்து அதை செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல் என்பதை ஆழமாக பதிய வைத்திருக்கிறது இந்த நூல்!
பாரபட்சமற்ற ஒரு பத்திரிகையாளனுக்கே உரிய ஒரு நேர்மையான எழுத்தாளப் பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்கமுடிகிறது!
நேருவை போற்றவும், தூற்றவும் செய்வதற்கு முன்னால் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது!
இன்றைய இந்தியாவின் பெருமைகள், சிறுமைகள் இரண்டிலுமே நேரு தான் கதாநாயகர்!
ஜனநாயகம்,நேர்மை, நல்லாட்சி , தொலைநோக்குப் பார்வை இவை நேரு ஆட்சிக் காலத்தின் அடையாளங்கள்!
மொழிப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, நதிநீர் விவகாரம், வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் இதன் தொடக்கப் புள்ளியும் நேருவின் ஆட்சிக் காலமே!
காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு போனதும் நேருதான் என்கிறார்கள்!
உண்மைதான்! அதை எந்தப் பின்னனியில் கொண்டு சென்றார்?
அதற்கு பதில் இங்கே உள்ளது!
சீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள்!
இதன் பின்னனி என்ன ? இங்கே பதிவு உண்டு!
அடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட ஒரு சரியான மனிதரின் அக்கறையான பதிவு இந்த புத்தகம்!
இது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிடு!
(நன்றி: நெல்லை தினமலர் வாரமலர்!)

19/1/15

புத்தகக் காட்சி 2015 (13 01 2015) நேருவின் ஆட்சி வெளியீடு










 நேரு புத்தக புத்தக வெளியிட்டை ஒரு டிவி சானல் நடத்தியது புதிய அனுபவம்.  புத்தகம் பற்றிய கேள்விகள் சுவாரஸ்சியமாக இருந்தது. இரண்டு புத்தகம் வெளியிட்டதனால் நிறைய எடிட்டிங்குப்பின் நிகழ்ச்சி சுருக்க பட்டிருக்கிறது.
நண்பர் நெல்சன் முழு பதிவையும்  அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்.

11/1/15

இருளில் நிசப்தத்தை படிப்பவர்


நண்பர் மணிகண்டனின் வலைப்பூவிலிருந்து 





JAN 11, 2015
அடேயப்பா



 நேற்று காலையில் பதற்றமாகத்தான் இருந்தது. இயல்பான பதற்றம்தான். வழக்கமாக புத்தக வெளியீட்டுக்கு முன்பாக இருக்கும். ஆனால் பதிப்பாளரும், வேடியப்பனும் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். கொஞ்ச நேரம்தான். கண்காட்சிக்குள் நுழைந்ததும் இயல்பாகிவிட்டேன். 

திருப்பதியிலிருந்து மகேஷ் தனது நண்பரின் உதவியோடு வந்திருந்தார். வழக்கமாக புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு எழுத்தாளர்கள் சார்பில் ஏதாவது நினைவுப்பொருளை வழங்குவார்கள். அதைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. ஆனால் மகேஷ் எனக்கு வழங்கினார். அதன்பிறகுதான் எனக்கு உறைத்தது. போக்குவரத்துச் செலவையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் அதையும் மறுத்துவிட்டார். பார்வை இல்லையென்றாலும் எப்படி நிசப்தத்தை வாசிக்கிறார் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அவர் கொடுத்துச் சென்ற ஏழெட்டு திருப்பதி லட்டுகளை கண்காட்சியில் எதிர்பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு அழைப்புக்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்.

அதே போலத்தான் திருமதி மீரா ரமணன் தம்பதியினரும். ரமணன் அவர்கள் தனது கைக்காசைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ட்ரஸ்ட்டுக்காக வைத்துக் கொள்ளுங்கள்என்றார். அறக்கட்டளைக்காக கையில் பணம் வாங்குவதில்லை. அது ஒரு எழுதப்படாத விதி. கையில் வாங்குவதையோ அல்லது பெர்சனல் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுப்பதையோ முழுமையாகத் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. வாங்கத் துவங்கினால் அது தேவையற்ற பேச்சுகளுக்கு இடமளித்துவிடும். அதனால் அந்தத் தொகையை பதிப்பாளரிடம் கொடுத்து அதை ராயல்டியுடன் சேர்த்துத் தரச் சொல்லிவிட்டார்கள். ராயல்டி தொகை அரசுப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு வழங்கப்படும் என்பதால் இந்த ஏற்பாடு.

இளவரசன் பத்துப் பிரதிகளை வாங்கி தனது நண்பர்களுக்கு விநியோகிப்பதாகச் சொன்னார். புகழேந்தி ஐந்து பிரதிகள் வாங்கிக் கொண்டு அவரும் அதையேதான் சொன்னார். இன்னும் நிறையப்பேர்கள். அத்தனை பேரையும் நினைவு படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

மாலை ஏழு மணிக்குள் டிஸ்கவரி அரங்கில் கொண்டு வந்து வைத்திருந்த நூறு பிரதிகளும் தீர்ந்துவிட்டன. பதிப்பாளரும், விற்பனையாளரும் இது ஆச்சரியம் என்றார்கள். எனக்கே ஆச்சரியம்தான். இவ்வளவு பேர் நம்புகிறார்கள். தாங்கிப் பிடிக்கிறார்கள். ஏற்கனவே
 ஆன்லைன் ஆர்டர்கள் கிட்டத்தட்ட நூறை நெருங்கியிருக்கும் போலிருக்கிறது. ஆக, பதிப்பாளர் தப்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இதுதான் அவசியம். நம்மை நம்பி முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றுதான் பதற்றமாக இருந்தேன். 
  
 அதெல்லாம் ஒரு பக்கம். 

புத்தகம் அச்சிடுவதும் அதை விற்பனை செய்வதும் கூட பெரிய விஷயமாகத் தெரியவில்லை. பதிப்பாளரிலிருந்து, விற்பனையாளர், வாசித்துவிட்டு நமக்காக மெனக்கெடுபவர்கள் என இப்படியான மனிதர்கள் உடன் நிற்கிறார்கள் அல்லவா? அதுதான் உச்சபட்ச சந்தோஷம். அதற்காக மட்டுமே இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். சிரமப்படலாம்.

மாலை வரை வீட்டிலிருந்து ஒரு அழைப்பும் இல்லை. கிளம்பும் போதே பார்க்கர் பேனா ஒன்றை வாங்கிக் கொடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தாள். இதெல்லாம் ஓவரா இல்லையா?’ என்றேன்.
 எந்த ஃபோட்டோவிலும் அந்தப் பேனா இல்லாமல் நீங்க இருக்கக் கூடாதுஎன்று உத்தரவிட்டிருந்தாள். யாருக்குமே பயப்படவில்லையென்றாலும் அவளுக்கு பயப்படுகிறேன். பயப்பட்டுத்தானே ஆக வேண்டும்? 

மாலையில்தான் அழைத்துக் கேட்டாள் புத்தகக் கண்காட்சியில் உங்களை மதிச்சாங்களா?’என்று. என்ன பதில் சொன்னாலும் ம்க்கும்என்ற பதில்தான் வரும் என்று தெரியும். பதில் சொன்னேன். நினைத்த பதிலேதான் வந்தது.

இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்ற வேண்டும். நேற்றே பட்டியல் தயாரித்துவிட்டேன். இன்று வாங்கி விடலாம். வழக்கமாக கையில் பணத்தோடுதான் வருவேன். இந்த மாதம் புது நிறுவனத்திற்கு மாறியதால் சம்பளம் வரவில்லை. தம்பியிடமிருந்து மூன்றாயிரம் ரூபாய் வாங்கி வந்து எண்ணி எண்ணி செலவு செய்து கொண்டிருந்தேன். அந்தக் கடவுளுக்கே பரிதாபமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பழைய நிறுவனத்தில் இறுதிக் கணக்காக ஒரு தொகையைப் போட்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ் வந்ததும் இரண்டு சிறகுகள் முளைத்ததை அருகிலிருந்தால் நீங்கள் பார்த்திருக்கலாம். இன்று தூள் கிளப்பிவிடலாம். கடவுளுக்கும் நன்றி.

எல்லாத் திசைகளிலிருந்தும் கிடைக்கும் இந்த அன்பும் பிரியமும் எனது உழைப்புக்கும் திறமைக்கும் மீறியது என்று நினைக்கிறேன். உண்மையாகவே மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

8/1/15

டிராகன் பறக்க ஆரம்பித்துவிட்டது



பழமை,வறுமை, குழப்பம், பெரிய மக்கள் தொகை, முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்னியூசம் எல்லாம் இருந்தும்  பிரம்மாண்ட வளர்ச்சியை சீனா அடைந்திருப்பதின் ரகசியம் என்ன?
தொடர்ந்த வளர்ச்சி என்ற தொலைநோக்குடன் இயங்கும் சீரிய தலமையா?
ஜனநாயகத்தை பலிகொடுத்து அடைந்து கொண்டிருக்கும் செயற்கையான வளர்ச்சியா?
இந்தியா இது போன்ற வளர்ச்சியை திட்டமிட்டு அடையமுடியுமா?
இத்தனை வேகத்தில் பறக்கும் டிராகன் உலகின் முதலிடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தில் நிலைக்குமா? 
அந்த இடத்தில் தன்னை உறுதியாக தக்க வைத்துக்கொள்ளுமா?
இந்த அடுக்கடுக்கான கேள்விகளை ஆராய்கிறது இந்த புத்தகம். 

எனது இந்த புதிய புத்தகத்தை கிழக்கு வெளியிட்டிருக்கிறது பக் 104 
விலை 90.ரு. புத்தக கண்காட்சியில் கிடைக்கும் ஆன்லையனிலும் வாங்கலாம்

3/1/15

புத்தாண்டின் முதல் நாள் காலையில்


புத்தாண்டின் முதல் நாள் காலையில் முதலில் படித்த பதிவு இது. நண்பர் சரவணின் விமர்சனம். ஒரு அருமையான பதிவாக கருதுகிறேன். எழுதியிருப்பதை சொல்லிவிட்டு விடுபட்டிருப்பதை அவர் பார்வையில் பேசியிருக்கிறார். எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது. இந்த புத்தாண்டுதினத்தில் அந்த சந்தோஷத்தை கொடுத்த நண்பர் சரவணுக்கு நன்றி.





பூ.கொ. சரவணன்
நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :
தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.
பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.
சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.
காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.
இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,
முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.
சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.
அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.
சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115
புத்தகத்தை வாங்க http://www.wecanshopping.com
---------------------------------------------------------------------------------------------------
இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.
ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.
அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.
இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.
சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.
  • Shah Jahan //எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது.//சரியாகச் சொன்னீர்கள்.
  • Vedha Gopalan # எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது #

    Very correct.! அனுபவப்பூர்வமாக உண்ர்ந்திருக்கிறேன்! ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இன்னும் பெரிய சந்தோஷம் அளிக்கிறது


13/11/14

நேருவின் ஆட்சி

நாளை அமரர் நேருவின் 125 பிறந்த நாளை ஆளுவோரும், ஆண்டவர்களும் தனித்தனியாக கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் என்னுடைய ” நேருவின் ஆட்சி -பதியம் போட்ட 18 ஆண்டுகள்” என்ற புத்தகத்தத்தை ஸிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. மற்ற விபரங்களை அவர்கள் விரைவில் அறிவிப்பார்கள். 

28/7/14

கடைசிக்கோடு பேசபட்டிருக்கிறது.

இன்று மதியம் ஒரு போன்என் பெயர் நடராஜன் பள்ளித்தலமையாசிரியர். ஊட்டியிலிருந்து பேசுகிறேன்உங்கள் கடைசிகோடு புத்தகம் படித்து கடந்த இரண்டு நாட்களாக அதன் தாக்கத்தில் இருக்கிறேன். அருமையான  புத்தகம், நேற்று வகுப்பில்  மாணவர்களுக்கு இந்திய மேப்பை காட்டி  அது பற்றி பேசினேன்”  என்றார்எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம்    இருக்க முடியும்?

சந்தோஷமான அதிர்ச்சி. கடந்த வாரம் சன் டிவியில்வாங்க பேசலாம்நிகழ்ச்சியில் ராஜாவும் பாரதிபாஸ்கரும் கடைசிக்கோடு புத்தகத்தை விமர்சித்திருக்கிறார்கள்.  அதைப்பார்த்த உடனே திரு நாடராஜன், ராஜாவை தொடர்பு கொண்டு கவிதாவெளீயிடு என்பதை அறிந்து  பிரசுரத்தினை தொடர்பு கொண்டு புத்தகம் வாங்கி படித்து பின் எனக்கு போன் செய்திருக்கிறார்.  அந்த நிகழ்ச்சிபற்றி எனக்கு தெரியாதால் நான்  அன்று பார்க்கவில்லை. இன்றுதான்  யூ டுபில் பார்த்தேன்
.
  அந்த விமர்சனத்தை    இங்கே கிளிக் செய்து யூ டூயூபில்  பார்க்கலாம்

27/4/14

பயணங்கள் முடிவதில்லை.

இது வரை எழுதிய பயணகட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக  இந்த தமிழ் புத்தாண்டில் வெளிவந்திருக்கிறது. கவிதாவின் வெளியீடு. வாங்கி படித்துவிட்டு கருத்துச் சொன்னால் சந்தோஷப்படுவேன்.





5/3/14

கடைசிக்கோடு பற்றி....



சென்ற வார ஒரு முற்பகலில் ஒரு போன்.  "நான் மிஸஸ் மாலதி  பார்த்தசாரதி" என்ற  றிமுகத்துடன் பேசியவர்  என்னுடைய  கடைசிக்கோடு புத்தகத்தை பற்றி ஒரு நண்பர் மூலம் அறிந்து படித்ததாகவும், மிக  நல்ல புத்தகம், மிக நன்றாக, சுவையாக விஷயம் சொல்லபட்டிருக்கிறது என்று
 மிகவும் பராட்டினார். அவர் மட்டுமின்றி, விஞ்ஞானியாகயிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் பேராசியராக பணியாற்றும் அவரது கணவரும், அவரது மற்ற குடும்பத்தினரும்  வாசிப்பதை நேசிப்பவர்கள் என்றும் தொடர்ந்து புத்தகங்கள் படித்துகொண்டிருப்பவர்கள் எனவும் சொன்னார். வெளியிட்டிருக்கும் கவிதா பதிப்பகத்தை தொடர்பு கொண்டுஎன் நம்பரை வாங்கி பேசிய இவர்  சொன்ன விஷயம் சிந்திக்க வைக்கிறது., தானும் தன் வெளிநாட்டிலிருந்தாலும் தங்கள் வாரிசுகளூம் தமிழ் படிப்பைதைப் போல, தன் பேரக்குழந்தைகள்  தமிழே தெரியாத காரணத்தால் இதுபோன்றவைகளை படிக்க முடியவில்லை.  நீங்கள் ஏன் இதைபோன்றவைகளை  அவர்கள் நலனுக்காக ஆங்கிலத்திலும் எழுதக்கூடாது ?
எதையும் எளிய தமிழில் சொல்ல முடியும் என்ற நம்பும் எனக்கு  நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதை தமிழில் மட்டும்  சொன்னால் போய்ச்சேராதோ? என்ற என்ணத்தை இது எழுப்பியிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் படிக்க முடியாத கல்விசூழல் ஏற்பட்டதற்கு யார் காரணம் என்று இப்போது  ஆராய்வதில் பயன் இல்லை. எளிதாக ஆங்கிலம் மூலம் தமிழை  விஞ்ஞான முறைப்படி சொல்லிக்கொடுக்கும் வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம்.  இதை எப்படி,செய்யலாம்? என்பதற்கான ஆலோசனைகளை பட்டியலிட்டுகொண்டிருக்கிறேன். உங்கள் யோசனைகளையும் எழுதுங்களேன்.
மூத்த எழுத்தாளார் சுப்ர. பாலன்  கடைசிக்கோடு புத்தகத்திற்கு கல்கியில் எழுதிய விமர்சனம் இது


பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம்!



                              சுப்ர. பாலன்



       நில அளவைத்துறை  என்கிறார்கள் இன்றைக்கு. சங்கிலி பிடித்து நூறு நூறு அடியாக இந்த தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வேத்துறையில் பிள்ளையார்சுழியிட்ட இரண்டு வௌ;ளைக்கார அதிகாரிகள். 1802 ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரீனாக் கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் பணியை, டேராடூனில் கடைசிக்கோட்டை வரைந்து முடித்துவைத்தவர் மூன்றாவது சர்வேயர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்னல் ஜார்ஜ் எவரெஸ்ட்.  இடைப்பட்ட காலம் அறுபது ஆண்டுகள்!

        இந்தப் பணியின்போதுதான் அதுவரை பெயர் சொல்லிக் குறிப்பிடாமலிருந்த இமாலயத்தின் மணிமுடியான ஒரு மலைச்சிகரத்தையும் கண்டு அதன் உயரத்தை 29002 அடி என்று கணக்கிட்டார்கள். ஜார்ஜ் எவரெஸ்ட் காலமானபிறகு இந்தப் பணியில் அடியெடுத்துக் கொடுத்த அந்த உயர் அதிகாரியின் பெயரையே அந்தச் சிகரத்துக்துச் சூட்டித் தங்கள் நன்றியைப் பதிவுசெய்திருக்கிறார்கள். நல்ல காலம்! முன்பே கண்டுபிடித்துஎவரெஸ்ட்என்று அதற்குப் பொருத்தமாக நாமகரணம் செய்துவிட்டார்கள்.

        முதலில் அளந்த தொலைவு மெரீனா கடற்கih அருகே இருந்த சிறு குன்றில் தொடங்கி  பறங்கிமலை வரையிலான ஏழரை மைல் (12 கி.மீ). இந்தத் தொலைவை அளந்து பதிவுசெய்ய 57 நாட்களாகியிருக்கின்றன. நரற்பது சிறிய இரும்புச்சங்கிலிகள் கொண்ட 100 அடி நீள அளவுசங்கிலியை 400 முறைகள் பயன்படுத்தவேண்டியிருந்ததாம்.


        புகழ்பெற்ற தஞ்சை பிரகதீசுவரர் கோயில் கோபுரத்தின் வட்டக்கல்லில் ஏறி நின்று பல டன் எடைகொண்ட கருவியை வைத்து அளவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது லாம்ப்டனுக்கு. வழக்கம்போல் ஆலய சம்பிரதாயத்தடைகள். எப்படியோ சமாளித்து வேலையைத் தொடங்கியபோது அறுபது அடி உயரத்திலிருந்து அந்தக் கருவி கீழே விழுந்து உடைந்தது. அப்போது அந்தப் பொறுப்புள்ள அதிகாரி கர்னல் லாம்ப்டன்                                                   …2…

தம்முடைய மேலதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கை பொதுப்பணியில்  இன்றைக்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயலும் பலருக்கும் பாடமாக அமையவேண்டிய ஒன்று.

      ‘…நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.  அதன் விலையான 650 பவுண்டை என் செலவாக ஏற்கிறேன்..எனது சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளுங்கள்..’ இந்த விலை மதிக்கமுடியாத கர்னலின் குறிப்பு இன்றைக்கு டேராடூனிலுள்ள அருங்காட்சியகத்தில், அந்த உடைந்து பழுதான தியோடலைட் கருவியோடு வைத்துப் பாதுகாக்கப்படுகிறதாம்.

      பல்சக்கரங்கள் உடைந்து பழுதான அந்தக் கருவியின் பாகங்களை உள்ளுர் ஆட்களை வைத்தே புதிதாக உருவாக்குகிறார். திருச்சி அருகே உள்ள தங்கம்பட்டி கிராமத்தின் தொழிலாளர்களை வைத்து அந்த வேலையைச் செய்துமுடித்தாராம். அந்த கிராமம்தான் பின்நாளில்கோல்டன் ராக்என்று பெயர் மாறியது. இடிந்துவிழுந்த கோபுரப்பகுதியை எடுத்துக்கட்டியபோது அதில் அந்த வௌ;ளைக்காரர் உருவத்தையும் வடித்து வைத்திருக்கிறார்கள். தஞ்சை கோபுரத்தில் இடம்பிடித்துள்ள வௌ;ளைக்காரர் உருவம் இந்த கர்னல் லாம்ப்டனுடையதுதான் என்றுகூட ஒரு குறிப்பு உள்ளது என்கிறார் இந்த அருமையான நூலை எழுதியுள்ள ரமணன்.

      இந்த நூலை எழுதுவதற்குச் செலவிட்ட உழைப்பில் ஒரு நாவல் எழுதிவிடலாம். அது பெயரையும் பொருளையும்கூடக் கொண்டுவந்துகொடுக்கும். ஆனால் புதுமையை விரும்புகிற ரமணனின் மனம் அதைச் செய்யாது  என்று மாலன் முன்னுரையில் பாராட்டுகிறார். சத்தியமான வார்த்தைகள். இப்படி ஓர் அருமையான பாடுபொருளை எடுத்துக்கொண்டு அருமையான பயனுள்ள நூலைத் தமிழில் தருவதற்கு ரமணன்தானே முன்வந்திருக்கிறார்!



கடைசிக்கோடு..இந்தியாவின் வரைபடம் பிறந்த கதைரமணன்-

கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு,சென்னை 600 017 தொ.பே. 044 - 2436 4243… ரூ.80-



                       ..        - சுப்ர. பாலன்