11/9/11

6வேலைத்தேடி தரும் வேலை


              

நாடு முழுவதிலிருந்தும் பல லட்சங்களில் தேர்வு எழுதி அதில்முன்னணி ம்திப்பெண்கள் பெறும் சூப்பர் புதிசாலிகளில் சிறந்த்வர்களை மட்டும்  சலித்து தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும்  கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மெனேஜமெண்ட்.. இன்று உலகதரத்திலிருக்கும் இதில் படித்தவர்களை  பட்டம் பெற்றும்முன்னே போட்டிபோட்டு பெரிய நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ளும். இந்த நிர்வாகயியல் பயிற்சி நிறுவங்களில் முதலிடத்திலிருப்பது  அஹமதாபாத் ஐஐஎம்.  அதில் பயின்ற மத்தியதர குடும்பத்திலிருந்து வந்த ஒரு மாணவர்.    படிக்கும்போதே பெரிய வேலை என லட்சியமில்லை நான் ஒரு புதிய தொழில் துவங்கி வெற்றிகரமாக நடத்துவேன் என்ற் சொல்லிக்கொண்டிருந்தபோது  அவருடையா பேராசியர் உள்பட புருவம் உயர்த்தியவர்கள் பலர். அவர் சஞ்ஜீவ் பிக்சந்தானி. தனது  கன்வுகளுடன் துவக்கிய லட்சிய பயணத்தில் 10 ஆண்டு பயணத்திற்கு பின்னர்  வெற்றி கண்டவர்.  இன்று இந்தியாவின் மிகப்பெரிய இணையத்தின் மூலம் வேலைதேடித்தரும் நிறுவனமாகியிருக்கும் நாக்ரி.காம் நிறுவனத்தை உருவாக்கியவர்.  இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு 200கோடி இதுவரை பதிவுசெய்திருப்பவர்கள் 10 ல்ட்சத்திற்கும் மேல். பலருக்கு  வேலை கிடைக்க உதவியிருக்கிறது. Naukri.com  இணையதளம். தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐஐஎம்ல் படிப்பு முடிந்த வந்தவுடன் எதாவது தொழில் ஆரம்பிப்பது பற்றி தீவரமாக சிந்தித்து கொண்டிருந்தவரை ” “தீர்மானம் செய்யும்வரை ஒரு வேலையில் சேர்ந்து கொஞ்சம் பணமும் சேர்த்துக்கொள்” “ என்று சொன்னவர் உடன் படித்த தோழியும் பின்னாளில் மனைவீயுமான சுரபி. அவருக்கு நெஸ்லே நிருவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது.  ஆலோசனையை ஏற்று ஹார்லீக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நல்ல சம்பளம், வசதிகள் இருந்தாலும்  உள்ளத்தில் “சொந்தபிஸினஸ்” “ என்ற கனல் கனிந்த்து கொண்டேயிருந்தது.  திருமணமான புதிதில் ஒரு நாள் வேலையை வீசியெறிந்துவிட்டு, மனைவியிடம் நமது நிருவனம் பிறந்து  வளர்ந்து ஒருநிலையை அடையும் வரை நீ குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும் எனறு சொல்லிவிட்டு தன் தந்தையையின் வீட்டின் பின்னே இருந்த வேலையாட்களத்ங்கும் இரண்டு அறை வீட்டில்  நணபரை பார்டனராரக சேர்த்துகொண்டு நிறுவனத்தை துவக்குகிறார். பெயர் இன்போ எட்ஜ் திட்டமிட்டிருந்த பிஸினஸ்டேட்டா பிராஸிங், ஆலோசனைகள் வழங்குவது. அப்போது இந்தியாவில் அதிகமான அளவில் நிறுவனங்கள் கம்பூட்டர்களை பயன்படுத்தவில்லை, தகுதியான் ஆட்களும் இல்லை. என்வே இது நல்ல தொழிலாக வளரும் என்பது சஞ்ஜீவின் கணிப்பு,. ஆனால் எதிர்பார்த்த அளவில் வரவேற்பில்லை.. வருமானம் இல்லாமல் செலவுகள் கூடின.அதை சமாளிக்க ஒரு மானேஜ்மெண்ட்ட் கல்லூரியில் லெக்சரர் வேலைஇரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த சுரபியும் வேலையை விட்டிருந்தார். அதானால்  ஒரு நாளிதழலில் வேலை வாய்ப்பு பக்கஙகளை கவனிக்கும் சிலமணி நேர பகுதி நேர இரண்டாவது வேலை. சஞ்ஜீவ் வாய்ப்புகளை அணுகி போகுமிடங்களில் எல்லாம் பலர் பிசினஸ் டூடே என்ற பத்திரிகையை எல்லோரும் கடைசி பக்கத்திலிருந்து படித்து கொண்டிருப்பதை பார்த்தார்.   ஏன் என கவனித்து போது அது  நிறுவனங்களில் மேல்மட்ட வேலைவாய்பு விளம்பரஙகள் தெரிந்த்தது. இதை  மற்ற சதாரண வேலைவாய்ப்களுடன் நாமே தொகுத்து தரலாம் என்ற எண்ணத்தில் தினசரி பேப்பர்களில்  வந்திருக்கும் வாய்ப்பை தொகுத்து ஒரு டேட்டா பேஸை உருவாக்க தனது அலுவலக  ஊழியர்களை பணித்தார். (அவர்களுக்கு வேறு வேலையுமில்லை எனபதும் ஒரு விஷயம்.).. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் தனது நிறுவனத்தை நடத்தி வந்ததிருக்கும் இவரது அசைக்கமுடியாத தன்னம்பிக்கை நம்மை ஆச்சரியபடவைக்கிறது.  ஒரு நாள் மாலையில் பிரமாத விள்மபரபடுத்தபட்ட பொருட்காட்சியில் தனக்கு வாய்ப்பாக எதேனும் ஒரு நிறுவந்த்தின் தொடர்பு கிடைக்குமா என போனவரின் கண்ணில் பட்டது  WWW  என்ற பெயரில் ஒரு ஸ்டால். என்னவென்று விசாரித்த்தில் அது தான் இண்டர்நெட் என்றும் அதில் மெயில்அனுப்பிக்கொள்ளலாம் என்றும் தனியாக ஒரு தளம் வைத்துகொண்டு தங்கள் தொழில் பற்றி சொல்லாம் எனறும் தெரிந்து கொண்டார். உடனே இதன்மூலம் நாம் ஏன் பிஸினஸ் செய்யகூடாது எனற எண்ணம் எழுந்தது. கவனியங்கள். இன்று இண்டர்நெட் மூலம் பணம் கொட்டிக்கொண்டிருக்கும் பிஸினசை நடத்திகொண்டிருக்கும் சஞ்ஜீவிக்கு அன்று இண்டர்நெட் என்றால் என்னவென்ன்று கூட தெரிந்திருக்கவில்லை.   “எனக்கு இண்டர்நெட் எனபது தெரிந்திரிக்கவில்லை. ஆனால் சில வினாடிகளில் அதில் இருக்கும் வியாபார வாய்ப்பை புரிந்துகொண்டேன்” “ என்கிறார் சஞ்ஜீவ்.  தொடர்பு கொண்டு விபரஙகள் அறிந்த போது இணையத்தில் ஒரு தளமாக இணைய  சர்வர் இருக்கும் நிறுவந்த்தின் உதவி அவசியம் அது அமெரிக்காவில் இருக்கிறது, கட்டணம்  மாதம் 25 டாலர் செலுத்த வேண்டும் எனபதை அறிந்தார். அமெரிகாவிலிருக்கும் சகோதரை  தொடர்பு கொண்டு  இண்டர்நெட் எனறால் தெரியுமா? உதவமுடியுமா? எனகேட்டார். அவர் சிரித்து கொண்டே இங்கு எல்லோரும் பயன் படுத்துவதாக சொல்லி உதவ உறுதியளித்தார். அவர் உதவும் பணத்திற்கு தந்து நிறுவனத்தில் 5% பங்குகள் தருவதாக சொன்ன தம்பியின் நம்பிக்கையை பராட்டியவருக்கு அப்போது தெரியாது அந்த பங்குகள் ஒரே  இரவில் அவரை கோடிஸ்வரனக்கபோகிறது எனபது.
தனது தொழில் இதுதான் என முடிவுசெய்துவிட்ட சஞ்ஜீவ் முழு முச்சாக அதில் இறங்கினார். இரண்டு முழு இரவுபகல்கள் உழைத்து ஒரு திட்ட அறிக்கயை உருவாக்கினார். எதை எப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற கச்சிதமான் திட்டம். வெப் சைட்டை வடிவமைக்கவும் நிர்வகிக்கவும் டெக்கினிகல் விஷயஙகள் அறிந்தவர்கள்  தேவை எனபதால் ஐஐஎம்லில் கூட படித்த  நணபர் லாலை  அழைத்தார்.  சம்பளம் கிடையாது  நிறுவனத்தின் பங்குகளில் 9 % எனபது ஒப்பந்தம். கம்ப்யூட்டர் ப்ரோகிராமில் கில்லாடியான அவர் எனக்கு இண்டர்நெட் பற்றி எதுவும்  தெரியாது எனறவரிடம் உனனால் முடியும் என்று ஊக்கபடுத்தியதில் ஒரே வாரத்தில் நான் தயார் என்றார். சேமித்து வைத்த வேலை வாய்ப்புகள் டேட்டாகள் உதவின. 1000 வேலைவாய்ப்பு விபரங்களுடன் நாக்ரி. காம் 1997ல் பிறந்தது. சொந்தத்தில் ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாதால் நணபர் லாலின் கம்ப்யூட்டர் மூலம் இயங்கியது. முதலாண்டு 18லட்சம்இரண்டாம் ஆண்டு 36 லட்சம் என பிஸினஸ் வளர்ந்தது. கூடவே புதியபோட்டியாளார்களும் களத்தில் இறங்க தனது நிறுவனம் அவர்களைவிட பிரமாண்டமாக்யிருக்க வேண்டியதை உணர்ந்த சஞ்ஜீவிவ் செய்தத  துணிவான முடிவு. 2005ல் நிறுவன முதலுக்கு பங்குசந்தையை நாடியதுதான். நம்பமுடியாத ஆச்சரியமாக பங்குகள் வேண்டி விண்ணப்பத்தவர்கள் லட்சகணக்கில். தேவைக்குமேல் 55 மடங்கு. 320ருபாய் ஷேர்  600ருபாய்களுக்கு விற்றது. சஞ்ஜீவ் குடும்பத்தினர் தஙக்ள் பங்ககளில் சிலவற்றை விற்று கோடிஸ்ரர்கள் ஆனார்கள். அந்த ஆண்டு நாக்கிரி.காமின் வருமானம்  84 கோடி லாஉஅப் 13 கோடிகள். அன்றிலிருந்து இந்த நிறுவனம்  வேலை தேடுவதை பல புதிய பரிமாணங்களோடு அறிமுகபடுத்தி வளர்ந்துகொண்டிருக்கிறது.   “சொந்த தொழில் செய்யவிரும்புகிறீகளா? திட்டத்தில் அசாத்திய நம்பிக்கை வைத்து உழையுங்கள். வெற்றி நிச்சியம் வரும் த்மாதமாகத்தான் வரும்  அதுவரை காத்திருக்க கற்றுகொள்ளுங்கள் “ எனகிறார் சஞ்ஜீவ்






4/9/11

அழகான அழைப்பிதழ்கள் அழைக்கின்றன


லைப் பூஸ்டர் 5 4               

மேனகா கார்ட்ஸ் சங்கரலிங்கம்



சொர்கத்தில் நிச்சியக்கப்பட்டாலும்  இணையத்தில் நிச்சியிக்கப்பட்டாலும்,  அழைப்பிதழ்கள் அச்சிடபட்டு வழங்கபட்ட பின்னர்தான் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண அழைப்பிதழ் எனபது அச்சகங்களின்  ஒரு  அச்சு பணி என்ற நிலையை மாற்றி அவைகள் அழகான வடிவத்தில் அமைக்கபட்டு  முதன் முதலில் தமிழகத்தில் திருமண அழைப்புகளுக்கே ஒரு  தனிகெளரவம்  சேர்த்தவர்கள்   மேனகா கார்ட்ஸ்.  இன்று இந்த  துறையில் முதலிடம் பெற்று நாடெங்கும் க்ஷ்க்ஷ்க்ஷ் கிளகளுடனும் க்ஷ்க்ஷ்க்ஷ் போன்ற வெளிநாடுகளிலும் கிளைகளுடன் இயங்கும் இந்த நிறுவனத்தின்  துவக்கம் ஆச்சரியமானது.  இதை துவக்கியது அச்சு தொழிலை செய்துகொண்டிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அல்லது பெரிய வியாபரா பிண்னணியுள்ள  குடும்பத்திலிருந்து வந்தவராலால் இல்லை.  மிகமிக  எளிய குடுமபத்தில் பிறந்து  படிப்பின் அருமையை உணர்ந்த ஆனால் படிக்க முடியாத  வாழ்க்கைச் சூழ்நிலைகளின்யின் மேடு பள்ளங்களை கடந்துவந்தவர்.. இன்று வெற்றியின் வாயிலில் இருக்கும் இவர் வந்த பாதை புதியபாதை மட்டுமில்லை கடினமானதும் கூட.
 தென்  தமிழகத்திலிருக்கும் வானத்தை நம்பியிருக்கும் பல  வறண்ட கிராமங்களில் ஒன்று சாத்தான்குளம். திருநெல்வேலியிலிருந்து 50 கீமி  தூரத்திலிருக்கும் இந்த கிராமத்தில் விவசாயிகளும் பனை மரங்களும் தான் அதிகம்.   ஆனால் விவசாய தொழிலுக்கு  வாய்ப்பில்லாததால் சாரயாங்காய்ச்சுவதுதான் பலருக்கு வேலை.  ஒரு பகுதி கூலியாக கிடைத்தை குடித்துமகிழ்ந்தவர்கள். அந்த கிராமத்தில் உழைப்பின், படிப்பின் அவசியத்தையை உணர்ந்த்டிருந்திருந்த ஒரு தந்தை, தன் மகனை பக்கத்துஊர் பள்ளிக்கூடத்திற்கு  கைபிடித்து நடத்தி கூட்டிபோய் படிக்கவைத்தவர். அப்படி ஆரமப கல்வியைப் படித்த பையன் சங்கரலிங்கம்.  நாங்குநேரி அரசின் விடுதியில் தங்கி உயர்நிலைபள்ளிப் படிப்பை   தொடர்ந்தபோது அடிக்கடி பார்த்தது அருகிலுள்ள டிவிஎஸ் அதிகாரிகள் காரில் வருவதைத்தான்.  இந்த நிலையை அடைக்க தான் ”நன்றாக படிக்க வேண்டியதின்  அவசியத்தை யாரும் சொல்லாமலே உணர்ந்தான் அந்த மாணவன்.  தந்தையின் விருப்பபடி அக்ரிகல்சரல் ஆபிஸாரகும் ஆவலில் கோவைகல்லூரிக்கு மனுச்செய்து நேர்முகத்திற்கு  அழைப்பு வந்தவுடன்  எதோ வெளிநாட்டுக்கு போகும் ஆவலுடன்  கோவை சென்ற சஙகரலிஙக்த்திற்கு ஏமாற்றம. அட்மிட்ஷன் கிடைக்கவில்லை. மனமொடிந்து ஊருக்கு திரும்பியவர் அடுத்த் ஆண்டு  மீண்டும் முயற்சிக்கும் வரை  பக்கத்து ஊரான திசையன்விளை  வரை  சைக்கிளில் போய்  டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர்  ஊர்கார்களுக்கு உதவ விறகு வாங்கி  தந்ததையையே ஒரு  தொழிலாக ஆரம்பிதார்.. அடிக்கடி சைக்கிள் பஞ்சரானாதால் பஞ்சர் ஒட்ட கற்று  கொண்டதிருந்ததினால், சாத்தன் குளத்தில் முதல்முதலாக ஒரு பஞ்ஞ்ர் ஒட்டும்கடை போர்டுடன் பிறந்தது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது  ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டு மனுச்செய்தபோதும்  அட்மிஷன் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துபோன சங்கரலிங்கத்தை கடையை கவனத்துடன் கவனித்து பெரிது படுத்தும் யோசனையைச்சொல்லி ஆறுதல் படுத்தினார்.தந்தை.   ஆனாலும் அந்த இளைஞனின் மனதில்  சாதிக்க வேண்டும் என்று கனிந்து கொண்டிருந்த கனல் மெல்ல அனாலாகி,  உயரஙகளைத்தொட வேண்டிய நமக்கு வேண்டியது இந்த கிராமத்தில் இல்லை  என்ற முடிவோடு கையில் 300 ரூபாய்களுடன் கோவைக்கு பயணமானான்.
எந்த அறிமுகமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு தெரியாத ஊரில் வேலை கிடைப்பதைவிட கஷ்டமான காரியம் வேறுஏதுவுமில்லை என்பதை உணர்ந்த சங்கலிங்கம் ஏற்றது ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை. சாப்பாடும், தங்குமிடமும் நிச்சியமாகயிருந்ததாலும் தொடர்ந்து வேலை தேடுவதை நிறுத்த வில்லை. கோவையிலிருந்து அப்போது  வெளியாகிகொண்டிருந்த கலைகதிர் பத்திரிகையின் துணை ஆசிரியர் முருகானந்தம் அவருடைய பைண்டிங் தொழிலை நிர்வகிக்கும் வேலையை தந்தார். இந்த மனிதரை சந்தித்தது  தன் வாழ்வில்  அதிர்ஷ்டம் என்கிறார். சஙகரலிஙகம். இவரது படிக்கும் ஆர்வத்தை பாராட்டி மாலைக்கல்லூரியில் பி.காம் படிக்க வைத்திருக்கிறார். அச்சக தொழிலில் நாளெல்லாம் இருந்ததினால் அதை முறையாக சிறப்பாக அறிய பிரிண்டிங் டெக்னாலாஜி படிக்க விரும்பிய போது  அதற்கும் உதவி செய்து துணை நின்றிருக்கிரார் முருகானாந்தம் எனற  அந்த நல்ல மனிதர். தொடர்ந்து அச்சக கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடத்திய அச்சகத்திலேயே பணிக்கு சேர்ந்து  திறமையை வளர்த்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம். டைரக்டர் மகேந்திரனின உதிரிபூக்கள் படத்தில் ஒரு சின்ன வேடதில் நடிக்க கிடைத்த வாய்ப்பு  “கனவுத் தொழிற்சாலயில்”’“ ஆர்வத்தை தூண்டியது. சில வாய்ப்புகள் பல ஏமாற்றங்கள் என  நான்காண்டு போராட்டதிற்கு பின்னர் அண்டன் கனவு கலைந்தபின்  இவர் புரிந்துகொண்டது.” “ முயற்சித்தும் ஒரு விஷயம் முடியவிலையென்றால், முடியும் விஷயத்தை நாம் முயற்சிக்க வில்லை “ என்பதுதான்.  இந்த நிலையில் ஊரில் குடும்பத்தினர்  இவருக்கு திருமணம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள். அச்சுக்கலையை நன்கு அறிந்த இவர் தன் திருமண பத்திரிகையை  தானே அழகாக வடிவமைத்து  அச்சகத்தில் கொடுத்த போது  எல்லா அச்சகங்களும் சொன்னபதில் “ இதை உடனடியாகச் செய்ய முடியாது “  மிக சதாரண முறையிலேயே தன் திருமண அழைப்பை அச்சிட நேர்ந்த இவருக்கு தோன்றிய யோசனை  “ஏன் இதற்காகவே ஒரு அச்சகத்தை ஏற்படுத்தகூடாது? “ என்பது தான்.  எண்ணம் எழுச்சி பெற்று 1900 ஆம் ஆண்டு செயல்வடிவம் பெற்றது. தரமாக தயாரிக்க பட்ட ரெடிமேட் கார்டுகளில் 24 மணி நேரத்தில் அழைப்பிதழ அச்சிட்டு தரப்பட்டது அந்த கால கட்டதில் ஆச்சரியமான விஷயம். இந்து மத பிரிவுகள் தவிர மற்ற மதத்தினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்ட்ட  கார்டுகளும், தயாரித்து வைக்கபட்டிருந்த பத்திரிகைகளின் வாசகஙகளும் பெரும் வரவேற்பை பெற்றது.  இன்று 1000க்கு மேற்பட்ட டிசைன்களடன் எந்த மதப்பிரிவினரின் திருமணத்திற்கும் கார்டுகளுடன் காத்திருக்கும் இவர்கள் தொடர்ந்து புதிய டிசைன்களையும் உருவாக்கிகொண்டிருக்கின்றனர். முதலில் திருமணத்திற்குமட்டும்  என டிசைன் கார்டுகளை துவங்கிய இவர்கள் இப்போது பிறந்த குழந்தையை தொட்டிலிடுவதிலிருந்து,  சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷகம் வரை  எல்லா சுப நிகழ்வுகளுக்கும் பல டிசைன்களில் கார்டுகளை தயாரிக்கிறார்கள்.
 ஒரு கார்டு  5 ருபாயிலிருந்து  5000 ரூபாய்வரை என விலைகளில்  பல வகைகள் வைத்திருக்கும் இவர்களின் கார்டுகளை ஆன்லைனில் பார்த்து  தேர்ந்தெடுக்கும் வசதியையும் அறிமுகபடுத்தியிருகிறார்கள்.   தொழில் நுட்ப வளர்ச்சியுடன் நாம் இணைந்து வளர வேண்டியது  காலத்தின் கட்டாயம் என்று சொல்லும் நிறுவனர்  “ இண்ட்டர்னெட்ட்டைப்பயன்படுத்தி நேரிலே வராமல் தேந்தெடுத்த கார்டில் அழைப்பிதழை தயாரித்து பெற்றுக்கொள்பவர்களும் உண்டு. எங்களிடம் வந்து இருக்கும் டிசைன்களைய்ல்லாம் பார்த்துவிட்டு  மாறுதல்களை சொல்லி புதிதாக உருவாக்குசொல்பவர்ககளும் உண்டு”. எதுவாகயிருந்தாலும் சிறப்பாக செய்யவேண்டும். ஏனெனில் அடுத்த கஸ்டமர்களை அறிமுகபடுத்தபோகிறவ்ர்கள் அவர்கள் தான் “.  என்கிறார். சென்னையில். பெரிய நகரங்களில் விற்பனை செய்தாலும்  கார்டுகள் தயாரிக்கும் தொழிற்சலையை தன்  சொந்த கிராமமான் சாத்தன்குளத்தில்  நிறுவி  கிராமத்து இளைஞகள் பலருக்கு வேலை வாய்ப்பை தந்திருக்கிறார்.   தொழில் துவஙக விரும்பும் இளைஞர்களுக்கு இவர் சொல்லவிரும்புவது  “பிஸிஸில் நேர்மையாக இருக்க முடியாது-ஏமாற்றினால்தான் நிறைய சம்பாதிக முடியம் “ என்று சொல்லுவதை நம்பாதீர்கள். ஏற்காதீர்கள். முடியும் என்பதற்கு என்  வாழ்க்கையே  உதாரணம் “

28/8/11

புத்திசாலிகளே வாருஙகள்




“இந்த விஷயத்தை அரசு ஏன் சொதப்புகிறது. இன்னும் சற்று புத்தி சாலிதனமாக செய்திருக்கலாமே என்ற எண்ணுபவரா  நீங்கள்?  அரசு பணியில் இல்லாவிட்டலாலும் உங்கள் திறமையினாலும் அனுபவத்தினாலும் வாய்பு ஒரு கிடைத்தால் சவாலாக ஏற்று சாதிக்க  விருப்புகிறவரா நீங்கள் ? அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் என்று சொல்லப்படும் மாறுபட்ட சிந்தனையாளாராக அரசுக்கு எதாவது புதிய யோசனை வைத்திருப்பவரா ?  இருக்கும் வேலைக்கு லீவு  போட்டுவிட்டு வாருங்கள். சேர்ந்து உழைப்போம். புதியதோர் உலகம் செய்வோம்- என்று அழைக்கிறது கர்நாடக அரசு.

இந்திய நாட்டை அறிவுசார்ந்த நாடக மாற்றும் குறிக்கோளுடன் பிரதமர் “தேசிய அறிவுசார் ஆணையத்தை “ (NATIONAL KNOWLEDGE COMMSSION)  அமைத்திருக்கிறார். பொருளாதார மேதைகளும், சிறந்த அறிஞர்களும் உறுப்பினாராகளாயிருக்கும் இதன் தற்போதைய தலைவர் திரு. சாம்பிட்ரோடா.
கர்நாடக அரசின் முதல்வர் எடியூரப்பா 2008ல் தனது அரசுக்கு உதவ இதே அடிப்படையில் கர்நாடக நாலெட்ஜ் கமிஷனை   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலமையில் அமைத்தார்.  அந்த அறிவுசார்மையம் தான் இந்த அழைப்பை விடுத்திருகிறது. “ நீங்கள் காணவிரும்பும்  மாற்றமாக முதலில் நீஙகள் இருங்கள்” “ என்ற அண்ணல் காந்தி அடிகளின்  வார்த்தைகளுகேற்ப   ‘ ஞானம்” “ என்ற திட்டத்தை உதவித்தொகையுடன் அறிவித்திருக்கிறது.  ஒரு குறிபிட்ட திட்டதை திறம்பட செயல் படுத்துவது, ஊழியர்களுக்கு ப்யிற்சிஅளிப்பது,  ஆராய்ந்து அறிக்கைஅளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட தகுதியும் ஆர்வமும் உள்ள 28 வயதுமுதல்-40வயது வரை உள்ள இளையதலைமுறையினரை- தொழில்துறை தகுதியுடன் பணியிலிருப்பவர், சொந்ததொழில்செய்பவர், இல்லத்தரசி  என்று எலோரையும்  அழைகிறது இந்த ஆணையம். குறைந்த பட்சதகுதி பட்டபடிப்பு,,  5 ஆண்டு முன் அனுபவம் போன்ற விபரஙகளுடன்  இனையதளத்தில் அறிவிப்பு வெளியான உடனே மனு செய்திருப்பவர்கள் 300 பேர். பல ஆயிரகணகானவர்கள் இணைய தளத்தை பார்ப்பது பதிவாகி கொண்டிருக்கிறது.
மனுசெய்தவர்களுக்கு இரண்டுகட்ட தேர்வு. மனுக்களிலிருந்து முதல் கட்ட பரிசீலனையில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முதல் கட்ட நேர்முக தேர்வு நேரடியாகவோ அல்லது டெலிபோனிலோ நடக்கும். இதில் தேர்ந்தவர்கள்  மட்டும் நேர்முகத்திற்கு அழைக்கபடுவார்கள். இராண்டாம் கட்டதில் குழுவிவாதம், தனி நேர்முகம் போன்றவை களினால் தேர்ந்தெடுக்கபடுபவர்கள் ஆறுமாதம் முதல் ஒரு வருடம் வரை பணிசெய்ய வேண்டும் உதவித்தொகை  மாதம் ரூபாய் 40000/. தேர்வு செய்யபட்டால்,தற்போது இருக்கும் பணியில் நீண்ட விடுமுறைக்குபின் மீண்டும் சேரும் உரிமையும்  உண்டு. இவர்களின் பணிகள் அந்தந்த துறை செயலர்களால் நேரிடையாக கண்காணிக்கபடும்.  இவர்களின் பணிகளில் முன்னாள் அதிகாரிகள்,வல்லுனர்கள், வழிகாட்டிகளாக இருந்து உதவுவார்கள்.பணிகால இறுதியில் எதாவது ஒரு துறையில் திட்ட அறிக்கை சமர்பிக்கவேண்டும். பின்னர் மீண்டும் தஙகளது பணிக்கே திரும்பிவிடலாம். செய்த திறமையான பணியின் அடிபடையில் நாலெட்ஜ்கமிஷன் அதன் வேறு திட்டங்களுக்கு  மீண்டும் உதவ அழைக்கபடகூடிய வாய்ப்பும் உண்டு. .
அறிவிக்கபட்டதிலிருந்து இந்த திட்டதிற்கு வந்து குவியும் விண்ணபஙகள், மேல்விபரங்கள் அறிய வரும் எண்னற்ற போன்கள் பற்றியும் அறியும்போது  அரசின் திட்ட பணிகளில் உதவ  காத்திருக்கும் இளய தலைமுறையையினரையும்,    சிறந்த  புத்திசாலிகளை  அரசு பணிகளுக்கு பயன்படுத்திகொள்ள வேண்டிய அவசியத்தை  உணர்ந்த ஒரு  மாநில அரசையும் புரிந்துகொள்ளமுடிகிறது.
பக்கத்து வீட்டை பார்த்து  நாமும்  செய்யலாமே?       

21/8/11

சொர்க்கத்தை நிச்சியப்பவர் -இவர்



திருமணங்கள்  இணயத்தில் நிச்சியக்கபடுகின்றன.
எவருடைய வாழ்விலும் திருமணம் ஒருஇனிமையான் முக்கியமான கட்டம். அது காதல் திருமணமாகயிருந்தாலும் சரி, பெற்றோர்கள் முடிவுசெய்த திருமணமாகயிருந்தாலும் சரி. அவைகள் சொர்கத்தில் நிச்சியக்கபட்டவை என நம்பபடுகிறது. இன்று அப்படி சொர்கத்தில் முடிவு செய்யபட்ட  வாழ்க்கை  துணை யாரென்று கண்டுபிடிக்க இன்று இணயம் உதவுகிறது. இந்தியாவில் இன்னும் 60% க்கும் மேலான திருமணங்கள் பெற்றோரால் முடிவு செய்ய்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு.  கோவில்களில், சமுக சேவை மையங்களில் விபரங்கள் பதிவு செய்வதிலிருந்து  தினசரிகளில்  வரி விளம்பரங்கள் தரும் வரை பலவகைகளில்  தங்கள் வாரிசுகளுக்கு தகுந்த துணையை  தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களில்  பலர் இன்று இணையத்தின் துணையை நாடுகிறார்கள்.  இந்த புதிய பாதையை கண்ண்டுபிடித்தவர் முருகவேல் ஜானகிராமன் என்ற தமிழர். அவரது நிறுவனம் பாரத் மேட்டர்மோனி.கடந்த 12 ஆண்டுகளாக் இயங்கும் இந்த நிறுவனத்தில் பதிவுசெய்துகொண்டவர்கள் 1 கோடிக்கும் மேல். இந்த இணைய தளத்தின் மூலம்  நடந்த திருமணங்கள் 7 ல்ட்சத்திற்கு  மேல் என்கிறது லிம்கா புக்  ஆப் ரிகார்ட்ஸ்

1997ல் நியூஜெர்சியில் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தில் கன்ஸெல்டெண்ட்டாக  பணியாற்றிகொண்டிருந்த முருகவேல் ஒய்வு நேரத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக ஒரு வெப்ஸைட்டை  வடிவமைத்திருந்தார். அதில் தாய் நாட்டுசெய்தி. அரசியல், சினிமா, கோவில் விழாககளின் படங்கள் போன்றவற்றுடன் ஒரு பகுதியாக் மணமகன்/மகள் தேவை அறிவிப்பு.   இந்தப் பகுதி  மிக பிரபலமாகி அதற்காக நிறைய இடம் ஒதுக்க வேண்டியதாயிற்று. அபோது எழுந்த எண்ணம் இதையே ஏன் பெரிய அளவில் ஒரு தனிவெப்ஸைட்   ஆக்கி பலருக்கு உதவக்கூடாது?


இந்தியாவிற்கு திரும்பியுடன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாரத் மேட்டர்மோனியை துவக்கினார்.  இண்டர்நெட்டின் முழுவீச்சும் அதன் பலமும் இந்தியாவில் அதிக தாக்கம் ஏற்படுத்தாதாத  நேரம் அது.  நெட்டில் பார்த்தெல்லாம் கல்யாணம் செய்யமாட்டார்கள்  இந்து போன்ற பெரிய பேபர்களில் வந்த விளமபர்களைக்கூட பலரிடம் விசாரித்த பின் தான்  திருமண பேச்சையே துவக்கும் நம் தேசத்தில் இதெல்லாம் சரிவராது என்று இவரை பயமுர்த்தியவர்கள் தான் அதிகம். ஆனால் ஜாதக பொருத்தங்களிலும்மதவழக்கங்களில் நம்பிக்கைகளும், கொண்ட நம் நாட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல துணையை தேடித்தருவதை கடமையாக கருதும் பெற்றோர்கள் இருப்பதால். வருங்காலங்களில்  இணைய தளவழி   நிச்சியமாக தவிர்க்க முடியாதாகிவிடும் என்று நம்பிய முருகவேல் மன்ந்தளராமல் தன் முயற்சியை திவிரப்படுத்தினார். மேலும் ஒரு தினசரியில் 4 வ்ரி விளமபரத்தைவிட விரிவான தகவல்கள் தர வெப்ஸைட் உதவும், பயன் படுத்தி பலன் அடைந்தவர்களின்  வார்த்தைகளினால் புதிய தொடர்புகள் நிச்சியம் என நம்பினார். நம்பிக்கை உண்மையாயிற்று.  இன்று  பல நிருவனங்கள் இறங்கியிருக்கும், 1000கோடி பிசினஸ் இருப்பதாக நம்பபடும் இநத துறையின் முன்னோடியானார் இவர். பாரத் மேட்ர்மோனியின் வெற்றிக்கு காரணம் மாநில, மொழி வாரியாக, மத வாரியாக  அவர்களது வெப்ஸைட் தமிழ்மேட்டர்மோனி,பஞ்ஞாபி மேட்டர் மோனி என்று இயங்குவதுதான். இந்தியாவில் உள்ள அத்தனை மொழி பேசுபவர்களுக்கும் தனித்தனி தளங்கள்  இருப்பதால் பங்குகொள்பவர்களுக்கு வசதியாகயிருக்கிறது.  அது மட்டுமில்லமல், விவாகரத்து பெற்றவர்கள், தனித்து வாழ்பவர்கள்மாற்றுதிறனாளிகள் இப்படி பல வகையான பிரிவுகள். கடந்த ஆண்டு ஒரு 63 வயது இளைஞ்ர் இதன் மூலம் தன் துணையை க்ண்டுபித்து மணந்திருக்கிறார். .  இந்த  இணையதளம் எப்படி இயங்குகிறது ?
 இவர்களது வெப்ஸைட்டில்   மணமகன்/மகள் விபரங்களை பெற்றோர் அல்லது அவர்களே பதிவு செய்தால் அது விபரம் தேடுபவர்களுக்கு எளிதில்  ஆன் லயனில் கிடைக்கும் படி வசதி செய்யபட்டிருகிறது. அதில் தரப்ப்ட்டிருக்கும் போன் அல்லது மெயிலில்  சம்பந்தபட்டவ்ர்கள் நேரடியாக தொட்ர்புகொள்ள முடியும். இதற்கு கட்டணம் எதுவுமில்ல.  தரப்பட்டிருக்கும் தகவல்களை  எப்படி நமபுவது?
எங்கள்  நிறுவனத்தின் நம்பகதன்மைதான் எங்கள் பலம். அதை  ஏற்படுத்தவதில் ஆரபம்த்திலிருந்தே மிகுந்த கவனம் செலுத்திவருகிறோம். பதிவு செய்யப்படும் தகவல்கள் ஒவ்வொன்றும் எங்கள் அலுவலர்களால் சோதிக்கபடுகிறது. போன் நம்பர்களை தொடர்பு கொண்டு சோதிக்க தனி நிறுவனமிருக்கிறது. அவர்களால்  சோதித்த பின்னர்தான் நம்பர் பதிப்பிக்கபடும் .அதுபோல் பதிவு செய்யபட்டவர்களின் படங்கள் தகவல் தருபவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.  பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் படத்தையும் ஜாதகத்தையும்  வெளியிடும் வசதியும் இருகிறது.  இவைகளெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு செய்யும்போது உறவினர், நண்பர்,அல்லது சமூக பிர்முகர்ரை ரெபரன்ஸாக கொடுக்பட்டிருப்பரை நேர்டையாக் அணுகி விசாரித்துகொள்ளலாம். தனி கட்டணம் செலுத்தி சம்பளம் படிப்பு ஆகியவற்றை  எஜென்சி மூலம் விசாரித்து உறுதி செய்யது கொள்ள வசதியும்  உண்டு. 
 பாரம்பரிய பழக்கங்களை  பெரிதும் மதிக்கும் ஒரு கட்டுபாடன  குடுமபத்திலிருந்து வந்திருக்கும்  முருகவேல் இந்திய திருமணத்தை முடிவு செய்ய கூடிய பல விஷயங்களை ந்ன்றாக  புரிந்து வைத்திருகிறார்.
. இவரே  ஒரு புரோகிரமராக இருப்பதால் பதிவு செய்யும்போதே பல விஷயங்களை தரும்படியாக  திட்டமிட்டு  இணையதளம்  அமைக்கபட்டிருகிறது. அதனால் பயன்படுத்துவர்   இந்த ஜாதி பிரிவில்-வெளி நாட்டில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் எஞ்னியர் -இன்ன சம்பளத்தில்  மண்மகன் தேவை என  குறிப்பிட்டால் பளிச்சென்ற வேகத்தில் பட்டியலை தருகிறது. இணையதளம். இந்த தளத்தின் மூலம் முடிவான ஒரு திருமணத்தில் மணமகளின்  தந்தை  “பழைய  வைதீக முறைப்படி ஜாதகப் பொருத்தம் பார்த்து அதே நேரத்தில் மற்ற விபரஙகளையும் எளிதாக  அறிந்து கொள்ள இன்றைய மார்டன்  இண்டர்னெட்யுகத்தில் அதன் முலமே  செய்யபட்டிருக்கும் இந்த வசதி ஒரு பெரிய வரப்பிரசாதம். “எங்கள் காலத்தில்  இப்படி ஒரு வசதி இல்லைபோல எதுமில்லை “ என்கிறார் (நல்ல வேளை இல்லை! எனபது அவ்ர் மனைவி அடித்த கமெண்ட் என்பது வேறு விஷயம்)
 இவர்களுடைய தளங்களிலியே அதிகம் பயன்படுத்தப்ட்டிருப்பதும் அதிக திருமணங்கள் முடிந்ததும் தமிழ் மேட்ர்மோனியும் ஹிந்தியும் தானாம் ஆன்லைன் வசதி மிக பாப்புலாராக இருந்தாலும்  இன்றும் கல்யாணம் என்றால் நேரில் சந்தித்து பேசுவதுதான் சிற்ந்தது என்ற எண்ணம் பலருக்கிறது. அதனால் நிறைய நகரங்களில்  சிறிய ஆபீஸ்களை அமைத்து இண்ட்டர் நெட்டில் பதிவு செய்ய தேர்வு செய்ய உதவுகிறார்கள். அடிக்கடி நேரடி சுயம்வரங்கள் நட்த்திகொண்டிருந்தவர்கள் இப்போது இணயத்தில்  ஒரே நேரத்தில் பலர் பங்குகொள்ளும் வெர்சுவல் சுயம்வரத்தையும் முயற்சிக்கிறார்கள்

வெறும் திருமணத்துடன் நிறுத்திவிடாமல் வேலைவாய்ப்பு, ரியல் எஸ்டேட் கார் விற்பனை போன்றவைகளுக்கும் தனித்தனி  இணைய தளங்களை துவக்கி இப்போது செயல்படுத்தி கொண்டிருகிறார். முருகவேல். மிக வேகமாக மாக வளரும் இவர்களின் நிருவனத்தில் யாஹூ இணைய தள நிருவனம்  முதலீடு செய்திருகிறது. சமூகத்திற்கு தஙகளது பங்களிப்பாக  இணையத்திலேயே பாரத் ரத்தவங்கி, கண்வங்கி போன்ற வற்றை துவக்கி  மருத்துவ  மனைகளுக்கு உதவுகிறார்கள்.  பெற்றோர் பார்த்து, பாரமப்ரிய முறை  திருமணங்கள் போற்றபட வேண்டும் எனபதற்காக் எப்பரல் 14யை மண்வாழ்க்கைநாளாக (matrimonial day)  கொண்டாடி அன்று தங்கள்தள்த்தின்  மூலம் இணைந்தவர்களின் பங்களிப்புடன் எதாவது ஒரு சமூகப் பணியைச் செய்கிறார்கள்.
வெப்ஸைட் வடிவமைப்பது எனபது கணணியியல் பயின்ற எவரும்  செய்யக்கூடிய ஒரு பணி. ஆனால் தன் பணியில்   சிறு பொறியாக கிளம்பிய மாறுபட்ட ஒரு  சிந்தனையை ஒரு பிஸினஸ் மாடலாகவே உருவாகியிருகிறக்கும் முருகவேல் ஜானகிராமன் இணையத்தில் புதிதாக சாதிக்க  துடிக்கும் இளைஞர்களுக்கு  சொல்ல விருமபவது.: வாய்ப்புகள் வானளவில் இருக்கிறது. அதில் வியாபரா ரீதியாக வெற்றி பெறக்கூடியது  எதுவென்று   கண்டுபிடிப்பதில் தான் உங்கள் வெற்றியிருகிறது. .


    



  


14/8/11

விளக்கேற்றியவர் ஹரிஷ்


ஓளி மயமான எதிர்காலம் தெரிகிறது .

ஹரிஷ் ஹண்டேயின்  தந்தை ரூர்கேலா உருக்கு ஆலையில் பணியாற்றும் ஒரு பொறியாளார். எல்லா மத்திய தரகுடும்பத்தின் தந்தையைபோல மகனுக்கு  சிறப்பாக படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறித்தி வளர்த்தார். பள்ளி படிப்புதொடர்ந்து ஐஐடி யில் என்ஜினியரிங் முடித்து  அமெரிக்காவில் மேற்படிப்புகாக போனவ்ர் ஸ்கார்ஷிப் கிடைத்தனால் பிஎச் டி யும் முடித்தார். படித்தது எனர்ஜி என்ஜினியரிங். படிக்குபோதே பெரிய வேலைகள் அழைத்தன. ஆனால்  தொழில் செய்ய தீர்மானிஹ்டிருந்தார்
ஆராய்ச்சிபடிப்ப்பில் ஈடுபட்டபோது பாதித்த ஒரு  விஷயம் உலகின் பல பகுதிகளில் இன்னும் மின்சார வசதியில்லை. மாற்று சக்தியான சூரிய ஓளி மின்சாரம் பரவலாக மக்களை அடையவில்லை. அப்போது எழுந்த எண்ணம் சூரிய ஓளி மின்சார தயாரிப்பை ஏன்   தொழிலாக செய்யக்க்கூடாதுஎன்பது தான்.   இந்தியா திரும்பிய ஹரிஷ் ஹண்டேயின் தொழில் துவக்கும் யோசனையை கேட்டு, அமெரிக்காவில் படித்து பெரிய வேலைக்கு போவார் என்ற எதிர்பார்த்த குடும்பத்தினரும் உறவினரும் அதிர்ந்து போனாகள்.
ஓளிமயமான் எதிர்காலம் தெரிகிறது என்ற் நம்பிய  ஹரிஷ் மின்சாரமே இல்லாத கிராம்ங்களுக்கு சூரிய ஒளியிலிருந்து மின்சார விளக்குகள் தர 1995ல் செல்கோ SELCO INDIA, கம்பெனியை  தொடங்கினார். இன்று இந்த நிறுவனம் 120,000 கிராம இல்லங்களில் விளக்கு ஏற்றியிருக்கிறது. இந்த நிறுவன்த்தின் மூன்று முக்கிய குறிக்கோளாக் ஹரிஷ் அறிவித்த்து.
 1) ஏழைமக்களுகு டெக்னாலஜியின் பயன் போய் சேரவேண்டும்
.2) அவர்களையும் இதன் பயன்களை அடையச்செய்ய வளர்க வேண்டும்
 3) இம்மாதிரி சமுக தேவைகளையும் வியாபார ரீதியில் வெற்றிகரமாக் செய்யலாம்
என்பது தான்.  கடந்த 7 ஆண்டுகளில் இதை வெற்றிகரமாக் செய்து காண்பித்து வியக்க வைத்திருக்கிறார்.கர்நாடகத்திலும் குஜராத்திலும் 170 பேர் வேலை செய்யும் இவரது நிறுவனத்தின் கடந்த ஆண்டு வரவு செலவு 13 கோடிகள். இவரை விற்பனை செய்திருப்பது 100000க்கு மேற்பட்ட சோலார் ஸிஸ்டம்கள்.
இந்த மகத்தான் வெற்றியை செய்துகாட்டிய ஹரிஷ் ஹண்டேக்கு 20க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கிறது. அதிபர் ஒபாமா தேர்ந்த்டுத்து சந்தித்த 20 பேர்களில்  இவரும் ஒருவர். சென்ற மாதம் இவருக்கு  இந்த ஆண்டு ஆசிய நோபலாக் கருதPபடும் மாகஸெஸே    விருது    MAGASAYSAY AWARD  அறிவிக்கபட்டிருகிறது.
 இவர்  இந்த வெற்றிகளை அடைய கடந்து வந்த பாதை ரோஜா மலர்கள் விரித்த பாதையில்லை. கடினமானது மிக கடினமானது. கர்நாடக மாநில்த்தில் தான் மிக அதிக்மான் கிராம்ங்கள் மின்வசதி பெறாதவை எனபதை நம்மில் எத்தன பேர் அறிவோம்.? அதை கண்டுபிடித்து அங்கிருந்து தன் பயணத்தை துவக்கிய இவர் சந்த்தித்த பிரச்சனைகள் ஏராளாம். முதலில் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் எனபதையே கிராம மக்கள் நமபத்தயாரகயில்லை.  நம்பியவர்களும்  அதில்  முதலீடு செய்ய தயாராக்யில்லை. தன் ஸ்கார்ஷிப் பணத்தில் மிச்சம்பிடித்த செய்த  முதலீடான 5000 அமெரிக்க டாலர்களில் ம  செய் முறை விள்ளக்கங்களிலேயே மெல்ல கரைந்து கொண்டிருந்தது.  கடைசியாக ஒரு சின்னஞ்சிறு  கிராமத்தில் வேண்டாம் என்று சொன்ன ஒரு பீடி வியாபாரி வீட்டில் அவ்ர் இலாதபோது கூரையில் பேனல்களை பொருத்தி 4 பல்புகளையும் ஒரு சின்ன டிவியையும் இணைத்திருந்தார்.  மாலையில் வீட்டுக்குவந்த வியாபாரி தன் வீட்டில் பெரிய ஓளியையும் கூட்டத்தையும் பார்த்து ஆச்சரியபட்டு உடனே அதை வாங்கி கொள்ள ஒப்புகொண்டார்.  இப்படி விற்ற முதல் சோலார் ஸிஸ்டத்தின் பணத்தில் அடுத்தது வாங்கி  அதை விற்று அடுத்தை வாங்கி வியாபாரத்தை  வளர்த்தார். சற்று யோசித்து பாருங்கள். அமெரிக்காவில் எனஜரி எஜ்னியரிங்கில்  டாக்ரேட் வாங்கியவர் ஒரு படிபிப்லாத வியாபாரியிடம் மன்றாடி தன ஐடியாவை விற்றிருக்கிரார். ஏன்தன் முயற்சியில் நம்பிகையும் வெற்றி பெறவேண்டும் எனற வெறியினால் தான். . புதிய பாதையில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கு இது மிக் மிக அவ்சியம் எனகிறார் ஹரிஷ்.
இரண்டு அல்லது நாலு டூயூப் லைட்ஒரு பேன்ஒரு ரேடியோ வை இயக்க தேவயான மின்சாரத்தை சூரிய  ஒளியிலிருந்து பெற்று அதை ஒரு பாட்ட்ரியில் சேமிக்கும் வகையான் சோலார்பேனல்  தயாரித்து விற்கிறாரகள். விலை 8000லிருந்து  10 ஆயிரம வரை. ஆனால் அந்த கிராம வாசிகளுக்கு இது பெரிய தொகை. கடனில் கொடுத்தால் வாங்க தயார்ஆனால் கடன் கொடுபார்தான்  யாருமில்லை.  வங்கிகளுக்கு  இது எழைகளில் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் எனபதை போராடி புரிய வைத்து கடன் வழங்க ஒரு திட்டத்தையே உருவாக்கிய  பெருமை இவரையே சாரும்,. ஆனால் சிக்கல்  தொடர்ந்த்து. கடன் வழங்க  மனு தாரரின் மார்ஜின் பங்காக 10-15 % பணம் கட்ட வேண்டும்.அதற்கு கூட வசதியில்லாதவர்கள் அந்த கிராம பகுதி மக்கள். வங்கிகளுக்கு அந்த பணத்திற்கு தனது கம்பெனி   கியாரண்டி கொடுக்கும் என்ற திட்டத்தை அறிமுக படுத்தியதின்   மூலம் பல கிராம மக்கள் பயன் பெற்றனர். இன்று பல வங்கிகள் இவரது திட்டத்தின் மூலம் கிராமக்களில்  வழங்கும் க்டன்களை அதிகரித்திருகிறார்கள். முக்கிய காராணம் இவர்களே வங்கிகள் வழங்கிய கடனை வசுலிக்கவும் உதவுகிறார்கள். சோலார் பேனல்கள் விற்பது மட்டுமில்லை இவர்கள் பணிஅதை நிறுவது மாதம் ஒருமுறை பார்த்து பராமரிப்பது போன்ற பணிகளும். அதற்கு உள்ளூர் இளைஞர்களை பயிற்சி அளித்திருப்பது மூலம் வேலைவாய்ப்பையும்  உண்டாக்கியிருக்கிறார்கள்.  கடனில் கூட இந்த வசதியை பெற முடியதாவர்களைக்கூட   இவர்கள் ஈர்க்கிறார்கள். ஒரு ஆதி வாசிகள் கிராமத்தில் கூடைசெய்பவர்கள் போதிய வியாபாரம் இல்லாதால்  விவாசய கூலிவலை செய்கிறார்கள். அவர்களுக்கு மின் விளக்குகள்  அமைத்து கொடுத்து இரவில் செய்யும் கூடைகளில் ஒரு கூடைக்கு 5 ரூபாய் வீதம் கடனை திருப்பி செலுத்த உதவியிருக்கிரார்கள். அரிக்கேன் விளக்கில் படித்த மாணவ்ர்கள் இன்று ட்யூ லைட்டில் படிக்கிறார்கள். பீடி சுற்றுவதுதைய்ல் போன்ற் வேலைகளை இரவில் செய்கிறார்கள்  பெண்கள்.  சுருக்க மாக சொன்னால் ஒரு மின்சார புரட்சியை  இவரது நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. .இதை நம் கிராம புற பகுதிகளிலும் வியாபாரரீதியாக் செய்ய முடியாதா என்று எண்ணும் அல்லது இதை மேம்படுத்த எதாவது யோசனை வைத்திருக்கிரீர்களாஹரிஷ் ஹண்டேவை தொடர்புகொள்ளுங்கள் காத்திருகிறார்.

======================================================ற்ற்