23/9/12


மனது வைத்தால் நிச்சயம் மாற்றம் இங்கே சாத்தியம்

புதியதலைமுறை 20/9/12 இதழ்






இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்







இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்

குஜராத் மாநிலத்தில் ஒரு சிறு கிராமம். அங்கிருந்த விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை. தங்களது பசு, எருமை மாடுகளிடமிருந்து கறந்துகொண்டு வரும் பாலை போல்சன் டைரி என்ற நிறுவனத்திடம் விற்பனைக்காக ஒப்படைப்பார்கள். ஆனால் பணம் வராது. காரணம், விற்பனைக்காக மும்பைக்கு அனுப்பப்படும் அந்தப் பால் மும்பை போய்ச் சேர்வதற்குள் திரிந்துவிடும். கெட்டுப்போன பாலுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

அந்த மக்களுக்கு உதவ விரும்பினார், சர்தார் வல்லபாய் படேலின் சீடரான திருபுவன்தாஸ் படேல். அந்த மாவட்டத்தில் இருந்த விவசாயிகளைக் கொண்டு கூட்டுறவுப் பால்பண்ணை ஒன்றை உருவாக்கினார். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. அங்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டார். ‘பாலை நீங்கள் பதப்படுத்தினால்தான் அது விரைவில் கெட்டுவிடாமல் பாதுகாக்க முடியும். அதற்கு நீங்கள் பிளேட் பாஸ்ட்ரைசர் என்ற ஒரு இயந்திரத்தை வாங்க வேண்டும்’ என்றார் இளைஞர். ‘ஆனால் அது உங்களால் முடியாது’ என்றார். ‘ஏன்?’ என்றார் திருபுவன்தாஸ். ‘அதன் விலை 60 ஆயிரம் ரூபாய்’ என்றார் இளைஞர். 1949ல் அறுபதினாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை. ‘முடியும், நம்மால் முடியும்’ என்ற திருபுவன்தாஸ், கிராமத்து மக்களிடம் பேசினார். நூறு, இருநூறு எனச் சிறுகச் சிறுக ஒவ்வொருவரும் பங்களித்தனர். அந்த இளைஞர் அசந்து போனார். எளிய மக்களைக் கொண்ட கூட்டுறவு இயக்கம் எத்தனை வலிமையானது என அவருக்குப் புரிந்தது. பயிற்சி முடிந்து ஊரைவிட்டுக் கிளம்பவிருந்த அவர், அங்கேயே தங்கி அந்த இயந்திரத்தை நிறுவினார். அதன் பின் கடந்த ஞாயிறன்று தனது 90வது வயதில் இறந்து போகும்வரை அதுவே அவரது வாழ்விடமாயிற்று.

பாலைப் பதப்படுத்த முடியும் என்று தெரிந்ததும், பால்வரத்து அதிகமாயிற்று. அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. திரவமாக இருப்பதால்தானே பால் கெட்டுப் போகிறது, அதைப் பவுடராக்கி விட்டால்? என அவர் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது ஐரோப்பாவிலும், நியூசிலாந்திலும் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இங்கு அதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஐரோப்பாவில் கொழுப்புச் சத்து குறைந்த பசும்பாலில் இருந்து பவுடர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இங்கு கிடைப்பது எருமைப்பால்.

அந்தக் கிராமத்தில் உருவாகி இருந்த நவீன பால் பதப்படுத்தும் நிலையத்தைப் பார்வையிட வந்திருந்த நியூசிலாந்து நாட்டின் பால்வள ஆராய்ச்சி நிலையத் தலைமை அதிகாரி, அதன் கட்டமைப்பைக் கண்டு அசந்துபோனார். நிலையத்தின் நிர்வாகியாகயிருந்த அந்த இளைஞரைப் பெரிதும் பாராட்டி, ‘இவ்வளவு புத்திசாலியாகயிருக்கும் நீ ஏன் முட்டாள் தனமாக, உலகில் யாராலும் செய்ய முடியாத திட்டத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டபோது அந்த இளைஞர் சொன்ன பதில், ‘இதை நான் செய்து காட்டுவேன்.’

சொன்னபடியே செய்துகாட்டி, உலகிற்கே அந்த விஷயத்தில் வழிகாட்டினார் அந்த இளைஞர். அவர் வர்கீஸ் குரியன், செய்த விஷயம், எருமைப்பாலைப் பயன்படுத்தி பால் பவுடர் தயாரிப்பது. இன்று இந்தியா ஆண்டுக்கு 65,000 டன் பால் பவுடர் தயாரிக்கிறது. இது நியூஸிலாந்து தயாரிப்பதைவிட பல மடங்குகள் அதிகம்.

பால் விநியோகம், பால் பவுடர் என வர்த்தகம் விரிந்து கொண்டிருந்தபோது, அவர் அந்தக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களிடம் சொன்னார்: ‘நாம் இப்படியே பாலை வாங்கி விநியோகிக்கிற அமைப்பாகவே இருந்தால் முன்னேற முடியாது. நாம் மார்க்கெட்டிங்கில் இறங்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ‘பிராண்ட்’ வேண்டும்.’ அப்போது உருவானதுதான் அமுல். Anand Milk Union Limited என்பதன் சுருக்கம்தான் அமுல். ஆனந்த் என்பது அந்தக் கிராமத்தின் பெயர்.

அமுல் செய்த புரட்சி ஒரு வரலாறு. நெஸ்லே, பிரிட்டானியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு தன் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது அமுல். இன்று இதன் வெற்றியை கோ ஆப்ரேட்டிவ் கேபிடலிசம் என வகுப்பறைகளில் போதிக்கிறார்கள்.

ஆனால் அமுலின் உண்மையான வெற்றி, கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகளை ‘முதலாளி’களாக்கியது. இன்று இந்தியாவிலேயே பாலுக்கு அதிகக் கொள்முதல் விலை கொடுப்பது, குஜராத் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்புத்தான். 1948ல் 430 பேரிடமிருந்து நாளொன்றுக்கு 5,000 லிட்டர் பால் வாங்கிக் கொண்டிருந்த அமுல், இன்று 30 லட்சம் பேரிடமிருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்கிறது.
 

அமுலின் பிசினஸ் மாடல் இன்று இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இதனால் இன்று இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.
 

ஆச்சரியமான விஷயம்... ஓசையில்லாமல் இந்தப் புரட்சியை நிகழ்த்திய குரியன் பால் அருந்துவதில்லை. ‘எனக்குப் பால் பிடிக்காது என்பார் அவர். குரியன் சென்னையில் படித்தவர். 1940ல் சென்னை லயோலா கல்லூரியிலும் பின், கிண்டி பொறியியல் கல்லூரியிலும் படித்த இவர், வெளிநாட்டில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். பெரிய குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தாத்தா ஜான் மத்தாய், இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். அவர், டாடா குழுமத்தைச் சேர்ந்த டிஸ்கோவின் தலைவராக இருந்தபோது குரியனுக்கு டிஸ்கோவில் வேலை போட்டுக் கொடுத்தார். அந்த வேலையையும் பின், யூனியன் கார்பைடில் கிடைத்த வேலையையும் விட்டுவிட்டு அந்த குஜராத் கிராமத்திலேயே தன் வாழ்நாள் முழுதும் தங்கி விட்டார்.

அதன் பலன் அந்தக் கிராமத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கிடைத்தது. இளைஞர்கள் மனது வைத்தால் இந்தியாவை மாற்ற முடியாதா என்ன?










19/9/12


ரகசிய புனிதபயணம்

இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 10கீமீ தொலைவிலிருக்கிறது  “கெள்ண்ய விஹாரய” என்ற புத்த மடலாயம். இந்த கோவிலில்   கடந்த மாதத்தில் காட்சிக்கு வைக்கபட்டிருந்தை  சுட்டெரிக்கும் வெய்யிலை பொருட்படுத்தாது பல மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பக்தியுடன் தரிசித்தார்கள். இங்கு மட்டுமில்லை அனுராதபுரம் உள்பட 7 நகரகங்களிலும் இதேபோல்  மக்கள் வெள்ளம்.காத்திருந்து  அதை தரிசித்தது.

15/9/12


உலகை கவர்ந்த  “வசந்தமே வருக

கல்கி 23/09/12 
70களில்  அனேகமாக தமிழகத்தின் எல்ல திரையரங்கங்களிலும் படம் துவங்குமுன் திரை விலகும் போது ஒலித்த இசையான  “கம்செப்டர்” டூயூன் இன்றும் பலரின் நினைவில் நிற்கும் இசை.. இந்த ஆண்டு செப்டம்பரில் பொன்விழா காணும் இந்த திரைஇசையை கெளரவிக்க அந்த ஒரிஜினல் டிராக்கை இப்போது டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.

11/9/12


 இன்று செப்டம்பர் 11 

கோபுரங்களும் சாய்வதுண்டு.

உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே  பார்த்தது.. 10 ஆண்டுகள் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும்  அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லைநியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே   துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள்  இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள்ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவ்பத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர்,  மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும்  இப்போது ஒரு நினவு சின்னம்  அங்கே எழுப்பபட்டிருக்கிறது.. 10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ  என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது


இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில்  அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த  அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே  சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும்  கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில்  உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது.

அதில் சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது. இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில்  உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது.  பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
 மியூசியம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின்  மாதிரிகளுடன்  ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருகிறார்கள். மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த  பரிசு பொருட்கள் இப்படி பல. இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.
கடந்த ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே  விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய  ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி  பார்பபவர்களின்  மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும்  நீண்ட தூரத்திலிருந்து வந்து  மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும்நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே  அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும்  பூங்கொத்துக்ளையும்  பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும்  அதன்  உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை  உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.

9/9/12


அந்தமானின் ஆழ்கடலிருந்து எவரஸ்ட் வரை


கல்கி16/09/12
நினைவிருக்கிறதா?  ஆனந்தபுரம் வீடு படத்தில் பார்த்த சுருட்டை தலைமுடியும் பேசும் பெரிய கண்களும் கொண்ட சிறுவன் ஆர்யாவை? சினிமாவை தொடர்ந்து மாடலாக பல விளம்பரங்களில் தோன்றிய இந்த குட்டிபையனுக்கு இப்போது 7 வயதாகிறது. பெற்றோருடன் அந்தமான் தீவில் வசிக்கும் ஆர்யன் இந்த ஆண்டு  பிரமிக்க வைக்கும் சாதனைகளைச்செய்திருக்கிறார்.  இமயமலையில் 17300அடி உயரத்திலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ்கேம்ப்  வரை மலை ஏறியிருக்கிறார். உலகிலேயே இந்த இளம் வயதில் இப்படிஒரு சாதனையை செய்த சிறுவன் இவர்தான்,  நேப்பாள நாட்டின் பகுதியிலிருந்து எவரஸ்ட்க்கு போகும் வழியில் இருக்கும் 17900 அடி உயரத்தில் இருக்கும் கல்பத்தர் என்ற சிகரத்தையும்

3/9/12

ஒவியனின் தோழர்கள்


ஒவியனின் தோழர்கள்

கல்கி090912 இதழ் 

உலகின் எல்லா கலைகளுக்கு முகமும், கலஞர்களுக்கு முகவரியும் தந்து கொண்டிருப்பது புகைப்படங்கள். 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல புதிய தொழில் நுட்பஙகளின் துணையோடு வளர்ந்து கொண்டுவரும் புகைப்பட கலை இன்று மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. புகைப்படம் “தயாரிக்கும்” முறையை கண்டுபிடித்து  உலகுக்கு முதலில் அறிவித்த இரண்டு பிரஞ்ச் கார்களின் கண்டுப்பிடிப்பை  பரிசோதித்து ஏற்று கொண்ட பிரஞ்ச் அகடமி ஆப் சயின்ஸ் அதை அனைவரும் எளிதில் பயன்படுத்த அதை உலகுக்கே பரிசாக வழங்க அரசுக்கு சிபார்சு செய்ததை ஏற்று பிரான்ஸ் அரசு அதைஅறிவித்த  நாள்-1839 ஆகஸ்ட் 19.அதன் நினைவாக ஆண்டுதோறும் அந்த நாள் உலக புகைப்பட தினமாக கொண்டாப் படுகிறது, 12 அடி நீளம்,3அடி அகலத்தில் அறை முழுவதும் அடைத்துகொண்டு நிற்கும் ஆதிகால கேமிரா முதல் 11 கிராம் எடையில்  3 அங்குலத்தில் விரல்களின் இடுக்கில் வைத்துக்கொள்ளக் கூடிய உலகின் சின்னஞ்சிறு கேமிராவரை
  நிறைந்த ஒரு கண்காட்சியை உலக புகைப்பட தினத்திற்காக   சென்னை கஸ்தூரி ரங்கா தெருவிலிருக்கும்  ஆர்ட் ஹவுஸ் காட்சிகூடமஅமைத்திருந்தது
 புகைப்பட கலைஞர் பி.ஸ்ரீ ஸ்ரீராம் துவக்கிவைத்த இந்த கண்காட்சியில் கேமிராவை கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மென் அவர்களுக்கு எழுதிய கடிதமாக
காலத்தால் அழிக்க முடியாத கண்டுபிடிப்பை தந்தவனே !
உன்னால் பயன் பெறும் கோடானு கோடி கலைஞர்கள்
சார்பில்……நன்றியுடன்
என்ற வரிகளுடன் முடியும், கவிதை முகப்பில் வரவேற்கிறது. அந்த கலைக்கூடத்திலிருக்கும் 1000க்கும் மேற்பட்ட  அத்தனைவிதமான கேமிராக்களும் தனிப்பட்ட ஒருவரின் சேகரிப்பு என்ற செய்தியை விட ஆச்சரியமானது,  சேகரித்திருப்பவர்  ஒரு புகைப்படகாரர் இல்லைஎன்பதும் அவர் இவைகளில் படமெடுப்பதில்லை  என்பதும்  தான்.
 சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு கொண்ட ஸ்ரீதர் இன்றைய இந்திய முன்னணி ஒவியர்களில் ஒருவர். 50க்கும் மேற்பட்ட ஒவிய கண்காட்சிகளை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தியிருக்கும் இவரின் பொழுதுபோக்குகளில் ஒன்று மாறுபட்ட பழைய பொருட்களை சேர்ப்பது. மும்பையில் ஒரு ஓவிய கண்காட்சி நடத்தி திரும்பும் முன் ஒரு பழைய பொருள் கடையில் பார்த்த பிரமாண்ட (ஒரு ரூம் சைஸ்) கேமிரா தான் துவக்கம். கடந்த 8 ஆண்டுகளில் 1000 க்குக் மேலாக வளர்ந்துகொண்டிருக்கிறது. பாக்கெட் கடிகாரத்தில், , கைக்கெடிகாரத்தில் மறைத்துவைக்கபட்டிருக்கும் துப்பறியும் கமிராக்கள் ஜேம்ஸ் பாண்ட் காலம் வருவதற்கு முன்பே வந்து மார்கெட்டில் விற்கபட்டிருக்கிறது என்று சொல்லி  அவைகளை காண்பிக்கிறார். உலகின் முதல் நீருக்குள் மூழ்கி படமெடுக்கும் காமிரா, 3டி கேமிரா என அபூர்வங்களை மட்டுமில்லாமல் 72 பிராண்ட்களின் பல மாடல்கேமிராக்களை வைத்திருக்கிறார். 1885லிருந்து 2000வரை வெளிவந்த எல்லா கேமிராகளையும் சேர்ப்பது திட்டம். உலகின் முதல் பெரிய கேமிராவை வைத்திருப்பதால் எது மிக சிறியது?  என்று கேட்பவர்களுக்காக  மினி HD 720 என்ற கேமிராவை இண்டெர்னெட்டில் தேடி அலசி ஆர்டர் செய்திருந்தேன். சரியாக கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாக வந்தது. என்று அதை காட்டுகிறார்.  கேமிராக்களின் அணிவகுப்பின் பின்னணிதிரையில் கேமிராக்களின் முன்நின்றே பழகிய சினிமா நட்சதிரங்கள், மூப்பனார் போன்ற அரசியல் பிரபலங்கள் மாறுதலாக கையில் கேமிராவுடன் வேறுஒருவரைப் படெமெடுக்கும் காட்சியில் ஒவியமாக நிற்கிறார்கள். கண்காட்சியின்  பேக்டிராப்களிலும் , ஆங்காங்கே நிற்கும் அழகான மியூரல்களிலும் (பதுமை ஒவியங்கள்) ஓவியர் ஸ்ரீதரின் மென்மையான கலை வண்ணம் புரிகிறது. வெளிநாட்டில் நடத்தும் ஓவியகண்காட்சிகளில் கிடைக்கும் பணத்தில் இவைகளை வாங்கி சேகரிக்கிறேன்.  என்று சொல்லும் ஸ்ரீதருக்கு  இப்போது நிறைய நண்பர்கள். இவரது ஆஸ்திரிலிய நண்பர் கிரிஸ்ஸிடம் வாங்கிய 9 கேமிராக்களை பொக்கிஷமாக கருதுகிறார்.(அவரிடம் பல ஆயிரகணக்கில் இருக்கிறதாம்)
இன்று ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் கேமிராக்களினால் குழந்தைகள் கூட படமெடுக்குமளவிற்கு எளிதாகிவிட்ட போட்டோகிராபிக்கு பின்னே ஒரு நீண்ட சரித்திரமிருப்பதையும், கேமிராக்களின் பரிமாண வளர்ச்சி எப்படி அந்த துறையையே  இன்று மாற்றிவிட்டது பற்றியும் பள்ளிக்குழந்தைகளுக்கு சொல்ல, ஓர்க்‌ஷாப்கள் நடத்த ”ஸ்மைல் பிளிஸ்” என்ற அமைப்பை துவக்கியிருக்கியிருக்கும் ஸ்ரீதர், இப்போது 8mm 16mm சினி கேமிராக்களை சேகரித்து கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஊட்டியில் நிரந்தர கேமிரா மியூசியம்  அமைக்க போவதாகவும்  அந்த இந்தியாவின் முதல் கேமிரா மியூசியம் உலக தரத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும்வகையில் இருக்கும் என்கிறார்.

.




29/8/12

காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்


காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்

கல்கி02/09/12
கம்போடியா நாட்டின்  ஆங்க்கோர்(Angkor)  பகுதி உலகின்  முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று.  800 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடகலைகளுக்கு சான்றாக நிற்கும் கற்கோவில்களையும் அரண்மனையும்  பார்க்க ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் மேல்.   இதைத்தவிர அந்த பகுதியின் அருகில் இருக்கும் அடர்ந்த்த காட்டு பகுதியில் இன்னும்  பல கற்கட்டிடங்களின் பகுதிகள்  சிதைந்து சிதறிகிடக்கின்றன.  1992ல் யூனெஸ்கோ இந்த பகுதிகளின் கோவில்கட்டிடங்களை  உலக பராம்பரிய சின்னங்களாக அறிவித்திருக்கிறது. பல சரித்திர ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் அந்த பகுதியில் 4000 அடி நீள 1000 அடி அகல பரப்பில் ஒரு மிகப்பெரிய வளாகமும் அதில் 39 வாயில்களுடன் பெரிய ஆடல் அரங்கம் அமைக்கப்பட்டிருந்த விபரமும் தெரிவிக்க பட்டிருந்த்தது. அதை அப்படியே மீண்டும் நிர்மாணிக்க முடியமா என யூனஸ்கோவின் உதவியுடன்  முயற்சிக்க விரும்பியது கம்போடிய அரசு. உலகமெங்கிருக்கும் முக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  வந்து ஆய்ந்த தந்த அறிக்கை: சவாலான இந்த பணியை சரியான குழு தலமையேற்றால்தான் செய்ய முடியும் என்று சொன்னது. பணியை ஏற்றது  செய்திருப்பது யார் தெரியுமா? இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறை. 2004ம் ஆண்டு 5பேர் கொண்ட ஒரு குழு ஆராய்ந்து செய்யவேண்டிய பணிகளைசரியாக திட்டமிட்டு செய்ய துவங்கி இப்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார்கள். இப்போது டூரிஸ்ட்கள் அனுமதிக்க படுவதால் காலை 9 மணிக்கே கியூவில் காத்திருந்து பார்த்து வியப்பது இந்த பாரம்பரிய சின்னத்தை மட்டுமில்லை, நிர்மாணித்த இந்திய வல்லுனர்களின் திறமையையும் தான்.
7 ஆம் ஜெயவர்மன் எனற மன்னன் தன் தாயின் நினைவாக கட்டிய இந்த ராஜவிஹார் பிரம்மதேவனுனக்காக கட்டபட்டகோவிலாக துவங்கியிருக்கிறது. தொடர்ந்து வந்த 8ம் ஜெய வர்மன் புத்தமதத்திற்கு மாறிவிட்டதால்  கட்டிட வேலைகள் முடியும்போது  அது பெளத்த விஹாராக மாறிப்போயிருகிறது. இது ஒரு பெளத்த கோவில் வளாகம் என கருதிக்கொண்டிருந்த கம்போடியர்களுக்கு இந்த தகவலைச் சொன்னது இந்திய குழுதான்.   எந்த வரை படமும், குறிப்புகளும்  இல்லாமல்முழுவதுமாக இடிபாடுகளாகி போயிருந்த இந்த வளாகத்தை புனர்நிர்மாணம் செய்தது மிகபெரிய சவால். அத்தனை கற்களையும் தூண்களையும் பிரித்து எடுத்து  அதன் அளவுகள், எடை போன்ற விபரங்களைப் பட்டியிலிட்டு  ஒவ்வொன்றுக்கும்  எண்கள் இட்டு படத்துடன்  கேட்லாக் செய்த பின்னர். தாங்கள் தயாரித்த மாதிரி  வரை படத்தைப்போலவே அவைகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். இதில் மிக சவாலான விஷயம் இந்த கல்கட்டிடம்  கட்டபட்டபோது கற்களை இணைக்க  சுண்ணாம்பு, மண்சாந்து போன்ற எதுவுமே பயன்படுத்தபடவில்லை. ஒவ்வொரு கல்லின்வெட்டபட்ட பகுதி  மற்றொருகல்லின் வெட்டுப்பகுதியுடன் நெருக்கமான   இணைக்கபட்டு உருவாக்கபட்டது. அதை மீண்டும் அப்படியே செய்ய 200 கம்போடிய தொழிலாளிகள் 7 ஆண்டுகள் இந்திய அணியின் தலமையில் உழைத்திருக்கிறார்கள்.   “ஒரு ஜிக்-ஜாக் பஸிலை (ZIG-ZAG PUZEL) பல முறை முயன்று இறுதியில் வென்ற மாதிரி என்று தங்கள் பணியை சொல்லுகிறார் இந்த திட்டத்தின் தலைவர்  சூட் (DR. Sood) . முனைகள் உடைந்து, சிதைந்து போயிருக்கும் சிலகற்களினால் இணைக்கமுடியாமல் போன பகுதிகளை, அவற்றின் உள்ளே துளையிட்டு ஸ்டீல் கம்பிகளை சொருகி இணைத்திருக்கிறார்கள். இப்போது 39 வாசல்களுடனும் அழகிய தெய்வச்சிலைக்ளுடனும் நிற்கும் கலைக்கூடமும்,  கோபுரங்களுடன் கூடிய நடனகூடமும்  இனி விழாமல் நிலையாக நிற்கும்  என சோதித்து சொல்லியிருப்பவர்கள் சென்னை ஐஐடியின் வல்லுனர்கள். கேட்பாரற்று இடிந்து விழுந்து கிடந்த இந்த காட்டுகோவிலின்  மிஞ்சி நின்ற சுவர்களின் வெடிப்புகளில் வளரத்துவங்கிய மரங்கள் காலப்போக்கில் மெகா சைஸ் மரங்களாகியிருந்தன. அவற்றை அகற்றினால் அதோடு இணைந்திருக்கும் பகுதிகள் வீணாகும். அழியாத கற்களுடன் மரங்களும்  இணைந்து வளர்ந்து வாழ்ந்திருக்கின்றன  எனபதையும்  மக்கள் பார்க்கட்டும்.  என்று யூனஸ்கோ சொன்னதால். நமது வல்லுனர்கள் மர்ங்களை காக்கவும்  திட்டம் தீட்டினர்.
 டேரானிலிருக்கும் வன ஆராயச்சி கழகத்தின் வல்லுனர்கள் வரவழைக்கபட்டு  வருங்காலத்தில் மரத்தின் வேர்கள் இந்த கட்டிடங்களை சாய்த்துவிடுமா என  ஆராய்ந்து ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய வல்லுனர்களின் திறமைகளையும் செயலாற்றும் திறனையும் கண்டு வியந்த யூனஸ்கோ உலகின் வேறு சில பராம்பரிய சின்னங்களை மீட்டெடுக்க துறையின் உதவியை நாடியிருப்பது  எனபது நமக்கு பெருமையான விஷயம்
-

24/8/12


Singh, Gurkirpal (3443) 
21 Aug (3 days ago)
to me
Dear Ramanan:

Thank you for your acknowledgement, and diligence in putting the substance on paper. You can't imagine the satisfaction I received by noting the appeal the magazine has among the youth. I hope that the news of this achievement would inspire someone somewhere just as it inspired me several years go when I was a youth of impressionable age. This has been my aim all along when I first decided to respond to your request. I very sincerely appreciate your efforts in doing the necessary legwork to probe the connection further . As you might surmise, I know not a word of Tamil, but I would be sure to have my Tamil friends here help me digest the attachments you were kind enough to send. Thanks again.

Regards,
Gurkirpal