20/1/13

புத்தகத்தினால் பெற்ற புதிய அனுபவம்



சென்னை புத்தக கண்காட்சி இம்முறை மிக பிரம்மாணடானதாக  560 
ஸ்டால்களுடன் சென்னையிலியே பெரிய கிரவுண்டான YMCA கிரவுண்டில் நடைபெறுகிறது. நேற்று 19/01/13 நல்ல கூட்டம் லட்சம் பேர் !
கார்பார்க் நிரம்பி வழிந்தது. பார்க்கிங்க்கு வசூலித்த பணத்திற்கு இறங்கி 1 கீமி நடக்கும் பயிற்சியியையும் இலவசமாக தருகிறார்கள். 1975ல் முதல் கண்காட்சி செயிண்ட் அப்பாஸ் பள்ளிகூடத்திலும் பின் மவுண்ட்ரோடு 
ஆர்ட்ஸ் காலேஜிலும் மாலன், சுபரம்ணிய ராஜுவுடன் பார்த்த நினைவுகள் வந்தது. நேற்று வந்தவர்களில் 25% பேர் ஆளுக்கு இரண்டு புத்தகம் 
வாங்கியிருந்தால் கூட விற்பனை ஸுப்பர் ஹிட் படத்தின் முதல் நாள்  கலெக்கஷனைத் தாண்டியிருக்கும்.
கடந்த ஆண்டு வெளியான் என்னுடைய எப்படி ஜெயித்தார்கள்? இரண்டு பதிப்புகளை தாண்டியிருக்கிறது. இந்த கண்காட்சியில் புதிய
 தலைமுறை ஸ்டாலில் அவர்கள் வெளியிட்ட புத்தக ஆசிரியர்களை நாளொன்றுக்கு ஒருவராக அழைத்து வாசகர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். மாலன், பிரபஞ்சன் இறையன்புவரிசையில் என்னையும்அழைத்து கெளரவித்திருந்தார்கள். புத்தக ஆசிரியராக ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களை சந்தித்தது புதிய  இனிய அனுபவம். ”வாங்காதவர்கள் புஸ்தகத்தோடு நம்மையும் சேர்த்து வேடிக்கை பார்ப்பார்கள்” என்று சுஜாதா சொன்னது நினைவிற்கு வந்தது.
புத்தகம் வாங்கி கையெழுத்து வாங்கியவர்களில் பலர் இந்த தொடரை படிக்காதவர்கள். விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து வாங்கியவர்கள் வங்கி நண்பர்கள், பேராசியர், டாக்டர் என பலவிதமானவர்களை சந்தித்தேன்.. கடந்த வாரம் துவங்கியிருக்கும் தொடர் பற்றி ஒரு பெண்மணி பேசியது ஆச்சரியம்  இந்த வாய்ப்புக்கும் கெளரவத்திற்கும் புதிய தலைமுறைக்கு நன்றி.
ஸ்டாலில் மிக சுறுசுறுப்பாக ”ஒரு புதிய தலைமுறையே” இயங்கி கொண்டிருக்கிறது. திருமதி கீதா விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று இயல்பாக உரையாடுகிறார்.”கல்வி”யின் இணைஆசிரியர் பொன். தனசேகரணை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கல்வியின் பழைய இதழ்களை கேட்டு வாங்கிப் போகிறார்கள். ஸேல்ஸ் டீம் விற்பனையோடு நிற்காமல்  கேட்பவர்களுக்கு விபரங்களையும் பொறுமையாக தருகிறார்கள். புதிய தலைமுறையின் வெற்றியில் இந்த இளைஞர் பட்டாளத்திற்கும் ஒரு பங்கு இருப்பது புரிந்தது. நண்பர் ஹரிபிராஸாத் மாலையில் எடுத்து இரவே அனுப்பிய படங்களில் சில இவை.
தாங்க்யூ வெரிமச் ஹரி 
posters/ads





17/1/13

ஒரே ஒரு அடியில் திரும்பி வந்த உயிர்.


கல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கொண்டிருந்த அந்த விமானத்தில் கிளம்பிய அரை மணிக்குள் ஒரு பயணி மயங்கி விழுந்து நினைவிழந்தார். நாடிதுடிப்பு நின்று உடல் சில்லிட்டு போய்கொண்டிருந்தது.   அந்த பயணியின் கைநாடியில் மட்டுமில்லை கழுத்துபகுதியில் கூட துடிப்பு இல்லை. அவரது மனைவி அழத்தொடங்கிவிட்டார்.

அதிர்ஷ்ட வசமாக அந்த விமானத்தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ  மாநாட்டில் பங்கேற்ற பின் சில டாக்டர்கள் சென்னை திரும்பிகொண்டிருந்தனர். அவர்களில் சென்னை லைப்லைன் மருத்துமனை சேர்மன் டாக்டர் ராஜ்குமாரும்  ஒருவர். மரணம் என்றே முடிவு செய்யபட்ட நிலையில் அந்தபயணியின்  நெஞ்சுகூட்டில்  இதயமிருக்கும் பகுதியில் மிக வேகமாக ஒரு அடி போட்டார் டாக்டர். ராஜ்குமார்.  மயங்கிய நிலையிலிருந்த அந்த பயணி துள்ளி எழுந்து உட்கார்ந்தார்நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் நார்மலுக்கு வந்துவிட்டது. தனக்கு நடந்தது பற்றி எதுவும் தெரியாததால்  அருகில் நின்ற டாக்டர்களை பார்த்து திகைத்து போனார். டாக்டர் ராஜ்குமார் கொடுத்த   அந்த பலமான அடி ஒரு அவசர முதலுதவி பயிற்சிடாக்டர்கள் பாஷையில்பெரிகார்டியல் தம்ப்” என்று சொல்லுப்படும் இதை சரியாக சரியான நேரத்தில் சரியாக கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். மிகமிக அரிதாக இயங்காமல் இதயம் ஒய்வெடுக்க ஆரம்பிக்கும் நிமிடங்களில் அதை எழுப்பி விடும் இந்த அடி முறையை ஆப்ரேஷன் தியட்டர்களில்  மின் இணைப்பிலிருக்கும் அதற்கான கருவிகள் மூலம் செய்வது உண்டு.
”மறு நாள் தான் பயணம் செய்திருக்க வேண்டிய நான் கடைசி நேரத்தில் பயணதிட்டம் மாறி அன்று கடைசி பயணியாக அந்த விமானத்திலேறினேன். ஏறியவுடனேயே ஒரு வயதான பெண்பயணியின் உடல்நிலை பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா என சோதித்து சொல்லும்படி பைலட் கேட்டுகொண்டார். அவசியமனால் அவரை இறக்கிவிடுப்போவதாகவும் சொன்னார். அந்தபெண்மணியை சோதித்து பயமில்லை பிரயாணம் செய்யலாம்  என்று சொல்லிவிட்டு சீட்டில்  போய் அமர்ந்த அரைமணியில் இது நிகழ்ந்தது.
விமானத்தில் பயணம் செய்வர்கள் இப்ப்பொது ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டிருக்கின்றனர். அதில் பலர் இதய நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள். அதனால் நமது விமான பணிப்பெண்களுக்கும்,பைலட்டுகளுக்கும் ஹாட்ட்டாக் முதலுதவி பயிற்சிகளும், அந்த கருவிகளை இயக்கும் பயிற்சிகளும் தரப்பட்டு அந்த கருவிகளும் விமானத்தில் வைக்கபடவேண்டும்” என்கிறார் டாக்டர் ராஜ்குமார். இதற்கு அதிகம் ஒன்றும் செலவகாது.
 30000 அடி உயரத்தில் பறக்கும் போது மரணத்தை சந்தித்து  அங்கேயே மறுவாழ்வும்  பெற்ற அந்த பயணியின் தொடர்ந்த சிகிச்சைக்காக  வழியில் புவனேஸ்வரில் விமானத்தை தரை இறக்க தயாராகயிருந்த பைலட்டிடம் டாக்டர்கள் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு நார்மலாகிவிட்டார் அந்த பயணி.  ஆனாலும் அருகில் டாக்டர்கள் அமர்ந்து இதய துடிப்பை கண்காணித்து கொண்டே வந்தனர். விமானம் சென்னையை அடைந்ததும் அவர் விஜயா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லபட்டார்.  அவர் அங்கு பணியிலிருக்கும் ஒரு டாக்டர்.
மரண அடி என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். மரணத்திலிருந்து மீளவும் ஒரு அடி இருக்கிறது என்பது இப்போது தெரிகிறது.  

14/1/13

தர்ம யுத்தத்தில் ஜெயித்தவர்கள்






            இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்

தர்ம யுத்தத்தில் ஜெயித்தவர்கள்



ஹைடெஸிபலில் ஒரு டைட்டில்சாங், ஆடம்பர வீடுகள் ,ரிச் காஸ்டியூம், அழுகை, மருமகள் மாமியார் சண்டை, குரோதம், பழிவாங்கல், கடத்தல் சாமியார், ஆவி, பேய்கள் போன்றவைகள் தான் தமிழ் டிவிசீரியல்களின் இலக்கணம் என்றிருக்கும் நிலையில் தர்மயுத்தம் மூலம் ஒரு மெகா தொடரின் ரசனையை புதியதொரு பரிமாணத்திற்கு விஜய் டிவி எடுத்துச்சென்றிருக்கிறது. முழுக்க முழுக்க வழக்கறிஞர்கள் பாத்திரங்கள் மூலமே சமூக பிரச்னைகளையும் அதைகையாளும் அவர்களுக்கிடையே யான ஈகோ மற்றும் குடும்பபிரச்சனைகளை பேசும் இதில் மெல்லிய இழையாக காதலும்,ஏமாற்றமும் உறவுகளின் கனமும் சொல்லப்படுகிறது. மாறுதலான இந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் அரவிந்கிருஷ்ணாவையும்அவரது டீமையும் சந்தித்தபோது…

அரவிந்த் கிருஷ்ணா பி.ஸி.ஸ்ரீரமுடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளார். பள்ளியில் படிக்கும்போதே சினிமாவில் போட்டோகிராபராக சாதிக்க துடித்து அப்போதே பி,ஸி யிடம்போய்  வேலைகேட்டிருக்கிறார். ”தம்பி படிச்சுட்டு அப்புறம் வா” என்று சொன்னவரிடம் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்தவுடன் போய் சேர்ந்தவர். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தில் பணி செய்யபோகிறார். இந்த ஓளிப்பாதிவளார் ஏன் தயாரிப்பாளரானர்?  ”அது ஒரு இனிய விபத்து. விஜய் டிவிக்கு வேறு ஒரு விஷயமாக போனபோது  டிவி சீரியல்களின் தரம் பற்றி பேச்செழுந்தது.  நான் உணர்ந்ததைசொன்னபோது மாறுதலாக நீங்கள் செய்யமுடியமா? என கேட்டார்கள். தமிழ் சின்ன திரையில் தொடர்சீரியல்களை தூர்தர்ஷனில் அறிமுக படுத்தியவர் என் தந்தையார் கிருஷ்ணஸாமி. நான் விரும்பவதை படிக்க அனுமதித்து சினிமாத்துறைக்கு போகவிரும்பியதை ஆதரித்த அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நானும்  சின்னதிரையில் சில முதல் முயற்சிகளை செய்யவது பற்றி சிந்திக்கொண்டிருந்தவன் நான். கேட்டவர்களிடம்  தர்மயுத்தத்தின் ஒன்லைனை சொன்னவுடன்   உடனே ஆரம்பியுங்கள் என ஒப்புதலும், ஊக்கமும் தந்தவர்கள் ஸ்ரீராம், ,பிரதீப்,.
ரமணன். இந்த மூவர்தான் விஜய் டிவியின் பல வெற்றிகளுக்கு பின்னாலிருக்கும் பார்வையாளர்கள் அறியாத முகங்கள். இவர்களுக்குதான் இந்த வெற்றியின் பெருமை சேரவேண்டும் “ என்கிறார்.
 எல்லா நடிகர்களும் கச்சிதமாக அவர்களின் பாத்திரங்களுக்கு பொருந்துகிறார்கள். இந்த காஸ்டிங் தேர்வை எப்படி செய்தார்கள். “அரவிந்த் கிருஷ்ணாவின் நண்பர்கள் வட்டம் பெரிது. அவர்களிடம் நிறைய பேசி ஆராய்ந்து செய்தோம். ரவி ராகவேந்தரை தவிர அனைவரும் டிவி சீரியலுக்கு புதியவர்கள், கிட்டி போன்ற சீனியர்களுடன் இளைஞர் அணியையும் முகம் அறிந்த ஆனால் டிவியில் இதுவரை பார்க்காத முகங்களை காட்ட விரும்பினோம்.” என்கிறார்.தொடரின் இயக்குநர் அபிநந்தரன். இவர் புகழ்பெற்ற ஒவியர் ஆதிமூலத்தின் மகன் ,  (இந்த வித்தியாசமான பெயர் ரவிந்திரநாத் தாகூரின் சகோதரான பிரபல ஒவியருடையது)  பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தபின் ராஜீவ் மேனன் படங்களில் அஸோசியட்டாக பணியாற்றியவர்.  “நமது சீரியல்கள் பெண்களை பலவினமானவர்களாகவே காட்டுகிறது. அவர்களுடைய பொரபஷனல் டைமென்ஷன்களை சொல்லுவதில்லை,.இதில் அதை சொல்ல முயன்றிருக்கிறோம் இதுவரை சீரியல்களில் நடிக்காத கிட்டி சினிமாவில் சாக்லேட் பாயாக மட்டுமே அறியபட்டிருந்த அப்பாஸ், 
நாடகத்துறை படித்திருந்தாலும் பாடகியாக பிசியாக இருக்கும் ஸ்ரீலேகா அவரது கணவர்ஸ்ரீராம் எல்லோரும் கான்செப்ட்டை கேட்டவுடன் யெஸ் சொன்னார்கள்.” என்கிறார்
இந்த சீரியலில் நடிப்பவர்களில் பலருக்கு  டிவி கலைஞர்கள் என்பதற்கு அப்பாலும் ஒருமுகம் இருக்கிறது. கிட்டி ஒருமேனேஜ்மெண்ட் ஆலோசகர், ரவிராகவேந்திரா ஒரு வங்கியில் மூத்த அதிகாரி, கார்திக் குமார் ஆங்கில நாடகங்கள், கார்ப்ரேட்நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிருவனத்தின் இயக்குனர். லக்ஷ்மிபிரியா மனிதவள அதிகாரி ஸ்ரீலேகாவும் ஸ்ரீராமும் பின்னணி பாடகர்கள். இவர்களின் சொந்த அனுபங்களும் இந்த தொடரில் அவர்களின் நடிப்பை எளிதாகியிருக்கிறது.

  “என்னை நடிக்க அழைத்த போது நான் இன்னும் சினிமாவிலிருக்கிறேனே ஏன் டிவி சிரியல்? என்றேன். கதையையும் அதைச்செய்யபோகும் டீமியையும் கேட்ட பின்னர், தியட்டரையும் நடிப்பதையும் நேசிக்கும் எனக்கு இது நல்ல வாய்ப்பு எனபட்டது மறுக்க முடியவில்லை” என்கிறார் கார்திக் குமார். வானம் வசப்படும் என்ற தன் முதல் படத்தில் ஒரு அட்வகேட் கேரக்டருக்காக பெற்ற பயிற்சி இப்போது உதவியது என்கிறார் அர்ஜுனாக சிறப்பாக நடிக்கும் இந்த பொறியியல் பட்டதாரி.

சட்டம் படித்த நான் கோர்ட்டுக்கு போகமலிருந்தாலும்,  இந்த சீரியலில் ஒரு சீனியர் அட்வகேட் நம்பி பாத்திரத்தின் அழுத்தையும், சொல்லுப்படும் விஷயத்தை தெளிவாக சொல்லவும் அது உதவுகிறது என்கிறார் ரவிராகவேந்திரா. மேடை நாடகம்,சின்னதிரை,சினிமாஎன்று நீண்ட அனுவமுள்ள இவர் என்றும் இளைஞராகவே காட்சியளிக்கும் மார்க்கண்டேயர். இந்த கூட்டணியின் வெற்றி டிவி சீரியல்களில் ஒரு புதிய டிரெண்ட்டை உருவாக்கும் வாய்ப்புக்கள் அதிகம். உடனே இல்லாவிட்டாலும் நிச்சியம் இருக்கிறது என்கிறார்.
சமூக அக்கரையுள்ள இரண்டு அல்லது மூன்று வழக்குகளை  தொடர்ந்து வரும்படி திரைக்கதை அமைந்திருக்கும் இந்த தொடரில் அதற்கான ஆலோசனைகளையும் சட்ட பிரச்சனைகளில் சிக்காமலிருக்கவும் நகரின் முன்னணி வழக்கறிஞர்களின் நிருவனம் வழங்கியிருக்கிறது. நமது கோர்ட்களில் வக்கீல்கள் உணர்ச்சிவசப்படாமல் பேசுவதை நடிகர்க்ளுக்கு காட்டியிருக்கிரார்கள்.  தயாரிப்பாளர் அரவிந்த் கிருஷ்ணா நவீன டிஜிட்டல்  ஓளிப்பதிவில் விசேஷ பயிற்சிபெற்றவராக இருப்பதால், டெக்னிக்கல் விஷயங்களில் சில புதிய பாதைகளை துவக்கியிருக்கிறது இந்த தொடர். வீடியோவும்  எடுக்கும் வசதி உள்ள கேனன் 5d என்ற ஸ்டில் கேமிராவில் எடுக்கபட்டிருக்கிறது

இது போட்டோபத்திரிகையாளர்களுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதைபயன் படுத்தி எடுக்கபட்டு பின்னர் சின்னதிரைக்கு ஏற்ப மாற்றபடுகிறது. கேனன் நிறுவனமே பிரமித்த விஷயம் இது. ஒரே இடத்தில்காட்சிகளின் களமான  அட்வகேட்களின் அலுவகங்கள் கோர்ட், காபிஷாப் எல்லாம் அடுத்தடுத்து  ஒரேசெட்டில் போடபட்டிருப்பதால் காட்சிகளை தொடர்ந்து எடுக்கமுடிகிறது. எல்லா காட்சிகளிலும் ஒளிஅமைப்பு சீராக செய்யமுடிகிறது. வேலை சீக்கரம் முடிகிறது. இப்படிஒரு சீரியல் எடுக்கபடுவது இந்தியாவில் இது முதல் முறை என்கிறார் அர்விந்த் கிருஷ்ணா. படபிடிப்பை பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்கள் வந்து பார்த்து குறிப்புகள் எடுப்ப்தை பெருமையாக கருதும் இவர் சினிமா துறையினர் யாரும் இதுவரை இந்த புதிய முயற்சியை பாராட்டவில்லை என வருந்துகிறார்.

. இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்லணும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரைக்கும் கூட சூட்டிங் போனாலும் சோர்வே தெரியாது அந்த அளவுக்கு வேகமாக போகும். அதனால்தான் எங்கள் டீம் இதனை சீரியஸ் என்று சொல்லுவோம்.என்கிறார் அழகான வக்கிலாக வரும் அனுஜா ஐயர்.  உன்னைபோல் ஒருவன் படத்தில் டிவி நிருபராக ஒரு கையில் சிகரெட்டும், மைக்குமாக மிரட்டிய பெண்ணை நினைவிருக்கிறதா? அவரேதான். வீண்மீன்கள் படத்திற்கு பின் இந்த தொடரில் நடிக்கும் இவர் டெல்லியில் மாஸ்கம்யூனிகேஷன் படித்தவர். கருப்புகோட்டை அணிந்தாலே ஒரு கம்பீரம் வருகிறதுஎன்கிறார்.
தன் இயல்பான நடிப்பால் பார்ப்பவர்களின் மனதில் சராதாவை நிறுத்தியிருக்கும்   ல‌ஷ்மிபிரியா மனித வளத்துறையில் பட்டம் பெற்றிருப்பவர்.  கே.பாலச்சந்தர் பட்டறையில் உருவானவர். அவர் மேடை நாடகங்களுக்கு புத்துயிர் கொடுக்க முயன்றபோது தேர்ந்தெடுக்கபட்டு பயிற்சிஅளிக்கபட்டவர். இந்த சிரியலை தொடர்ந்து  திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகயிருக்கிறார். இவரைப்போலவே  அஸ்வின், மணி, பாத்திரங்களில் நடிக்கும் பாலாஜி ராஜசேகருக்கும் பிரவீனுக்கும், பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
தொடரில் சீனியர் சுந்திரம் எப்போது டில்லியிலிருந்து திரும்பிவருவார்?, அர்ஜனுக்கும் ராம்மோஹனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தில் யார் ஜெயிக்க போகிறார்கள்? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சியமாக  இதில ஜெயித்திருப்பவர்கள் சின்ன திரை சீரியல்களுக்கு புதிய பார்மெட்டையும் இயல்பாக நடிக்கும் ஒரு குழுவையும் அறிமுகபடுத்தியிருக்கும் விஜய் டிவி தான்.
கல்கி 20/01/13

9/1/13

தெருகூத்தில் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்.


ஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால்  கடந்த மாதம் அவரின் உலகப்புகழ் பெற்ற மாக்பெத் நாடகம் அந்த அரங்கில் ”தெரு கூத்தாக” போடபட்டது தான் ஆச்சரியம்.
மேடை நாடக்கலையை முறையாக சொல்லிகொடுத்து அதை வளர்ப்பதற்காக  1975ல் உருவானது டெல்லியில்உள்ள தேசிய நாடகபள்ளி. இங்கு மூன்றாண்டு நாடக்கலையை பட்ட படிப்பாக கற்பிக்கிறார்கள். நாட்டின் பல மாநிலங்களின் மரபுகலை நாடக பாணிகளையை அறிவதும், பயிற்சிபெறுவதும் இதில் ஒரு அங்கம், இந்த ஆண்டு இதன் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கபட்டது தமிழ்நாட்டின் பாரம்பரிய நாடக வடிவான  தெருகூத்து. இந்த கலையின் மிக முக்கிய அம்சம் கூத்து கலைஞர்களுக்கு பாடவும் வசனம் பேசும்பொழுதே நடனமாடியேபடி இடம் மாறிக்கொள்வதும். உடல், மனம், குரல் இவைகளை தெருகூத்து அடவுகளுடன் ஒருங்கிணைக்கும் பயிற்சியை இவர்களுக்கு அளித்தவர் புரிசை சம்பந்த தம்பிரான். தமிழக கூத்துகலையின் முன்னோடிகளின் ஐந்தாவது தலைமுறையான இவர் கூத்துபட்டறையில் பயிற்சிபெற்று தெருகூத்து பாணியை செம்மைபடுத்தியிருப்பவர். புராண இதிகாச கதைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்த கூத்தில் நவீன பாணிநாடகங்களை தெருகூத்தின் மரபுகளை மீறாமல் நிகழ்த்தி புகழ்பெற்றவர். இந்தியாவின் பல இடங்களிலும் பலவெளிநாடுகளிலும் தனது குழுவுடன் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். 
இந்த ஆண்டு சங்கீத நாடக அகடமியின் விருது பெறுகிறார். கடந்த ஆண்டு கொலாம்பிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாரம்பரிய நாடகவிழாவில் அவர்கள் நாட்டு புகழ்பெற்ற நாவலாசிரியர் எழுதிய  “மிகபெரிய சிறகுகள் கொண்ட தொண்டுகிழவன்”“என்ற நாடகத்தை தன் தமிழ்நாட்டு மாணவர்களுடன் தமிழில்  நடத்தியிருக்கும் சம்பந்த தம்பிரானிடம் ஸ்பானிஷ் மொழிபேசுபவர்களுக்கு தமிழ் எப்படி புரிந்தது என்று கேட்டபோது கதை தெரிந்தவர்களுக்கு கூத்தின் பாத்திரங்கள் உணர்ச்சிகள் எளிதாக புரியும் அதுதான் கூத்தின் சிறப்பு என்றார்.

இவர் தந்த 40 நாள் பயிலரங்க பயிற்சியில் கூத்துபாணியை கற்று தேசிய நாடகபள்ளி மாணவர்கள் நடத்தியது தான் மாக்பெத்.
டன்கன் என்ற அரசனின் தளபதிகளில் ஒருவன் மாக்பெத். போரில் வெற்றிபெற்ற அவனது வீரத்திற்காக மன்னரால் பாரட்டபட்டபடுகிறான்., அரசனை கொன்று விட்டு ஆட்சியை கைபெற்ற அவனை தூண்டுகிறாள் அவனது பேராசைக்காரியான மனைவி. முதலில் தயங்கிய மாக்பெத் கொலைக்குபின் மன்னனாகிறான். பதவியை தக்க மேலும் ஒரு கொலை என நல்ல திருப்பங்களும் விறுவிறுப்பும் கொண்ட இந்த கதையை ஷேக்ஸ்பியர் மனித மனத்தின் பல்வேறு கூறுகளை, மனவியல் கோணங்களை காட்டி நாடகமாக்கியிருக்கிறார். .
 இதை கூத்துபாணியில் நாடகமாக்குவது எளிதல்ல. அதை மிக திறமையாக நிர்வகித்து நடத்தியவர் தமிழ் நாடக மைய இயக்குனர் சண்முக ராஜவும், பயிலரங்க இயக்குனர் ராஜேந்திரனும். ஒரு புகழ்பெற்ற ஆங்கில நாடகத்தை, கருநீலதிறையின் பின்னணியில் இருவர் மறைத்து பிடித்திருக்கும் துணியின் மறைவில் பாத்திரங்கள் நிற்க கட்டியகாரன் சொல்லும் அறிமுகத்துடனும் தமிழ் பாரம்பரிய இசையுடனும் பார்ப்பது புதிய அனுபவம். மாக்பெத்க்கு கிரிடம் சூட்டும் காட்சியில் கெட்டிமேளம் ஒலித்தது.
.அன்று  நடந்த மாக்பெத் நாடகம் ஹிந்தி மொழியில் என்று அறிவிப்புகளில் சொல்லப்படாதால் தமிழ் நாடகம் என நினைத்து வந்தவர்களில் பலருக்கு  பாத்திரங்கள் பேசியது புரியாத போதும்  அமைதியாக ரசித்துகொண்டிருந்ததைபார்த்த போது சம்பந்த தம்பிரான் சொன்ன கூத்தின் மொழி    புரிந்தது
கல்கி 13/01/13

7/1/13




புதிய தலைமுறை க்கு ஆண்டு சந்த 499/
அனுப்ப வேண்டிய முகவரி
po box 3209
சென்னை 6000032

1/1/13

தீபாவளி மலர்கள்





தீபாவளி மலர்கள்



2007லிருந்து கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர்களில் வெளியான என்னுடைய
கட்டுரைகளை இங்கே பார்க்கலாம். இது ஒரு e book. மலரை பார்ப்பதைபோல
பக்கங்களை புரட்டி அவசியமானால் பெரிதாக்கியும் படிக்கலாம்

30/12/12

நீங்களும் கொடுங்களேன்







அதற்கு விலையேதுமில்லைஆனால் அது தான் மிக மதிப்பானது
அதை தருபவர்களுக்கு நஷ்டம் எதுமில்லை பெருபவர்களுக்கு லாபம்
அது வினாடிகளில் விரியும் ஆனால் வாழ்நாள்முழுவதும் வாழும்
அது இல்லாமல் செல்வத்தின் செருக்கோ, ஏழையின் சந்தோஷமோ இல்லை
அது இல்லத்தில், சந்தோஷத்தை நிரப்புகிறது நட்பை உறுதிசெய்கிறது
அது வெற்றிபெற்றவனுக்கு மகிழ்ச்சியாகவும் வருந்துபவனுக்கு புத்தொளியாகவும், தெரிகிறது.
அதை விலைக்கு வாங்க, கடனாக பெற திருட, பிச்சையாக எடுக்க கூட முடியாது.
அது ஆயிரங்கதைகள் சொல்லும். அளவற்ற மகிழ்ச்சியை தரும்.
அது மதிப்பில்லாது -ஒருவருக்கு அளிக்கபடும்வரை
அது தான் மனிதனால் மட்டுமே செய்யகூடிய

புன்னகை

ஆனாலும் சிலர் அதை கொடுக்க தயங்குகிறார்கள்.

இன்று அவர்களுக்கு உங்களுடையதை ஒன்று கொடுங்கள்

ஏனெனில் கொடுப்பதற்கு இல்லாத அவருக்கு அது அவசியம்.

இன்று நீங்கள் இன்று கொடுக்கும் அந்த புன்னகை

ஆண்டு முழுவதும் அனைவருக்கும் பரவட்டும்.

அதற்கு இனிய புன்னகைகளுடன் எங்களது
இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

ரமணன் & மீரா

Yet another Happy New year








A smile costs nothing, but gives much-
It takes but a moment but the memory of it usually lasts forever
None are so rich that can get along without it-
And Noe are so poor but that can be made rich by it ,
It enriches those who receive, without making poor those who give 
It creates sunshine in Home
Fosters goodwill in business 
And best antidote for trouble-
And it can not be begged, borrowed. or stolen, for
its of no value
unless it is given away
Some people are too busy to give you a smile -
Give them one of yours-
For the good Lord knows that no one needs a smile 
so badly as he or she  who has no more smiles left to give 

As A smile costs nothing, but gives much-
Give one of yours today-and the Whole New Year
Greetings from
Ramanan &Meera    




22/12/12

கிருஸ்மஸ்காக கடவுள் விட்டுவைத்த மரம்


கிருஸ்மஸ்காக கடவுள் விட்டுவைத்த மரம்

நியூயார்க் நகரின் மன்ஹாட்ன் பகுதியின் நடுவில் இருக்கிறது ராக்பெஃல்லர் பிளாசா என்ற சதுக்கம். 20 நெருக்கமான வானாளாவிய உயர்ந்த கட்டிடங்களின் மத்தியில் இருக்கும் இந்த சதுக்கமும் அதன் அருகிலிருக்கும் ராக்பெஃல்லர் சென்டரும் நகரின் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்கள். ஐக்கிய நாடுகள்சபை அங்கதினர் நாடுகளின், அமெரிக்க மாநிலங்களின் பலவண்ண கொடிகள்  அணிவகுத்து பறக்கும் கம்பங்களின் கிழே மெல்லிய ஒசையுடன் விழும் அருவியின் பின்னிணியில்  தங்கமாக மின்னும் கிரேக்க கடவுளின் சிலை

இந்த இடத்தின் ஹைலைட்.  சிலையின் முன்னேஇருக்கும் ஐஸ் ஸ்கேடிங் மைதானமும் சுற்றியுள்ள  ஷாப்பிங் செண்டர்களும், ரெஸ்டோரண்ட்களும் டூரிஸ்ட்களின் பர்ஸை பாதிக்கும் ஸைடு லைட்.

21/12/12

ஒரு சிதார் அழுகிறது


அஞ்சலி

<இது என்ன வாத்தியம்? என்று கேட்ட அந்த 7 வயது சிறுவனுக்கு அன்று தெரியாது அதை அவன் கற்றுகொண்டு குருவை மிஞ்சிய சிஷ்யனாக வளர்ந்து உலகத்திற்கே அந்த வாத்தியத்தையும் இந்திய இசைக்கலையையும் அறிமுகப்படுத்தி  அடுத்த 80 ஆண்டுகள் கலக்கபோகிறோம் என்று.

19/12/12

ஒலிம்பிக்ஸ் பாலிடிக்ஸ்


இந்தியன் ஒலிம்பிக் சங்கங்கத்திற்கு 85 வயதாகிறது. சர்வே தேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகரித்திற்கும் இந்த சங்கம்தான் ஒலிம்பிக், காமன்வெல்த் கேம்ஸ்போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணிகளை தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு அமைப்புகளின் தேசிய  பெடரேஷன்களின் தலைவர்கள் இதன் உறுப்பினர்கள்.  ஊதியம் ஏதுமில்லாத  கெளரவ பதவி தான் என்றாலும்  கையாளும் காண்டிராக்ட்கள் ஆயிரம் கோடிகளில். கடந்த ஆண்டு வரை இந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலவராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி..

3/12/12

விண்கற்களும் குஜராத் படுகொலைகளும்




இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக  ஒரு ஆளும் கட்சி  பெண் எம்ல்ஏ கிரிமினல் குற்றத்திற்காக 28 ஆண்டுகள் குஜராத் மாநில  கலவர வழக்கில் தண்டிக்கபட்டிருக்கபட்டவர். திருமதி மாயா கோட்டானி, இவர் ஒரு டாக்டர். சொந்தத்தொகுதியியான நரோடாவிலிருந்து 3 முறை தேர்ந்தெடுக்கபட்ட பிஜெபி கட்சிக்காரர். 2007ல் குஜராத் அமைச்சரவையில் பெண்கள், மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்து 2009ல் ராஜினமா செய்தவர். 2002 கோத்திரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன் இவரது தொகுதிகளில் இருந்த கிராமத்தில் நடந்த  இனக் கலவரத்தில் 97 பேர் கொல்லப்படுகின்றனர், அவர்களில் 35 பேர் குழந்தைகள். அந்த கலவரத்தை தூண்டிவிட்டு நேரடியாக இவர் நடத்தினார் என்பது குற்றசாட்டு,

முதலில் நடந்த விசாரணைகளிலும் குற்ற பத்திரிகைகளிலும் இவர் பெயரே இல்லை. அந்த விசாரணைகள் வெறும் கண் துடைப்பு என உச்சநிதீமன்றத்தில்  நடந்த வழக்கில் உச்சநீதி மன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. அதன் அறிக்கையின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கில் டாகடர் மாயா கோட்னி தண்டிக்கபட்டிருக்கிறார்.
 இவரை குற்றவாளி என சிறப்பு விசாரணை குழு முடிவு செய்ய உதவியவர் மற்றொரு பெண். இவர் போலீஸ் அதிகாரியோ, பத்திரிகையாளரோ இல்லை. ஒரு விஞ்ஞானி. அதுவும் மிக சிலரே ஆராயும் விண்வெளியில் சுற்றும் விண்கற்களையும் வான் வெளியில் கிரகங்கள் அல்லாது சஞ்சரிப்பவைகளை பற்றி ஆராயும் ஒரு  காஸ்மோஸ் விஞ்ஞானி.  பெயர் திருமதி நிரஜ்ஹரி சின்ஹா. நிலவில் இருக்கும் கற்கள் பற்றியும் கிரகங்களுக்கு இடையே பறக்கும் விண்கற்கள் பற்றி நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கும் இந்த விஞ்ஞானி உண்மை நிலயை அறிய நானாவதி கமிஷன் போடபட்டபோது உதவ முன்வந்தார்.   பிரபஞ்சத்தை ஆராயும் இந்த பெண்  எப்படி பிரச்சனையை ஆராய முன்வந்தார்?  “நான் அஹமதாபாத்தில் பிறந்த ஒரு குஜராத்தி, அமைதிக்கு பேர்போன இந்த மாநிலத்தில் கண் எதிரே 1000 பேர் கொலபட்டதை சகிக்கமுடியாமல் பார்த்து கொண்டிருந்தேன். போலீசும் அரசாங்கமும் செய்யவேண்டியதை செய்யாமல்  குற்றவாளிகளை காப்பற்ற முயற்சிக்கும் போது  இது சரியில்லை.என நினைத்தேன். ராகுல் சர்மா எனற போலீஸ் அதிகாரி  கமிஷனிடம் சம்பவ இடத்திலிருந்து போலீஸ் அதிகாரிகள் பேசிய போன்களின் பதிவுகளின் சிடியை கொடுத்த போது இந்த அதிகாரிகள் அந்த இட்த்திலிருந்துதான் பேசினார்கள் என்பதை எப்படி நிருபிப்பீர்கள் என்று எழுப்பிய கேள்வி என்னை சிந்திக்க செய்தது.  எங்கோ பிரபஞ்சத்தில் சுற்றி வரும் கோள்களிலிருந்தும், விண்கற்களிலிருந்தும் வரும் ஒலிகளிலிருந்து தூரத்தை தீர்மானிக்கும் விஞ்ஞானத்தின் உதவியால் இதை செய்யமுடியாதா?  என்று யோசித்தேன்.  பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் சமூக ஆர்வலாரன எனது கணவரின் பணிகளில் உதவிகொண்டிருந்தேன்..


அவர் மற்றொரு கலவர வழக்கில் போலீஸ்காரர்களால் கொல்லபட்ட ஷராபூதீனின் சகோதரருக்காக போராடிக்கொண்டிருந்தார். கமிஷனுக்கு தரப்பட்டிருந்த மொபைல் போன் பதிவுகளிலிருந்து  அந்த கம்பெனிகளால் எந்த டவர் என்பதை மட்டும் தான் சொல்ல முடியும். நான் என் சோதனைகளினால் மிக சரியாக அது எந்த இடம் என்பதை அந்த ஒலியலைகளின் கனத்தின் மூலம் தூரத்தை நிர்ணயத்தேன். .   “நான் அன்றைய தேதியில் அந்த கிராமத்திலேயே இல்லை” என்று சொல்லிகொண்டிருந்தார் எம்ல் ஏ டாக்டர் மாயா கோட்னி அன்று காலை முதல் ஒவ்வொரு மணி நேரமும்  அவர் செல்போனுடன் எங்கிருந்தார் என்பதை இந்தவகையில் அளந்து அதை துல்லியமாக கூகுள் மேப்பில் குறித்து ஒரு கிராஃப் ஆக ஆக்கியபோது தெளிவான விஷயம் டாக்டர் மாயா  படுகொலைகள் நடந்தநேரமான  12.30 மணியிலிருந்து மாலை 4.30 வரை அங்குதான் இருந்திருக்கிறார்.
 என்பதுதான்.  இதேபோல் ஷெராபூதின் கொலைவழக்கில் அரசியல் வாதிகள் போலீஸ் அதிகாரிகளுடன் பேசியது ஒவ்வொன்றையும்  நேரத்தோடு ஆரய்ந்து கொடுத்திருக்கிறார். அதில் சம்பந்தபட்ட ஒரு போலீஸ் அதிகாரி அந்த போன் தன்னுடையதில்லை என்று சொன்னபோது  குரல் பதிவான போனின் ஆதிமூலத்தை ஆரய்ந்து அது அவருடன் அப்போது இருந்த போலீஸ்காரரின் போன்தான். தன்னுடையதை ஆப் செய்துவிட்டு அதை பயன்படுத்தியிருக்கிறார்  என்பதையும் சொல்லியிருக்கிறார்.
என் நுணுக்கமான பணித்திறன் நாட்டில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட உதவியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்லும் திருமதி நிரஜ்ஹரி சின்ஹா.நோய்வாய்பட்டு அதிகம் நடமாடமுடியாமல் மனமுடைந்து போயிருந்த என்னை இந்த பணியை செய்ய உற்சாகபடுத்திய கணவருக்கு நன்றி எனகிறார் திருமதி சின்ஹாவை தாக்கியிருப்பது புற்று நோய்.

26/11/12

ஒலியின் வேகத்தில் பயணித்த மனிதன்


                                                   ”கேர்ள் பிரண்டுடன் செட்டிலாகபோகிறேன்

ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீவிசேஷமாக வடிவமைக்கப்பட்ட சூப்பர்ஸானிக் போர்விமானங்கள் மட்டுமே பறக்க கூடிய இந்த வேகத்தில், வான்வெளியில்  ஒரு மனிதன் தனியாக பயணிக்க முடியுமா? இந்த வேகத்தில் பறக்க அல்லது மிதக்க வேண்டுமானால் முதலில் அந்த மனிதன்  30 கீமீ உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். (விமானங்கள் பறக்கும் உயரம் 12 கீமீ) சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத அந்த நிலையில் அந்த உயரத்தில் 15 வினாடியில்,முளைசெயலிழந்து, உடலில் உள்ள திரவங்கள் ஆவியாகி மரணம் நிச்சியம் எனபதால் இது எவராலும் முடியாத விஷயம் என்று கருதபட்டது. இதை செய்து காட்டி உலக சாதனை செய்திருப்பவர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரி நாட்டு முன்னாள் பைலட். அமெரிக்காவில் செட்டில் ஆனாவர்.. இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலம் ரூஸ்வெல் நகர மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து  வான் வெளியில் பாய்ந்து  மிதந்து  பத்திரமாக தரையிறங்கினார்.
எப்படி இதை செய்தார்?.

19/11/12


இந்தியா வந்த

இரும்பு பட்டாம்பூச்சி

திருமதி ஆங்சான் சூ சி, பர்மா என்று நீண்ட நாள் அறியபட்டிருந்த நம் பக்கத்துவீட்டு மியான்மர் நாட்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர். மியான்மர் நாட்டினையே உலகில் பலர் தெரிந்துகொள்ள காரணமாகயிருந்தவர். காரணம் தன் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த போராடியதற்காக 15 ஆண்டுகள்   சிறையிலிருந்தவர். சிறையிலிருக்கும்போதே அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டு, அதை சென்று வாங்க  ஆட்சியாளார்களால் அனுமதி மறுக்கபட்டவர், உலகில் அரசியல் காரணங்களுக்காக நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரே பெண்மணி.  மெலிந்த உடல்,மென்மையானகுரல்,67வயது முதுமையை காட்டாத முகம் கொண்ட இவர் பார்க்க பட்டாம்பூச்சியாக இருந்தாலும் இரும்பு மனுஷி.  சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ஜவர்ஹலால் நேரு அமைதி பரிசை பெற்றுகொள்ள மேற்கொண்ட பயணம்.இம்மாதிரி பரிசுகளை ஏற்கும் உரையில் இந்தியாவை புகழ்ந்து தள்ளுவார்கள்.
”அண்ணல் காந்தியடிகளின் வழியில் நேருவை முன்னூதரணமாக கொண்டு நாங்கள் போராடிய காலங்களில் இந்தியா எங்களை கண்டுகொள்ளவில்லை” என்ற இவரது பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கின,

இந்தியா சுதந்திரபோராட்டத்தை தொடர்ந்து விடுதலை வேட்கை  வேகமாக பரவிய நாடுகளில் அன்றைய பர்மாவும் ஒன்று. அதன் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆங் சான். நாட்டை அன்னியர்களிடமிருந்து காக்க வலிமையான  ஒரு ராணுவத்தை உருவாக்க முயன்றுகொண்டிருந்தவர்.ஒரு நாள் படுகொலை செய்யபட்டார். அவருடைய ஒரே மகள்தான்  சூ சி. தாயினால் வளர்க்கபட்ட இவர் வளரும்போதே போராட்டங்கள் பல வற்றை சந்தித்தவர். டெல்லியில்